Saturday 30 April 2016

வாழ்க்கையின் சுவாரசியம்

ஒரு அரசன் வேட்டைக்கு போகின்ற வழியில் நீண்ட காலமாக தவம் இருந்த முனிவர் ஒருவரின் தவத்தை கலைத்து விட்டார். கோபம் கொண்ட முனிவர் அரசனை பன்றியாகக் கடவது என சாபமிட்டார்.

அரசனாக வாழ்ந்தவன் பன்றியாக வாழப்போவதை கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.  தன்னுடைய மகனை அழைத்து,
" மகனே முனிவர் என்னை சபித்து விட்டார். நான் மன்னனாக வாழ்ந்தவன்.
இப்போது பன்றியாகப் போகிறேன். பன்றியாக வாழக் கூடிய அவலநிலை எனக்கு ஏற்படக் கூடாது. ஆகவே நான் பன்றி ஆன பின் எப்படியாவது தேடிப் பிடித்து என்னைக் கொன்றுவிடு" என கேட்டுக்கொண்டான்.

பன்றியாகிப் போன மன்னனை இளவரசன் தேடி அலைந்தான். பல பன்றிக் கூட்டங்களை கூட கொன்றுவிட்டான். எதாவது பன்றி தனியாக ராஜ கம்பீரத்துடன் நடந்து சென்றால் உடனே அதனை கொன்று விடுவான். ஒவ்வொரு பன்றி சாகும் போதும் அது அரசன் இல்லை என்பதை தெரிந்து அரசனைத்  தேடிக்கொண்டிருந்தான்.

ஒரு நாள் ஒரு பன்றிக் கூட்டம் சாக்கடையை கடைந்து கொண்டிருந்தது. ஒரு ஆண் பன்றி , ஒரு பெண் பன்றி மற்றும் சில குட்டிகள் அந்த சாக்கடையில் கிளறிக்கொண்டு இருந்தன.
அது தனது தந்தையாக இருக்காது என இளவரசன் நினைத்தாலும் மனதுக்குள் ஒரு நெருடல் ஏற்பட்டதால் வாளை உருவி ஓங்கி அந்த ஆண் பன்றியை வெட்டுவதற்காக ஓங்கினார்.

அதைப் பார்த்த அந்த ஆண் பன்றி
" மகனே என்னை வெட்டாதே. நான் அரண்மனையில் இருந்து வெளியே வந்த பின் இந்த பன்றியை திருமணம் செய்து கொண்டேன். இது உன் தாய் மாதிரி. இவைகள் உனது தம்பி தங்கைகள். எனக்கு இந்த வாழ்க்கைப் இப்போது பழக்கப்பட்டு விட்டது" என்று கெஞ்சினார்.

இன்றைய வெறுப்பு நாளைய விருப்பமாகலாம்.
இன்றைய விருப்பம் நாளைய வெறுப்பாகலாம்.
அரசனாக இருப்பவன் ஆண்டிக் கோலத்தை நினைத்தாலே அஞ்சுவான். ஆனால் அத்தகைய சூழ்நிலை வரும் போது அதை இயல்பாக ஏற்றுக் கொள்கிறான்.

நாமும் சில நேரங்களில் சில சூழ்நிலைகளில் ( உயர்ந்ததோ / தாழ்ந்ததோ) வாழுவதற்கு அச்சப்படுவோம். ஆனால் அந்த சூழ்நிலைக்கு வரும் போது புதிய சூழ்நிலையில் பழகிவிடுவோம்.

இன்பத்திலிருந்து துன்பம் பிறப்பதும் துன்பத்திலிருந்து இன்பம் பிறப்பதும்
உலகில் மாறி மாறி நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு. எந்த சூழ்நிலையையும் ஏற்றுக் கொள்வதில் தான் வாழ்க்கையின் சுவாரசியம் அடங்கியிருக்கிறது.

சொத்து ஏராளம்.

👌�👌�👌�🙏🙏🙏🙏👌�👌�👌�
     
           🙏ஆதிசங்கரர்🙏

நமக்கு வைத்துவிட்டுப்போன சொத்து  ஏராளம். 

இதை  அனைவரும்  அறிய வேண்டும்  .

எப்படி அனுபவித்தீர்கள்  என்று தெரிவிக்கவும்.

              👌�🙏👌�

1. எதை ஏற்றுக்கொள்ளவேண்டும்?                                   
குரு  உபதேசம்

2. எதை ஒழிக்கவேண்டும்?      
தவறான காரியங்களை

3. குரு என்பது  யார்?                                                                   
சத்தியத்தை உணர்ந்தவர்.சிஷ்யனின் நன்மையை கருதுபவர்

4. எது வேகமாக செய்யவேண்டியது?                                  
மறுபடி பிறப்பு இறப்பு  இல்லாமல் மோக்ஷம் அடைவதை.

5. எது  நல்லது உனக்கு?                                                            
தர்மம் ஒன்று  தான்.

