Sunday 31 December 2017

ஓஷோவின் தியானம் .


ஓஷோவின் தியானம் .

ஓஷோவின் தியானம் ஒருவனை உள்நோக்கிப் பயணம் செய்யச் சொல்கிறது.

உள்ளே நடக்கும் அனைத்திற்கும் ஒரு பார்வையாளனாக இருக்க வலியுறுத்துகிறது.

எண்ணங்களை எந்த விதமானமான தணிக்கைகளும், தீர்ப்புகளும் இன்றி கவனிப்பது முக்கியம்.

இனி இந்த எளிய தியான முறைக்குச் செல்லலாம்.

1) அமைதியான இடத்தில் சௌகரியமாக அமர்ந்து கொள்ளுங்கள்.

2) இயல்பாக மூச்சு விட்டு மூச்சு சீராகும் வரை மூச்சில் கவனம் செலுத்துங்கள்

3) இனி உங்கள் எண்ணங்களை விருப்பு வெறுப்பு இல்லாமல் கண்காணியுங்கள். இந்த எண்ணம் நல்லது, இந்த எண்ணம் கெட்டது என்ற பாகுபாடுகள் வேண்டாம். வெறுமனே கவனியுங்கள். உங்கள் எண்ணங்களுக்கு நீங்கள் பார்வையாளனாக இருங்கள்.

4) கூர்மையாக கவனிக்கப்பட, கவனிக்கப்பட மனதின் எண்ணங்களின் எண்ணிக்கை, வேகம் குறைய ஆரம்பிக்கும். ஒரு பார்வையாளனின் தொடர்ந்த கண்காணிப்பில் எவர் செயல்களும் சற்று குறையவே செய்யும். மனமும் அதற்கு விதிவிலக்கல்ல.

5) ஒரு எண்ணம் மனதில் எழுகிறது. அதைக் கவனிக்கிறீர்கள். இன்னொரு எண்ணம் எழுகிறது. அதையும் கவனிக்கிறீர்கள். எண்ணங்கள் குறையக் குறைய இன்னொரு அழகான அனுபவமும் நிகழும். அது என்ன தெரியுமா? ஒரு எண்ணம் முடிந்து இன்னொரு எண்ணம் எழுவதற்கு இடையே உள்ள இடைவெளி. அதையும் கவனியுங்கள். அந்த இடைவெளியில் தான் மனம் மௌனமாகிறது. அது தான் மனமில்லா நிலை. அது மிக அழகான அனுபவம்.

6) எண்ணம்-இடைவெளி-எண்ணம்-இடைவெளி என ஒவ்வொன்றையும் எந்த விமரிசனமும் இன்றி கவனியுங்கள். ஆரம்பத்தில் சில மைக்ரோ வினாடிகள் தான் அந்த இடைவெளி இருக்கும். உங்கள் தியானம் ஆழமாக ஆழமாக அந்த இடைவெளிகளின் கால அளவும் அதிகரிக்கும். அந்த மனமில்லா நிலை தான் தியானத்தின் உச்சக்கட்டம்.

7) ஆனால் இடைவெளிகளையே அதிகம் நீங்கள் எதிர்பார்த்தால் தோற்றுப் போவீர்கள். ஏனென்றால் இடைவெளியின் மீது உங்களுக்கு விருப்பம் ஏற்பட்டு விட்டது என்றால் விருப்பு வெறுப்பற்ற பார்வையாளனாக இருக்க உங்களுக்கு முடியாது. அது முடியா விட்டால் தியானமும் நிகழாது.

8) எண்ணம் எழுவதைக் கவனிப்பதும் ஒன்று தான். இடைவெளி வருவதைக் கவனிப்பதும் ஒன்று தான் என்கிற சமமான மனோபாவமே இங்கு முக்கியம். சூரிய ஒளியை ரசிக்கிறீர்கள். அடுத்ததாக மேக மூட்டம் வருகிறது. அதையும் ரசிக்கிறீர்கள். இதில் நீங்கள் எதையும் தேர்ந்தெடுப்பதில்லை. நிகழ்வதைக் கவனிக்கும் சம்பந்தமில்லாத பார்வையாளனாக இருக்கிறீர்கள். இது தான் சரியான மனநிலை.

