Monday 19 June 2017

கடிகாரத்தை வீட்டின் எந்த திசையை நோக்கி வைத்தால் வளம் அதிகரிக்கும்

கடிகாரத்தை வீட்டின் எந்த திசையை நோக்கி வைத்தால் வளம் அதிகரிக்கும்
********************************************
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள பொருட்களை வைக்கும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றலின் அளவை ஈர்க்கும். இங்கு அதுக் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது
அனைவருக்குமே வீடு தான் சொர்க்கம். அந்த வீட்டை நாம் நமக்கு பிடித்தவாறு, பிடித்த பொருட்களால் அலங்கரிப்போம். அதே சமயம் அப்படி அலங்கரிக்கும் போது, அந்த பொருட்களை சரியான திசையை நோக்கி வைக்க வேண்டியது அவசியம். ஏனெனில் வீட்டில் செல்வம் நிலைத்து நிற்க வேண்டுமானால், வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டை அலங்கரிக்க வேண்டும்.
மேலும் வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள பொருட்களை வைக்கும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றலின் அளவை ஈர்க்கும். இங்கு நம் வீட்டில் உள்ள பொதுவான சில பொருட்களும், அதை எந்த திசையை நோக்கி வைக்க வேண்டும், எப்படி வைக்கக்கூடாது என்று கொடுக்கப்பட்டுள்ளது.
கடிகாரம் நம் அனைவரது வீட்டிலும் கடிகாரம் நிச்சயம் இருக்கும். சுவற்றில் தொங்க விடும் கடிகாரத்தை சரியான திசையில் வைத்தால் தான், நேர்மறை ஆற்றல் வீட்டில் இருக்கும். அதையே தவறான திசையில் மாட்டினால், அதனால் எதிர்மறை விளைவுகளைத் தான் சந்திக்க வேண்டியிருக்கும்.
எந்த திசை சிறந்தது? * கடிகாரத்தை கதவுகளுக்கு மேலே தொங்கவிடக்கூடாது. * வீட்டின் தெற்கு பகுதியில் உள்ள சுவற்றிலும் கடிகாரத்தை மாட்டக்கூடாது. ஏனெனில் தெற்கு எமதர்ம ராஜனின் திசையாகும். * கடிகாரத்தை கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையில் உள்ள சுவற்றில் தொங்க விடுவது நல்லது.
கண்ணாடி வீட்டில் உள்ள பொதுவான பொருட்களுள் முகம் பார்க்கும் கண்ணாடியும் ஒன்று. இந்த கண்ணாடியை தவறான திசையில் மற்றும் தவறான இடத்தில் வைத்தால், அதனால் எதிர்மறை ஆற்றல்கள் வீட்டில் பிரதிபலிக்க ஆரம்பிக்கும்.
எந்த திசை சிறந்தது? * வீட்டின் சுவற்றில் தொங்கவிடும் கண்ணாடி சதுரம் அல்து செவ்வக வடிவில் இருக்க வேண்டும். * அதேப் போல் கண்ணாடியை வடக்கு-கிழக்கு திசையில் வைப்பதே நல்லது. * குறிப்பாக தரையில் இருந்து 4-5 அடிக்கு மேலே கண்ணாடி இருக்க வேண்டும்
7 குதிரைகள் கொண்ட ஓவியம் பலரும் தங்களது படுக்கை அறையை அலங்கரிக்க பல்வேறு ஓவியங்களை வாங்கி சுவற்றில் தொங்க விடுவார்கள். அதில் பெரும்பாலானோர் வாங்கும் ஓர் ஓவியம் தான் 7 குதிரைகள் ஓடும்படியான ஓவியம். இந்த ஓவியம் நேர்மறை எண்ணங்களை உருவாக்குவதோடு, வீட்டில் செல்வ வளத்தையும் அதிகரிக்கும்.
எந்த திசை சிறந்தது? * குதிரை ஓவியத்தை நுழைவு வாயிலை நோக்கி தொங்க விடக்கூடாது. * அதேப் போல் சமையலறை, குளியலறையை நோக்கியும் வைக்கக்கூடாது. * இந்த ஓவியத்தை ஜன்னலுக்கு எதிர்புறத்தில் தொங்க விட வேண்டும்.
மணி ப்ளாண்ட் இந்த கொடியை ஒருவர் வீட்டில் வளர்த்தால், செல்வ வளம் அதிகரிக்கும். அதேப் போல் இந்த மணி ப்ளாண்ட்டை வடக்கு-கிழக்கு திசையை நோக்கி வைத்து வளர்ப்பதே சிறந்தது
ஓடும் நீர் போன்ற காட்சிப்பொருள் பெரிய வீட்டில் இருப்பவர்கள், இதுப்போன்ற பொருட்களை வாங்கி வீட்டை அலங்கரிப்பார்கள். இப்படி நீர் ஓடுவது போன்ற காட்சிப்பொருளில் இருந்து வெளிவரும் சப்தம், மனதை அமைதியாக வைக்க உதவும். அதோடு வீட்டை நோக்கி அதிர்ஷ்டம் தேடி வரவும் செய்யும்.
எந்த திசை சிறந்தது? இந்த காட்சிப் பொருளை வடகிழக்கு திசையை நோக்கி வைப்பதை மட்டும் தவிர்க்க வேண்டும்
நன்றி:-மோகன் கிருஷ்ணசாமி@படித்ததில் பிடித்தது.