6. எவன்  அறிவாளி?                                                                   
ஞானம் உடையவன்.

7. எது விஷம்?                                                                              
மூத்தோர்  வார்த்தையை  அவமதிப்பது

8. உலக வாழ்வில் முடிவானது எது?                  
                 
இந்த உலக வாழ்க்கையின் முடிவைப்பற்றி சிந்திப்பது.

9 ஒவ்வொருவரும் எதை நாடவேண்டும்?                         
எது தனக்கும்  பிறர்க்கும் நன்மையைப் பயக்குமோ அதை.

10 எது மதுவைப்போல்  கிறுகிறுக்க வைக்கிறது?          
ஆசை, நாட்டம். பற்று.

11.அன்றாட வாழ்வில் நம்மைச் சுற்றிக்கொள்வது எது ?        

ஆசை ஒன்றே தான்.

12.உன்னுடைய  முதல் எதிரி யார்?       
                                
சோம்பேறித்தனம்

13. எல்லாரும்  பயப்படுவது எது?                                           
மரணம்

14. குருடனை விட  அதி குருடன் யார்?                                 
ஆசையில்,  பற்றில் சிக்கியவன்

15. எவன் திடமானவன்?                                                            
மனதை அடக்கி ஆள்பவன்

16. எது காதுக்குத்  தேன் ?                                                          
மேதைகளின், ஞானிகளின் அறிவுரை.

17. பிரபலமாவதற்கு ஆதாரம் எது?         
                               
எவரிடமும் உனக்காக  எதையும்  எதிர்பார்க்காதது.

18. எதை  அளவிடமுடியாது?                                                    
பெண்ணின்  ஈர்ப்பை

19. எவன் புத்திசாலி?                                                                    
பெண்ணிடம்  ஏமாறாதவன்

20. எது  துயரம்?                                                                             
எதிலும்  திருப்தி அடையாமல் இருக்கிறோமே  அது.

👌�👌�👌�🙏🙏🙏🙏👌�👌�👌

வாழ்வின் யதார்த்தம்

👌�👌�👌�🙏🙏🙏🙏👌�👌�👌�

🙏ஸ்ரீமாஹாபெரியவா திருவடி போற்றி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உன் தலைமுடி கூட உன்
கட்டுப்பாட்டில் இல்லை !!

வாழ்வின் யதார்த்தம் பற்றி
""காஞ்சி பெரியவா"" !!

வாழ்க்கையில் நான் அதை சாதித்து விட்டேன்,

இதை சாதித்து விடுவேன்i என்றெல்லாம் பேசுவார்கள்.

ஒரு சிறுதுன்பம் வந்து விட்டால்,

“என் சாதனைக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போய்விட்டதே’ என்று கதறுவார்கள்.

சாதனையோ,

வேதனையோ ,

எதுவுமே நம் கையில் இல்லை.

எல்லாம் அவன் செயல் என்ற ரீதியில் ,

   🙏காஞ்சிப்பெரியவர்🙏

சில அறிவுரைகளை நமக்கு வழங்கியுள்ளார்ள்

நிம்மதியாக இருங்கள்!

எதுவும் உங்கள் கையில் இல்லை.

உலகிலுள்ள அனைவருக்கும் ஏதோ ஒரு கடமை இருக்கும்.

ஏதோ ஒரு பொறுப்பும் இருக்கும்.

அது அவர்களின் அறியாமையைத் தவிர வேறில்லை.

எது உங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று சற்றே சிந்தியுங்கள்.

உங்கள் உடல் உங்களின் கட்டுப்பாட்டில் இல்லையே!

உங்களின் உடம்பே உங்கள் பேச்சை கேட்காத போது,

உலகில் வேறு யார் கேட்பார்?

உடலை விடுங்கள்., . . .

உங்களின் தலைமுடி கூட உங்களது கட்டுப்பாட்டில் இல்லை.

முடி நரைப்பதும்,

உதிர்வதும்,

வழுக்கை விழுவதும்,

யாருக்குத் தான் பிடிக்கும்?

முடி நரைப்பதையோ,

உதிர்வதையோ உங்களால் தடுக்க முடியவில்லையே!

உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்று தெரியுமா உங்களுக்கு?

தெரியாது…

உண்ட உணவை நீங்களா ஜீரணம் செய்கிறீர்கள்?

அதுவாகவே ஜீரணமாகிறது.

இருதயத்தையும்,

குடல்களையும்,

கணையத்தையும்,

சிறுநீரகத்தையும் ,

நீங்களா இயக்குகிறீர்கள்?

இல்லையே…. !!!!!

இப்படி உங்களுக்குச் சொந்தமான உங்கள் உடம்பே உங்கள் கட்டுப் பாட்டிலும்,

பொறுப்பிலும் இல்லாத போது,

உலகில் பலவற்றையும் உங்கள் பொறுப்பு என்று நீங்கள் சிந்திப்பது அறியாமை.

மழை உங்களைக் கேட்டா வானில் இருந்து பொழிகிறது!

