Thursday, 16 June 2016

கலக்க முடியுமா..?

பஸ்சுல கலெக்டரே ஏறினாலும்,
முதல் சீட் டிரைவருக்குதான்.

என்னதான் மீனுக்கு நீந்த தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புல நீந்த முடியாது.

ஒரு எறும்பு நினைச்சா ஆயிரம் யானையை கடிக்கும், ஆனா ஆயிரம் யானைகள் நினச்சாலும் ஒரு எறும்பையும் கடிக்க முடியாது.

குவாட்டர் அடிசிட்டு குப்புற படுக்கலாம், ஆனால் குப்புற படுத்துட்டு குவாட்டர் அடிக்க முடியாது.

ரயில்வே ஸ்டேசனில் போலீஸ் ஸ்டேசன் இருக்கலாம், ஆனால் போலீஸ் ஸ்டேசனில் ரயில்வே ஸ்டேசன் இருக்க முடியாது.

என்னதான் கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கினாலும், சொறி நாய் துரத்தினால் ஓடித்தான் ஆகணும்.

ஊருக்கே கேக்குற மாதிரி சத்தமா கொறட்டை விட்டாலும், .......... உன் குறட்டையை நீ கேட்க்க முடியாது.

மின்னலை பார்த்தால் கண்ணு போயிடும், பாக்கலன்னா மின்னல் போயிடும்..

நீங்க படிச்சி எந்த சர்டிபிகேட்டும் வாங்கலாம், ஆனால் டெத் சர்டிபிக்கேட்டை வாங்க முடியாது.

மண்ணிலிருந்து மண்ணெண்ணை எடுக்கலாம்,
கடலிலிருந்து கடலெண்ணெய் எடுக்க முடியுமா.................?

போலீஸ் ஸ்டேசனுக்கு போன் போட்டா போலீஸ் வரும், ரயில்வே ஸ்டேசனுக்கு போன் போட்டா ரயில் வருமா ??

தண்ணியில கப்பல் போனா ஜாலி, கப்பல்ல தண்ணி போனா காலி.

ஹோட்டலில் காசு கொடுக்கலேன்னா மாவாட்ட சொல்லுவாங்க, ஆனா பஸ்சுல காசு கொடுக்கலைன்னா பஸ் ஓட்ட சொல்லுவங்க்களா??
யானை மீது நாம உக்காந்தா சவாரி, நம்ம மேல யானை உக்காந்தா ஒப்பாரி.

அம்மா அடிச்சா வலிக்கும், போலீஸ் அடிச்சா வலிக்கும், பிரெண்ட்ஸ் அடிச்சாலும் வலிக்கும்...................... ஆனா சைட் அடிச்சா வலிக்குமா?

வாயால நாய்னு சொல்ல முடியும்,....... ஆனா நாயால வாய்ன்னு சொல்ல முடியாது.

டீ ஸ்பூனால டீ கலக்கலாம், டேபிள் ஸ்பூனால டேபிளை கலக்க முடியுமா..?..........

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.