Sunday 30 April 2017

பித்ரு_சாபம்_நீக்கும் #திருப்பூந்துருத்தி

#பித்ரு_சாபம்_நீக்கும் #திருப்பூந்துருத்தி_கோவில்_கிரிவலம்

தஞ்சாவூரில் இருந்து மேலைத் திருக்காட்டுப்பள்ளி வழியாக திருக்கண்டியூரில் இருந்து மேற்கே 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருப்பூந்துருத்தி.

ஒருமுறை முனிவர்கள் பலர் ஒன்று கூடி பேசிக்கொண்டிருந்தனர். 'ஆடி அமாவாசை அன்று, வேதாரண்யம், தனுஷ்கோடி, சங்கமுகம்,
திருவேணி சங்கமம், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, காவிரி, சிந்து, பிரம்மபுத்ரா, தாமிரபரணி, ராமேஸ்வரம் ஆகிய பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடினால் பெரும் புண்ணியம் கிடைக்கும்.பித்ரு சாபங்கள் விலகும். எனவே இந்த 13 புனித தீர்த்தங்களிலும் ஆடிஅமாவாசை அன்றைய தினத்தில் நீராடி வேண்டும் என்கின்றன புராணங்கள். ஆனால் யாரால் இது சாத்தியமாகும்?' என ஏக்கத்தில் பரிதவித்தபடி பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கிருந்த காசிப முனிவர், 'ஏன் முடியாது?. நான் ஆடி அமாவாசை அன்று இந்த பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடி, பிதுர் தர்ப்பணம் முடித்துக் காட்டுகிறேன்' என்றார்.

பின்னர் காசிப முனிவர், ஈசனை வேண்டி தவம் இயற்றி, பல சிவத்தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக திருப்பூந்துருத்தி வந்தடைந்தார். அங்கும் ஈசனை வேண்டி தவம் இருந்தார்.அவரது தவத்தை மெச்சிய ஈசன், ஆடி அமாவாசை அன்று காசிபருக்கு திருக்காட்சி கொடுத்தார். மேலும் 13 புனித தீர்த்தங்களையும், ஒரே இடத்தில் (திருப்பூந்துருத்தியில்) பாயும்படிச் செய்தார்.

(அந்தத் தீர்த்தம் தற்போது, காசிப தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது). காசிபர் அந்த புனித நீரில் நீராடி, ஈசனையும், அம்பாளையும் அந்த நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டார். அதன்காரணமாக அவருக்கு ஈசனுடன் ஐக்கியமாகும் முக்திநிலை கிடைத்ததாக தலபுராணம் கூறுகிறது.

இந்த ஆலயத்தில் அமாவாசை தோறும் கிரிவலம் நடைபெறுகிறது. அதிலும் ஆடி அமாவாசை நாளில் இத்தலத்தை கிரிவலம் வந்தால்,பித்ரு சாபங்கள் நீங்கும், செல்வ வளம் பெருகும், தடைகள் அகலும், தீவினைகளும் விலகும் என்பது ஐதீகம். அதனால் ஆண்டுதோறும்
ஆடி அமாவாசை அன்று, இவ்வாலயத்தில் திருவிழா நடத்தப்படுகிறது.அன்றைய தினம் காசிப தீர்த்தத்தில் நீராடி, 13 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய முழுப் பலனும் கிடைக்கும். மேலும் இத்தலத்தை கிரிவலம் வந்து ஈசனையும், உமையாளையும் வழிபட்டால்,பித்ரு சாபங்கள் தீர்வதுடன், குல தெய்வத்தின் அருளும் பரிபூரணமாய் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