மரம் உங்களைக் கேட்டா முளைக்கிறது!

உலகம் உங்களுடைய பொறுப்பிலா சுழலுகிறது!

நட்சத்திரங்கள் உங்களது பொறுப்பிலா ஜொலிக்கிறது!

நீங்கள் தான் வானிலுள்ள கோள்களை கீழே விழாமல் அந்தரத்தில் தாங்கிப் பிடிப்பவரோ!

உங்கள் பொறுப்புணர்ச்சியும்,

கடமை உணர்ச்சியும் எவ்வளவு அறியாமை!

எதுவும் உங்கள் பொறுப்பில் இல்லை.

அனைத்துமான இறைவன் உங்கள் முடியைக் கூட உங்கள் பொறுப்பில் விடவில்லை.

அனைத்துமே அவன் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

எந்த சக்தி உங்களையும் சேர்த்து அனைத்தையும் இயக்குகிறதோ,

அது அனைத்தையுமே பார்த்துக் கொள்ளும்.

உங்களுக்கு ஏன் வீண் கவலை…

எதுவும் உங்கள் கையில் இல்லை….

அமைதியாய் இருங்கள்!!!

🙏ஜெய ஜெய சங்கரா !! 🙏

  🙏ஹர ஹர சங்கரா !!🙏

இருபத்திஏழு நட்சத்திரபடி பெண்களின் குணங்கள் ”

“ இருபத்திஏழு நட்சத்திரபடி பெண்களின்  குணங்கள் ”

1. அசுவினி – கவர்ச்சி மிக்கவர்,காருண்யம் கொண்டவர், கனிவு உடையவர்,    
                பரிசுத்தமும், பாசமும் நிரம்பியவர், காமவேட்கை மிக்கவர், கடவுள்
                பக்தி உடையவர்.

2. பரணி – பரிசுத்தம் அற்றவர், சண்டை, சச்சரவு, வஞ்சகம் மிக்கவர், திரைமறைவில்
        தீமை புரிபவர், கொடியவர், குரோதம் புரிபவர்.

3. கிருத்திகை – கொள்கை பிடிப்பற்றவர், அழகும் அங்கலட்சணமும், பண்பும்
             பரிசுத்தமும் கொண்டு பெரியோரை மதிப்பவர், அன்பும் ஆதரவும்
             கொண்டமக்களால் புரிப்படைவர், தாம்பத்திய ஐக்கியத்தை காப்பவர்.

4. ரோகினி – நேர்மை, உண்மை, கடும் உழைப்பு, அன்பு உடையவர், கணவரோடு
           அன்போடும் ஆதரவோடும் பழகுவார், இனிமையாக பேசுவர், தான
           தர்மம் செய்வார், மிகுந்த செல்வம் உடையவராக, திகழ்வார்.

5. மிருகசீரிசம் – சுத்தம், சுகாதரமானவர், அழகும், அங்கலட்சணமும், மதிப்பும்,
              மரியாதையும், ஆடை, ஆபரண யோகமும் பெற்றவர்,
              அருசுவைப்பிரியர் செல்வமுடையவர்.

6. திருவாதிரை – குரோதகுணமும், நயவஞ்சகமும், ஆத்திரமும், பகைவரை
               அழிக்கவல்ல வல்லமையும், குற்றம் புரிபவரும் தூய்மை
               அற்றவரும் ஆவார்.

7. புனர்பூசம் – பண்பும், பரிசுத்தமும், அடக்கமும், தரும சிந்தனையும், செல்வாக்கும்,
            கருணை மற்றும் காருண்யம் மிக்கவர்.

8. பூசம் – சுகபோக சுவையாளர், வீடு, நிலம், வாகனம் வளம் படைத்தவர்.

9. ஆயில்யம் – அலுத்து ஆர்ப்பரிக்கும், சுகாதாரமற்ற, ஆபாச வார்த்தைகளை
                பிரயோகிக்கும், செய்யத்தகாத செயலை புரியும் விசுவாசம் அற்ற
                மாதர்.

10. மகம் – ராஜயோகம், சுகபோகமும், தீயவர் தொடர்புடைய, உயர் வர்க்கத்திற்கு
        மண்டியிடுபவர்.

11. பூரம் – சந்தோஷ, சல்லாபம் மிக்க, மக்கட்பேரால் பூரிப்படையும், செல்வமும்
       ,செல்வாக்கும் படைத்த, நீதி நெறியுடன் வாழும் பண்பும் பரிசுத்தமும்
        காப்பவர்.

12. உத்திரம் – சரச சல்லாப பிரியர், மக்கப்பேறும், செல்வாக்கும் உடையவர்,
           குடும்பத்தை பாதுகாப்பவர், உத்திரமாய் வாழ நினைப்பவர்.

13. அஸ்தம் – வனப்பும், வசீகரமும், அழகும், அங்கலட்சணமும் பொருந்திய,
           நுண்கலையில் வல்ல சுகபோகி.

