Sunday 29 May 2016

கன்னியில் பிறந்தவர்கள் அதிபுத்திசாலிகள

என்ன பொருத்தம்..நமக்குள் இந்தப் பொருத்தம்
கன்னி
கன்னியில் பிறந்தவர்கள் அதிபுத்திசாலிகள். தன் துணையைத் தேடிக்கொள் வதில், மிகவும் கஷ்டப்படுவார்கள். ஏனெனில், இவர்கள் மகிழ்ச்சியை எதிர்பார்ப்பதைவிட, அறிவு பூர்வமான துணையை எதிர்நோக்குவதேயாகும். இவர்கள் சந்தோஷத்தையும், காமத்தையும் விட அறிவுக்கு முக்கியத்துவமளிக்கும் அறிவு ஜீவிகள் ஆவர். சில நேரங் களில், இவர்களது எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை அளிக்கக்கூடும். மிகவும் கூச்சசு பாவ முள்ள இவர்கள், காதலைக் கையாள்வதில் வல்லவர்கள் அல்ல. பொறுமையுள்ள இவர்க ளுக்கு தங்கள் துணைமீது குற்றம் கண்டுபிடிக்கும் குணம் இயற்கையாகவே அமைந்து விடுகிறது.எனவெ,பிறரோடு சம்பாஷிக்கும் போது அவர்களை சாந்தப்படுத்தும் விதத்தில், தாஜா செய்ய முற்படக்கூடாது. மென்மையான உணர்ச்சிகளோடும் இவரகள் இருக்கக்கூ டாது. இவர்களால் காதலிக்கப்படுபவர்கள், அழகில்லாதவர்களாக இருந்தாலும், அறிவில் லாதவர்களாக இருந்தாலும், எல்லாம் இருப்பதாக பாராட்டப்பட வேணடும், மெச்சப்பட வேண்டும்.அப்படி செய்தாலே, இவர்களும் பாராட்டப்படுவர் என்பதை தங்கள் மனதிற் கொள்ளவேண்டும்.
கணவர்கள் :- கன்னி இராசிக்காரர்கள், திருமண பந்தத்தை, ஒரு சமூகத் திட்ட மாகவும், பார்ட்னர் ஷிப் ஒப்பந்தமாகவும் கருதுவதால், வெகு காலத்திற்கு பிரம்மச்சாரிகளாக காலம் தள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது. ஆயினும், இவர்களின் துணையின் உதவியோடு இவர்களின் மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமைந்து விடுகிறது. மிகவும் சிக்கனத்தை கடைப்பிடிப்பதால், இவர்களின் குடும்பவாழ்க்கை பாதிக்கப்படலாம். எனவே, சிக்கனப் பழக்கத்தை இவர்கள் கைவிட்டால் நல்லது.
மனைவிகள் :- 2, 7 மற்றும் 11 ஆம் அதிபதிகள், முறையே சுக்கிரன், குரு, சந்திரன் ஆகியோர் சுபர்கள் ஆவர். இவர்கள் குறிகாட்டுவது, புத்திகூர்மை, மேதாவித்தன ம் உடைய அனுசரித்துச் செல்லும், காரியத்தில் கை கொடுக்கும் அன்புக் கணவன் இவர்களுக்கு அமையும் என்பதையே ஆகும். இவர்களை நன்கு புரிந்து கொண்டு வாழும் துணையே அமையும். எனவே, இனபகரமான, இனிய வாழ்க்கை இவர்களுக்கு அமைவது உறுதி. இவர்கள் சிக்கனம் பார்ப்பவராக இருக்கலாம், ஆனால் கஞ்சத்தனம் செய்பவர்களாக இருக்கக்கூடாது. இவர்கள் தன் கணவனுக்கு பக்தி மார்க்கத்தில் ஒத்துழைக்கவோ, அவ னுக்கு இனிய துணையாகவோ இருக்கமாட்டார்கள். ஆயினும், இவர்களது வாழ்க்கைச் சக்கரம் சீராகவே ஓடும். இப் பெண்கள் காமத்தைப் பொருத்தவரை, மிகவும் தொல்லை தரக்கூடிய நிகழ்வாகவும், மோசமான நடவடிக்கையாகவும் கருதுவர். இந்த விஷயத்தில், இவர்களை, இவர்களாகவே மாற்றிக் கொண்டால்தான் உண்டு. இதன் காரணமாக, இவர்களுக்குக் குறைவான எண்ணிக்கையிலேயே குழந்தைகள் இருக்கும். இவர்களின் குழந்தைகளுக்குத் தேவையான வசதிகளை எந்த விதத்திலாவது, கட்டாயம் செய்து கொடுத்துவிடுவார்கள். எனவே, இவர்களின் குழந்தைகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு. ஆரோக்கியமான,மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வர் எனலாம். ஆனால் இவர்கள் குழந்தை களிடம் தங்கள் பாசத்தை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள்.
சீர்மிகு பொருத்தம் :- ரிஷபம்,மகரம் ஆகிய பூமி ராசிகளும், நீர் இராசிகளான கடகம், விருச்சிகம் ஆகியவையும் மிகமிக பொருத்தம் உள்ளவையாகும். திங்கட்கிழமைகளில் பிறந்தவர்களையும், சந்திரனின் நட்சந்திரங்களான ரோகிணி, ஹஸ்தம் மற்றும் திருவோண நட்சத்திரங்களில் பிறந்தவர்களையும் மணந்து கொண்டால் முன்னேற்றகர மான, சந்தோஷகரமான வாழ்க்கை இந்த இராசிக்காரர்களுக்கு அமையும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.