Wednesday 24 June 2015

குலதெய்வம்

குலதெய்வம் அர்ச்சனை வழிபாடு !
மனிதர்களுக்கு ஏற்பட்டு இருக்கும் கர்மாவிற்க்கு உடனே நல்லது நடக்கும் என்று எதிர்பார்த்தால் அது தவறான ஒன்று. கூடிய விரைவில் நல்லத நடக்கும் என்று நினைத்துக்கொண்டு குலதெய்வமே சரணாகதி என்று அடைந்துவிட்டால் உங்களை காக்க உங்களின் குலதெய்வம் ஓடி வரும்.
நீங்கள் பத்து ரூபாய்க்கு உதிரிபூவை வாங்கி உங்களின் வீட்டிலேயே உங்களின் குலதெய்வத்தை நினைத்து ஒவ்வொன்றாக அர்ச்சனை செய்து அதன் காலடியில் போடுவது போல் போடுங்கள். உங்களின் குலதெய்வம் உங்களிடம் ஒடி வரும்.
எத்தனையோ பூ மாலைகளை நீங்கள் போடலாம் ஆனால் அந்த பூ மாலைகளை விட உதிரிபூவிற்க்கு என்று தனிசக்தி இருக்கிறது. அது என்றால் இயற்கை தன்மையோடு இருப்பதால் அப்படியோரு சக்தி வெளிப்படும். உதிரிபூக்களை கொண்டு அர்ச்சனை செய்யும்பொழுது உங்களின் குலதெய்வம் உங்களிடம் வரும். பூஜையறையில் விளக்கை ஏற்றி அமர்ந்துக்கொண்டு இப்படி அர்ச்சனை செய்யுங்கள். உங்களின் மனதில் அந்த பூ உங்களின் குலதெய்வத்தின் காலடியில் போய் விழுவதுபோல் நீங்கள் மனதில் நினைத்தால் போதும்.
ஒவ்வொரு நாளும் இதனை செய்துக்கொண்டு வரும்பொழுது உங்களின் குலதெய்வம் உங்களுக்கு நிச்சயம் அருள்பாலிக்கும். குலதெய்வத்தின் பாதத்தில் நமது பூக்கள் சென்று விழுவதால் குலதெய்வத்தின் முழுமையான அருள் கிடைக்கும்.

வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்

ஒருநாள் புத்தர் தனது மாணவர்களுக்கு போதனை செய்து கொண்டிருந்தார்.
மாணவர்கள் அனைவரும் தரையில் அமர்ந்திருந்தனர்.
முன் வரிசையில் உட்கார்ந்திருந்த மாணவன் புதியவன்; ஒரு நாட்டின் மன்னன். தரையில் உட்கார்ந்து பழக்கமில்லாதவன். உடல் நெளிந்தும், கால்களை மாற்றியும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தான். தான் படும் சிரமத்தை, புத்தர் அறிந்து விடக் கூடாதென்பதற்காக, அதை மறைக்கவும் முயற்ச்சித்தான். இதனை ஜாடையாக புத்தரும் கவனித்தார். அவர் மற்றொன்றையும் பார்த்தார். அவனுடைய கால் கட்டைவிரல் ஆடிக் கொண்டிருப்பதையும் பார்த்தார். அந்த ஆட்டம் அவனை அறியாமல் நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டார்.
பின் தனது பேச்சை நிறுத்தினார்.
“உன் காலின் கட்டைவிரல் ஆடிக் கொண்டிருப்பதைக் கவனித்தாயா?” என்று மன்னனைப் பார்த்து கேட்டார்.
மன்னன் அப்பொழுதுதான் தன் கால் கட்டை விரல் ஆடிக் கொண்டிருப்பதைக் கவனித்தான்.
அவன் பார்த்தவுடன் கட்டை விரலின் ஆட்டம் நின்று விட்டது.
அங்கிருந்த அனைவரும் “என்ன ஆச்சரியம்!” என்று வியந்தனர்.
“இப்பொழுது கட்டைவிரலின் ஆட்டம் நின்றுவிட்டது! ஏன் தெரியுமா?” அனைத்து மாணவர்களிடமிருந்து தனது கேள்விக்குப் பதிலை எதிர்பார்த்தார்.
ஒருவரிடமிருந்தும் பதில் வராமல் போகவே, அவரே பேச ஆரம்பித்தார். “அவன் தனது கால் விரலின் ஆட்டத்தை உற்றுப் பார்த்தவுடன் அதாவது விழிப்புணர்வுடன் (கவனத்துடன்) பார்த்தவுடன் கட்டைவிரலின் ஆட்டம் நின்றுவிட்டது! விழிப்புணர்வு மட்டும் இருந்தால் போதும். வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்!” என்றார் புத்தர்.

Tuesday 23 June 2015

கோபம்

கோபம்… வேண்டாமே.. குட்டி கதை !!
மனிதனுக்கு அதிகமா கோபம் வருதால் எந்த நற்பயணும் இருக்காது என்பதற்க்கு இந்த சிந்தணை கதை ஒரு எடுத்துக்காட்டு..
ஒரு இளைஞன் இருந்தான் அவனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது. கோபம் வரும்போது அவன் கத்தி தீர்த்து விடுவான் மேலும் அவன் இயல்பு தன்மைக்கு மாறாக நடந்து கொள்கிறான்.
ஒரு நாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்தார்.”இனி மேல் கோபம் வரும் போது எல்லாம் வீட்டின் பின் சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார்”.
முதல் நாள் 10 ஆணி,மறுநாள் 7,பின்பு 5,2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது.
ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன்.இனி கோபம் வராது என அவன் அப்பாவிடம் கூறினான். இனிமேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார். 45 நாளில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் அப்பாவை அழைத்து காட்டினான்.
“உடனே அப்பா சொன்னார் ஆணிகளை பிடுங்கிவிட்டாய்,சுவற்றில் உள்ள ஒட்டைகளை என்ன செய்வாய்? உன் கோபம் இது போல பலரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா? அந்த இளைஞன் வெட்கித் தலை குணிந்தான்.
பிறரை காயப்படுத்துவதை நிறுத்தினால் வாழ்க்கை புதிய அத்தியாயம் பெறும்.

Tuesday 16 June 2015

கடவுள், உன்னை நம்புகிறாரா

வெளிநாடு ஒன்றில் நடந்ததாகச் சொல்லப்படும் வேடிக்கையான ஒரு சம்பவம்.
இரவு நேரம். அந்தப் பெரிய வீட்டில் திருடன் ஒருவன் நுழைந்தான். ஒரு பக்கம் படுக்கை அறை. மற்றொரு பக்கம் பணப்பெட்டி இருக்கும் அறை. இதைச் சுலபமாக அடையாளம் கண்டு கொண்ட அந்த அனுபவசாலி திருடன், மெள்ள பணப்பெட்டி இருக்கும் அறைக்குள் நுழைந்தான். பீரோவை நெருங்கினான். அதன் கைப்பிடியில் ஏதோ எழுதப்பட்டிருந்தது!
'இந்த பீரோவைத் திறக்க நீங்கள் அதிகம் சிரமப்பட வேண்டாம். ஏனெனில், இது பூட்டப்படவே இல்லை. கைப்பிடியைத் திருகினால் போதும், பீரோ திறந்து கொள்ளும்!' என்ற அந்த வாசகத்தைப் படித்தவன் குஷியானான். 'ஆஹா... வேலை சுலபமாக முடிந்து விடும் போல் இருக்கிறதே!' என்று உற்சாகம் அடைந்தான்.
மீண்டும் ஒரு முறை படுக்கை அறையை நோட்டம் இட்டான். எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
'பணத்தை அள்ளிச் செல்வது ரொம்பவே சுலபம்!' என்ற எண்ணத்துடன், பீரோவின் கைப்பிடியை மெள்ள திருகினான். அவ்வளவுதான்!
உயரே இருந்த கனமான மண் மூட்டை ஒன்று 'பொத்'தென்று அவன் தலையில் விழுந்தது. வலியில் அலறினான் திருடன். இதையடுத்து, வீட்டில் இருந்தவர்கள் விழித்துக் கொண்டனர். எல்லா விளக்குகளும் எரிந்தன. அபாயச் சங்கும் ஒலித்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் ஓடி வந்தனர். விளைவு... காவல்கள் வந்து, திருடனைப் பிடித்துச் சென்று சிறையில் தள்ளினர். அங்கே... அந்தத் திருடன் அலுத்துக் கொண்டான்:
''ச்சே... இப்படியெல்லாம் செஞ்சாங்கன்னா, நான் எப்படி இந்த மனிதர்களை நம்ப முடியும்?''
நண்பர்களே, சிந்தித்துப் பாருங்கள்!
திருடன், மற்றவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையா முக்கியம்? இவன்மீது மற்றவர்கள் வைக்கிற நம்பிக்கைதானே முக்கியம்!
பக்தன் ஒருவன், கோயிலில் தரிசனம் முடிந்து கர்வத்துடன் திரும்பிக் கொண்டிருந்தான்.
எதிரே வந்த பெரியவர் ஒருவர், ''இந்த அளவுக்கு தலை நிமிர்ந்து வருகிறாயே... என்ன காரணம் என்று கேட்டார். அவன், ''நான் கடவுளை நம்புகிறேன்!'' என்றான்.
உடனே, ''அது முக்கியம் இல்லையே!'' என்றார் பெரியவர்.
''எனில்... வேறு எதுதான் முக்கியம்?'' என்று கேட்டான் பக்தன்.
அந்தப் பெரியவர் அமைதியாக பதில் சொன்னார்: ''கடவுள், உன்னை நம்புகிறாரா என்பதே முக்கியம்!''