14. சித்திரை – அணியும், ஆபரணமும், வனப்பும், வசீகரமும், அழகும் பொருந்திய
           சிறந்த மனிதர்.

15. சுவாதி – எதிர்ப்பை வெல்லுகிற, நல்லோர் இணக்கத்தால் நன்மை பெறும், பண்பும்
         பரிசுத்தமும் மிக்க சுகபோகி, மக்கப்பேரால் பூரிப்படைவர்.

16. விசாகம் – சாஸ்திர சம்பிரதாயங்களோடு குலதர்மத்தைக்காப்பவர், அறிவாற்றல்,
           பெச்சுத்திரன்மிக்க அழகும் அங்கலட்சணமும் பெற்றவர்,
           தீர்த்தயாத்திரை பிரியர், கடவுள் சேவை செய்பவர்.

17. அனுஷம் – கணவனுக்கு ஏற்ற பதிவிரதை, தியாக குணமும், வனப்பும், வசீகரமும்,
            பண்பும் பரிசுத்தமும், பாராளும் பாக்கியமும் பெற்றவர், பொது
            நலசேவைவாதி, ஆடை, அணி, அலங்காரப்பொருள் மிக்கவர்,
            மதக்கோட்பாடுகளை மதிப்பவர்.

18. கேட்டை – சத்திய நெறி காப்பவர், சகல சுக போகி, கணிவும், காருண்யமும்,
           பண்பும் பாசமும் மிக்கவர், சுற்றம் விரும்பி.

19. மூலம் – கொடுமை நிறைந்தவர், வெறுப்பும் விகல்பமும் மிக்கவர், ஏழையால்
         ஏங்கி, நலிவு உறுபவர், உறவைப் பகைப்பவர்.

20. பூராடம் – அழகும், ஆற்றலும், அங்கலட்சணமும், பண்பும், பரிசுத்தமும் உடையவர்,
          நற்செயல் புரிபவர், குடும்பத்தில் சிறந்தவர், நேசம் உடையவர்கள்,
          தானம் செய்பவர்கள், சுக துக்கம் எதுவானாலும் மனமுவந்து
          அனுபவிப்பவர்கள்.

21. உத்திராடம் – பெறும், புகழும் பெருவாழ்வும், கனிவும், காருண்யமும் மிக்கவர்,
             சந்தோஷ சல்லாபி, கணவனுக்கு ஏற்ற பதிவிரதை.

22. திருவோணம் – அழகு , அங்கலட்சணம், வனப்பு, வசீகரம் பொருந்திய,
               தயாளகுணம், தார்மீக சிந்தனை, நம்பிக்கையும் நாணயமும்,
               தியாகமும் மிக்கவர்.

23. அவிட்டம் – வீடு, நில வாகன லாபம், பெருந்தன்மை படைத்தவர், ஆடை, அணி,
            ஆபரண, அறுசுவை பாக்கியம் பெற்றவர்.

24. சதயம் – நியாமமும், நீதியும், நேர்மையும், நேசமும் மிக்கவர், காமகுரோதங்களை
            அடக்குபவர், மூத்தோரை மதிப்பவர்.

25. பூரட்டாதி – சமுதாய உயர் அந்தஸ்து உடைய பொன் பொருள் போகம் மிக்க,
              தார்மீக சிந்தனையும், தரும குணமும் படைத்தவர், அறிவு ஆற்றல்
              மிக்க அருளாளர்.

26. உத்திரட்டாதி – மாண்புமிக்க, பாசமுடைய பதிவிரதை, குலதர்மம் காக்கும் அறிவு
               ஆற்றல் படைத்த சந்தோஷ சல்லாபி.

27. ரேவதி – சாஸ்திர, சமூகம், சம்பிரதாயம் மதிப்பவர், உயர் லட்சியம் உடைய
         நேசபாசம் காப்பவர், அழகு, அங்க லட்சணம், வனப்பு, வசீகரம்
         பொருந்தியவர், எதிரியை வெல்பவர், வாகன வளம் உடையவர்.

                                                  நன்றி!

                                  வர்மக்கலை ஆசான்
                            எஸ்.கோபாலகிருஷ்ணன்
                            தீத்திப்பாளையம்,கோவை
                                 9894285755