Saturday 29 April 2017

உலக நல்வாழ்வு ஆசிரமம்

திருநெல்வேலி மாவட்டம் - ஆழ்வார்குறிச்சியை அடுத்த சிவசைலம் என்கிற கிராமத்தில் உலக நல்வாழ்வு ஆசிரமம் உள்ளது. கடந்த ஆண்டு அய்யா. பழ.நெடுமாறன் அவர்கள் தனது துணைவியார் பார்வதி அம்மையாருடன் சென்று 10 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று திரும்பியதும் தனது அனுபவத்தை தென்செய்தி இதழில் கட்டுரையாகவும் எழுதினார். இதைப் படித்த எனக்குள் ஆர்வம் அதிகரிக்க மேலும் செய்திகளை அய்யாவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். மேலும் மயிலாடுதுறை பேராசிரியர் த.செயராமனும் அவரது துணைவியார் சித்ரா அம்மையாருடன் சென்று சில நாட்கள் சிவசைலதில் தங்கி சிகிச்சை பெற்ற அனுபவத்தை எளிமையாக எனக்கு விளக்கினார். இதன் பிறகே கடந்த ஏப்ரல் 10 முதல் 19ம் தேதி வரை நானும், எனது மனைவி மங்கையர்க்கரசியும் சிவசைலத்தில் தங்கி சிகிச்சை பெற்றுத் திரும்பினோம்.
சிகிச்சை என்றால் மருந்து, மாத்திரை, ஊசி என கற்பனை செய்துகொள்ள வேண்டாம். இயற்கையான முறையிலேயே சிகிச்சை நடைபெறுகின்றன. இது குறித்து விரிவாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரையை எழுதுகிறேன்.
ஆசிரமத்தில் காலை 6-00 மணிக்கெல்லாம் சூடான பார்லி கஞ்சி, சுக்குமல்லி காப்பி, கருவேப்பிலைச் சாறு குடிப்பதற்குக் கிடைக்கும். 7-00 மணிமுதல் 8-00 மணிவரை யோகா பயிற்சி தருகிறார்கள். பயிற்சிக்குப்பிறகு மண்பட்டியை வயிற்றில் வைத்துக் கொண்டு 20 நிமிடம் படுத்திருக்க வேண்டும். ஈர மண்ணை குழப்பி துணியில் நிரப்பி அதை செவ்வக வடிவில் மடித்து வயிற்றில் வைத்து விடுவார்கள். இதைத்தான் மண்பட்டி என்று சொல்கிறார்கள். அடிவயிற்றுச்சூட்டை அள்ளிக்கொண்டு சென்று விடும் இந்த மண்பட்டி.
காலை 8-00 மணியளவில் மருத்துவர் நல்வாழ்வு (பெயரே நல்வாழ்வு தான்) உங்கள் எடையை பரிசோதிப்பார். பிறகு உங்கள் உடல் நலம் குறித்து விசாரிப்பார். உடன் செவிலியர்கள் இருப்பார்கள். அன்றைய நாளில் உங்களுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை குறித்து மருத்துவர் செவிலியரிடம் தெரிவிப்பார். மண் குளியல், வாழை இலைக் குளியல், ஆயில் மசாஜ், முதுகுக் குளியல், முழுத் தொட்டிக்குளியல், இடுப்புக் குளியல், நீராவிக் குளியல் என்று நாள் தோறும் சிகிச்சைகள் மாறிமாறி தொடர்ந்த வண்ணம் இருக்கும்.
மண் குளியல் என்பது ஈர மண்ணை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் பூசி விடுவது. பிறகு 1 மணிநேரம் வெயிலில் நிற்பது. இப்படி நிற்கும் போது உடலில் உள்ள சேறு கொஞ்சம் கொஞ்மாக காய்ந்து விடும். பிறகு உடல் இருக்கும் இந்த மண் குளியலால் உடலில் உள்ள இரத்த ஓட்டம் சரிசெய்யப்படும் தோல் நோய் குணமடையும். உடலில் வெப்பம் குறையும். தோலில் உள்ள வியர்வை அடைப்புகள் அகற்றப்பட்டு வியர்வை தடையின்றி வெளிப்படும். ஒரு மணிநேரத்திற்குப் பிறகு அழகான இதமான ஒரு குளியல் காத்திருக்கும். குளிப்பதற்கு மின் மோட்டார் போட்டு விடுவார்கள். காய்ந்த மண் உடலில் இருந்து சுலபமாக வெளியேறும் விதமாக அருவியில் குளிப்பது போன்று உயரத்திலிருந்து தண்ணீர் கொட்டும்படி அமைத்துள்ள முறை உங்களை நீண்டநேரம் நீராடத் தூண்டும்.