Thursday 11 June 2015

சிதம்பர ரகசியம்

சிதம்பர ரகசியம் என்றால் என்ன..??
வியப்பூட்டும் தகவல்கள்..!!
சிதம்பர நடராஜர் கோயிலும், அதன் புவியியல், கட்டிட அமைப்பு அதனால் புதையுண்டு இருக்கும் அதிசயங்கள் போன்றவற்றை தான் சிதம்பர ரகசியம் என்று கூறிவருகின்றனர். ஆனால், இவற்றை எல்லாம் தாண்டி அக்கோயிலில் ஏதோ சிறப்பு வாய்ந்த சக்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மனிதனும், தமிழும் பிறந்த குமரிக் கண்டம்..!!
மறக்கடிக்கப்பட்ட உண்மைகள்..!!
சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பெயரில் பலரும் பலவிதமான செய்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்கள் தான் அந்த ரகசியங்கள் என்றும் சிலர் அறிவியால் பூர்வமாக கூறுகின்றனர்.
சிவபெருமானிடம் இருந்து ஒவ்வொருவரும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள். நமது முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயல்களும் ஏதோ ஒன்றை நமக்கு தெளிவாக கூறுவதாய் தான் உள்ளது. அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள அந்த வியப்பூட்டும் சில அற்புதமான ரகசியங்கள் பற்றி இனிக் காணலாம்..!!
பூமத்திய ரேகையின் மையம்:
இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. (Centre Point of World's Magnetic Equator).
ஒரே நேர் கோடு:
பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது. இன்று கூகுள் மேப் (Google Map) உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும். இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல், புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
மனித உடலின் அடிப்படை:
மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
சுவாசத்தைக் குறிக்கிறது:
விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).
நாடிகள்:
இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது. இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
திருமூலர் மந்திரம்:
திருமூலரின் திருமந்திரத்தில் இதைப் பற்றிய தகவல்கள்... மானுடராக்கை வடிவு சிவலிங்கம் மானுடராக்கை வடிவு சிதம்பரம் மானுடராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக்கூத்தே என்று கூறுகிறார்,
அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.
ஆச்சரியங்கள்:
"பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது. இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்து. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன. இது 4 வேதங்களை குறிக்கின்றது,
28 தூண்கள்:
பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன. இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன. இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (Beam), இது 64 ஆயக்கலைகளைக் குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள் (Cross Beams), மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களைக் குறிக்கின்றது.
பொற் கூரை:
பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது. அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும், அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
ஆனந்த தாண்டவம்:
சிதம்பர நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவ நிலையினை, வெளிநாட்டு அறிஞர்கள் "Cosmic Dance" என்று அழைக்கின்றனர்.
தீர்த்தங்கள்:
கோயிலில் சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல் ஆகிய தீர்த்தங்கள் அமைந்துள்ளன.
கோபுரங்கள்:
இக்கோவிலில் நான்கு ராஜகோபுரங்கள் உள்ளன. இவை ஏழு நிலைகளைக் கொண்டவையாகும். கோபுரத்தின் அடிப்பகுதி 90 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டதாகவும், 135 அடி உயரம் உடையதாகவும் அமைந்துள்ளது. இக்கோபுரத்தின் வாசல் 40 அடி உயரம் உடையவையாகும். இக்கோவிலின் கிழக்கு கோபுரத்தில் 108 சிவதாண்டவங்களுக்குகாணச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
எங்கும் "சிவமயம்"..!!
எல்லாம் "சிவமயம்"..!!

மூளை

1. மூளையில் 100,000,000,000 (100 பில்லியன்) நியூரான் செல்கள் உள்ளன. நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்கள் உடலின் உணரும் செய்தியை மூளைக்கு கெமிக்கல் சிக்னல் மூலம் கொண்டுசெல்லும். மது (அல்கஹால்) நியூரானின் இணைப்பைத்தான் வலுவிழக்க செய்யும்.
2. நாம் சுவாசம் மூலம் பெறும் ஆச்சிஜனில் 20 சதவிதம் மூளை மட்டுமே பயன்படுத்தும். மீதி தான் மாற்ற உறுப்புகள் பயன்படுத்தும். அதாவது நமது உடலில் 2 சதவீதமே உள்ள மூளை 20 சதவீதம் ஆக்சிஜனை பயன்படுத்துகிறது. 5 முதல் 10 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லையெனில் மூளை செல்கள் இறக்க துவங்கிவிடும்.

3. நாம் 11 வயதை அடையும் போதுதான் நம் மூளை முழுவளர்ச்சி அடைகிறது. இருந்த போதிலும் நாம் இருபது வயதை அடையும் போதுதான் முழுமையாக சிந்திக்க உதவுகிறது. நாம் 35 வயதை தாண்டும் போது ஒரு நாளைக்கு நம் மூளையில் உள்ள 7000 மூளை செல்கள் அழிந்துவிடுகின்றன மீண்டும் அந்த செல்கள் உருவாவதில்லை.
4. நம்மை நாமே கிச்சு மூச்சு மூட்ட முடியாது. நம் மூளையின் ஒரு பகுதியான செரிபெல்லம் மூளையின் மாற்ற பகுதிக்கு எச்சரிக்கை செய்யும் நாமே நம்மை கிச்சு மூச்சு ஊட்டுவதாக. அதனால் மூளையின் மாற்ற பகுதிகள் கிச்சு மூச்சு மூட்டுவதை கண்டுகொள்ளாது.
5. மூளை 80 சதவீதம் நீரால் (water) ஆனது.
6. மூளை பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் அதிக சுறுசுறுப்பாகவும், சிந்தனை செய்யும் திறன் அதிகமாகவும் இருக்கும்.
7. அதிக stress மூளையின் நியாபக திறனையும் கற்றுகொள்ளும் திறனையும் குறைத்து விடும்
8. நம் உடலில் உள்ள மொத்த இரத்தத்தில் 20 சதவீதம் மூளைக்கு மட்டுமே தேவையானதாகும்.
9. மூளைக்கு மூளையின் வலியை உணரமுடியாது. மூளையின் வலியை உணர மூளைக்கு அந்த இணைப்பே கிடையாது. எனவே தான் மூளை அறுவை சிகிட்சை செய்யும் போது நோயாளி முழித்து கொண்டே இருப்பார்கள்.
10. மூளை மிகவும் மெதுவானதாகும் (soft). பட்டர் வெட்டும் கத்தியை கொண்டே மூளையை வெட்டலாம்.
11. மூளையில் இருந்து வரும் செய்திகள் நியூரான்களுக்கு இடையே செல்லும் வேகம் ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு.
12. ஒவ்வெரு முறையும் நாம் நியாபக படுத்த நினைக்கும் செய்திகள் அல்லது சிந்தனை செய்யும் நிகழ்வுகளை 2 அல்லது அதற்க்கு மேற்பட்ட மூளை செல்கள் ஒன்றிணைந்து சேமித்து கொள்ளும்
13. நாம் விழித்துகொண்டிக்கும் பொழுது நமது மூளை உருவாகும் மின்சாரத்தின் அளவு 25 வாட்ஸ், இதன் மூலம் ஒரு பல்ப்பை எரியவைக்கமுடியும்.
14. ரோலர் கோஸ்டர்ஸில் விளையாடும் போது மூளையில் இரத்தம் கட்டிக்கொள்ள (Blood clot) வாய்ப்புகள் அதிகம்.

வியக்க வைக்கும் அறிவியல் பூர்வமான கண்டுப்பிடிப்புகள் - புராணக் கதைகளில்..!!

