Sunday 22 May 2016

சிக்கல்

ஒவ்வொரு சிக்கலையும் வெற்றி கொள்வது தெளிந்த தேர்ந்த அறிவேயாகும்.
😨😨😨😨😨😨😨😨😨😨
சிக்கல் என்று சொன்னால் அந்தச் சிக்கல் வராமலேயே இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமே! எப்படி வராது இருக்கும்?  நமது கையையும், மனதையும் வைத்துக் கொண்டு சும்மா இருந்தால் தானே சிக்கல் வராது.  பல சிக்கல்களை நாம் ஏற்படுத்துகிறோம்.  அவ்வாறு எந்தச் சிக்கலும் வராமல் நல்ல இருப்பு இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். போதிய வசதி இருக்கிறது. நல்ல சாப்பாடு இருக்கிறது.  நல்ல உடல் இருக்கிறது.  நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள், நல்ல வீடு இருக்கிறது.  இவ்வளவு இருந்தும், ஒரு ஆளை அமைதியாக இருக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்.  ஏதோ ஒன்றில் கையை மாட்டிக் கொண்டு அதன் பிறகு "பளுவாக இருக்கிறதே! அம்மா! அப்பா! என்றோம்.  இதுதான் மனிதனின் இயல்பு.

உலகத்தில் ஒவ்வொருவருக்கும் அந்த மாதிரியான மன ஆற்றலும், செயலாற்றலும் இருக்கிற வரையில், நாம் கூடி வாழ்ந்து செயலாற்றி வரும் வரையில் பிணக்குகளும், சிக்கல்களும் வரத்தான் செய்யும்.

ஒவ்வொரு சிக்கலையும் வெற்றி கொள்வது தெளிந்த தேர்ந்த "அறிவேயாகும்".  அத்தகைய அறிவு எல்லோரிடமும் இருக்கிறது.  அதைத் தூண்டி, அதையே வலுவுள்ள ஆயுதமாகக் கொண்டு சிக்கல்களை  கவலைகளை அதன் நுட்பம் தெரிந்து ஒழித்து வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் பெறுவோம்.

"வாழ்க்கை" எனும் வண்டி, "எண்ணம் செயல்" என்னும் சக்கரங்களினால் ஓடிக் கொண்டே இருக்கிறது.  அந்த வண்டியில் "இன்பம், துன்பம்" என்னும் இரு வித சரக்குகளும் உள்ளன.  "விளைவு அறிந்த விழிப்பு"  என்ற மொழியில் தான் அந்தச் சரக்குகளின் மீது நுணுக்கமாக விலாசம் எழுதப் பெற்றுள்ளது.  "சிந்தனை" என்ற கண்ணாடி அணியாதவர்களும் அதில் விலாசம் எழுதப் பெற்ற மொழி தெரியாதவர்களும் தன் கைக்குக் கிடைத்த சரக்கை இறக்கித் துய்க்கிறார்கள்.   அதன் பயனை அனுபவிக்கின்றார்கள்"

சிக்கல்கள் இல்லாமல் வாழலாம் என்று நினைக்கிறோம் பாருங்கள்.  அதுவே சிக்கல் தான்.  சிக்கல் இல்லாமல் வாழவே முடியாது. சிக்கல்கள் வரும். வந்து போய்க் கொண்டே இருக்கும்.  இது வறையில் வந்த சிக்களெல்லாம் என்ன ஆயின? மூன்று வருடத்திருக்கு முன்னால் ஒரு பெரிய சிக்கல் இருந்து, அதைப் பற்றி இரவும் பகலும் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தோம்.  இப்போது நினைத்தால் எப்படி இருக்கிறது?  'அட! சாதாரண விஷயத்திற்கு நான் இரண்டு மாதமாக இரவும் பகலும் கஷ்டப்பட்டேனய்யா!.  நான் சரியாகக் கூட சாப்பிடவில்லை.  என்ன தொந்தரவு பட்டேன்!".  என்று இப்போது நினைப்பீர்கள்.  அது சரிதானா? சரியில்லை.

ஒரு கற்பனை, இப்படி வரவே கூடாது என்றோ, வந்தது அப்படியே தீர்ந்து விட வேண்டும் என்றோ நாம் தவறாக எண்ணுகிறோம்.  கவலைக்கு தப்புக் கணக்குத் தான் காரணம்.  இயற்கையில் ஒரு திட்டம் இருக்கிறது.  நமது செயலாற்றலில் ஒரு விளைவு இருக்கிறது.  விளைவுகள் வரும்.  அதே போல நம்மைப் போல்  ஒவ்வொரு ஜீவனும், ஒவ்வொரு மனிதனும் அவரவர்களுடைய முயற்சியில் செயலாற்றி வரக் கூடிய சமுதாயத்தில், ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதில் சிக்கல்கள் இருக்கும். இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? என்று எண்ணி அவ்வப்போது வரக்கூடிய சிக்கல்களைப் போக்கிக் கொள்வதுடன், நீங்கள் மேற்கொண்டு சிக்கல்களை விருத்தி செய்யாமல் இருந்தால் போதும்.  சிக்கல்கள் தானாகவே போய்விடும்.

இருக்கிற சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் முடியும்.  அதற்கு மேலாக ஒரு ஆராய்ச்சி.  அப்படியே ஒரு சிக்கல் இருந்தாலும், நான் முன் பின்னாக இதைச் சிந்திக்காமல் சிக்கல்கள் வந்து விட்டன. அந்தச் சிக்கல்களை எப்படிப் போக்குவது?  அதற்கு, சிக்கல்களை வகுத்துக் கொண்டு ஒவ்வொன்றாகத் தீர்மானம் செய்து முடிவுக்கு வந்து விட்டோமேயானால், அதன் பிறகு அம்மாதிரி சிக்கல்கள் வாரா. வந்தாலும் சிக்கலாகத் தெரியாது."
😨😨😨😨😨😨😨😨😨😨
"கவலையை போக்க சிந்தனையுடன் கடமையில் நில் ! ".
.

"தீர்க்க முடியாத துன்பம் என்று ஏதொன்றும் கிடையாது.  தீர்க்கும் வழியைத் தீர்க்கமாக அறியாதவர்களே உண்டு.  திறக்க முடியாத பூட்டே கிடையாது.  சரியான சாவியைக் கண்டுபிடிக்காதவர்தான் உண்டு"

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
😨😨😨😨😨😨😨😨😨😨
*நல்லதே நடக்கும்*
*வாழ்க வளமுடன்*

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.