வாழை இலைக்குளியல் என்பது நண்பகல் மொட்டை மாடி வெயிலில் பாய் விரித்து அதன்மேல் வாழைஇலையை பரப்பி, அதன்மேல் படுக்க வைத்து, வாழைஇலை கொண்டு நம்மை மூடி மூச்சுக்காற்றுக்கு தடை ஏற்படாதவாறு கட்டிவிடுவார்கள். 10-15 நிமிடங்களில் வெப்பத்தின் தாக்கத்தினால் உடலில் உள்ள நாட்பட்ட வியர்வைக் கழிவுகள் லிட்டர் கணக்கில் வெளியேறும். இதேபோல வியர்வைக் கழிவுகளை வெளியேற்ற நீராவிக்குளியலும் நடைபெறும்.
இதுபோக சுளுக்கு, தசைப்பிடிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு ஆயில் மசாஜ் மற்றும் உடலில் உள்ள வெப்பத்தை எளிதான முறையில் வெளியேற்ற முதுகுக்குளியல், முழுத் தொட்டிக் குளியல், இடுப்புக்குளியல் என்று இயற்கையான இனிமையான தனித்தனி சிகிச்சை முறைகளும் உண்டு.
உணவு முறைகளில் குறிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியது உப்பு, புளிப்பு, காரம் தவிர்த்தும் சமைக்காத இயற்கை உணவுகள் மட்டுமே. காலை 11 மணிக்கு வெல்லம் கலந்த அவல், கூடவே தயிர், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, தக்காளி, கொஞ்சம் மிளகுதூள் கலந்த அவல் அதுபோக தேங்காய் துருவல் போட்ட அவல், மற்றும் வாழைப்பழம் கிடைக்கும். இதன்பிறகு நண்பகல் 12-30 மணி, 2-00 மணி, 3-30 மணி, மாலை 4-30 மணி, 5-30 மணிகளுக்கு திரவ உணவு வழங்குவார்கள். கேரட் சாறு, தர்பூசணி சாறு, மோர் + கலந்த சாறு, வெந்தயம் + மோர் கலவை, இளநீர், வில்வ இலைச் சாறு, நெல்லிச்சாறு, சாத்துக்குடி சாறு, பார்லி, சுக்குமல்லி, காபி, மோர் மற்றும் வேகவைத்த உப்பிடாத கேழ்வரகு கூழ் கிடைக்கும். உரிய நேரத்தில் அவரவர்களுக்கு என்ன திரவு உணவு உள்ளது என குறிப்பேட்டில் பார்த்து அதன்படி நமக்கு உரியதை எடுத்துச் சுவைக்கலாம்.
மாலை 4-30 மணிமுதல் 5-30 மணிவரை யோகாப்பயிற்சி நடைபெறும். பிறகு இரவு 7-00 மணிக்கு இரவு உணவு தயாராகிவிடும். இரவு உணவு எப்போதும் பழங்கள் மட்டுமே. தேங்காய் பேரிச்சம்பழம், திராட்சை, கொய்யா, தர்பூசணி, மாம்பழம், பலாப்பழம், அண்ணாச்சி, வெள்ளரி, பப்பாளி, வாழைப்பழம் என அந்தந்த பருவத்தில் கிடைக்கக் கூடிய பழங்களும், மலிவு விலையில் சந்தையில் கிடைக்கும். பழங்களுமாக வைத்திருப்பார்கள். தேவையான அளவு பழங்கள் சாப்பிடலாம். நம்முடைய அறைக்கு கொண்டு வந்தும் சாப்பிடலாம். தேங்காய் துருவலுடன் முளைகட்டிய ஏதாவதொரு பயறும் இரவு உணவில் உண்டு.
இதன்பிறகும் இரவில் பசிக்கும் உணர்வு ஏற்பட்டால், இதனால் தூக்கம் தடைபட்டால், சோர்வு ஏற்பட்டால் வெந்நீரில் சிறிதளவு தேன்கலந்து தருவார்கள். அதைக் கலந்து குடித்ததும் பத்தாவது நிமிடத்தில் பசி மறைந்து, சோர்வு களைந்து தூக்கம் உங்களைத் தழுவிச் செல்லும்.