இந்திய புராணக் கதைகளில் கூறப்பட்டுள்ள வியக்க வைக்கும் அறிவியல் பூர்வமான கண்டுப்பிடிப்புகள்..!!
நமது நாட்டில் இயற்றப்பட்ட பல பண்டையக் காலத்து இலக்கியங்களும், புராணக்கதைகளும் அறிவியல் பின்னல்களோடு எழுதப்பட்டிருக்கின்றன. கணிதத்தின் பயன்பாடுகளை வார்த்தைகளில் கூறி வியக்க வைத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள்..!!
நமது இந்தியப் புராணக் கதைகள் ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சென்ற இரு நூற்றாண்டுகளில் கண்டறியப்பட்ட பல அறிவியல் கண்டுப்பிடிப்புகள் பற்றிய கூற்றுகளை கூறியிருக்கின்றன. பூமியின் பிறப்பிலிருந்து, ஒளியின் வேகம், கணிதம், கிரகணம், பூமியின் நிலை, தன்மை, என்று பல்வேறுப்பட்ட அறிவியல் கூற்றுகளை அசாதாரணமாக கூறி சென்றிருக்கின்றனர் நமது முன்னோர்கள்..!!
இனி அவர்கள் பண்டையக் காலத்திலேயேக் கண்டறிந்த அறிவியல் கண்டுப்பிடிப்புகள் பற்றி இங்கு காணலாம் :-
சூரியக் குடும்பம்:
நமது ரிக் வேதத்திலேயே, "சூரியன் தன்னை தானே சுற்றி வருவதாகவும், இது பூமி மற்றும் மற்ற கோள்களை தன் ஈர்ப்பு விசையின் மூலம் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாகவும். அந்த கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வதில்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது..!!
புவி ஈர்ப்பு விசை:
ரிக் வேதத்தில் ஓர் குறிப்பில், பூமி தன்னை தானே சுற்றியப்படி சூரியனை சுற்றி வருவதாகவும், பூமியில் உள்ள உயிர்களும் அதனுடன் சேர்ந்து பயணிக்கின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது..!!
ஒளியின் வேகம்:
வேத ரிஷிகளில் ஒருவரான சயனா ரிஷி 14 ஆம் நூற்றாண்டிலேயே ஒளியின் வேகத்தைப் பற்றிக் கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பது என்னவென்றில், " 2,202 யோஜனாவை அரை நிமிஷாவில் பயணிக்கும் சூரியனை நான் வணங்குகிறேன்" என்பது போல கூறியிருக்கிறார். ஒரு யோஜனா என்பது ஏறத்தாழ 9 மைல்கள் ஆகும். நிமிஷா என்பது 16/75 வினாடி ஆகும். ஆதலால், 2,202 (யோஜனா) x 9 (மைல்) x 75/8 (நிமிஷா) = 185,794 (வினாடிக்கு, மைல் தூரம்) அறிவியலில் இப்போது ஒளியின் வேகமென வினாடிக்கு 186,282.397 மைல் தூரம் என்று கூறப்படுகிறது. ஏறத்தாழ சயனா ரிஷி கூறியிருப்பது ஒத்துப்போகிறது..!!
கிரகணம்:
ரிக் வேதத்தில் மற்றுமொரு இடத்தில், "கதிரவனே, நீ பரிசளித்த ஒளிக்கு நீயே திரையாகி மறைக்கும் பொழுதில் புவி இருள் சூழ்ந்து திகைக்கிறதே" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, சூரிய ஒளியின் மூலம் ஒளிப் பெற்று இயங்கும் நிலவை கிரகணத்தின் பொழுது சூரியனே மறைக்கும் தருணத்தில் பூமி ஒளியின்றி காணப்படுகிறது என்று கூறப்பட்டிருக்கிறது..!!
சூரியன், பூமிக்கு இடையேயான தூரம்:
துளசிதாஸ் அவர்கள் இயற்றிய அனுமன் சாலிஸாவில், "ஆயிரம் யோஜனாக்கள் தாண்டி இருக்கும் சூரியனை பழம் என நினைத்து அனுமன் உண்டான்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது, 1 யுகம் = 12,000 வருடங்கள், 1 சாஸ்ர யுகம் என்பது = 1,20,00,000 வருடங்கள், மற்றும் 1 யோஜனா என்பது ஏறத்தாழ 8 முதல் 9 மைல்கள். "Yug sahsra yojana par bhanu, leelyo taahi madhura phal jaanu" என்று சமஸ்கிரத மொழியில் எழுதப்பட்டுள்ளது. அந்த வகையில் கணக்கிட்டுப் பார்க்கும் போது, 153,6000,000 கி.மீ தூரம் என்று கூறப்பட்டிருக்கிறது. இன்றைய அறிவியலில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான தூரம் என்று, 152,000,000 கி.மீ என்று கூறப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஏறத்தாழ சரியாகக் கணக்கிட்டுள்ளனர்..!!
பூமியின் சுற்றளவு:
பிரம்மகுப்தா, 7ஆம் நூற்றாண்டிலேயே பூமியின் சுற்றளவு 36,000 கி.மீ என்று கூறியிருக்கிறார். ஆனால், இன்றைய அறிவியல் 40,075 கி.மீ அன்று கூறுகிறது. 1% தவறு இருந்தாலும் ஏறத்தாழ எந்த கருவியும் இன்றி பிரம்மகுப்தா அவர்கள் கூறியிருக்கிறார்..!!
வருடத்தின் அளவு:
சூரிய சித்தார்ந்தா, ஓர் வருடத்தின் அளவை நான்கு வகையில் அளந்து கணக்கிட முடியும் என்று கூறுகிறார். அதை, நட்சத்திரா, சவனா, லூனார் மற்றும் சவுரா என்றும் குறிப்பிடுகிறார். இதில், சவுரா எனும் முறையில் சரியாக 365 நாள், 6 மணி நேரம், 12 நிமிடங்கள், 30 வினாடிகள் என்றுக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்கான சான்று "குனார்க்" கோவிலில் இருக்கிறது. சந்தேகம் உள்ளவர்கள் சென்று பார்க்கலாம்..!!
"பை" (Pi) மதிப்பு:
ஆர்யபட்டா கி.மு 499 ஆண்டே "பை" மதிப்பு 3.1416 என்று தனது 23 வது வயதில் கண்டுப்பிடித்துள்ளார். ஆனால், இதை கடந்த 1761 ஆம் ஆண்டு தான் தற்போதைய அறிஞர்கள் கண்டுப்பிடித்தனர். இது மட்டுமின்றி முக்கோணவியலின் கருத்தையும் இவர் கண்டுப்பிடித்துள்ளார்..!!
வடிகால் அமைப்பு:
உலகிலேயே முதல் முறையாக இந்து சமவெளி நாகரீகத்தில் தான் வடிகால் அமைப்பு அமைக்கப்பட்டது. கி.மு 3300 - 1300 காலக்கட்டத்திலேயே இதை பயன்படுத்தியுள்ளனர்..!!
அறுவை சிகிச்சை:
9000 ஆண்டுகளுக்கு முன்னரே, இந்திய சூத்திரங்களில் ஆயிரக்கணகான வியாதிகளுக்கு, 700 வகையான மூலிகைகளின் மூலம் மருத்துவ குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. இதில், பல இடங்களில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்வதற்கான வழிமுறைகளும் கூறப்பட்டிருக்கின்றன..!!

சொல்ல நினைக்கிறது இயற்கை !

ஏதோ ஒன்றைச் சொல்ல நினைக்கிறது இயற்கை !
*******************************************************************************
26- டிசம்பர் 1932.... சீனாவில் நிலநடுக்கம். (இறப்பு 70,000)
26- டிசம்பர் 1939.... டர்க்கியில் நிலநடுக்கம். (இறப்பு 41,000)
26- ஜனவரி 1951.... போர்ச்சுகல் நிலநடுக்கம். (இறப்பு 30,000)
26- ஜூலை 1963.... யுகாஸ்லாவியா நிலநடுக்கம்.
26 - ஜூலை 1976.... சீனாவில் நிலநடுக்கம்.
26- ஜனவரி 2001... குஜராத்தில் நிலநடுக்கம்.
26- டிசம்பர் 2003..... ஈரான் நிலநடுக்கம். (இறப்பு 60,000)
26- டிசம்பர் 2004.... சுனாமியின் கொடூர தாண்டவம்.
26- நவம்பர் 2008.... மும்பைத் தாக்குதல்.
26- பிப்ரவரி 2010.... ஜப்பானில் நிலநடுக்கம்.
26- ஜூலை 2010.... தைவான் நிலநடுக்கம்.
26- ஏப்ரல் 2015..... நேபாளத்தில் நிலநடுக்கம்.

ஏதோ ஒன்றை இயற்கை சொல்லவருகிறது....
எதையுமே கண்டுகொள்ளாமல் நாம்தான் இயற்கையை இன்னும் இன்னும் சீண்டிக்கொண்டே இருக்கிறோம்.

