உனக்குள் இருக்கும் இறைவாதத் தன்மையை புரிந்துகொள்
உன்னுடைய இருப்பை
மௌனத்தின் மூலம் கண்டுபிடி
மௌனம் மிகப் பெரிய அமைதியைக் கொண்டு வரும்
அது உள்ளேயிருந்த குப்பை கூளங்களை எரித்துவிடும்
மௌனத்தில் இருந்து துவங்குங்கள்
மௌனம் பழக, அமைதி பேரின்பம் வசியம் எல்லாம் வளரத் துவங்கும்
மௌனம் என்பது உள்உணர்வுக்குள் அழைத்துச் செல்லும்
உன் இருப்பின் மையத்திற்கு கொண்டுசெல்லும்
நீ மையத்திற்கு வருவது என்பது உன்னையே மாற்றுகிறது
அம்மையத்தைக் கண்டு பிடிக்க சிறந்த வழி மௌனம்தான்
மௌனம் நம்மை முழுமைப் படுத்தி அமைதியான, வெறுமையான, ஆனந்தத்தைப் பெற்றுத்தரும்
மனம் ஒரு மந்திரவாதி
அது நோயை உருவாக்குகிறது
அதுவே அதற்கு நிவாரணமும் தேடுகிறது
மனம்தான் எல்லா மாயைகளையும் உருவாக்குகிறது
எல்லாமே முதலில் ஓர் எண்ணமாய்த் தோன்றி, அது மனோவசியப் படுத்தி விடுகிறது
இந்த மனோவசியத்தை உடைக்க மௌனம் பழக வேண்டும்
எல்லாமே மனம்தான் என்கிற விழிப்புணர்வு முழுமையாக வந்து விட்டால் அந்த மனம் என்கிற மந்திரவாதி மறைகிறான்.
Tuesday 10 May 2016
மௌனம் என்பது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.