சிகிச்சை பெறும் அனைத்து நாட்களிலும் காலை, மாலை கட்டாயம் எனிமா எடுத்துக் கொள்ள வேண்டும். எனிமா என்பது டியூப் வழியாக ஆசனவாயில் தண்ணீரை செலுத்தி மலக்குடலில் இருகிக் கிடக்கும் நாட்பட்ட மலக்கழிவுகளை வெளியேற்றும் இயற்கையான முறையாகும். இதனால் மலக்குடல் குளிச்சியடைந்து மலச்சிக்கல் தொந்தரவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். சிகிச்சை நாட்களில் மூன்று முதல் 5 நாட்கள் வரை உண்ணாநோன்பு (பாஸ்டிங்) இருக்க வேண்டி வரலாம். இந்த நாட்களில் உங்கள் உடலிலிருந்து நிறைய நாட்பட்ட மலக்கழிவுகள் வெளியேறுவதைக் கவனிக்கலாம். இப்படி 10 நாட்கள் சிகிச்சை முடிந்து வெளியேறும்போது உங்கள் உடலில் புதுரத்தம் ஓடும் உணர்வை உங்களால் கவனிக்க முடியும். காலை, மாலை யோகாப் பயிற்சியின் மூலமாக வளையாத உடல் நாணலாய் வளையும் வியப்பைக் காணலாம்.
தங்கும் அறை இருபது உள்ளன. அறை வாடகை ரூ.200, 400, 600 என மூன்று தரத்தில் உள்ளன. 600 ரூபாய் கொண்ட அறையில் இருவர் தங்கினால் முதல் நபருக்கு ரூ.600ம் இரண்டாம் நபருக்கு ரூ.300ம் என 900 ரூபாய் நாளொன்றுக்கு வசூலிக்கிறார்கள். இந்த நடைமுறையைத்தான் மற்ற அறைகளுக்கும் கடைபிடிக்கிறார்கள். ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்பதால் இவ்விரு மாதங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்படும். எனவே மற்ற மாதங்களில் செல்வது சிறப்பு. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஆசிரமம் அமைந்திருந்தாலும் கோடைக் காலங்களில் கடும் வெப்பத்தை சமாளிப்பது மிகவும் கடினமாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை தோறும் கோரைச்சித்தர் வாழ்ந்த மலைக்கு நடந்தே அழைத்துச் செல்கிறார்கள். இந்தப் பயண அனுபவம் மிகவும் சுவையானது என சென்று வந்தவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.
யோகப் பயிற்சியும், இயற்கை உணவும் சாத்தியமாகிவிட்டால் நாம் எப்போதும் இனிமையாக வாழலாம். எனவே உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட, ஒருமுறை நல்வாழ்வு ஆசிரமத்திற்கு சென்று தங்கி வருவது நல்லது. 10 நாட்களில் எனக்கும் என் மனைவிக்கும் சிகிச்சைக்கான மொத்த செலவு ரூ.12,500 மட்டுமே. (இதில் அறை வாடகை மட்டும ரூ.9000) தென்னையும், பழமரத்தோப்புகளுமாக பூத்துக்குலுங்கும் இயற்கை அழகில் அமைந்துள்ள காற்றின் தீண்டலும், பறவைகளின் விதவிதமான மொழிகளையும் தவிர வேறெதையும் உணரமுடியாத, கேட்க முடியாத இனிமையான சூழலை கண்டு களித்து வாருங்கள்... சென்னையிலிருந்து தென்காசி சென்று அங்கிருந்து ஆழ்வார்குறிச்சிக்குச் சென்றால் அடுத்த நான்காவது கி.மீ. தூரத்தில் உள்ளது, சிவசைலத்தில் நலவாழ்வு ஆசிரமம்.
முகவரி :
மருத்துவர். இரா.நல்வாழ்வு, பி.என்.ஒய்.எஸ்.,
உலக நல்வாழ்வு ஆசிரமம்,
சிவசைலம் - 627412, ஆழ்வார்குறிச்சி (வழி), திருநெல்வேலி மாவட்டம்.
தொலைபேசி : 04634 - 283484, 94430 43074, 9360 869 867
www.universalgoodlife.com, Email :
goodlifeashram@yahoo.co.in
****
*நண்பர் ஒருவரின் பதிவிலிருந்து*