9) தியானம் ஆழப்பட்ட பின் பேரமைதியை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். விருப்பு வெறுப்பில்லாத அந்த பார்வையாளனின் மனோபாவம் உங்களிடம் உறுதிப்பட ஆரம்பிக்கும். அது தியான சமயங்களில் பூரணமடைந்தால் மற்ற நேரங்களிலும் உங்களிடம் தங்க ஆரம்பிக்கும்.

தினசரி வாழ்க்கையே தியானம் ஆக ஆரம்பிக்கும். ஆரவாரங்களுக்கு நடுவேயும் நீங்கள் தியான நிலையில் இருக்க முடியும்.

ஓஷோவின் குறிக்கோளே அது தான்.
மிக எளிதாகத் தோன்றும் இந்த தியானத்தைப் பயிற்சியாக செயல்படுத்துகிற போது அந்த அளவு எளிதானதாக இருப்பதில்லை என்பது அனுபவம்.

ஆனால் தொடர்பவர்கள் கண்டிப்பாக இதில் வெற்றி அடைய முடியும்.

Thursday 28 December 2017

ஆருத்ரா தரிசனம்

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?  என்பது பற்றிப் பார்ப்போம்

பிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு)  சிவபெருமானுக்கு
உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ?

ஆர்த்ரா = திருவாதிரை

ஆஸ்லேஷா = ஆயில்யம்

அனுராதா = அனுஷம்

ஜேஷ்டா = கேட்டை

தனிஷ்டா = அவிட்டம்

புனர்வஸு = புனர் பூசம்

பூர்வ பல்குனி = பூரம்

உத்திர பல்குனி = உத்திரம்

பூர்வா ஷாடா = பூராடம்

பூர்வ பத்ரா = பூரட்டாதி

உத்ர பத்ரா = உத்திரட்டாதி

இவைகள் எல்லாம் தமிழ் நட்சத்திரங்களுக்கு சொல்லப்படும் வட மொழிப் பெயர்களாகும்.

தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்
திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது.

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா  சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.

ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் - புனர்பூசம்;

பரதனுக்கு - பூசம்;

லட்சுமணனுக்கு -ஆயில்யம்;

சத்ருக்னனுக்கு- மகம்;

கிருஷ்ணனுக்கு - ரோகிணி;

முருகனுக்கு - விசாகம்.

இவையாவும் இவர்கள் பிறந்த நட்சத்திரங்கள்.

ஆனால் பிறப்பே எடுக்காத சிவபெரு மானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே ?

பிறவா யாக்கைப் பெற்றோன்  பெரியோன்
என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம்
சிவ பெருமானைக் குறிக்கிறது.

சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனதுபற்றி புராணச் செய்திகள் உள்ளன.

சேந்தனார் வீட்டுக்கு களி யுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம்,ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமா
னுக்கு களி படைக்கப் படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.

ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகா வுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும்

ஆனால் திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான்.

திரேதாயுகா அலறித் துடித்து பார்வதிதேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள்.

அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி ,திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவ னுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.

அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகா வுக்கும் அவள் கணவனுக்கும் தரிசனகாட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள்

இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இந்த தரிசனத்துக்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது.

சேந்தனாருக்கும்  திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக  கொண்டாடப்படு
கிறது.

ஆருத்ரா தரிசனம் பற்றி தெரிந்து கொள்வோம்

சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள்.
சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள்.
சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன் ஆகும்

கோவில் கோபுரமும் விமானமும் ஒன்றா
கோவில் அமைப்பில் விமானம் வேறு, கோபுரம் வேறு. கருவறையின் மீது கட்டப்பெறுவது விமானமாகும்.