Monday 5 June 2017

வளமுடன் வாழ

வளமுடன் வாழ (108) சூத்திரங்கள்
××××××××××××××××××
1.      கடமையை செய்.
2.      காலம் போற்று.
3.      கீர்த்தனை பாடு.
4.      குறைகள் களை.
5.      கெட்டவை அகற்று.
6.      கேள்வி வேண்டும்.
7.      கை கொடு.
8.      கோவிலுக்குச் செல்.
9.      கொலை செய்யாதே.
10.  கூச்சம் வேண்டாம்.
11.  தர்மம் செய்.
12.  தாயை வணங்கு.
13.  திமிர் வேண்டாம்.
14.  தீயவை பழகாதே.
15.  துன்பம் துரத்து.
16.  தூய்மையாய் இரு.
17.  தெளிவாக சிந்தி.
18.  தைரியம் வேண்டும்.
19.  தொண்டு செய்.
20.  தோழனை கண்டுபிடி.
21.  சத்துணவு சாப்பிடு.
22.  சஞ்சலம் போக்கு.
23.  சாதனை செய்.
24.  சிக்கனம் தேவை.
25.  சீருடன் வாழ்.
26.  சுத்தம் பேண்.
27.  சூழ்ச்சி செய்யாதே.
28.  செலவை குறை.
29.  சேர்க்கப் பழகு.
30.  சைவம் சிறந்தது.
31.  சொர்க்கம் தேடு.
32.  சோகம் வேண்டாம்.
33.  சோம்பல் அகற்று.
34.  செளந்தர்யம் சேர்.
35.  நம்பிக்கை கொள்.
36.  நிம்மதி பெரிது.
37.  நெஞ்சத்தில் நில்.
38.  நேர்மை கடைபிடி.
39.  நைந்து பழகு.
40.  நொறுங்கத் தின்னு.
41.  நோயை விரட்டு.
42.  பண்புடன் பழகு.
43.  பாவம் செய்யாதே.
44.  பிதற்றல் குறை.
45.  பீடிகை போடாதே.
46.  புண்ணியம் சேர்.
47.  பூசல் நீக்கு.
48.  பெரியோரை மதி.
49.  பேதம் வேண்டாம்.
50.  பைந்தமிழ் பேசு.
51.  பொய் பேசாதே.
52.  முகத்தை சுழிக்காதே.
53.  மூத்தோற்கு உதவு.
54.  மெல்லப் பேசு.
55.  மேலானவை நினை.
56.  மோசம் செய்யாதே.
57.  மௌனம் நல்லது.
58.  வறுமை ஒழி.
59.  வளம் சேர்.
60.  விளையாட்டல்ல வாழ்க்கை.
61.  வீம்பு விலக்கு.
62.  ஒவ்வொன்றாக செய்.
63.  வருவோரெல்லாம் நண்பர்களல்லர்.
64.  வேற்றுமை ஒழி.
65.  வையகம் போற்று.
66.  கலைஞனாய் இரு.
67.  ஞானம் வேண்டு.
68.  குணம் வளர்.
69.  பண்ணிப் பார்.
70.  எண்ணுக உயர்வு.
71.  பயம் தவிர்.
72.  மெய்யூட்டி வளர்.
73.  மெய்யென பேசு.
74.  தன் கையே உதவி.
75.  தீயோடு விளையாடாதே.
76.  மலையோடு மோதாதே.
77.  தடத்தில் நட.
78.  விபரீதம் வேண்டாம்.
79.  கண்டு களி.
80.  அட்டூழியம் செய்யாதே.
81.  கேட்டேதும் பெறா.
82.  நாட்டை நேசி.
83.  வீட்டோடு வாழ்.
84.  வரம் கேள்.
85.  திருடி பிழைக்காதே.
86.  மேதாவித்தனம் வேண்டாம்.
87.  சொல்லுக பயனுள.
88.  பழங்கள் சாப்பிடு.
89.  சினம் தவிர்.
90.  அனுபவம் பலம்.
91.  கண்ணெனப் போற்று.
92.  திருடனே திருந்து.
93.  இறைவனைப் புகழ்.
94.  அமைதி கொள்.
95.  துக்கம் மற.
96.  பங்கம் பண்ணாதே.
97.  அன்பே அச்சாணி.
98.  கொஞ்சி மகிழ்.
99.  மட்டம் தட்டாதே.
100.  சொந்தம் சூழ்ந்திரு.
101. தவறைத் திருத்து.
102. அம்மாவே தெய்வம்.
103.  வன்மம் வைக்காதே.
104.  சொல் தவறாதே.
105.  தோள் கொடு.
106.  பேராசைப் படாதே.
107.  புன்னகை அணி.
108.  நீடுழி வாழ்.   