Friday 29 April 2016

நீ வாழும் உலகம்

நீ வாழும் உலகம்! எதை செய்தாலும் குற்றம் சொல்லும்;
உலகத்தை புரிந்து கொள்வது எப்படி? மகன் கேட்டான்.
'கழுதையிடம் இருந்து கற்றுக்கொள்.' முல்லா நஸ்ருதீன் சட்டென பதில் உரைத்தார்.
அதெப்படி?
'ஒரு கழுதையை தயார் செய்து கொள். நாளை என்னோடு பயணம் செய்ய தயாராகிக் கொள்...'
கழுதையை முன்னால் நடக்க விட்டு முல்லாவும், அவர் மகனும் பின்னால் தொடர்ந்தனர்.
வழியில் மக்கள் இதை பார்த்து சிரித்தனர். மகன் கேட்டான், ஏன் இப்படி சிரிக்கிறீர்கள்!
'எந்த மடையர்களாவது கழுதையை நடக்க விட்டு, அதன் பின்னால் செல்வார்களா... கழுதை ஒரு வாகனம்'
.
முல்லா, தன் மகனை கழுதையில் அமர்ந்து சவாரி செய்ய அநுமதித்தார்.
சிறிது தூரத்தில் ஒரு சிற்றூர் குறுக்கிட்டது.
மக்கள் கூட்டம் தென்பட்டது. அதில் ஒருவன் கழுதையை தடுத்து நிறுத்தினான்.
ஏன் தடுக்கிறாய்......மகன் கேட்டான்.
'என்ன அநியாயம் இது. நீ சிறுவன். உன் தந்தை வயதானவர். அவர் தான் கழுதை மேல் அமர்ந்து பிரயாணம் மேற்கொள்ள வேண்டும்.'
முல்லா கழுதையில் அமர்ந்தார். சிறுவன் அவர் பின்னால் நடந்தான்.
வழியில் வேறு ஒரு ஊர் குறுக்கிட்டது. முல்லாவை பார்த்து அங்கு நின்ற ஒரு மனிதன் சாடினான்.
என்ன விஷயம், ஏன் கோபமாக இருக்கிறீர் கள். மகன் வினவினான்.
'என்ன கொடுமை இது. நீ சிறுவன்... உன்னை நடக்க சொல்லி விட்டு, அந்த பெரிய மனிதன் என்ன சொகுசாக கழுதை மேல் அமர்ந்து செல்கிறான். நீயும் ஏறிக்கொள் , இதில் ஒன்றும் தவறு இல்லை.'
முல்லாவும், மகனும் கழுதை மேல் அமர்ந்து தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.
வழியில், ஒரு சந்தை குறிக்கிட்டது. கழுதை மேல் இருவர் அமர்ந்து செல்வதை கண்ட மக்கள் கூப்பாடு போட்டனர். கழுதை சற்று மிரண்டு பின் நின்றது.
'என்ன அநியாயம் இது.
இந்த கழுதை மேல் இருவர் அமர்ந்தால் கழுதை என்னாகும்.'
மக்களின் குரலுக்கு செவி சாய்த்த முல்லாவும், மகனும் கழுதையை தங்கள் தோளில் சுமந்தபடி நடந்து சென்றனர்.
வழியில், ஒரு ஆற்றை கடக்க குறுகிய பாலம் வழியே நடந்தனர். இதை கண்ட மக்கள் வாய் விட்டு சிரித்தனர்.
'என்ன கோமாளித்தனம் இது. எந்த பைத்தியக்காரனாவது, கழுதையை தோளில் சுமந்து செல்வானா? மக்களின் வெடிச் சிரிப்பில் கழுதை மிரண்டது.
ஆற்றில் விழுந்தது; துடி துடித்தது; பின் மூழ்கியது; கண்ணில் இருந்து மறைந்தது.
முல்லா சொன்னார்...
"இது தான் நீ வாழும் உலகம்!
எதை செய்தாலும் குற்றம் சொல்லும்;
வீண் பழி சுமத்தும், ஏளனம் செய்யும்;
ஏசும், எட்டி உதைக்கும், வசை பாடும்.
கண்டவன் சொல்வதற்கெல்லாம் தலை சாய்க்காதே.
உன் மனசாட்சிக்கு மட்டும் தலை வணங்கு.
இல்லை என்றால், உன் முடிவும் கழுதையின் முடிவு போல் வீணாக முடிந்து விடும்."

பணத்தை பற்றி ஓஷோ என்ன கூறுகிறார்

பணத்தை பற்றி ஓஷோ என்ன கூறுகிறார் ?

1.

நீ பணத்தை ஓரு பிரச்சனையாக்கினால் ஓழிய அது ஓரு பிரச்சனையே அல்ல, காலங்காலமாக, தன்னை மதவாதிகள் என கூறிகொள்ளும் மக்கள், பணத்தைப் பற்றி மிகவும் கவலை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள், பணம் பற்றி கவலைப் படுவது ஓரு முட்டாள்தனமான விஷயம்!  அதனோடு விளையாடுங்கள் ! அது உன்னிடம் இருந்தால் அதை ஆனந்தமாக அனுபவி! அது உன்னிடம் இல்லாவிட்டால் அது இல்லாத சுதந்திரத்தை ஆனந்தமாக அனுபவி! அது இல்லாதபோது நீ வேறு என்ன செய்யமுடியும் ? ஆனந்தமாக அனுபவி! அது உன்னிடம் இருக்கும்பொழுதும் வேறு என்ன செய்யமுடியும்? ஆனந்தமாக அனுபவி! அதைப் பற்றி தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்காதே. பணம் ஓரு பொம்மை. சில சமயங்களில் உன்னிடம் அது இருக்கும், அப்போது அதனோடு விளையாடு.