தாம்பூலம் பிரச்சனம்

பிரச்சனம் ஜோதிடம்
தாம்பூலம் பிரச்சனம்
பிரச்சனம் என்றால் என்ன?
கேள்வி கேட்டு பதில் சொல்வது பிரச்சனம். உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க பிரசன்னம் மூலம் தீர்வு காணலாம்.
ஜாதகம் இல்லாதவர்கள் தங்கள் பிரச்சனைகளை வரும் நேரத்தின் அடிப்படையில் லக்கினம் கணித்து கிரக நிலைகளைக் குறித்து பலன் கூறுவார்கள்.
சிலர் சோழிகளை பயன்படுத்தி பிரசன்னம் கூறுவார்கள்.
சிலர் 108க்குள் ஒரு எண்ணைக் கூறி அதன் அடிப்படையில் பிரசன்னம் கூறுவார்கள்.
சில சோதிடர் வரும் நேரத்தில் உள்ள பஞ்சபட்சி அடிப்படையில் பலன் கூறுவார்கள்.
சில ஜோதிடர்கள் சந்திரக்கலை,சூரியகலை என நாடியின் அடிப்படையில் பலன் கூறுவார்கள்.
இவைகள் எல்லாம் கூறுவதற்கு மிகமிக ஜோதிட அறிவு வேண்டும். ஆனால் எளிமையாக மக்கள் புரியும்படி பலன் கூறுவது தாம்பூல பிரசன்னம். இது கேரளாவில் பிரபலமானது. அடிக்கடி பயன்படுத்தி பலன் கூறுவார்கள்.
தாம்பூல பிரசன்னம்:
அமர கோசம் நூலின் கருத்துப்படி தாம்பூலம் என்று அழைக்கப்படும் வெற்றிலை கொடி நாகலோகத்தில் உண்டானது அதற்கு நாகவல்லி என்று பெயர்.அது மகா லட்சுமி அம்சமாகும்.
தாம்பூலத்தின் பின்பக்க இடதுபுறமும், தாம்பூல மத்திய பாகமும் இவை இரண்டும் சிவபெருமனைக் குறிக்கும்.
வெளிப்பக்கம்(உள்) வெற்றிலையின் மத்திய பாகம் சந்திரனைக் குறிக்கும்.
ஜோதிட வல்லுநர்கள் 6 அங்குல நீளம் 2 அங்குல உள்ள வெற்றிலையின் அடிப்படையில் பிரச்சனைக்கு உரிய பதிலைக் கூறுகிறார்கள்.
தாம்பூல பிரசன்னம் பார்க்கும் விதம்:
முதலில் பிரசன்னம் பார்க்க வருபவரிடம் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், கற்பூரம் ஊதுபத்தி வாங்கிவரும்படி கூறவும்.
குறிப்பு : வெற்றிலை வாங்கிவரும்பொழுது 12 வெற்றிலைக்கு மேல் வேண்டும். எனவே ஜோதிடர் வெற்றிலையின் விலையை அறிந்து வாங்கி வரும்படி கூறவும்.
1) இவைளை வாங்கி வந்தவுடனே பிரசன்னம் பார்க்க வந்தவரிடம் அவருடைய குலதெய்வம், வண்ங்கும் தெய்வத்தை வணங்கிக் கொள்ளும்படி கூறவும்.
2) பிறகு ஜாதகர் கொண்டுவந்த வந்த வெற்றிலையின் எண்ணிக்கையை முதலில் இரண்டால் பெருக்க வேண்டும்.
3) பெருக்கி வந்த தொகையை 5ஆல் பெருக்க வேண்டும்.
4) பெருக்கி வந்த தொகையுடன் 1யை கூட்டிக் கொள்ள வேண்டும்.
5) வரும் மொத்த தொகையை 7ஆல் வக்க வேண்டும். வரும் மீதி……….
1 எனில் சூரியன்
2 எனில் சந்திரன்
3 எனில் செவ்வாய்
4 எனில் புதன்
5 எனில் குரு
6 எனில் சுக்கிரன்
7 எனில் சனி எனக்கொள்ள வேண்டும்.
இது என்ன சித்திர குப்தர் கணக்கு என யோசிக்கிறீர்களா?
(வெற்றிலையின் எண்ணிக்கை) எண்ணை 2ஆல் பெருக்க வேண்டும். பின்பு அத்தொகையுடன் 1யை கூட்ட வேண்டும்.இதுஏன்? என வாசகர்கள் மனதில் ஐயம் ஏற்படும். அதற்கான பதில் இதோ.
ஒரு குழந்தை பிறக்க, தாய், தந்தை ஆகிய இருவர் இணைய வேண்டும். எனவே தான் பிரசன்னம் பார்ப்பவர் கொண்டுவரும் வெற்றிலையின் எண்ணிக்கையை 2ஆல் பெருக்கிறோம்.
பின்பு இந்த உடல் 5 பூதங்களால் ஆனது என்பதைக் குறிக்க 5ஆல் பெருக்குகிறோம்.
பின்பு இந்த உடல் ஆண், பெண் இணைந்து பஞ்ச பூதங்களால் ஆன பின்பு மனிதனாக பிறக்கிறது என்பதைக் குறிக்க 1யைகூட்டுகிறோம்.
பிறகு, அந்த மொத்த எண்ணிக்கையை ஏழு கிரகங்களைக் குறிக்கும் எண்ணாகிய 7ஆல் வகுக்கிறோம். வரும் மீதியானது பிறந்த குழந்தையின் ஆத்மா கிரகமாகும். அது உள்ள இடமே லக்னம் அல்லது தாம்பூல லக்னம் ஆகும். அவ்வாறு மொத்த எண்ணிக்கையை 7ஆல் வகுத்து வரும் மீதி, தாம்பூல கிரகமாகும்.
சூரியன் என்றால் துக்கமும், சந்திரன் எனில் சுகமும், செவ்வாய் எனில் கலகமும், புதன் & குரு எனில் பணமும்;(புதன்-செய்யும் தொழிலின் மூலம் பணமும் குரு-ஞானம், ஆன்மீகப் பணி மூலம் பணம் கிடைப்பதைக் குறிக்கும்).
சுக்கிரன் எனில் எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.
சனி எனில் கண்டங்கள், தடங்கல்கள் ஏற்படும் .மாந்தியுடன் சேர்தால் மரணம் எற்படும்.
அடுத்து இந்த தாம்பூலம் கிரகம் உள்ள இடமே தாம்பூல லக்னம் எனப்படும். அதை எப்படி அறிவது?
பிரசன்னம் பார்க்க வந்தவர், வந்த நேரத்தில் பஞ்சாங்கத்தின் உதவியால் கிரகங்களைஉள்ள நிலையை கட்டத்தில் குறித்துக் கொள்ளலாம். பிரசன்னம் பார்க்க வந்தவர் நேரத்தின் அடிப்படையில் ராசிக்கட்டத்தில் கிரகங்களை குறித்துவிட்டோம். இனி பலன்கள் கூற வேண்டும். அதை எவ்வாறு செய்வது எனக் காண்போம்.
தாம்பூல பிரசன்ன பலன் கூறும் முறை:
1. பிரசன்னம் கேட்க வரும் நேரத்தில் அடிப்படையில் வெற்றிலையை எடுத்து பலன்கள் கூறுவோம்.
2. பிரசன்னம் கேட்க வரும் நாளில் சூரிய உதயம் + சூரிய அஸ்தமனம்= வரும் மொத்த நேரத்தை 2ஆல் வகுத்தால் கிடைப்பது அந்த நாளில் மத்திய பாகம் ஆகும்.
எடுத்துகாட்டு:
` கிருஷணகிரியில் ஆகஸ்ட் 21ம் தேதி காலை 11 மணிக்கு ஒருவர் பிரசன்னம் பார்க்க வருகிறார்.
ஆகஸ்ட் 21 சனி சூரிய உதயம் காலை 6.09 மணி
சூரிய அஸ்தமனம் (அதாவது மாலை 6.31) 18.31 மணி
மொத்தம் 24.40 மணி
மத்திய பகுதி (24.40/2)=12.20 மணி
எனவே, காலை 11 மணிக்கு பிரசன்னம் பார்க்க வருபவரிடம் கொண்டு வந்த வெற்றிலையின் மேல்பகுதியிலிருத்து முதல் 12 வெற்றிலையின் அடிப்படையின் 12 பாவங்கட்கும் பலன்கள் கூற வேண்டும்.
வருபவர் மாலை 3 மணிக்கு வந்தால் அடிப்பகுதியிலிருந்து 1,2,3…………………….12 என ஒவ்வொரு வெற்றிலைகளாக எடுத்து பலன்கள் கூற வேண்டும்.
ஏன் 12 வெற்றிலையை வைத்து மட்டும் பலன் கூறுகிறோம்?
ஜாதகத்தில் 12 பாவங்கள் உள்ளதால் 12 வெற்றிலையின் அடிப்படையில் ஜாதகப்பலன்கள் கூறுகிறோம். அந்த பாவங்கள் 12ம் எதைக் குறிக்கிறது என அறிந்தால் தான் பலன்களை எளிதாக கூற இயலும்
வெற்றிலையை ஆராய்ந்து பலன் கூறும் விதம்:
1. வெற்றிலையின் மொத்த எண்ணிக்கை 24க்கு மேல் எனில்,பூர்வீக இடத்தை விட்டு வந்து இங்கு 2 தலைமுறையாக வாழ்கிறார்கள்.
2. அடிப்பாகம் பெரிய நரம்பு உள்ள பகுதி துவாரம் :கர்ப்பிணி பெண் மரணம்.
3. நடுவில் துவாரம் : துர்மரணம் அடைந்த பிரேத தோஷம் உண்டு.
4. தாம்பூலம் கிழிந்து இருந்தால் : பூர்வ புண்ணியம் தோஷம் உண்டு. இறந்த பிரேத தோஷம் – சர்ப்ப தோஷம்.
5. நுனிப்பகுதி கிழிந்திருந்தல் : தோஷம் அப்பகுதிக்கு
6. பலன் கூறும்பொழுது பாதகாதிபதி தொடர்பு எந்த பாவத்திற்கு வருகிறதோ அது பாதிக்கும்.
சர ராசிகளான பாதக இடம்
மேஷம் கும்பம்
கடகம் ரிஷபம்
துலாம் சிம்மம்
மகரம் விருச்சிகம்
11ம் இடம். பாதகமாகும்
7.ஸ்திர ராசிகட்கு 9 ம் இடம் பாதகமாகும்
ராசி பாதக இடம்
ரிஷபம் மகரம்
சிம்மம் மேஷம்
விருச்சிகம் கடகம்
கும்பம் துலாம்
8.உபய ராசிகட்கு 7ம் பாதக இடம்
ராசி பாதக இடம்
மிதுனம் தனுசு
கன்னி மீனம்
தனுசு மிதுனம்
மீனம் கன்னி
எடுத்துகாட்டு:
7-2-2004ம் தேதி காலையில் ஒருவர் 17 வெற்றிலைகளைக் கொண்டு வந்து தந்தார்.
மொத்த வெற்றிலையின் எண்ணிக்கை : 17
பெற்றோரைக் குறிக்கும் 2ஆல் பெருக்க : 17*2=34
பஞ்சபூதத்தைக் குறிக்கும் 5ஆல் பெருக்க :34*5=170
ஆன்மா 1யைக் கூட்ட : 170+1=171
7 கிரகங்களுக்கு பங்கிட :171/7=24 ஈவு, மீதி 3
மீதி 3க்கு உரிய கிரகம் :செவ்வாய்
அது உள்ள ராசி மேஷம்.எனவே பிரசன்ன தாம்பூல ஆருட லக்கினம் செவ்வாய் உள்ள வீடு மேஷம் ஆகும்.
