Tuesday 21 June 2016

"தேடி அழைக்கும் நேரம்"

"தேடி அழைக்கும் நேரம்"...!
ஒரு கட்டுமான எஞ்சினியர்…13 வது…
மாடியிலே வேலை செய்து
கொண்டு இருந்தார்…
.
ஒரு முக்கியமான வேலை…
.
கீழே ஐந்தாவது மாடியில் வேலை
செய்து கொண்டு
இருந்த கொத்தனாருக்கு முக்கியமான
செய்தி சொல்ல வேண்டும்…
.
செல் போனில் கொத்தனாரை
கூப்பிட்டார் எஞ்சினியர்..
.
ம்ஹும்..கொத்தனார் வேலை
மும்முரத்தில், சித்தாளுடன் பேசிக்
கொண்ட இருந்தார்…
.
போனை எடுக்க வில்லை..
.
என்ஜினியரும் உரக்க கத்திப் பார்த்தார்..
.
அப்பொழுதும்.. கொத்தனார்.. மேலே
பார்க்கவில்லை…
.
இவ்வளவுக்கும்… கொத்தனார் வேலை
செய்யும் இடத்தில்
இருந்து , அவரால் என்ஜினியரை
நன்றாகப் பார்க்க முடியும்…
.
எஞ்சினியர் என்ன செய்வதென்று
யோசித்தார்…
.
ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து,
மேலே இருந்து,
கொத்தனார் அருகில் போட்டார்…
.
ரூபாயைப் பார்த்த கொத்தனார், அதை
எடுத்து பையில் போட்டுக்
கொண்டார்…
.
ஆனால் சற்றும் மேல் நோக்கிப்
பார்க்கவில்லை…
.
என்ஜினியருக்கு ஒரே கோபம்...
இருந்தாலும் பொறுத்துக் கொண்டு…
.
ஒரு ஐநூறு ரூபாயை கொத்தனார்
மேல் போட்டார்…
.
அதையும் எடுத்து சட்டைப் பையில்
வைத்துக் கொண்டு…
கொத்தனார் மும்முரமாக
பேசிக்கொண்டே இருந்தார்…
.
எஞ்சினியர்.. பொறுமை இழந்து ஒரு
சின்ன கல்லை எடுத்து,
கொத்தனார் மீது போட்டார்…
.
அது அவரது தோள் மீது பட்டு நல்ல
வலியோடு, மேலே உடன் பார்த்தார்…
.
அப்பொழுதுதான் எஞ்சினியர் தன்னை
அழைத்தார் என்பதை உணர்ந்தார்…
.
மனிதனும் அப்படித்தான்…
.
மேலே இருந்து இறைவன் அவனை
அழைப்பது
அவனுக்கு புரிவதில்லை… உலக
மாயைகளில், சிக்கித் தவிக்கின்றான்..
.
இறைவன் அவனுக்கு
அருட்கொடைகளை அளிக்கின்றான்..
.
அப்பொழுதும் அவன் இறைவனை
ஏறிட்டுப் பார்ப்பதில்லை..
.
ஆனால் ஒரு துன்பம் நேரும் பொழுது
தான் இறைவனை ஏறிட்டுப்
பார்க்கின்றான்.
.
துன்பங்கள் வரும் நேரம்…இறைவன்
உன்னைத் தேடி அழைக்கும் நேரம்
என்று பொருள்.
படித்ததில் ரசித்தது...!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.