*இந்த நாள் இனிய நாளாக அமைய என் வாழ்த்துக்கள்*!!

ஓஷொவின் தியான முறைகள்

*🐾ஓஷோவின் உன்னத தியான முறை🐾*

*சுவாசத்தை கவனித்தல் எளிதானதாகவும்,* *எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் எளிமையானதாகவும் இருக்கும்*
*ஒரு முறையை நான் தேர்ந்தெடுத்துள்ளேன்.*

*🐬இது உலகம் முழுவதும் பரவட்டும்🐬*

*இதை சுவாசத்தை கவனித்தல் என நான் அழைக்கிறேன்,*
*இது மிகவும் எளிய முறை.*

*எப்போது – நீ அமைதியாக அமர்ந்திருக்கக் கூடிய*
எல்லா நேரங்களிலும், ரயிலிலோ, பஸ்ஸிலோ,
விமானத்திலோ பயணம் செல்லும் சமயத்தில் இந்த தியானத்தை செய் .
*காலம் – 2* நிமிடங்கள் முதல் எவ்வளவு நேரம் நீ செய்ய விரும்புகிறாயோ அது வரை.

*💥முதல் படி – உனது கண்களை மூடி உனது சுவாசத்தை கவனி.*

*சுவாசம் உள்ளே செல்லும்போது நீயும் அதனுடன் உள்ளே செல்,*
*வெளியே வரும்போது நீயும் அதனுடன் வெளியே வா.*

*நீ சுவாசத்துடன்* *உள்ளே சென்று பின்*
*அதனுடன் வெளியே வருவது என்பது போன்று* செய்யும்
சமயத்தில் நீ இரண்டு விஷயங்களைப் பற்றி உணர்வடைவாய்.

🌳நீ சுவாசத்துடன் உள்ளே செல்லும்போது
அது வெளியே வருவதற்காக திரும்பும் முன் ஒரு கணம் சுவாசத்தில் இடைவெளி வரும்.
இதேபோல சுவாசத்தை வெளியே விடும்போதும் நிகழும்.

*திரும்பவும் உள்ளே இழுக்கும் முன் ஒரு கணம் இடைவெளி வரும்.*

☘நீ அதை கவனிக்க கவனிக்க இந்த இரண்டு நிலைகளும் மேலும் மேலும் தெளிவாக, பெரியதாக மாறும். ஒரு சுவாசம் உள்ளே போய் ஒரு கணம் நிற்கும்,
பின் வெளி வரும்.

வெளியே வந்தது ஒரு கணம் நின்று பின் உள்ளே போகும். இந்த இடைவெளி பெரிதாகிக் கொண்டே போகும்.
பின் ஒரு சமயம் வரும் அந்த அற்புத அனுபவம் நடக்கும் .
தியானம் தரக்கூடிய எல்லாவற்றையும் நீ பெற்று விடுவாய்.

சுவாசத்தை கவனித்தல்
தியான பயிற்சியை
குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்று கிடையாது.

🌿 நீ இதை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம்.
ஒரு நாளில் எவ்வளவு முறை முடிகிறதோ அவ்வளவு தடவை செய்யலாம். சில சமயங்களில் வெறும் இரண்டு நிமிடங்கள் கூட செய்யலாம்.
சில நேரங்களில் படுக்கையில் படுத்திருப்பாய்.

ஆனால் தூக்கம் வராது. தூக்கத்தைப்பற்றி கவலைப்படாதே. அதைச் செய். இது இரண்டு வேலைகளையும் செய்யும்.

🍂🍂
இது ஆழ்ந்த அமைதியான தியானத்தைத் தரும், இதைச் செய்வதன் மூலம் தூக்கமும் வந்து விடும்.

ஆனால் நீ எழுந்திருக்கும் போதுதான் தூங்கி விட்டிருப்பதே உனக்குத் தெரியும்.
ஆனால் மிகவும் வேறுபட்ட விஷயம் என்னவென்றால் நீ தியானம் செய்தவாறே தூங்கி விட்டிருந்தால் நீ காலையில் எழும்போதும் தியான தன்மையோடு எழுவாய்.

அப்படி என்றால் ஆழ் மனதில் எங்கோ ஆழத்தில் நீ அறியாவண்ணம் இந்த முறை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது என்றுதானே அர்த்தம்

*உனது இரவு முழுவதும் தியானமாக மாறி விட்டிருக்கிறது.*

*இது உனக்கு கிடைக்கக் கூடிய மிக அதிக அளவு நேரமாகும்.*

*உனது தூக்கம் மிகவும் அமைதியானதாகவும்,*
*ஓய்வானதாகவும் புத்துணர்வு* *தரக்கூடியதாகவும் மிகவும் வேறுபட்ட குணத்தில் இருக்கும்.*

*ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை இந்த கவனித்தல் தொடர்கிறது.*

*காலையில் நீ விழித்தெழுந்த* *உடன் உனது சுவாசத்தை*
*கவனிப்பதை நீ தொடர்ந்து செய்ய ஆரம்பிப்பாய்.*

*அது உனக்கு வியப்பளிக்கும்.*


*📕📕📕📕ஓஷொவின் தியான முறைகள்*

Sunday 4 June 2017

இறந்து போதல் என்றால் என்ன...???