அன்றைய கிரக நிலைகள்:
பிரசன்னம் கேட்பவர் காலையில் வந்ததால் மேல் உள்ளா வெற்றிலையை எடுக்க
முதல் பாவம் :உடல், வாக்கு, உருவம், சுபாவம், சுகதுக்கங்களைக் குறிக்கும்.
முதல் வெற்றிலை நிலை : சிறியது – அடியில் கறுப்பு – ஓட்டை.
எனவே, ஜாதகர் உடல் நிலை பாதிக்கலாம். ஜாதகப்படி லக்னத்த்பில் அதிபதி செவ்வாய் ராகுவுடன். எனவே பாதிப்பு இல்லை. ஏன்? குரு பார்வையால் அது போகும்.
2ம் பாவம் : தனம், குடும்பம், வாக்கு, வித்தை அதில் ஓட்டை, அழுக்கு,எனவே தோஷம் உண்டு.
2ம் வீட்டு அதிபதி 12ல் உள்ளார். அவரை 11ம் அதிபதி பாதகாதிபதி சனி பார்க்கிறார்.மேலும் சனி வீட்டில் –மாந்தி 11ல்.எனவே,பிரேத தோஷம் உண்டு. மனைவியால் சுகம் இல்லை. கல்விக்கு விரயம். இடமாற்றம்.
3ம் பாவம் : சகோதரம், வீரம், பாக்கியம், சிறிய பயணம்
வெற்றிலையில் ஓட்டை. நல்ல பலன் இல்லை. எப்படி? மேஷத்திற்கு 11ம் அதிபதி சனி 3ல் உள்ளார். எனவே சகோதரர்களால் நன்மை இல்லை.
4ம் பாவம்: மாதா, சுகம், வாகனம், மன நிம்மதி.
4வது வெற்றிலையில் ஓட்டை நல்ல பலன் இல்லை. ஏன்?
4ம் வீட்டை செவ்வாய் பார்க்கின்றார்.3,6க்குடைய புதன் 4ம் வீட்டை பார்க்கின்றார்.5ம் வீட்டின் அதிபதி சூரியன் 4ம் விட்டை பார்க்கின்றார்.4ம் அதிபதி சந்திரனை பாதகாதிபதி சனி பார்க்கின்றார்.
மாந்திக்கு 2,7,12 பார்வை உண்டு.
எனவே,மாதாவால் கடன் உண்டு. அலைச்சல் உண்டு.
5ம் பாவம்: புத்தி – அறிவு – விவேகம் – பூர்வ புண்ணியம் – குழந்தை – பங்கு மார்க்கெட் – காதல்
வெற்றிலையில் நுனி இல்லை – அப்பளம் போல் உள்ளது.
எனவே 5ம் அதிபதி 10ல் பகை வேட்டில் 3ம்ற்றும் 6க்கு உடைய புதன் உடன்.எனவே புதல்வர்களால் பலன் இல்லை.ஆனால் 9,12க்குரிய குரு இருப்பதால் விரய செலவு உண்டு.
6ம் பாவம்: ரோகம் – கடன் – சத்ரு
வெற்றிலை நன்றாக உள்ளது.
6ம் அதிபதி சனி வீட்டில் சூரியனுடன் தொழில் செய்ய கடன்பட்டிருப்பார்.
நண்பர்களுக்காக கடன்பட்டிருப்பார்.
தாய்மாமனுக்கு கடன்பட்டிருப்பார்.
7ம் பாவம் : மனைவி
7ல் கேது வெற்றிலையில் கரும்புள்ளி. மனைவியால் சுகம் இல்லை.மனச்சங்கடம்.
8ல் பாவம்: ஆயுள் – நஷ்டம் – விபத்தைக் குறிக்கும்.
வெற்றிலையில் கரும்புள்ளி .எனவே நோய்ப்படுவான்.விபத்து உண்டு – சாக மாட்டான்.ஏன்? 8ன் அதிபதி செவ்வாய் ஆட்சி 9ம் அதிபதி – பூர்வபுண்ணிய அதிபதி – குரு பார்வை உள்ளது.
9ம் பாவம்: பாக்கியம் – தருமம் – புண்ணிய காரியங்கள் – தந்தை நிலை.
வெற்றிலை நிலை : மத்தியில் ஓட்டை
கிரக நிலைகள் :சனி,குரு பார்வை. குரு பார்வை நன்று.ஆனால் பாதகாதிபதி சனி நல்லதை செய்யமாட்டார்.எனவே தந்தையால் உதவி இல்லை.மேலும் பாதகாதிபதி வீட்டில் மாந்தி.பிரேத தோஷம் உண்டு.
10ம் பாவம் : தொழிலைக் குறிப்பது.
வெற்றிலை நிலை : அடியில் ஓட்டை – 3ஓட்டைகள் – கிழிசல்.
கிரக நிலைகள் : பாதகாதிபதி சனி. அவரது வீட்டில் 6,3 வீட்டு அதிபதி புதன்.5ம் வீட்டு சூரியன் சனிக்கு பகை.அவர் 10ல். எனவே,கடன்ப்ட்டு வணிகம் செய்து இழப்பு.
கிழிதல் : பணத்திற்கு சண்டை ஏற்படும்.சனி வீட்டில் மாந்தி.பிதுர்வகை பிரேத
தோஷம் உண்டு.ஏன்? குளிகன் அல்லது மாந்திக்கு 12ம் பார்வை 10ல் படுகிறது. எனவே பாட்டன்களுக்கு கர்மம் செய்யவில்லை. அதனால் தோஷம்.
11ம் பாவம் : குறிப்பது லாபம் – மூத்த சகோதரர் – ஆசைகள் நிறைவேறல்.
வெற்றிலை நிலை : வளைந்து உள்ளது. ஓட்டை உண்டு.
பலன் : கெட்டது. லாபம் இல்லை. ஆசைகள் நிறைவேறாது.
கிரக நிலை : 11ல் மாந்தி. 11க்கு உரியவர் 3ல் உள்ளார்.
11ல் மாந்தி : பிரேத தோஷம். யாருடைய பிரேதம்? சகோதரர். உடையது. ஏன்? 3ல் 11க்கு உடையவர் உள்ளார். 3ல் மறைகிறார். எனவே ஒரு சகோதரர் பிரேதம் தோஷம் உண்டு.
12ம் பாவம் : குறிப்பன மோட்சம். இடது கண், குடும்ப செலவு, மருத்துவ செலவு.
வெற்றிலை நிலை : ஓட்டை, கிழிதல்
பலன் : அளவுக்கு மேல் குடும்ப செலவு – மருத்துவ செலவு.
கிரக நிலை : 12ல் 2க்குரிய சுக்கிரன். 3ல் உள்ள சனி பார்வை. எனவே மனைவிக்கு மருத்துவ செலவு. சகோதரர்களுக்கு செலவு. தொழில் செய்ய செலவு ஏற்படும்.
குறிப்பு : வெற்றிலையை வாங்கி வரும் நேரத்திற்கு ஏற்ப பலனை உடனே அறியலாம்.
எடுத்துகாட்டு : குரு ஓரை, சனி அந்தரம். குரு மகனை குறிப்பவர். சூரியன் தந்தை. எனவே சனி அந்தரம் – மகன்களால் தொல்லை ஏற்படும்.
(எ.கா) சுக்கிரன் ஓரை – சூரிய அந்தரம்.
மனைவியால் அவமானப்படல்
என்ன வாசகர்களே ! வெற்றிலை பிரசன்னம் எளிது தானே !
இதில் மாந்தியை குறிக்க வேண்டும்.
மற்ற கிரகங்களையும், சந்திரனையும் பஞ்சாங்கத்தைப் பார்த்துக் குறிக்கலாம்.
மாந்தி உதயமாகும் நேரம் பஞ்சாங்கத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
அன்றைய சூரிய உதயம் மணி முதல் கீழ் கானும் நேரங்களைக் கூட்டிக்கொள்ள வேண்டும்
திங்கள் 22 நாழிகை அல்லது 8 மணி 48 நிமிடங்கள்
செவ்வாய் 18 நாழிகை அல்லது 7 மணி 12 நிமிடங்கள்
புதன் 14 நாழிகை அல்லது 5 மணி 36 நிமிடங்கள்
வியாழன் 10 நாழிகை அல்லது 4 மணி 00 நிமிடங்கள்
வெள்ளி 6 நாழிகை அல்லது 2 மணி 24 நிமிடங்கள்
சனி 2 நாழிகை அல்லது 00 மணி48 நிமிடங்கள்
இரவுக்கு அன்றைய பகலின் உதய நாழிகை (மணி) 5வது நாள் இரவுக்கு வரும்.
எடுத்துகாட்டு :
ஞாயிறு பகலில் மாந்தி உதயமாகும் நேரம் 26 நாழிகை (10 மணி 24 நிமிடங்கள்) இரவுக்கு ஞாயிறுவின் 5வது நாள் வியாழனுடைய 10 நாழிகை (4 மணி) வரும்.
எளிய முறை :
சூரிய ஸ்புடம் + மாந்தி உதய நாழிகை * 6 எடுத்துக்காட்டு.
சூரிய ஸ்புடம் = 160.15
சனிக்கிழமை மாந்தி உதயம் = 2 நாழிகை
எனவே மாந்தி உதயம் = 6 * 2 =12 நாழிகை
சூரிய ஸ்புடம் + மாந்தி உதயம் = 160.15+12 =172.15 தான் மாந்தி பகலில் . உள்ள இடம்
இத்துடன் 30 யைக் கூட்டினால் மாந்தி இரவில் உள்ள ராசி ஆகும்.
எனவே, இவ்வாறு தாம்பூல பிரசன்னம் மூலம் பலன்களை அறியவும்.
தாம்பூல பிரசன்னம் மூலம் கீழ்கண்ட செய்திகளை எளிதாக அறியலாம்.
வெளிநாடு போக :
1. 4க்கு உடையவர் சர ராசியில் இருக்க வேண்டும்.
2. 4க்கு உரியவர் ஜல ராசியில் இருக்க வேண்டும்.
3. 10,4க்கு உடையவர் சம்பந்தம் இல்லையா? ஊரை விட்டு போவார்.
இதே போல் நவாம்சம் பார்க்க வேண்டும்.
திருமணம்
7ம் இடம் சுக்கிரன் நிலையைப் பார்.
வீடு கட்ட
4 & 7 க்கு உடையவர் னிலை
வேலை
10க்கு உரியவர் நிலை
காரகர் : குரு, சனி, சூரியன், செவ்வாய் நிலை.
பணம் கிடைக்குமா?
2 & 1ம் இடம்
7ம் இடம் நிவர்த்தி ஸ்தானம்
பரிகார பலன் அறிய : 10ம் இடம்
7ம் இட அதிபதி நன்கு இருந்தால் :வெற்றி
பிரிவினை : 7 & 8 சந்திரன் நிலை
தாம்பூல பிரசன்னம் மூலம் கோவில் செய்திகள் அறிதல்
30.07.2004 வெள்ளி ஆடி 17 அன்று மதுரை அருகே ஒரு கோவிலில் தாம்பூல பிரசன்னம் போடப்பட்டது. அன்று கிரக நிலைகள் அருகே உள்ளவாறு இருந்தன.
கொண்டு வந்த தாம்பூலத்தின் எண்ணிக்கை 10
எனவே 10 * 2 = 20
பஞ்சபூதங்கள் 5ஆல் பெருக்க = 20 * 5 =100
ஆன்மா 1யை கூட்ட = 100 + 1 = 101
அதை நவக்கிரகங்கள் 7ல் வகுக்க = 101/7 =14 3/7 =மீதி 3.
எனவே,
தாம்பூல கிரகம் 3ம் எண்ணுக்குரியவர் செவ்வாய். செவ்வாய் உள்ள ராசி கடகம். எனவே கடகம் தாம்பூல லக்னம் ஆகும்.
கோவில் பிரசன்னத்தின் பலன்கள் :
கோவில் பிரசன்னத்தின் முதல் பாவம் குறிப்பது :
கோவில் பூர்வீகம் – சிலை - வடிவம்
