Monday 30 May 2016

வாழ்க்கை மாறுபட்ட தன்மையில்தான் இயங்குகிறது

கேள்வி  :  ஓஷோ ,

வாழ்க்கை மாறுபட்ட தன்மையில்தான் இயங்குகிறது என்று நீங்கள் அடிக்கடி கூறுகிறீர்கள் . இதைக் கொஞ்சம் விளக்க முடியுமா ?

     பதில்  : " ஆமாம் வாழ்வு மாறுபட்ட தன்மையில்தான் இயங்குகிறது .

   அது நம்மிடம் , ' புதுமைகளை உண்டாக்கு ' என்று கூறுகிறது .பிறகு அது , ' அவற்றை அழி ! ' என்று கட்டளையிடுகிறது !

    அது , ' இந்த உலகத்தில் பிறந்து , வாழ் ' என்று கூறுகிறது . பிறகு அது , ' இறந்துவிடு ! ' என்று கூறுகிறது .

    முதலில் அது , ' இந்த உலகத்தில் உள்ளதை அடை ! ' என்று கூறுகிறது . பிறகு அது , ' அவற்றையெல்லாம் இழ ' என்று கூறுகிறது .

   முதலில் அது , ' பணக்காரன் ஆகு ! ' என்று கூறுகிறது . பிறகு அது , ' ஏழையாக மாறு ! ' என்று கூறுகிறது .

    முதலில் அது , ' அகங்காரத்தில் இமயமலை உச்சிக்குப் போ ! ' என்று கூறுகிறது . பிறகு அது , ' அகங்காரமற்ற பள்ளத்தாக்கில் விழு ! ' என்று கட்டளையிடுகிறது .

    பிறகு அது , ' இப்பொழுது உனக்கு இரண்டு நிலைகளும் தெரிந்தது இல்லையா ? அதாவது , ' நிழலும் நிஜமும் ! பொய்யும் , உண்மையும் . அதற்காகத்தான் நீ இந்த உலகத்திற்கு வந்திருக்கிறாய் . இப்பொழுது நீ இந்த இரண்டையும் கடந்து செல் ! ' என்று கூறுகிறது . "

கேள்வி  : ஓஷோ , நான் ஏகப்பட்ட தவறுகள் செய்கிறேன் இது எனக்குக் கவலையை அளிக்கிறது . இதை நான் எப்படி போக்குவது ?

பதில்   : " உண்மையை அறியும் புதுமைத் தேடுதலில் ஒருவன் ஏகப்பட்ட தவறுகளையும் , தடுக்கி விழுதல்களையும் எதிர்பார்த்தே நடக்க வேண்டும் . ஏகப்பட்ட அபாயங்களைச் சந்திக்க வேண்டிவரும் . அவன் வழி தவறிகூட போகக்கூடும் .

ஆனால் அவன் அப்படித்தான் சென்று அதை அடைய வேண்டும் . இப்படி வழி தவறிச் செல்லுவதால் , பின்பு எப்படி , அப்படி வழி தவறிச் செல்லக்கூடாது என்பது அவனுக்குப் புரிய ஆரம்பிக்கிறது . அதனால் அவன் மெல்ல மெல்ல உண்மையை நெருங்கிவருகிறான் . இது ஒரு தனி நபர் முயற்சி , தனி யாத்திரை .

இதில் நீங்கள் அடுத்தவர்களது முடிவில் , முடிவு எடுக்கக் கூடாது . ,......... ★

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.