🌺 *ஆத்ம  விசாரணை* 🌺

🌷 இறந்து போதல் என்றால் என்ன...???

அப்போது ரமணர் சிறு வயது....

அவரது அப்பா இறந்துபோனதும் , அதே நினைவாக இருந்து கொண்டிருந்தார்..

அப்பாவை எப்படி தகனம் செய்திருப்பார்கள்....!!!???!!!

நெருப்பு மூட்டி எரித்தால் வலிக்காதா..???

ஏன் வலிக்காமல் போயிற்று...???

எது இருந்தால் வலி....???

எது இழந்தால் மரணம்....???

எது இருந்தால் என்று தன்னைத்தானே உற்றுப் பார்த்தான்.

எது இருக்கிறது உள்ளே என்று மெல்ல தேடினான்.

இறந்து போதல் என்றால் எது வெளியே போகவேண்டும் என்று மறுபடியும் ஆராய்ந்தான்.

இப்படி உட்கார்ந்து பார்த்தால் தெரியுமா, இறந்து போனால் தானே தெரியும்.' எனத் தோன்றியது.

இறந்து போனது என்றால் நீட்டி படுக்க வேண்டும்.

அவன் சட்டென்று கால் நீட்டி படுத்துக் கொண்டான்.

உடம்பை விறைப்பாக்கினான்.

இப்ப உடம்பு செத்துவிட்டது.

இந்த உடம்புக்கு மரணம் வந்துவிட்டது.

நான் இறந்து விட்டேன்.

இப்பொழுது கொண்டு போய் தகனம் செய்துவிடுவார்கள்.

அண்ணா தான் மறுபடியும் நெருப்பு சட்டி தூக்கிக் கொண்டு போகவேண்டும்.

ஆடி ஆடி தூக்கிக் கொண்டு போய்,

சுடுகாட்டில் வைத்து விறகு அடுக்கி, கொளுத்தி விடுவார்கள்.

இந்த உடம்பு மெல்ல மெல்ல நெருப்புபட்டு  சாம்பலாகிவிடும்..

ஒன்றுமே இருக்காது.

உடம்பு காணாமல் போய்விடும்.

எது இருப்பதால் நான் இருக்கிறேன்,

எது இருப்பதால் நான் படுத்து இருக்கிறேன்.

எது இல்லாது போனால் நான் இறந்து விடுவேன்....???

வேங்கடராமன் உற்று ஆழ்ந்து எது இருக்கிறது என்று பார்த்தான்.

வேங்கடராமனின் மூச்சில் மாறுதல் ஏற்பட்டது.

மனம் அடங்க, முச்சும் அடங்கும், மூக்கில் இருந்து ஓரடி தூரம் வெளிவருகின்ற காற்று மெல்ல சுருங்கிற்று.

மனதில் உள்ளுக்குள் ஆழ்ந்து எது இருக்கிறதோ என்று பார்க்க,

மூச்சு விடுவது மூக்கின் எல்லைவரை இருந்தது.

இன்னும் ஆழ்ந்து எது இருக்கிறது,

எது இழந்தால் மரணம் என்று உற்று பார்க்க மூச்சானது மேல்மூக்கு வரை நின்றது.

அட இதோ, இந்த இடத்தில்தான், இந்த இடத்தில்தான் ஏதோ  இருக்கிறது..

அதனுடைய இருப்பால்தான் உடம்பினுடைய எல்லா விஷயங்களும் ஆடுகின்றன

இன்னும் உற்று பார்க்க,

மூச்சானது வெளியே போகாமல், தொண்டைக் குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று.

நுரையீரலிலிருந்து தொண்டைக்குழிக்கு வந்தது.

தொண்டைக்குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று .

இன்னும் உற்றுப் ஆழ்ந்து பார்க்க

வேங்கடராமன் உடம்பு வேகமாக விறைத்தது.

உடம்பினுள்ள மற்ற புலன்களுடைய ஆதிக்கங்கள் தானாய் இழந்தன.

மூச்சுஓட்டம் வேறு மாதிரியான கதிக்கு போயிற்று.

இறந்த போது உடம்பு விறைக்குமே, அந்த விறைப்புத்தன்மை உடம்பில் சட்டென்று ஏற்பட்டது.

அவன் அந்நியமாய் நின்று வேடிக்கை பார்த்தான்.

மூச்சானது இப்பொழுது மெல்ல நுரையீரலில் இருந்து சிறிது தூரம் வெளிப்பட்டு மறுபடியும் நுரையீரலுக்கு போயிற்று.

மூக்கு அருகே, தொண்டை அருகே வராது,

மூச்சு குழாய் அருகே கொஞ்சம் தூரம் போய்விட்டு மறுபடியும் பின் திரும்பியது.

மூச்சு இருந்தது.