வெற்றிலை தந்த நேரம் :
காலை 11.26 மணி. எனவே, மேல் இருந்து வெற்றிலையை எடுத்தார்.
வெற்றிலை நிலை :
சில ஓட்டைகள் காணப்பட்டன.
கிரக நிலைப்படி பலன்கள் :
ஆருட லக்னத்தில் சூரிய பகவான் சிவனை குறிப்பவர். ஆனால் சூரியனுடன் செவ்வாய் நீசம். கடக ராசி, நீர் ராசி, செவ்வாய் 5 மற்றும் 10ம் உரியவர். சூரியன் மேஷத்தில் உச்சமாவார்.
எனவே இங்கு பூர்வீகத்தில் ஓர் அம்மன் கோவில் இருந்தது எனக் கூறியவுடனே மக்கள், “ஆம், இருந்தது” எனக் கூறினார்கள்.
அது தென்கிழக்கு எல்லையில் இருந்தது. ஆற்று பக்கம், கிணறு, குளம் இருந்து மூடப்பட்டது.
லக்னத்தில் செவ்வாய். எனவே ஆரம்பத்திலிருத்து இந்த கோவிலுக்காக சண்டை, தகராறு, கோஷ்டி பூசல் இருந்த்து. செவ்வாய் 5ம் வீட்டிற்கு அதிபதி. அவர் நீசம். எனவே ஆதியில் இருந்த மூலஸ்தானம் மாற்றப்பட்டதா?
மக்களின் பதில் :
முதலில் சிவன் கோவில் இருந்தது. இறைவன் பெயர்
திருமேனிநாதன். பின்பு அம்மன் கோவில் ஆனது. அது 100 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது.
லக்னத்தில் 2ம் அதிபதி சூரியன் உள்ளது. ஜல ராசி. எனவே கீழே விழுந்து தேவதை தலையில் அடிப்பட்டது.
சூரியன் 10ல் மேஷ ராசியில் உச்சம். எனவே, ஒரு காலத்தில் சிறப்பாக கோவில் திருவிழாக்கள் நடத்தப்பட்டன.
எனவே, 5,10க்குரிய செவ்வாய் நீசம். உடன் சூரியன், சூரியன் மேஷத்தில் உச்சம். எனவே ஆரம்பத்தில் சிவன் கோவில் – பின்பு செவ்வாய் நீசமானதால் அம்மன் கோவில் – மேஷத்தில் ராகு – அம்மனைக் குறிக்கும்.
2ம் வீடு : கோவில் நிர்வாகம் – வரவு – உண்டியல் – பூமாலை –அலங்காரங்கள்
வெற்றிலை நிலை : ஓட்டை இருக்கிறது. எனவே வரவு இல்லை.
கிரக நிலைப்படி : 2ல் மாந்தி -2ம் அதிபதி சூரியன் 12ல் எனவே வருமானம் இல்லை. சூரியன் அரசை குறிப்பதால் வருமானத்தை அரசு அதிகாரிகள் எடுத்துச் செல்கிறார்கள்.
3ம் வீடு குறிப்பது : நைவேத்தியம் – பாரிகாரகர்கள் –கோவில் நடத்தும் சிப்பந்திகள் மற்றும் சுத்தம் செயிபவர்கள் அதாவது வேலை ஆட்கள்.
வெற்றிலை நிலை : ஓட்டை (அ) துவாரம் உள்ளது. சுவாமிக்கு பிரசாதம், படையல் ஒழுங்காக செய்து படைக்கவில்லை.
கிரக நிலை : 3ம் அதிபதியுடன் மாந்தி உள்ளார்- எனவே நைவேத்திஉயம் இல்லை.3ம் இடம் மடப்பள்ளியில் தயாராகும் நைவேத்தியம் சுத்தம் இல்லை.
4ம் பாவம் : பிரகாரம் – கொடி மரம் – வாகனம் – உப தேவதைகள் மண்டபம் –சாமரம்
வெற்றிலை நிலை : மேல் தூசு படிந்துள்ளது – துவாரம். எனவே உப தேவதைகள் சிறப்பாக இல்லை
கிரக நிலை : 4ல் உள்ள கிரகம் கேது. செவ்வாய் பார்க்கிறார். கேது உள்ளதால் பிரேத தோஷம் உண்டு. பசு, பூனைக்குட்டி இறப்பு உண்டு.
பைரவர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. பைரவர் தெற்கு முகமாக இருக்க வேண்டும். ஆனால் வடக்கு முகமாக உள்ளது.
தண்ணீர் – நீர் கிணறு அசுத்தம் உண்டு – குளத்தில் / கிணற்றில் குழந்தை விழுந்து இறந்த்து.
செவ்வாய் 4யை பார்த்தால் சண்டை, சச்சரவு உண்டு.
5ம் பாவம் :
மூல மந்திரங்கள் – சிலை – தேவதைகளைக் குறிக்கும்.
வெற்றிலை நிலை :
பல விக்கரகங்கள் பின்னப்பட்டுள்ளன – விரிசல்கள் உண்டு. மந்திரங்களை பூசாரி தெரியாமல் கூறுகிறார். பூசாரிகளுக்குள் கலகம். வேலைக்காரர்கள் இடையே கலகம்.
6ம் பாவம் : உண்டியல், கோவில் சொத்தை திருடுபவர் – சிலைகளுக்கு தீங்குவிளைப்போர் – கோவிலில் ஏற்பட்டுள்ள அசுத்தம்
வெற்றிலை நிலை:
அங்கங்கு துவாரங்கள் தேவதைக்குரிய நிலங்கள் அபகரிப்பு. திருட்டு ஏற்பட்டுள்ளது.
கிரக நிலை :
குரு பார்வை உள்ளதால் இன்னும் கோவிலுக்கு சொத்து உண்டு.
7ம் பாவம் :
கோவிலுக்கு வாங்கும் நகைகள் – துணிகள் – திருவிழாக்கள் – மக்கள் காணிக்கைகள்.
வெற்றிலை நிலை :
துவாரங்கள். எனவே, திருவிழாக்கள் இல்லை. மக்கள் காணிக்கைகள் இல்லை – வரவு இல்லை
8ம் பாவம் :
நைவேத்தியம் – வாத்தியம் வாசிப்பவர் – கோவில் மேற்பார்வையாளர் செய்யும் செயல்கள் – கோவிலுக்கு வருபவர் மனப்பான்மை.
வெற்றிலை நிலை :
2 துவாரங்கள் உண்டு. 8ம் இடம் கும்பம். அதிபதி சனி லக்னத்திற்கு 12ல். ராசிக்கு 6ம் அதிபதி புதன் தன் ராசிக்கு 12ல்.
ஒரு சித்தர் உபாசனை செய்த வன துர்க்கா தேவி உள்ளது
9ம் பாவம் :
கோவில் அமைப்பு – கோவிலுள்ள கோபுரங்கள் – கோவில் நிலங்கள் – மரம் – வருமானத்தைக் குறிக்கும் – கோவில் வரலாறு.
கிரக நிலை :
9ம் அதிபதி குரு 2ல் மாந்தியுடன். எனவே ஒரு காலத்தில் இந்த கோவிலில் பிராமணர் பூஜை செய்து இருந்தார்கள். குரு, சூரியன் வீட்டில் இருப்பதால் பின்பு அரசாங்கத்திற்கு இக்கோவில் சொந்தமானது. பிராமணரைக் குறிக்கும். குரு மாந்தியுடன் உள்ளதால் பிராமணரிடையே சண்டை ஏற்பட்டு வடக்கு போனார்கள்.
பின்பு செவ்வாய் லக்னத்தில் உள்ளாதால் படைத்தலைவர்கள், க்ஷத்திரியர்கள் ஆதிக்கத்தில் கோவில் வந்தது. பின்பு நம்பூதிரிகள் வந்து அரசர் அனுமதியுடன் பூஜை செய்தார்கள் ஏன்? லக்னத்தில் குரு உச்ச இடம் ஆவதால்.
10ம் பாவம் :
இது நித்திய பூஜை, உற்சவம், விழாக்களைக் குறிக்கும்.
10ம் வீட்டில் ராகு. 10ம் வீட்டு அதிபதி செவ்வாய் நீசம். எனவே பூஜை செய்ய தெரியாதவர் பூஜை செய்கிறார். திருவிழாக்கள் நடைபெறவில்லை.
வெற்றிலை நிலை : ஒட்டை
11ம் பாவம் :
கோவில் பண வரவு – பூசாரி செய்யும் பூஜை கோளாறு வெற்றிலை இல்லை
11ம் இடம் பாதக இடம் சந்திரன் ஆட்சி. எனவே, ஆரம்பத்தில் பண வரவு இருந்தது.
12ம் பாவம் :
பூஜை செய்பவன் மனநிலை – பண விரயம் – நஷ்டம் – கோவிலுக்கு ஏற்படும் குற்றம் குறைகள்.
12ம் இடம் மிதுனம். அதன் அதிபதி புதன் மாந்தியுடன் உள்ளார்.
12ல் சனி. எனவே, கோவில் சொத்து கோவிலுக்கு வரவில்லை.
தாம்பூல லக்னப்படி பலன்கள்
சூரியன் - அரச உதவி
சந்திரன் - தெய்வம்
செவ்வாய் - வழக்கு, வம்பு
புதன் - காரிய வெற்றி
குரு - தடங்கல், கடவுள் உதவி
சந்திரன் - வெற்றி
சனி - விபத்து
பிரச்சனைகள் தீர்க்க :
1, 5, 9ல் சுபர் ; 4ல் சுக்கிரன் ; 10ல் உள்ள அதிபதி நிலை குரு ஆருட லக்னத்திற்கு வரும்பொழுது பிரச்சனை தீரும்.
வேலை வாய்ப்பு :
10 – தொழில் ; 11 – வழக்கு வெற்றி ; 6 – ஐ.ஏ.எஸ்.அரசு பணி
எப்பொழுது முடியும்
சூரியன் - 30 நாட்கள்
சந்திரன் - 1 வாரம்
செவ்வாய் - 44 நாட்கள்
குரு - 1 மாதம்
சுக்ரன் - 27 நாட்கள்
சனி - 72 நாட்கள்
விதிகள் :
4,10 - சூரியன்
5,9 - குரு
1,4 - சுக்கிரன்
லக்னம் - புதன், சந்திரன்
சனி, செவ்வாய் - சிபாரிசு நிலை
ராகு, கேது - இல்லை
திருமணம் :
7ம் இடம் - விரும்பும் பெண்
4ம் இடம் - வெற்றி
10ம் இடம் - பெண் மணப்பாள்
சுபர் பார்வை - தேர்வு பெறும்
இழந்த பொருள் கிடைக்குமா?
தாம்பூல லக்னம் – அதிபர் உள்ள நிலைப்படி பலன்
வியாதி :
12ம் இடம் - வியாதி
வியாதி - 6
குணமாவாரா? - 10
பரிகாரம் - 5, 9
குழந்தை உண்டா?
யமகண்டன் + குளிகன் = அனுஷம் நட்சத்திரம்
கருக்கலைப்பு
5ம் அதிபதி குருவால் பார்க்கப்பட யமகண்டன் எனில் குழந்தை இல்லை.
யோக ஸ்புடம்
லக்னம் + எமகண்டம்
இது மனித ராசி = குழந்தை
இது ஆண் ராசி = ஆண்
இது பெண் ராசி = பெண்
இது அலி ஆனால் = கரு கலைப்பு (if see அலி)
யோக ஸ்புடம்
12ல் சூரியன்
4ல் சனி
6ல் குரு = குழந்தை
8ல் செவ்வாய்
9ல் கேது
நன்றி: ஜோதிடஅரசு பிப் 2006 இதழின் இனைப்பு:
The End