விமானத்தில் நாகரம், வேசரம், திராவிடம் என்று மூன்று வகை உண்டு என்று சிவஞான முனிவர் காஞ்சிப் புராணத்தில் பாடியுள்ளார்

கோவில் கட்டிட அமைப்பு முறையின்படி இவை வெவ்வேறு அமைப்பு உடையன. விமானம் சதுர அமைப்புக் கொண்டிருந்தால் நாகர விமானம் என்று பெயர் உருண்டுள்ள வட்டமான விமானமாக இருந்தால் வேசர விமானம் என்று பெயர். எட்டுப் பட்டை கொண்ட விமானமாக இருந்தால் திராவிட விமானம் என்று பெயர். ஒரு நிலை (ஏகதள விமானம்), இருநிலை விமானம் (துவிதளம்), மூன்று நிலை விமானம் (திதி தளம்), ஐந்துநிலை விமானம் (பஞ்சதளம்) முதலிய பாகுபாடுகளும் உண்டு.

கோபுரம் என்பது கோவிலின் நுழைவாயிலில் உயர்த்துக் கட்டப் பெறுவதாகும்.

சோழர் காலத்தில் சிதம்பரக் கோவிலுக்குக் கோபுரம் உயர்த்துக் கட்டுவது முதன் முதலில் தொடங்கிற்று. விஜய நகரப் பேரரசு காலத்தில் தான் கோபுரங்கள் அதிகமாகக் கட்டப்பெற்றன. கிருட்டிண தேவராயர் காலத்தில் கோபுரம் கட்டும் பணி செல்வாக்குப் பெற்றது. அதனால் முன் பகுதியில் உயர்த்துக் கட்டப்பெறும் கோபுரத்திற்கு இராய கோபுரம் என்று பெயர் வழங்கலாயிற்று. இராசகோபுரம் என்றும் வழங்கப்பெறும்.

திருவண்ணாமலைக்கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் முதலிய இடங்களில் நான்கு திசைகளிலும் கோபுரங்கள் கட்டப்பெற்றன. ஐந்துநிலை, ஏழுநிலை, ஒன்பதுநிலை, பதினொரு நிலை என்ற நிலையில் கோபுரங்கள் உயர்ந்தன. கோபுரங்கள் அகன்று நீள் சதுரமாக அமைந்திருக்கும். மேலே செல்லச் செல்ல அளவு குறைந்து கொண்டே சென்று உச்சியில் கலசங்கள் அமைக்கப்பட்டிருக்கும். எத்தனை நிலை உண்டோ அத்தனை கலசங்கள் உச்சியில் அமைந்திருக்கும்.

கோபுரம் உயர்த்துக் கட்டும்போது அதன் கனத்தைத் தாங்குவதற்கு ஏற்ப அடிப்பகுதியில் ஆழமாகக் குழி எடுத்து மணல் பரப்பி அதன்மேல் கட்டுவதே பண்டைய முறையாகும். அவ்வாறு கட்டப்பட்ட அடிநிலையின் மீதே தற்காலத்தில் மிக உயர்த்தி அவிநாசியிலும், திருவரங்கத்திலும் கோபுரங்கள் கட்டப் பெற்றன.

தற்காலத்தில் விமானம், கோபுரம் வேறுபாடு தெரியாமல் அனைத்தையும் கோபுரம் என்றே அழைக்கின்றனர்.

கருவறையின் மீது அமைந்திருப்பது விமானம். கோவிலின் நுழைவாயிலில் உயர்த்துக் கட்டப் பெறுவது கோபுரம். இரண்டும் வேறு வேறு தன்மையுடையன, அமைப்பிலும் மாறுபாடு உடையன ஆகும்

திருச்சிற்றம்பலம்

Sunday 3 December 2017

தேடவேண்டியது

🍂 "தேடவேண்டியது என்று எதுவும் இல்லை

நீ அறியாமையில் சேகரித்ததை துறந்தால் போதும்.