ஆனால் முழுவதுமாக இல்லாது,

ஒரு காளை கொம்பு போல அதே அளவோடு சிறிது வளைவோடு மூச்சு எகிறி வெளியே போய் மறுபடியும் நுரையீரலுக்கு வந்தது.

மனம் அடங்க, மூச்சும் அடங்கும்.

மூச்சு அடங்க, மனமும் அடங்கும்.

இரண்டு காளை கொம்புகளாய் மூச்சு அசைந்து கொண்டிருந்த பொழுது,

சட்டென்று உள்ளுக்குள்ளே ஒரு பேரொளி தோன்றியது.

தாங்க முடியாத அதிர்ச்சி வந்தது.

இரண்டு மூச்சுக்கு நடுவேயும்,

இரண்டு காளைக் கொம்புகளுக்கு நடுவேயும்,

ஏதோ ஒன்று பிரகாசமாக ஆடியும், ஆடாமலும்,

அசைந்தும், அசையாமலும்

மிக பொலிவோடு நின்று கொண்டு இருந்தது.

எண்ண ஓட்டங்கள் சில்லென்று நின்றன.

அது, அந்த பேரொளி,  எண்ணத்தை விழுங்கியது.

எண்ணம் விழுங்கப்பட, 'நான்' என்ற அகந்தையும் உள்ளே விழுங்கப்பட்டது.

' உடலே நான்' என்கிற எண்ணம் காணாமற் போக

பேரொளியே தானாகி வேங்கடராமன் கிடந்தான்.

சகல உயிர்களையும் இவ்வாறு நிற்பது  என்பது தெரிந்தது.

இதுவே நிரந்தரம்.

இதுவே முழுமை.

இதுவே இங்கு இருப்பு.

இதுவே இங்கு எல்லாமும்.

இதுவே முதன்மை,

இதுவே சுதந்திரம்,

இதுவே பரமானந்தம்,

இதுவே பூமி,

இதுவே பிரபஞ்சம்,

இதுவே அன்பு,

இதுவே கருணை,

இதுவே அறிவு.

இதுவே ஆரோக்கியம்.

அனைத்து இடங்களிலும் நீக்கமற நிற்கின்ற அற்புதம்.

இதுவே எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது.

மூடிய கண்களில் பெரிய வெளிச்சம்,

மூடாத காதுகளில் ரீங்காரம்,

உடம்பு முழுவதும் புல்லரிக்க வைக்கும் தகதகப்பு,

புத்தியில் ஒரு திகைப்பு,

உள்ளங்காலில் ஒரு சுகவேதனை,

ஆசனவாய் இழுத்து சுருங்கி கொண்டு கழுத்து வரை ஒரு சக்தியை தள்ளி அனுப்புகிறது.

முதுகு தண்டில் ஒரு குடையல்,

நெஞ்சு துடிப்பு நிதானம்,

இருதயத்தில் அழுத்திய கனம்,

தொண்டையில் ஒரு சுழல்,

நெற்றியில் ஒரு குறு குறுப்பு,

உச்சி மண்டையில் ஒரு அக்னி,

ஆஹா ஆஹா எல்லா இடமும் நீக்கமற நிறைந்திருக்கிறதே.

அதுவே அதுவே, வேங்கடராமனின் மனம் மெல்ல விழித்து கொண்டு அலறியது.

திரும்பி எழுந்திருக்க அரைமணி நேரம் ஆயிற்று.

வேங்கடராமன் எழுந்து சம்மணமிட்டு
அமர்ந்து கொண்டார்.

எதிரே இருந்த சுவர் பார்த்து வெறுமே அழுதான்.

பிறகு காரணமின்றி சிரித்தான்.

மீண்டும் அழுதான்.

எழுந்து நின்று சுவர் மூலையில் சாய்ந்து கொண்டான்.

தள்ளாடி வாசல் நோக்கி நகர்ந்தான்.

வேகமாக தாவி ஏறும் மாடிப்படி அன்று பார்க்க பயமாக இருந்தது.

உருண்டு விழுந்து விடுவோமோ என்று தோன்றியது.

'என்ன நடந்தது எனக்கு, என்ன நடந்தது எனக்கு'

ஒவ்வொரு படியாய் மெல்ல இறங்கி வந்தான்.

'உள்ளே இருப்பது நான்.

அதுதான் நான்' ஒருபடி இறங்கினான்.

'இந்த உடம்பு நான் அல்ல,

இந்த புத்தி நானல்ல,

என் சக்தி நானல்ல, என் மனம் நானல்ல'

ஒவ்வொரு படி இறங்கும் போதும் அவனுக்குள் தெள்ளத்தெளிவாய் விஷயம் புரிந்தது.

'உள்ளே பேரொளியாய்,

சுடராய் இருந்து இருக்கிற அதுவே நான்.

அதுவே எல்லாருள்ளும்.

எனக்குள் இருப்பதே எல்லா இடத்திலும் இருக்கிறது.

நான் தான் அது

நான் தான் சித்தி,

நான் தான் சித்தப்பா,

நான் தான் அண்ணா,

நான் தான் தெரு நாய்,

நான் தான் வண்டு,

நான் தான் பசுமாடு,

நான் தான் மாடப்புறா,

நான் தான் எல்லாமும்.