ஆனால் என்னுடைய உணர்வு என்னவென்றால் : பணத்தோடு விளையாடமுடியாத மக்களே, பணத்தை துறக்கிறார்கள்- அவர்கள் அதைப்பற்றி மிகவும் இறுக்கமாக இருக்கிறார்கள். அவர்கள் பணத்தைப் பற்றி மிகவும் பயப்படுகிறார்கள், ஏனெனில் ஆழமாக அடியில் அதனை பிடித்துகொண்டிருக்கிறார்கள்.

உனக்கு தெரியுமா?  மகாத்மா காந்தியின் தலைமை சீடர் வினோபா பாவேவால் பணத்தை பார்க்க இயலாது. நீ வெறும் ஓரு ரூபாய் தாள் – மதிப்பற்றது, அதை அவர் பார்வைக்கு கொண்டுவந்தால் – அவர் தனது கண்களை மூடிக்கொள்வார். இது எந்த வகையான மனோபாவம்? இது துறவியின் செய்கையாக கருதப்படுகிறது ; நாடு முழுவதும் இவர் பணத்தை துறந்தவர் என பாராட்டபடுகிறார். நீ உண்மையிலேயே பணத்தை துறந்திருந்தால், எதற்காக நீ கண்களை மூடவேண்டும்?

நீ கண்களை மூடும் அளவிற்கு அந்த ஓரு ரூபாய் தாள் ஈர்ப்பு உடையதாகவா உள்ளது? நீ கண்களை மூடாவிட்டால் அந்த ஆளின் மீது குதித்துவிடுவாய் என பயமாக உள்ளதா? கண்டிப்பாக ஏதோ ஓன்று இருக்கவேண்டும். இது சிறிது அதிகப்படியாக தோன்றுகிறது. அதிக பயம் உள்ளது – இல்லாவிட்டால் எதற்காக உன் கண்களை மூடவேண்டும்? பல விஷயங்கள் கடந்து செல்கின்றன, ஆனால் நீ உனது கண்களை மூடுவதில்லை – இது வெறும் பணம்.

பணம் என்பது ஓன்றுமில்லை – பொருட்களை பரிமாற உதவும் வெறும் ஓரு கருவி. ஆனால் மக்கள் உண்மையிலேயே அடி ஆழத்தில் கஞ்சர்கள். பிடித்து தொங்குபவர்கள், அவர்களின் பிடித்துவைக்கும் தன்மையாலும், அவர்களின் கஞ்சதனத்தாலும், அவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள், துன்பப்படுகிறார்கள். முடிவில் ஓருநாள் அவர்கள் பணம்தான் அவர்களுக்கு துன்பத்தை விளைவிக்கிறது என நினைத்துக் கொள்கிறார்கள். பணம் உனக்கு துன்பத்தை விளைவிப்பதில்லை, பணம் எப்படி உனக்கு துன்பம் விளைவிக்கமுடியும்? கஞ்சத்தனம்தான் உனது துன்பத்தை விளைவிக்கிறது. பணம்தான் துன்பத்தை விளைவிக்கிறது என நினைத்துக்கொண்டு, அவர்கள் பணத்தை துறக்கிறார்கள். அவர்கள் பண உலகிலிருந்து தப்பி செல்கிறார்கள், பிறகு அவர்கள் தொடர்ந்து பயந்துகொண்டிருக்கிறார்கள், அவர்களின் கனவுகளில் அவர்கள் வங்கிகளுக்குள் நுழைந்து பெட்டகத்தை திறப்பது போன்ற விஷயங்கள் நடக்கும் – பணத்தின் மீது இச்சை கொள்வதால் – அது கண்டிப்பாக நடக்கும்.

பணம் ஓரு பிரச்சனை அல்ல! அதனை உபயோகபடுத்தலாம்.

உன்னிடம் அது இருந்தால் உபயோகப்படுத்து ; உன்னிடம் பணம் இல்லாவிட்டால், பணம் இல்லாதபோது உனக்கு இருக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்து. இதுதான் என்னுடைய வழிமுறை. நீ பணக்காரனாக இருந்தால் ஆனந்தமாக அனுபவி. ஏழை மனிதன் அனுபவிக்கமுடியாத சில இன்பங்களை செல்வம் கொண்டுள்ளது. நான் செல்வத்தோடும் இருந்திருக்கிறேன், ஏழையாகவும் இருந்திருக்கிறேன், நான் உண்மையாக கூறுகிறேன், பணக்காரர்கள் மட்டுமே அனுபவிக்ககூடிய ஓரு சில விஷயங்கள் இருக்கின்றன. உன்னிடம் செல்வம் இருக்கும்பொழுது ஆனந்தமாக அனுபவி. நான் திரும்பவும் உன்னிடம் கூறுகிறேன், நான் செல்வத்தோடும் இருந்திருக்கிறேன், ஏழையாகவும் இருந்திருக்கிறேன், ஏழை மக்கள் மட்டுமே அனுபவிக்ககூடிய விஷயங்கள் சில இருக்கின்றன. இரண்டையும் ஓரே சமயத்தில் அனுபவிக்கமுடியாது.