நத்தைச் சூரி

உலகத்தில் உள்ள எல்லாவகை மூலிகைக்கும் சாபம் உண்டு ஆனால் "நத்தைச் சூரி" என்கிற மூலிகைக்கு மட்டும் சாபம் இல்லை. இதன் மகத்துவத்தை அறிந்த பெரியோர்கள் இக்கற்பத்தை உட்கொள்வார்கள். எட்டு சித்துக்களும் இதற்குள்ளாகும்.
நத்தைச் சூரியைத் தினமும் உண்டுவர உடல் இறுகும். ஞாயிற்றுக்கிழமையில் நத்தைச் சூரிக்கு காப்புகட்டி பிடுங்க வேண்டும். அப்படி பிடுங்கும் போது "ஓம் வச்சிர ரூபி சூரி சூரி மகாவீரி சுவாகா" என்று மந்திரத்தைச் செபித்து முழுச்செடியை பிடுங்கி வந்து உலர்த்தி நன்றாகச் சூரணம் செய்து அதற்கு சம அளவாக சீனி சேர்த்து ஒரு மண்டலம் உண்ண நூற்றி இருபது நாள் ஒரு நாளாகும்(நீண்ட ஆயுள் உண்டாகும்). அதிக வலிமை உண்டாகும். நத்தைச் சூரி இலையை வாயில் மென்று அதக்கிக் கொண்டால் மலையை நொறுக்கும் வலிமை உண்டாகும்.
நத்தைச் சூரி விதையைத் தினமும் சாப்பிட்டு வர நூறூழி காலம் இருக்கலாம்(நெடுங்காலம்). அத்துடன் அனைத்துச் சித்துக்களும் உண்டாகும். இக்கற்பம் இருக்கும் போது வேறு கற்பங்களை தேடாதே இதனால் வியாதிகளும், எதிரிகளும் நம்மை நெருங்கமுடியாது. இவ்வாறான நுணுக்கமான தகவல்களை உலக மக்கள் அறிய மாட்டார்கள். நத்தைச் சூரி மூலிகையை தலையில் வைத்துக்கொள்ள தேவதைகள் வசியமாகும் என்கிறார் கருவூரா