Friday 28 April 2017

காகம் கரைதலும் அதன் பலன்கள்

காகம் கரைதலும் அதன் பலன்கள்!

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நு}லோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
என்ற குறளுக்கிணங்க வாழ்க்கை வாழும் 'காகம்" இனம் விருந்தோம்பலுக்கும் விளக்கமாய் திகழ்கிறது. அதன் தகுதியை எண்ணிய முன்னோர் அதன் கரைதலுக்கு கணிதம் கண்டு பலபலன்களை வகுத்துள்ளனர்.

🐦 காலம், பு ர்வம், கிழக்கு முதலான திசைகளில் ஒன்றரை மணி நேரம் சஞ்சரித்து இருந்து கரையும் பலன் கிழக்கு முதலிய திசை எட்டிற்கும் முறையே லாபம், சத்ருநாசம், பந்து ஜன லாபம், தனவரவு, மழை, கலகம், பிராண பயம், அறப்பலன் ஆகியவை ஆகும்.

🐦 இதைக்கொண்டு காகம் கரைதலுக்கு பலன் கண்டு கொள்ளலாம். இப்போதும் வீட்டிற்கு அருகில் காகம் கரைந்தவுடன், 'காகம் கரைகிறது விருந்தாளி வரப்போகிறார்" என்று யு கிப்பது நடைமுறை வழக்கமாக இருக்கிறது.

🐦 இத்தகு சிறப்புமிக்க காகம் கரைதலை விடுத்து, நடமாடும் நம்மீது விழுவது, உராய்வது, தலையில் தட்டிவிட்டுப் போவதும் உண்டு. இது நமக்கு நன்மையை அளிக்கக் கூடியவை அல்ல.

பரிகாரம் :

🐦 பரணி, கார்த்திகை, ஆயில்யம், பு ரம், கேட்டை, பு ராடம், பு ரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் காகம் மேலே விழுந்தாலோ அல்லது உரசிவிட்டுப் போனாலோ அது தோஷம் ஆகும். இதற்கு அச்சமயம் உடுத்தியிருந்த ஆடையுடன் ஸ்நானம் செய்ய தோஷ நிவர்த்தி ஆகும் என நம் முன்னோர்கள் கூறுகின்றனர்.

🐦 காகம் தலையில் தட்டினால் சனீஸ்வரனின் ஆதிக்கம் அதிகரிப்பதால், அதற்கு தகுந்த பரிகாரங்களைச் செய்து சனீஸ்வரனை சாந்தியும் செய்ய வேண்டும். உடல் முழுவதும் நனைய நீராடி முடித்து அதன்பிறகு உள்ளன்போடு ஆலயத்திற்குச் சென்று எள் தீபம் ஏற்றி முறைப்படி பரிகாரம் செய்தால் காக வாகனத்தான் கனிவு காட்டுவார். காகத்திற்கும் அன்னமிடுவது நல்லது. குறிப்பு :

உங்களுக்கு பொன்னியின் செல்வன் தொடர் சரிவர கிடைக்கப்பெறவில்லை எனில் நித்ரா நாட்காட்டியின் முதற்பகுதியில் உள்ள கதைகள்ஃகட்டுரைகள் பகுதியில் பொன்னியின் செல்வன் தொடர் தினமும் கொடுக்கப்பட்டு வருகிறது, படித்து பயன் பெறவும்.