எனவே எப்போதானாலும், நடப்பது என்னவாக இருந்தாலும், ஆனந்தமாக அனுபவி. ஏழை மனிதன் ஓரு வகையான சுதந்திரத்தைக் கொண்டுள்ளான். வறுமை ஓரு வகையான தூய்மையை, ஓரு ஓய்வுதன்மையை, திருப்தியான தன்மையை கொண்டுள்ளது. மனம் மிகவும் கவலைபடுவதில்லை. கவலைபட ஏதுமில்லை, நீ நிம்மதியாக உறங்கலாம். ஏழை மனிதனுக்கு தூக்கமின்மை இயலாதது. எனவே குறட்டை விட்டு நன்றாக தூங்கு. ஏழ்மையிலிருந்து வரும் சுதந்திரத்தை ஆனந்தமாக அனுபவி.

சில சமயங்களில் நீ செல்வந்தனாக இருந்தால், செல்வத்தை அனுபவி, ஏனெனில் பணக்காரர்கள் மட்டுமே அனுபவிக்ககூடிய சில விஷயங்கள் இருக்கின்றன. சிறந்த ஓவியங்களை உனது சுவற்றில் நீ மாட்டலாம். ஏழை அவ்வாறு செய்ய இயலாது. உனது வீட்டில் நீ சிறந்த இசையை வைத்திருக்கலாம். ஏழை அவ்வாறு செய்ய இயலாது. உன்னுடைய வீட்டை சுற்றி நீ ஜென் தோட்டம் அமைக்கலாம், ஏழை அவ்வாறு செய்ய இயலாது. நீ கவிதை படிக்கலாம், நீ வரையலாம், நீ கிதார் வாசிக்கலாம், நீ ஆடலாம், பாடலாம், தியானம் செய்யலாம் ஆயிரக்கணக்கான விஷயங்கள் கிடைக்கின்றன.

என்னுடைய வழி: எது எப்படியிருந்தாலும், நீ அதன் மூலம் என்ன செய்யமுடியும் என்று பார். அது வறுமையாக இருக்குமானால் புத்தராக ஆகிவிடு. ஊர் சுற்றத் தெரடங்கு, ஓரு பிச்சை பாத்திரத்தை எடுத்து கொள். பிச்சைக்காரருக்கு மட்டுமே இருக்ககூடிய அந்த அழகை அனுபவி. அவர் எந்த இடத்தையும் சேர்ந்தவரல்ல, இன்று இங்கே இருக்கிறார், நாளை அவர் போய்விடுவார். அவர் ஓரு ஓட்டம். அவருக்கு எந்த வீடும் இல்லை. மழை வரபோகிறது கூரையை சரிசெய்யவேண்டும் என்ற கவலை அவருக்கு இல்லை. யாராவது எதையாவது திருடிவிடுவார்களோ என்னும் பயம் அவருக்கு இல்லை. அவரிடம் எதுவும் இல்லை.

வறுமையாக இருக்கும்பொழுது வறுமையை ஆனந்தமாக அனுபவி. செல்வம் இருக்கும்பொழுது ஜனகராக ஆகிவிடு, அரசனாக ஆகிவிடு, பணத்தினால் கிடைக்கும் அனைத்து அழகுகளையும் அனுபவி.

என்னுடைய வழி முழுமையானது. நான் உனக்கு தேர்ந்தெடுக்க கற்றுத் தரவில்லை, நான் வெறுமனே ஓரு புத்திசாலியான மனிதன் எது எப்படியிருந்தாலும் அதனை அழகாக்கிவிடுவான் என கூறுகிறேன். புத்தியில்லாத மனிதன் சிரமப்படுகிறான். அவனிடம் பணமிருந்தால் அவன் சிரமப்படுகிறான் ஏனெனில் பணம் கவலைகளை கொண்டுவருகிறது. அவன் பணம் கொண்டுவரக்கூடிய இசையை, நடனத்தை, ஓவியத்தை இரசிப்பதில்லை. அவனிடம் பணம் இருந்தால் அவன் ஓய்வெடுக்க, தியானம் செய்ய, பள்ளதாக்குகளில் கத்திப் பாட, மற்றும் நட்சத்திரங்களோடு பேச அவன் செல்வதில்லை, அவன் கவலைபடுகிறான், தனது உறக்கத்தை இழந்துவிடுகிறான், பசியை இழந்துவிடுகிறான். பணம் இருக்கும்பொழுது அவன் தவறானதை தேர்ந்தெடுக்கிறான். இந்த மனிதன் எப்படியோ ஏழையானால், கடவுளின் அருளால் ஏழையானால், பிறகு அவன் ஏழ்மையில் சிரமப்படுகிறான், பிறகு அவன் தொடர்ந்து “அது இல்லை, இது இல்லை” எனக் கவலைப்படுகிறான். உன்னிடம் வறுமை உள்ளது!