ஒருமை எப்படி பன்மையாகும்.

இது மிகப் பெரிய தவறு.

'நான்' என்பது எல்லாவிதமாகவும் விளங்கியிருக்கிறபோது,

எல்லாமுமாய் பிறந்து இருக்கிற போது,

என்னிலும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்....!!!

என்ன வேறுபாடு....!!!

ஒருமை எப்படி பன்மையாகும்....!!!

பத்தாவது படியில் இறங்கி நின்றான்.

மாடிப்படி திரும்பினான்.

சிரித்தான்.

'இதை யாரிடம் போய் சொல்வது,

இப்படி நடந்தால் என்ன அர்த்தம் என்று விளக்கம் கேட்பது,

நான் சரியாக புரிந்து கொண்டு இருக்கிறேனா,

எனக்கு ஏதோ நடந்தது,

அது சரியாக நிகழ்ந்ததா....???

தூக்கமா...???

பிரமையா....???

அல்லது உள்ளுக்குள் இருப்பது தான் வெளிப்பட்டதா...???

அவன் இறங்கி நடந்து கோயிலுக்குள் போனான்.

மதுரை சுந்தரரேஸ்வரரை பார்த்து கைகூப்பினான்.

அந்த கைகூப்பலில் நன்றி இருந்தது, நெகிழ்வு இருந்தது,

சந்தோஷம் இருந்தது,

அமைதி இருந்தது,

அன்பு இருந்தது,

ஒரு ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடிற்று.

எல்லாம் கரைந்து மனம் முழுவதும் ஒன்றாகி

அவன் மறுபடியும் சுவாமியை நமஸ்கரித்தான்.

மறுபடியும் போய் அவ்விதமே ஆழ்ந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும்

அல்லது படுத்து அந்த அனுபவத்தை மறுபடியும் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றியது.

மீண்டும் நீங்க வரணும் என்று மதுரை சுந்தரரேஸ்வரரை கைகூப்பி இறைஞ்சினான்.

ஊர் முழுவதும் சுற்றி விட்டு வீடு திரும்பும் போது

ஒரு காலியான பாத்திரம் போல வேங்கடராமன் நடந்தான்.

அந்த பாத்திரத்தை நிரப்ப இறையருள் காத்திருந்தது.

தன்னை சுத்தம் செய்து கொள்வது என்பது எல்லோருக்கும் நடப்பது இல்லை,

வெகு சிலருக்கே நடக்கிறது.

அப்படி நடந்தவர்களுக்குத்தான் ஞானியர் என்றும், மகான் என்றும் பெயர்.

வேங்கடராமன் என்கிற அந்த பதினாறு வயது இளைஞன்

பிற்பாடு ஸ்ரீ ரமண மகரிஷி என்று அழைக்கப்பட்டார்.