Thursday 27 April 2017

மனதைக் கவர்ந்த நல்ல பதிவு

மனதைக் கவர்ந்த நல்ல பதிவு
குட்டி குட்டி விஷயங்கள்
தொட்டு மனதோடு விளையாடும
*சில அருமையான விஷயங்கள்*

💠வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது *"மரம்...."*
வெட்டுங்கள் - மழை நீரை சேமிப்பேன் என்கிறது *"குளம்..........."*

💠ஆன்லைனில் கிடைக்கும் அன்பும் ஆன்ட்ராய்ட் போனில் இருக்கும் சார்ஜும் அதிகம் நீடிப்பதில்லை..

💠தோசைகளின் எண்ணிக்கையை *சட்னியின் தரமே* தீர்மானிக்கிறது.

💠கல்வி கற்க புத்தகங்களை விட *நோட்டுக்களே*அதிகம் தேவைப்படுகின்றன.!

💠நம்மை நிராகரிக்கப்படும் இடத்தில்.. நம் கோபத்தை காட்டுவதை விட சிரித்த முகத்தை காட்டுவதே மிகச்சிறந்த பதிலடி..

💠பழகிய மிருகங்களிடம் இருக்கும் பாசம் கூட சில மனிதர்களிடம் இல்லை!

💠காரணமே இல்லாமல் சோகமாக இருப்பது ஒரு சாபம். காரணமே இல்லாமல் மகிழ்ச்சியாய் இருப்பது ஒரு வரம்.

💠திருக்குறளை... வாழறதுக்காக படிச்சவங்கள விட..! "ரெண்டு மார்க்" வாங்குறதுக்காக படிச்சவங்க'தா அதிக பேரு..!

💠அனுபவத்தை எந்த ஆசிரியராலும் கற்றுக்கொடுக்க முடியாது! அதற்கு
*பல தோல்விகளும்,*
*சில துரோகிகளும்* தேவை!!

💠Money மட்டுமே மதிக்கப்படுகிறது... *மனிதம்*பலரால் மிதிக்கப்படுகிறது..

💠நம்மை நிர்ணயிக்கும் இரண்டு விசயங்கள் :-
நம்மட்ட ஒன்னும் இல்லனு தெரிஞ்சும் நம்மோட பொறுமை..!
எல்லாம் இருக்கும் போது நம்மோட நடத்தை..!

💠எப்பொழுதும் திரையரங்குகள் மீது எனக்கு இனம் புரியா மரியாதை
உண்டு...!! எளியவர்களை முன் இருக்கைகளில் அமர வைத்து அழகு பார்க்கும் ஒரே இடம்...!!!

💠எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அழுது கொள்ளுங்கள் ஆனால் மீண்டும் அதே காரணத்திற்காக மட்டும் அழக்கூடாது.

💠கார்ட்டூன் சேனலில் இருந்து கிரிக்கெட் சேனலுக்கு மாறி தான் வளர்வதை அவனையும் அறியாமல் எனக்கு உணர்த்துகிறான் என் மகன்!!!

💠பலூன் வியாபாரியின் மூச்சுக் காற்றில் தான் அவன் குடும்பமே உயிர் வாழுகிறது!!

💠பணம் மரத்தில் காய்க்குமானால் மனிதன் கோடாறிக்கு பதிலாக ஏணியை தேர்வு செய்திருப்பான்...

💠நாம மேல ஏற ஏற கீழ இருப்பவர்கள் சிறிதாய் தெரிய ஆரம்பித்தால், 'தன்னடக்கம்' என்னும் கண்ணாடி அணிந்து கொள்வது அவசியம். உணர்ந்தவன் உயர்வான்!!

💠லாரியில அழுது கொண்டே சென்றது..... ஆற்றிடமிருந்து பிரிந்த மணல்.......!!!

