Friday 6 May 2016

ஆன்மீகமும் மதமும்

ஆன்மீகமும் மதமும்
உணர்ந்ததை வெளிப்படுத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு......!!!
அதையே அடுத்தவர்களை நம்பித்தான் ஆக வேண்டும் என்று கட்டாயப் படுத்துவதற்கு உரிமை இல்லை.
உணர்ந்ததை வெளிப்படுத்துவத
ு ஆன்மீகம், கட்டாயப் படுத்துவது மதம்....!!!
ஆன்மீகத்தில் அன்பு உண்டு......!!!
மதத்துவத்தில் அதிகாரம் உண்டு........!!!
ஆன்மிகம் என்ற அன்பால் நேசிக்கப்படலாம்........!!!
மதம் என்ற அதிகாரத்தால் தூற்றப்படலாம்.......!!!
ஆன்மிகம் என்பது அன்பு கடல் போன்றது........!!!
அதிகாரம் என்பது கழிவு நீர் தேக்கம் போன்றது........!!!
ஆன்மீகம் என்ற அன்பை விதைப்பவர் குரு.......!!!
மதம் என்ற அதிகாரத்தை நிலைநாட்டுபவர் தந்திரமான தீவிரவாதி........!!!
அன்பில் விளைவது ஆனந்தம்.......!!!
அதிகாரத்தில் விளைவது தீவிரவாதம்.....!!!
மனிதனின் தன்மையோ அன்பு........!!!
ஆனால் செயலோ அதிகாரம்.......!!!
அதிகாரத்தை துறந்து அன்பில் திளைத்தால்......!!!
ஆன்மீகம் ஆனந்தமாகும்.......!!!
ஆனந்தமே வாழ்வாகும்......!!!
ஆன்மிகம் பயிற்றுவிப்பது அல்ல, மாறாக உணரப் படுவது என்ற அர்த்தம் விளங்கும்......!!!
உணர்ந்து தெளிவோம்........!!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.