பகவான் என்று பலர் அவரை வணங்கினார்கள் 🌷

🌸 பகிர்வு 🌸

Friday 2 June 2017

அதிர்ஷ்ட கலர்

12 ராசி (லக்கின) அதிர்ஷ்ட கலர் வீட்டை பராமரிக்கும் முறை
1) மேச (லக்கின) ராசிக்காரர்கள் :
பம்பரமாக சுழன்று வீட்டை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்து இருப்பவர்கள். இவர்கள் வீடு எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். தான் இருக்கும் வீடு குடிசை ஆனாலும் சரி மாளிகை ஆனாலும் சரி அதை பராமரிப்பதில் இவர்களை மிஞ்ச முடியாது. எந்த இடத்தையும் தனக்கு தகுந்தாற்போல் மாற்றிக்கொள்ளும் திறமை உள்ளவர்கள். அப்பார்ட்மெண்ட் அல்லது காம்பவுண்ட் தொடர் குடியிருப்புகளில் குடியிருக்க விரும்புவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், சந்தணம்.
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு, ரோஸ்
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, மில்க் ஒயிட்.
2) ரிசப (லக்கின) ராசிக்காரர்கள் :
பேச்சில் இருக்கும் சுத்தம் வீட்டை பராமரிப்பதில் இருக்காது. வீடு எப்போதும் வெப்பமாக இருக்கும். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கமல் அடிக்கடி தேடிக்கொண்டிருப்பார்கள். ராயல் வாழ்கை வாழ்பவர்கள். அடிக்கடி வீட்டை மாற்றும் தன்மை உள்ளவர்கள். உயரமான வீடு, அரண்மை போன்ற வீடு, காம்பவுண்போட்ட கேட் போட்ட தனி வீட்டில் வசிக்க விரும்புவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு, ரோஸ்
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், சந்தணம்.
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச், ரோஸ்,
3) மிதுனம் (லக்கின) ராசிக்காரர்கள் :
தான் வீட்டை பராமரிக்க விட்டாலும் வேலை ஆட்களை வைத்து அழகாக பராமரிப்பவர்கள். எப்போதும் வீட்டு ஜன்னல்கள் முடப்பட்டு இருக்கும்.
வாசனை புகைகளுடன் வீடு இருக்கும். சொந்தவீடு வாங்கிய பின் செல்வ செழிப்புடன் இருப்பார்கள். தனித்த வீட்டில் இருக்கவே பெரிதும் ஆசைபடுவார்கள். அண்டை வீட்டாருடன் நட்புடன் இருக்க விரும்புவார்கள். நல்ல தண்ணீர் வசதியுள்ள பாதுகாப்பான வீட்டிலேயே குடியிருக்க விரும்புவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : வெண்மை, மின்னும் நிறம்,
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : நீலம், அடர்ந்த வர்ணம்
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : பச்சை, சயான், பிஸ்தா
4) கடகம் (லக்கின) ராசிக்காரர்கள் :
சுத்தம் சுகாதரம், சுத்தம் சோறு போடும் என்பதுபோல் வீட்டை அழக்காக பராமரிப்பார்கள். வீட்டு ஜன்னல்கள் திறக்கப்பட்டு எப்போதும் காற்றோட்டமாக இருக்கும். வாசனை புகைகளுடன் வீடு கம கம என இருக்கும். வீடு கௌரவத்தையும் அந்தஸ்தையும் தருவதாக அமையும். அண்டை வீட்டார் இவரை கண்டு பொறாமை கொள்ளும் அளவிற்கு வீட்டை வைத்தி இருப்பார்கள். கீழ் வீட்டிலேயே குடியிருக்க விரும்புவார்கள். ஜன நடமாட்டம் உள்ள இடத்தில் குடியிருக்க விரும்புவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : பச்சை, சயான், பிஸ்தா
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : நீலம், அடர்ந்த வர்ணம்
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : வெண்மை, மின்னும் நிறம்,
5) சிம்ம (லக்கின) ராசிக்காரர்கள் :
தனது வீட்டை எப்போதும் கிரிமினாசினி கொண்டு தூய்மையாகவும் சுகாதாரமானவும் வைத்திருப்பார்கள். வீட்டை அலங்காரம் செய்ய அதிக செலவு செய்வார்கள். வீடு எப்போதும் குளிர்ச்சியுடன் இருக்கும். வீட்டின் கழிவறைகள் மிக சுத்தமாக இருக்கும். அண்டை வீட்டாருடன் அளவுடன் பழகுவார்கள். வீட்டில் அதிகமாக தண்ணீர் செலவு செய்வார்கள். இவர்கள் எப்போதும் தொடர் வீடு மற்றும் அப்பார்ட்மெண்ட் வீடுகளிலேயே குடியிருக்க விரும்புவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, மில்க் ஒயிட்.
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், சந்தணம்.
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு, ரோஸ்,
6) கன்னி (லக்கின) ராசிக்காரர்கள் :
தனது வீட்டை எப்போதும் கோவில் போல பூசி மெழுகி அழகுடனும் பக்தியுடனும் பராமரிப்பார்க்ள். ஆன்மீக பொருட்களைக் கொண்டு அழகுடன் பராமரிப்பதில் வல்லவர்கள். வீட்டின் ஜன்னல்கள் அடிக்கடி மூடியே இருக்கும் அதனால் வீடு வெப்பமாக விருக்கும். வீட்டில் எடுத்த பொட்களை இடம் மாற்றி வைப்பது இவர்களுக்கு பிடிக்காது. தனித்த வீட்டில் இருக்கவே பெரிதும் விரும்புவார்கள். மாடி வீட்டில் மாடியில் குடியிருக்க விரும்புவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச், ரோஸ்,
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு, ரோஸ்
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், சந்தணம்.
7) துலாம் (லக்கின) ராசிக்காரர்கள் :