உன் இயல்பே பரிபூரண சுதந்தர, பரிபூரண ஆனந்த தன்மை தான்"

"உண்மை ஒன்று தான் .

ஒரே உண்மை ஆயிரத்தொரு விதங்களில் விளக்கிச் சொல்லிவிடலாம்

அதைத்தான் எல்லோரும் செய்து கொண்டு இருக்கிறார்கள்

இல்லாவிட்டால்

இத்தனை மதங்கள், இத்தனை தத்துவங்கள், இத்தனை கொள்கைகள் தேவையே இல்லை.

உண்மை என்பது ஒன்றுதான்.

மறை ஞானிக்குத் தத்துவம் கிடையாது.

கொள்கை கிடையாது.

ஏனெனில் அவரிடம் உண்மை மட்டுமே குடி கொண்டுள்ளது" 🍂

🍁 *_ஒஷோ_* 🍁

Tuesday 28 November 2017

பகவத்கீதையின் மிகச்சிறந்த வசனங்கள்

பகவத்கீதையின் மிகச்சிறந்த வசனங்கள் .....  ....             

1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.

அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது.

அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான்.

சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி.

இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை.

தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல.

அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.

11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு.

ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

12. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்,
துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது.

ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.

ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.

முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட,

என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.

19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை;

நாளைய பொழுதும் நிச்சயமில்லை;

இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி.

ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

23. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம்.

ஆனால் உங்க‌ளுக்குத் த‌குதியான‌து உங்க‌ளுக்குக் க‌ண்டிப்பாக‌க் கிடைத்தே தீரும்.

24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.

அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

Sunday 26 November 2017

வளமுடன் வாழ 108 சூத்திரங்கள்

வளமுடன் வாழ 108 சூத்திரங்கள்

1.    கடமையை செய்.
2.    காலம் போற்று.
3.    கீர்த்தனை பாடு.
4.    குறைகள் களை.
5.    கெட்டவை அகற்று.
6.    கேள்வி வேண்டும்.
7.    கை கொடு.
8.    கோவிலுக்குச் செல்.
9.    கொலை செய்யாதே.(ஆடு மாடு கோழி மீன்)
10.  கூச்சம் வேண்டாம்.
11.  தர்மம் செய்.
12.  தாயை வணங்கு.
13.  திமிர் வேண்டாம்.
14.  தீயவை பழகாதே.
15.  துன்பம் துரத்து.
16.  தூய்மையாய் இரு.
17.  தெளிவாக சிந்தி.
18.  தைரியம் வேண்டும்.
19.  தொண்டு செய்.
20.  தோழனை கண்டுபிடி.
21.  சத்துணவு சாப்பிடு.
22.  சஞ்சலம் போக்கு.
23.  சாதனை செய்.
24.  சிக்கனம் தேவை.
25.  சீருடன் வாழ்.
26.  சுத்தம் பேண்.
27.  சூழ்ச்சி செய்யாதே.
28.  செலவை குறை.
29.  நல்லவருடன் பழகு.
30.  சைவம் சிறந்தது.
31.  சொர்க்கம் தேடு.
32.  சோகம் வேண்டாம்.
33.  சோம்பல் அகற்று.
34.  செளந்தர்யம் சேர்.
35.  நம்பிக்கை கொள்.
36.  நிம்மதி பெரிது.
37.  நெஞ்சத்தில் நில்.
38.  நேர்மை கடைபிடி.
39.  உனமையாக பழகு.
40.  நொறுங்கத் தின்னு.
41.  நோயை விரட்டு.
42.  பண்புடன் பழகு.
43.  பாவம் செய்யாதே.
44.  பிதற்றல் குறை.
45.  பீடிகை போடாதே.
46.  புண்ணியம் சேர்.
47.  பூசல் நீக்கு.
48.  பெரியோரை மதி.
49.  பேதம் வேண்டாம்.
50.  பைந்தமிழ் பேசு.
51.  பொய் பேசாதே.
52.  முகத்தை சுழிக்காதே.
53.  மூத்தோற்கு உதவு.
54.  மெல்லப் பேசு.
55.  மேலானவை நினை.
56.  மோசம் செய்யாதே.
57.  மௌனம் நல்லது.
58.  வறுமை ஒழி.
59.  வளம் சேர்.
60.  விளையாட்டல்ல வாழ்க்கை.
61.  வீம்பு விலக்கு.
62.  ஒவ்வொன்றாக செய்.
63.  வருவோரெல்லாம் நண்பர்களல்லர்.
64.  வேற்றுமை ஒழி.
65.  வையகம் போற்று.
66.  கலைஞனாய் இரு.
67.  ஞானம் வேண்டு.
68.  குணம் வளர்.
69.  பண்ணிப் பார்.
70.  எண்ணுக உயர்வு.
71.  பயம் தவிர்.
72.  மெய்யூட்டி வளர்.
73.  மெய்யென பேசு.
74.  தன் கையே உதவி.
75.  தீயோடு விளையாடாதே.
76.  மலையோடு மோதாதே.
77.  தடத்தில் நட.
78.  விபரீதம் வேண்டாம்.
79.  கண்டு களி.
80.  அட்டூழியம் செய்யாதே.
81.  கேட்டேதும் பெறா.
82.  நாட்டை நேசி.
83.  வீட்டோடு வாழ்.
84.  வரம் கேள்.
85.  திருடி பிழைக்காதே.
86.  மேதாவித்தனம் வேண்டாம்.
87.  சொல்லுக பயனுள.
88.  பழங்கள் சாப்பிடு.
89.  சினம் தவிர்.
90.  அனுபவம் பலம்.
91.  கண்ணெனப் போற்று.
92.  திருடனே திருந்து.
93.  இறைவனைப் புகழ்.
94.  அமைதி கொள்.
95.  துக்கம் மற.
96.  பங்கம் பண்ணாதே.
97.  அன்பே அச்சாணி.
98.  கொஞ்சி மகிழ்.
99.  மட்டம் தட்டாதே.
100. சொந்தம் சூழ்ந்திரு.
101. தவறைத் திருத்து.
102. அம்மாவே தெய்வம்.
103. வர்மம் வைக்காதே.
104. சொல் தவறாதே.
105. தோள் கொடு.
106. பேராசைப் படாதே.
107. புன்னகை அணி.
108. நீடுழி வாழ்க

Thursday 16 November 2017

விழிப்புணர்வு

ஆயிரக்கணக்கான கேள்விகள் இருக்கலாம்,

ஆனால் அதற்கு ஒரே ஒரு பதில்தான்

உனது விழிப்புணர்வு

வாழ்க்கை என்பது இறுக்கம் அல்ல

மனித மனங்களை தவிர

வாழ்க்கை எப்படியோ அப்படியே ஏற்றுக்கொள்

வேறு ஏதாவதாக மாற்ற முயற்சிக்காதே

நீ நீதான்.