Wednesday 26 April 2017

மின்சாரத்தின் இயல்ப

*கண்டுபிடிப்பு:* மின்சாரத்தின் இயல்பு (The Nature of Electricity)

*கண்டறிந்தவர்:* பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்

*காலம்:*1755

*பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் ஒரு மாபெரும் மேதை. அவர் கால் பதிக்காத துறையே இல்லை எனலாம். அவர் ஒரு எழுத்தாளர், அறிவியலாளர், அரசியல் தத்துவ வித்தகர், சித்தாந்தி, அரசியல்வாதி, தபால் தந்தி அலுவலர், கண்டுபிடிப்பாளர், சமூகக் காவலர், ராஜதந்திரி இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். அறிவியல் துறைக்கு அவர் ஆற்றிய அரிய சாதனைகளில் ஒன்று மின்சாரத்தின் இயல்பினைக் கண்டறிந்தது ஆகும். 19ம் நூற்றாண்டில் உலகின் தொழில்துறை வளர்ச்சிக்கு அடிகோலியதில் மின்சாரத்தின் பங்கு மிக அதிகம் என்பது மறுக்க முடியாத நிதர்சனமான உண்மை.

*பெஞ்சமின் ஃப்ராங்க்ளினுக்கு முன்பே மின்சாரம் கண்டறியப்பட்டுவிட்டது. 18ம் நூற்றாண்டின் முதல் 50 ஆண்டுகள் வரை மின்சாரம் என்பது இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒன்று விளையாட்டுத்தனமான நிலை மின்சாரம் (Static Electricity) (ஒரு சீப்பை வாரிக் கொண்டு கீழே கிடக்கும் தாளைத் தூக்குதல், வேகமாக வெளியில் சென்று வந்ததும் சட்டையிலிருந்து பட பட வென்ற சத்தம் கிளம்புதல், அருகில் கொண்டு சென்றால் மயிர்க்கூச்செரிதல் போன்றவை நாம் நிலைமின்சாரம் கொண்டு விளையாடியிருக்கக் கூடிய விளையாட்டுகள்!). மற்றொன்று அதிபயங்கரமான அழிவைத் தரக் கூடிய மின்சாரம் (எ.கா. மின்னலில் பாய்வது).

*1746ல் பெஞ்சமின் தான் மின்சாரத்தைத் தனது முக்கியமான ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட விஞ்ஞானியாவார். இவர் தான் முதன்முதலில் நிலைமின்சாரமும், மின்னலில் பாயும் மின்சாரமும் இரு வடிவத்திலிருக்கும் ஒரே பொருள் என்று யூகித்தவரும் ஆவார்.

*ஃப்ராங்க்ளினின் தனது சோதனைகளுக்கு Leyden jars எனப்படும் ஜாடிகளைப் பயன்படுத்தினார்.

*ஒரு கண்ணாடிக் குடுவையின் உள்ளும் புறமும் மின்கடத்தும் உலோகப் பூச்சு பூசப்பட்டிருக்கும். (படத்தில் A மற்றும் B) இந்த ஜாடிகளில் பாதி அளவுக்கு நீர் நிரப்பப்பட்டிருக்கும். ஒரு கம்பி (எலெக்ட்ரோட்) உட்பக்கமாக இந்த B உலோகப்பூச்சைத் தொடும் வண்ணம் வைக்கப்பட்டிருக்கும். ஒரு சிறிய கைப்பிடி கொண்ட மின் உற்பத்தி செய்யும் இயந்திரத்தின் மூலம் இந்த ஜாடியின் உட்பூச்சில் மின்சாரத்தைச் சேமித்துக் கொள்ள முடியும்! இது தான் ஆரம்ப கால மின்கலனாகும். தற்போதைய capacitor என்றும் கொள்ளலாம்.

*யாராவது இந்த மேல்பகுதியைத் தொட்டால் மின்சாரம் தாக்குவதை உணர முடியும்! ஃப்ராங்க்ளின் இது போன்ற ஜாடிகளை வரிசையாக வைத்து அதற்குத் தொடர்பை ஏற்படுத்தி விட்டால், அதிக அளவிலான ஆளையே தூக்கி எறியக் கூடிய அளவு மின்சாரம் உருவாக்க முடியும் என்பதைக் கண்டறிந்தார்.