அதனை ஆனந்தமாக அனுபவி!

Source: Take It Easy vol # 1 Chapter # 8 Question # 7

2.

நான் பணத்தை எதிர்க்கவில்லை. பணப்பிடிப்புள்ள மனத்தன்மையை தான் எதிர்க்கிறேன்! பொருட்களை வைத்திருப்பதை நான் எதிர்ப்பதில்லை.

நான் பிடித்து வைத்துக் கொள்ளும் தன்மையையே எதிர்க்கிறேன். இவை இரண்டும் முற்றிலும் வேறுபட்ட பரிமாணங்கள், ஓன்றுக்கெரன்று எதிரானவை.

பணத்திற்கு எதிராக இருப்பது முட்டாள்தனம். பணம் ஓரு அழகான கருவி- பரிமாற்ற கருவி. பணம் இல்லாமல் முன்னேற்றம் அடைந்த கலாச்சாரமோ, சமுதாயமோ, பண்பாடோ, இருக்கமுடியாது.

பணம் உலகில் இருந்து மறைந்துவிட்டது என கற்பனை செய்து பாருங்கள். பிறகு வசதி, வாய்ப்பு அனைத்தும் அதனோடு சேர்ந்து மறைந்துவிடும். மக்கள் மிகவும் வறுமையில் தள்ளப்படுவார்கள். பணம் மிகப்பெரிய பணியை செய்துள்ளது. ஓருவர் அதனை பாராட்ட வேண்டும்.

ஆகவே நான் பணத்திற்கு எதிரியல்ல, ஆனால் நான் பணப்பிடிப்புள்ள மன தன்மைக்கு எதிரானவன்.- மக்கள் வேறுபடுத்துவதில்லை. முழு மனித சமுதாயத்தின் கடந்த காலமும் குழப்பத்திலேயே இருந்து வந்துள்ளது.

பணப்பிடிப்புள்ள மன தன்மையை விட்டுவிடுங்கள். ஆனால் பணத்தை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. பணம் உருவாக்கப்பட வேண்டும், செல்வம் உருவாக்கப்படவேண்டும். செல்வம் இல்லாவிடில் எல்லா அறிவியலும் மறைந்துவிடும், எல்லா தொழில்நுட்பங்களும் மறைந்துவிடும், மனிதனின் சிறந்த சாதனைகள் அனைத்தும் மறைந்துவிடும். மனிதனால் நிலவுக்கு செல்லமுடியாது, மனிதனால் பறக்க இயலாது. பணம் இல்லாவிடில், மொழி இல்லாவிடில் எல்லா கலைகளும், எல்லா இலக்கியங்களும், எல்லா கவிதைகளும், எல்லா இசையும் அழிந்துவிடுவதைப் போல, வாழ்வு உற்சாகம் இழந்துவிடும். மொழி உனக்கு எண்ணங்களை பரிமாறிக்கெரள்ள, தெரிவிக்க உதவுவதைப் போல, பணம் உனக்குப் பொருட்களை பரிமாறிக்கொள்ள உதவுகிறது. அதுவும் ஓருவகை தொடர்புபடுத்திக் கொள்ளுதலேயாகும்.

ஆனால் பண-மனம் படைத்த மக்கள் பணத்தை பிடித்து வைத்து கொள்கிறார்கள். அவர்கள் பணத்தின் முழு பயனையும் அழித்துவிடுகிறார்கள். அதன் பயன் ஓரு கையிலிருந்து இன்னெரரு கைக்கு செல்வதே. அதனால்தான் அது கரன்சி என அழைக்கபடுகிறது, அது மின்சாரத்தைப்(கரண்ட்) போல, இருக்கவேண்டும், நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும். அது எவ்வளவு நகர்கிறதோ, அவ்வளவு நல்லது. சமுதாயம் அந்த அளவிற்கு செல்வச்செழிப்பு அடைகிறது.

என்னிடம் ஓரே ஓரு ரூபாய் இருந்தாலும் அது நகர்ந்துகொண்டே இருக்கிறது. அது ஐயாயிரம் சந்நியாசிகளிடம் நகரும்பெரழுது அந்த ஓரு ரூபாய் ஐயாயிரம் ரூபாய் ஆகிறது. அது அதிகமாக நகர்ந்தால் அதிக பணம் உருவாக்கப்படுகிறது. அது ஐயாயிரம் ரூபாய் இருந்ததை போல செயல்பட்டுள்ளது- வெறும் ஓரு ரூபாய் ! ஆனால் பண-மனம் படைத்த மனிதன் அதனைப் பிடித்துகொள்கிறான். அவன் அது கரன்சியாக இருப்பதை நிறுத்திவிடுகிறான். அவன் அதனை பிடித்து வைத்து கொள்கிறான். அதனிடம் அவன் பிடிப்பு கொள்கிறான், அவன் அதனை உபயோகப்படுத்துவதில்லை.