உன்னுடன் ஒப்பிடக்கூடியவர் யாருமில்லை

வாழ்வை இந்த ஒரு கணத்தில் முழுமையாக வாழ்வது எப்படி என்று உனக்கு தெரிந்துவிட்டால்

இந்த வாழ்வின் முழு இரகசியமும் உனக்கு தெரிந்துவிடும்

வாழ்க்கை அர்த்தமுள்ளதுமல்ல, அர்த்தமற்றதுமல்ல

வாழ்க்கை ஒரு வாய்ப்புதான்,

ஒரு வாசல்தான்

கொடுப்பவனாக இரு

உன்னால் கொடுக்கமுடிந்ததை பகிர்ந்துகொள்

அன்பு பயத்திற்கு நேர் எதிர் துருவமாகும்

வாழ்வு அன்பின் அடிப்படையில் இருக்கவேண்டும்,

பயத்தின் அடிப்படையில் இருக்கக்கூடாது

இந்த கணமே நீ அனைத்து பிரச்சனைகளையும் விட்டு விடமுடியும்

ஏனெனில் அவை நீ உருவாக்கியவைதான்

தேடுதல் அழிவற்றதை நோக்கியதாக இருக்கவேண்டும்

மேலும் ஒவ்வொருவருக்கும் அழிவற்றதை அனுபவப்படகூடிய ஆற்றல் இருக்கிறது

ஒவ்வொரு எண்ணமும் விடப்படவேண்டும்

அது நல்லதோ கெட்டதோ அது முக்கியமல்ல

எல்லா பயங்களுடனும் அறியாத்தின் சவாலை ஏற்றுக் கொள்வதே தைரியம்

பயம் அங்கிருக்கும்,

ஆனால் திரும்ப திரும்ப அந்த சவாலை ஏற்றுக்கொண்டால்

மெதுமெதுவாக அந்த பயங்கள் மறைந்துவிடும்

உனது பிரச்சனைகளை மற்றொரு முறை நன்றாக பார்

நீ ஆழமாக பார்க்க, பார்க்க அவை சிறிதாக தெரியும்

நீ ஒரு ரோஜாவா, தாமரையா, அல்லியா என்பது ஒரு விஷயமே அல்ல

நீ மலர்கிறாயா என்பதுதான் பிரச்சனை

இறந்த காலமும் கிடையாது,

எதிர்காலமும் கிடையாது

இந்த கணம் மட்டுமே உள்ளது

நீ எப்படி எதனோடு எதனை ஒப்பிடுவாய்

ஆசை உள்ளே நுழையும்போது படைப்பு மறைந்துவிடுகிறது

உனது உடலுடன் ஏதாவது செய்யும்போது உனது உடல் சொல்வதை கவனி

Thursday 2 November 2017

ஓஷோ ஞானக் கதைகள்


ஒரு ஜென் சாதுவிடம், ஒருவன்,

"உங்கள் சாதனை எத்தகையது..???" என்று கேட்டான்.

அவர்,

"பசியெடுக்கும்போது நான் உணவளிக்கிறேன்,

உறக்கம் வரும்போது படுக்கையை விரித்துக் கொடுக்கிறேன்." என்றார்.

அந்த மனிதன், "யாருக்கு..???" என்று கேட்டான்.

ஜென் சாது, " யாருக்கு உறக்கும் வருகிறதோ, அவனுக்கு,

யாருக்குப் பசிக்கிறதோ, அவனுக்கு
என்று பதிலளித்தார்.

அந்த மனிதன்,"நீங்கள், இந்தக் குடிசை வீட்டில் தனியாக இருப்பதாக தெரிகிறது, வேறு யாரும் இல்லை.

நீங்கள் கூறுவது புரியவில்லையே" என்றான்.

சாது, "நான் அஞ்ஞானியாக இருந்தபோது,

எனக்கும், இந்தக் குடிசையில் ஒன்று தான் தெரிந்தது

இப்பொழுது எனக்கு இரண்டு  காட்சியளிக்கிறது.

ஒன்று நான், அறிந்து கொள்பவன்.

மற்றொன்று அது. செயல் புரிவது

எதற்குப் பசிக்கிறதோ அது நான் அல்ல.

யாருக்கு உறக்கம் வருகிறதோ, அது நான்அல்ல.

களைத்துப் போவது, அது நான் அல்ல.

பார்ப்பவன், கேட்பவன், அது நனல்ல.

இப்பொழுது இந்த அறையில், களைத்துப் போகும் ஒருவன் இருக்கிறான்,

ஒருபொழுதும் களைப்படையாத ஒருவனும் இருக்கிறான்

துக்கமும், சுகமும் அடைவதும் ஒருவனும் இருக்கிறான்.