செய்யும் தொழிலே தெய்வம் வீட்டை பராமரிப்பதே எனது தலையாய கடமை என்பது போல் எண்ணம் கொண்டவர்கள் ஆனால் செயல் தான் கொஞ்சம் கம்மி. வாசனை புகைகளுடன் வீடு இருக்கும். சொந்தவீடு வாங்கிய பின் செல்வ செழிப்புடன் இருப்பார்கள். தனித்த வீட்டில் இருக்கவே பெரிதும் ஆசைபடுவார்கள். அண்டை வீட்டாருடன் நட்புடன் இருக்க விரும்புவார்கள். நல்ல தண்ணீர் வசதியுள்ள பாதுகாப்பான வீட்டிலேயே குடியிருக்க விரும்புவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : பச்சை, சயான், பிஸ்தா
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : வெண்மை, மின்னும் நிறம்,
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : நீலம், அடர்ந்த வர்ணம்
8) விருச்சக (லக்கின) ராசிக்காரர்கள் :
தன்னைபோல யாரும் வீட்டை பராமரிக்க முடியாது என்பது போல வீட்டை பராமரிப்பார்கள். வீட்டு ஜன்னல்கள் திறக்கப்பட்டு எப்போதும் காற்றோட்டமாக இருக்கும். வாசனை புகைகளுடன் வீடு கம கம என இருக்கும். இந்த வீடு வாங்கிய பின்தான் எல்லாம் வந்தது என வீட்டும் மீது செண்டிமெண்ட் வைத்து இருப்பார்கள்
ஜன நடமாட்டம் குறைவான இயற்கையான சூழ் நிலைஉள்ள தனித்த வீட்டில் இருக்கவே பெரிதும் விரும்புவார்கள். மாடி வீட்டில் மாடியில் குடியிருக்க விரும்புவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : வெண்மை, மின்னும் நிறம்,
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : பச்சை, சயான், பிஸ்தா
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : நீலம், அடர்ந்த வர்ணம்
9) தனுசு (லக்கின) ராசிக்காரர்கள் :
சுத்தத்தை உயிரை விட உயர்வாக மதிப்பவர்கள். வீட்டில் யார் எப்படி இருந்தாலும் இவர்கள் வீட்டை சரியாக பராமரித்துக்கொண்டு இருப்பார்கள். வீடு எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். மற்றவர் எடுத்த பொருளை சரியான இடத்தில் வைக்காவிட்டாலும் இவர்கள் சரியான இடத்தில் வைப்பவர்கள், எதிலும் ஒழுக்கத்துடன் இருப்பார்கள். தனது உறவினர்கள் அதிகம் இருக்கும் இடத்தில் தனி வீட்டில் வசிக்கவே ஆசைபடுவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு, ரோஸ்
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, மில்க் ஒயிட்.
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், சந்தணம்.
10) மகர (லக்கின) ராசிக்காரர்கள் :
வீட்டை பராமரிப்பதெல்லாம் ஒரு வேலையா என்பது போல் எனோதானோ என பராமரிப்பார்கள். எப்போதும் வீட்டு ஜன்னல்கள் முடப்பட்டு இருக்கும். டு எப்போதும் வெப்பமாக இருக்கும். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கமல் அடிக்கடி தேடிக்கொண்டிருப்பார்கள். ராயல் வாழ்கை வாழ்பவர்கள். எதிர் வீட்டாரை ஒப்பிட்டு வீட்டின் ஒவ்வொரு வேலையையும் செய்வார்கள். கீழ்வீட்டில் அதுவும் தொடர் வீட்டுகளில் வசிக்கும் வாய்ப்பை அதிகம் பெறுவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், சந்தணம்.
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச், ரோஸ்,
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு, ரோஸ்
11) கும்ப (லக்கின) ராசிக்காரர்கள் :
வீட்டை அழகாகவும் வசிகரமாகவும் சுத்தமாகவும் பராமரிப்பவர்கள். தனது வாடகை வீட்டைகூட சொந்தவீடு போல பராமரிப்பவர்கள். மற்றவர்கள் தன் வீட்டை உதாரணம் சொல்வது போல தன்வீட்டை பராமரிப்பார்கள், கடன் வாங்கி வீடு வாங்கி தனது ஆடம்பர வாழ்வை நடத்துவார்கள். தனி வீட்டில் காம்பவுண்ட் உடன் உள்ள வீட்டில் வாழ ஆசை கொண்டவர்கள். அக்கம் பக்கம் வீட்டாருடன் நட்புடன் இருக்க மாட்டார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : நீலம், அடர்ந்த வர்ணம்
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : பச்சை, சயான், பிஸ்தா
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : வெண்மை, மின்னும் நிறம்,
12) மீன (லக்கின) ராசிக்காரர்கள் :
ஆரோக்கியம், சுத்தம் சுகாதரம், சுத்தம் சோறு போடும் என்பதுபோல் வீட்டை அழக்காக பராமரிப்பார்கள். வீட்டு ஜன்னல்கள் திறக்கப்பட்டு எப்போதும் காற்றோட்டமாக இருக்கும். வாசனை புகைகளுடன் வீடு கம கம என இருக்கும். வீடு குளிர்சியாகவும் காற்றோட்டமாகவும் இருக்கும். வீட்டிற்குள் இருக்கும்போது மகிழ்சியாகவும் ஆரோக்கியமாகவும் கருதுவார்கள். ஒன்றுபோல் இருக்கும் வீடுகளில் அதிகமாக வசிப்பார்கள். அண்டை வீட்டாருடன் நட்புடன் பழகுவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : நீலம், அடர்ந்த வர்ணம்
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : வெண்மை, மின்னும் நிறம்,
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : பச்சை, சயான், பிஸ்தா
குடிசை வீடோ அல்லது மாடி வீடோ
தூய்மையான வீடு ஆரோக்கியமான வீடு
நம் வீடும் அதை சுற்றிய இடமும் சுத்தமானால்
நாடு சுத்தமாகும் சுகாதாரமாகும்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
மீன்கள் அழுக்கை திண்று அந்த இடத்தை சுத்தமாகும்
மீன ராசி மருத்துவமனையை குறிக்கும்
அழகான சுத்தமான வீடு வசியமான வீடாக இருக்கும்
அதுவே நாம் நினைத்ததை நிறைவேற்றும் அதிர்ஷ்ட வீடு