*1752ல் தனது நண்பர்களுக்கு அப்படி ஒரு சோதனையைச் செய்து காட்ட முயலும் போது அவர் தற்செயலாக ஜாடியின் மேற்பகுதியைத் தொட்டுவிட ஊதா நிறத்தில் ஒளி ரூபத்தில் மின்சாரம் பாய்ந்து சில அடிகளுக்குத் தூக்கிவீசப்பட்டார். இது கிட்டத்தட்ட மின்னல் போலவே இருப்பதைக் கண்டு அதிசயப்பட்டார் ஃப்ராங்க்ளின். ஆக, ஜாடிக்குள் இருக்கும் நிலைமின்சாரமும், வானத்தின் மேகத்திலிருந்து வெளியாகும் மின்சாரமும் ஒன்றே என்று நிரூபிக்க முனைந்தார் ஃப்ராங்க்ளின்.

*ஒரு பெரிய பட்டம் ஒன்றைத் தயாரித்து அதில் ஒரு மெல்லிய மின்கடத்தும் கம்பியை நூலுடன் சேர்த்துப் பயன்படுத்திக் கீழே ஒரு பெரிய இரும்புச்சாவியைக் கட்டினார். இரும்புச்சாவியில் மின்சாரம் வந்து தங்கிவிடும் என்பது அவரது கணிப்பு. அந்த இரும்புச்சாவியை ஒரு பட்டுத் துணியால் கட்டி அதைத் தன் கையில் பிடித்துக் கொண்டார் ஃப்ராங்க்ளின்.

*இதை உருவாக்கிய சில நாட்களில் மின்னல் வெட்டியபடி பெரிய மழை பெய்ய ஆரம்பித்தது. தனது பட்டத்தைத் தூக்கிக் கொண்டு ஓடிய ஃப்ராங்க்ளின் அதைப் பறக்கவிட்டார். வரலாற்றில் எழுதி வைத்திருப்பது போல் நிகழவில்லை. அந்தோ பரிதாபம்! பட்டத்தின் நூல் அறுந்து விட்டது! அன்று மிக நல்லதொரு காரியம் நிகழ்ந்திருக்கின்றது. இதே போன்ற ஒரு சோதனையைச் செய்ய முயன்ற ப்ரெஞ்சு விஞ்ஞானி ஒருவர் மின்னல் தாக்கிப் பரிதாபமாக உயிரை விட்டுவிட்டார்!

*அன்று ஃப்ராங்க்ளின் கதை என்னவாயிற்று? மின்னல் அடித்ததும், நீல வண்ணத்தில் பட்டத்தின் கயிறு வழியாக மின்சாரம் நீர் போல் இறங்கி வருவதைக் கண்டார் ஃப்ராங்க்ளின். அடுத்த விநாடியே பட்டத்தின் நூல் பிரிந்து அறுந்து விட்டது. ஃப்ராங்க்ளின் மிக மிகக் கவனத்துடன் இரும்புச் சாவியின் அருகில் கையைக் கொண்டு சென்றார். எவ்வாறு அவரை முன்பு மின்சாரம் தாக்கியபோது உணர்ந்தாரோ அதே போன்று இப்போதும் உணர்ந்தார்! மின்னலின் மின்சாரமும், நிலைமின்சாரமும் ஒன்றே என்ற அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தினார்.

*அவரது இந்தத் தத்துவத்தின் படியே தான் இடிதாங்கிகள் உருவாக்கப்படுகின்றன. இவரது கண்டுபிடிப்பு பின்னாளில் வோல்டா, ஃபாரடே மற்றும் ஓர்ஸ்டெட் போன்ற பலரும் மின்சாரத்தைச் சார்ந்து பல அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தக் காரணமாக இருந்தது என்றால் அது மிகையாகாது.