சுகமும் துக்கமும் ஒரு பொழுதும் அடையாத ஒருவனும் இருக்கிறான்" 🍁

🍂 *_ஓஷோ_*
*_ஞானக் கதைகள்_* 🍂

Thursday 26 October 2017

அன்பென்னும் மலராக

ஓஷோ  துளிகள் .....
🌸🌸🌸🌸🌸🌸🌸
1. ஆயிரக்கணக்கான கேள்விகள் இருக்கலாம், ஆனால் அதற்கு ஒரே ஒரு பதில்தான். உனது விழிப்புணர்வு.

2. வாழ்க்கை என்பது இறுக்கம் அல்ல. மனித மனங்களை தவிர.

3. வாழ்க்கை எப்படியோ அப்படியே ஏற்றுக்கொள். வேறு ஏதாவதாக மாற்ற முயற்சிக்காதே.

4. நீ நீதான். உன்னுடன் ஒப்பிடக்கூடியவர் யாருமில்லை.

5. வாழ்வை இந்த ஒரு கணத்தில் முழுமையாக வாழ்வது எப்படி என்று உனக்கு தெரிந்துவிட்டால் இந்த வாழ்வின் முழு இரகசியமும் உனக்கு தெரிந்துவிடும்.

6. வாழ்க்கை அர்த்தமுள்ளதுமல்ல, அர்த்தமற்றதுமல்ல. வாழ்க்கை ஒரு வாய்ப்புதான், ஒரு வாசல்தான்.

7. கொடுப்பவனாக இரு. உன்னால் கொடுக்கமுடிந்ததை பகிர்ந்துகொள்.

8. அன்பு பயத்திற்கு நேர் எதிர் துருவமாகும். வாழ்வு அன்பின் அடிப்படையில் இருக்கவேண்டும், பயத்தின் அடிப்படையில் இருக்கக்கூடாது.

9. இந்த கணமே நீ அனைத்து பிரச்சனைகளையும் விட்டுவிடமுடியும் ஏனெனில் அவை நீ உருவாக்கியவைதான்.

10. தேடுதல் அழிவற்றதை நோக்கியதாக இருக்கவேண்டும் மேலும் ஒவ்வொருவருக்கும் அழிவற்றதை அனுபவப்படகூடிய ஆற்றல் இருக்கிறது.

11. ஒவ்வொரு எண்ணமும் விடப்படவேண்டும். அது நல்லதோ கெட்டதோ அது முக்கியமல்ல.

12. எல்லா பயங்களுடனும் அறியாத்தின் சவாலை ஏற்றுக் கொள்வதே தைரியம். பயம் அங்கிருக்கும், ஆனால் திரும்ப திரும்ப அந்த சவாலை ஏற்றுக்கொண்டால் மெதுமெதுவாக அந்த பயங்கள் மறைந்துவிடும்.

13. உனது பிரச்சனைகளை மற்றொரு முறை நன்றாக பார். நீ ஆழமாக பார்க்க, பார்க்க அவை சிறிதாக தெரியும்.

14. நீ ஒரு ரோஜாவா, தாமரையா, அல்லியா என்பது ஒரு விஷயமே அல்ல. நீ மலர்கிறாயா என்பதுதான் பிரச்சனை.

15. இறந்த காலமும் கிடையாது, எதிர்காலமும் கிடையாது, இந்த கணம் மட்டுமே உள்ளது நீ எப்படி எதனோடு எதனை ஒப்பிடுவாய்.

16. ஆசை உள்ளே நுழையும்போது படைப்பு மறைந்துவிடுகிறது.

17. உனது உடலுடன் ஏதாவது செய்யும்போது உனது உடல் சொல்வதை கவனி.

*மலரட்டும் உன்னுள் ஜீவியம் அன்பென்னும் மலராக*🌺🌿