பறந்து போகும் நோய்கள்

பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்
ஆயில் புல்லிங் எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இன்றைக்கு பிரபலமாகிக் கொண்டு வரும் ஆயில்புல்லிங்கை நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து பின்பற்றியுள்ளனர். இது அனைத்து நோய்களுக்கும் பாதுகாப்பான எளிய மருத்துவ முறையாக இருந்துள்ளது. பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து அதன் மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் புத்துணர்வு பெறுகிறது.
ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்வது பற்றி தெலுங்கு நாளிதழான ஆந்திர ஜோதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. மூன்று வருடங்களாக 1041 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 927 நபர்களுக்கு நோய் குணமானது தெரியவந்தது. 758 நபர்களுக்கு கழுத்து மற்றும் உடல்வலி குணமாகியது. அலர்ஜி மற்றும் ஆஸ்துமா நோய்கள் 191 பேருக்கு சரியானது.
தோல்நோய், அரிப்பு,கரும்படை, உள்ளிட்ட நோய்கள் குணமடைந்ததாக தெரிவித்திருந்தனர். மேலும், இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்,நரம்பு தொடர்பான நோய்கள் குணமடைந்ததாக சர்வேயில் தெரிவித்திருந்தனர்.
நிரூபிக்கப்பட்ட உண்மை
நம் உடலில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், இதய நோய், பார்க்கின்சன் நோய்கள் கல்லீரல், நுரையீரல்நோய், புற்று நோய், பக்க வாதம், நரம்பு சம்பந்தமான நோய்கள், வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, மாதவிடாய் தொல்லைகள், மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற எண்ணிலடங்கா நோய்களுக்கும் தொல்லைகளுக்கும் மிக எளிமையான மருத்துவக் கோட்பாடு ஒன்றினை மனித குலத்துக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள். இதனை அப்போதய சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அறிஞர், டாக்டர் மெத்கராஷ் என்பவர் அறிவியல் முறைப்படி ஆய்வு நடத்தி மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்.
வலி நிவாரணி
தலைவலி என்பது கடுமையான தொந்தரவினை தரக்கூடியது. ஒற்றைத்தலைவலியானது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. தினமும் தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களை இந்த நோய்கள் தாக்குவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.
மூட்டு வலி, முழங்கால் வலி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி), போன்ற நோய்களை உடனடியாக குணப்படுத்தியுள்ளது.
எப்படி செய்வது ஆயில் புல்லிங்
காலையில் எழுந்து, வெறும் வயிற்றில், பல் துலக்கிய உடன் தூய்மை செய்யப்பட்ட நல்லெண்ணெயோ, ஆலிவ் எண்ணெயையோ, வேர்க்கடலை அல்லது சூரியகாந்தி எண்ணெயையோ, இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் ஓய்வாக அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறும் கொப்பளிக்க வேண்டும். இப்படியே தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொப்பளியுங்கள். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில நிமிடங்களில் அந்த தன்மை மாறி வாயினுள் எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில் எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய், நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது அதனை உமிழ்ந்து விடுங்கள்.
விடியற்காலையே சிறந்தது
உமிழ்ந்த திரவம் வெள்ளையாக இல்லாது மஞ்சளாக இருந்தால், இன்னும் கொஞ்ச நேரம் கொப்பளிக்க வேண்டும். மீண்டும் எண்ணெய் ஊற்றி கொப்பளித்து விட்டு உமிழ்ந்ததும் வாயைக் கழுவி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இதனால், உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கிருமிகள் எல்லாம் நீங்கள் உமிழ்ந்த நீர்மத்தில் முழுமையாக வெளியேற்றப் படுகின்றன. இந்த எளிய எண்ணெய் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது.
நாளொன்றுக்கு மூன்று முறை
எண்ணெயை கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் இதனை செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. எதாவது நோய்க்காக மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் அந்த மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம். நோயின் தன்மை குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக் கொள்ளலாம்.
ஆயில் புல்லிங் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே வேறு நிறுவனத்தின் எண்ணெய்க்கு மாற்றிவிடலாம். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட வேண்டாம். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது! விரைவில் நிவாரணம் வேண்டுவோர், நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதைச் செய்ய வேண்டுமென்பது விதி.
இந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு, நோயின் தன்மை சற்று அதிகரித்து பின்னர் குறைகிறது. இது, நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் போகிறது என்பதின் அறிகுறி. இந்த எளிய வைத்திய முறையை பின் பற்றுவதோடு, தூய காற்றை சுவாசித்து, நிறைய நீர் பருகி, அளவான சுகாதாரமான உணவுகளை உட்கொண்டு நல்ல முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால், நம் முன்னோர்கள் போன்று நோயற்ற வாழ்வு வாழலாம்.

Friday 5 June 2015

திருநீறு

திருநீறு..!
அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி, காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள்
வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.

அறுகம்புல் திருநீறு நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.
எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக்கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.
இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும் படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும். அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.
தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்ற! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான்.
பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு. தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயன மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.
இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.
சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!
நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து. இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது, விளக்கம் மறைந்தது.
விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்
1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.
2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும்,
வீபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும்
சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.

மனசு சஞ்சலப்படுகிறதா?


ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்.
புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.
அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏரியைக் கடந்து சென்றார்.
ஏரி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப்படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.
இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார்.
அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.
ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார்.
நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது.ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் புத்தரிடம் திரும்பினான். புத்தர் தண்ணீரைப் பார்த்தார்.
சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்..?நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!
நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?
ஆமாம் சுவாமி!
நம் மனமும் அப்படிப்பட்டதுதான்..
மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
அது தனக்குத்தானே சரியாகிவிடும்.
நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப்படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம். அது அமைதியாகிவிடும். அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது
நடக்கும்.

ஆண்மா’ இருப்பது உண்மையா?


“ஆத்மா அழிவதில்லை” என்கிறார்கள்.
நம் எண்ணக் கூட்டங்களும் அனுபவங்களும் ஆத்மாவில் பதிவாகின்றனவா? இவை ஒன்று திரண்டு ஒரு நூல்பந்தைப் போல ஆகி, மனிதன் சாகும்போது மனித உடம்பிலிருந்து பிரிந்துவிடுகிறதா?
பிரிந்து எங்கே செல்கிறது? அந்தரத்தில் சுற்றி அலைந்துவிட்டு, என்றோ ஒரு நாள் வேறொரு உடம்புக்குள் புகுகிறதா? இதற்கான காலக்கெடுவெல்லாம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதா?
இன்னொரு உடம்புக்குள் அது புகுவது எப்படி? ஏன் புகுகிறது?
நம் அறிவியல் இதற்கெல்லாம் ஏன் விளக்கம் தரவில்லை.?ஞானிகளும் யோகிகளும் மட்டுமே இது பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் அது ஏன்.?

ஆன்மா

ஆன்மா
................................................
ஆன்மா பற்றி எனக்கு புரிந்ததை என் பார்வையை விவரிக்கிறேன் தவறு இருந்தால் திருத்தவும்
ஆன்மா என்பது முழுமையின் வெறுமையே ஆன்மா என்பதற்குள் எல்லாவும் இருக்கிறது அதே சமயம் எல்லாவற்றுக்குள்ளும் ஆன்மா இருக்கிறது உதாரணத்திற்கு ஆன்மா நம் மனதின் மையமான புருவமத்தியில் இருப்பதாக வைத்துகொண்டால் ஆன்மா நமக்குள் இருக்கிறதல்லவா இப்போது ஆன்மாவிற்குள் நாம் சென்றுபார்த்தால் வெறுமையே இருக்கும் அந்த வெறுமையில் தான் நாம் வாழும் பிரபஞ்சமும் அடக்கம்...இன்னும் விளக்கமாக சொல்கிறேன் ஒரு அணு வெடித்து உருவான அணு கூட்டத்தில் உள்ள அனைத்து அணுக்களும் ஆதி அணுவை தன்னுள் பொண்டிருப்பதை போல..கடவுள் என்ற வார்த்தையும் கூட ஆன்மாவையே குறிக்கும் கட+உள் அதவாது மாயையான உடலை கடந்து மனதை கடந்து ஆன்மாவை சென்றடைந்தால் மட்டுமே அந்த வெறுமை அல்லது முழுமையை அடைய முடியும் என்பதையும் கடந்தும் உள்ளும் உள்ளதையும் நம் முன்னோர்கள் கடவுள் என்று ஒரே சொல்லில் புரியவைத்துவிட்டார்கள்..கடவுள் என்பது வேறுயாரும் இல்லை சாட்சாத் நாமே தான்..மனதை கடந்து ஆன்மாவை அதாவது நம்மின் உண்மை இருப்பை அடைய தியானம் செய்யுங்கள் நன்றி...புரியாதவர்கள் இரண்டு மூன்று முறை படியுங்கள் நன்றி