Tuesday 21 June 2016

சிவபெருமான்"* அணிந்திருக்கும் *"ஆபரணத்திற்கான"*

👌�👌�👌�🙏�🙏�🙏�🙏�👌�👌�👌�

*"சிவபெருமான்"* அணிந்திருக்கும் *"ஆபரணத்திற்கான"*

👉 காரணம் தெரியுமா?…👈

*"சிவபெருமானின்"*அங்க ஆபரணம் ஒவ்வொன்றும் அதற்கான காரணங்களை கூறுகின்றன.

                🙏�👇�🙏�

*"திருமுடி"*

திருவருளை அனுபவிக்கும் போது தற்செயல் தோன்றாமல் (யான், எனது, என்ற செருக்கு இல்லாமல்) பரவசப்படுவதே சிவனது திருமுடியாம்.

*"திருமுகம்"*

உலகில் காணும் அனைத்தையும் இறைவனின் அனுக்ரஹமாகவே (உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் சிவமாகவே பார்க்கும் தன்மை) கண்டு அனுபவிப்பது அவரது திருமுகம்.

*"இருதயம்"*

முக்தி பெறுவதற்குரிய பக்குவ ஆன்மாக்களுக்கு மெய்ஞ்ஞானத்தை (உண்மையான அறிவு விளக்கத்தை) உணர்த்தும் திருவருட்சக்தி இருதயமாகும்.

*"திருவடி"*

யான் எனது என்னும் அகங்கார மமகாரமாய் நிற்கும் பொய்யறிவு (அறியாமை என்ற இருள்) நீங்கத்திருவருள் ஞானம் பிரகாசித்து நிற்றலயே சிவனுடைய திருவடி என்பர்.

*"தேகம் (வித்யா)"*

ஆன்மாக்கள் (உயிர்கள்) செய்யும் கன்மத்திற்கு (நல்வினை, தீவினை, செய்வதற்கு ஏற்ப) ஈடாக ரட்சிக்கும் குணமாகிய சதாசிவ மூர்த்தியினுடைய திருமேனி மந்திரம் (திருவைந்தெழுத்து) ஆகையால் மந்திர ரூபமாகிய ஞான சக்தியே வித்யா தேகம் எனப்படும்.

*"திரிநேத்ரம்"*

சூரியன், சந்திரன், அக்கினி (முக்கண் உடையவன்) என்னும் முச்சூடர்களையும் அடக்கியாள்பவர் தாமே என்பதையும் ஆகவனீயம், காருகபத்யம், தக்கிணாக்கினியம் என்னும் மூன்று வேள்விகளும் தம்மிடத்தே பொருந்தியுள்ளன என்பதையும். எல்லாச் செயல்களையும் அறிந்து செய்யும் இச்சை, ஞானம், கிரியா சக்திகளையுடையவர் தாம் என்பதையும் இம்மூன்று கண்களும் குறிக்கின்றன.

*"திரிசூலம்"*

ஆரணி, செனனி, ரோதயித்திரி என்னும் முச்சத்தி வடிவினதாகிய சூலப்படையானது முத்தொழிலையுடையவர், மும்மலங்களை (ஆணவம், கன்மம், மாயை) நீக்குபவர் தாமே என்பதைக் குறிப்பது.

*"வாள்"*

பிறவி வேரின் கொடியை அறுப்பவர்தாமே என்பதை அறிவிப்பதற்காக ஞான வடிவமாகிய (அறிவால் நீங்க வேண்டியவை) வாளை ஏந்தியுள்ளார்.

*"குலிசம்"*

ஒருவராலும் கெடுத்தற்கு (துன்பம் தர) இயலாத சுத்தமாயை ஆளும் பேத குணத்தையுடையவர் தாம் என்பதை அறிவித்தற்காக துஷ்டர்களைப் (கெட்ட குணத்தை உடையவர்கள்) பேதிக்கின்ற குணமாகிய குலிசத்தை ஏந்தினார்.

*"அபயகரம்"*

உலக துன்பத்திற்குப் பயப்பட வேண்டாம் என்று அனுக்ரஹம் (திருவருள் தரும் குணத்தை) செய்யும் குணத்தைக் குறிக்கிறது.

*"வரத கரம்"*

ஆன்மாக்களின் கன்மத்துக்கு ஈடாகப் போக முத்திகளைக் கொடுப்பவர் (வரமளிப்பவர்) தாம் என்பதை அறிவித்தற்காகக் கொண்டது வரத கரம்.

*"அக்கினி"*

ஆன்மாக்களின் பாசங்களை நீக்குபவர் தாம் என்பதை உணர்த்தும் பொருட்டுச் சம்ஹார வடிவாகிய அக்கினியைத் தாங்கியுள்ளார்.

*"அங்குசம்"*

மறைப்பினை (திரோபாவம்) செய்பவர் என்பதை அறிவிப்பது.

*"மணி"*

நாதத் தத்துவத்திற்குத் (36 தத்துவம் கடந்தவர்) தாமே தலைவர் என்பதைக் குறிக்கிறது.

*"ஸர்ப்பம் (பாம்பு)"*

பாம்பினுடைய விரிவு, சுருக்கம் போல உலகின் தோற்றம் ஒடுக்கம் இருப்பதற்கு உலகிற்கு நிமித்த காரணர் தாம் என்பதை அறிவித்தற்காகக் குண்டலினி சக்தி ரூபமாகிய பாம்பை ஏந்தியுள்ளார்.

*"பாசம்"*

ஆன்மாக்களுக்கு பலத்தை ஊட்டுபவர் தாம் என்பதை அறிவித்தற்காக மாயா ரூபமாகிய பாசத்தை திருக்கரத்தில் ஏந்தியுள்ளார்.

*"மான்"*

மானின் நான்கு கால்களும் நான்கு (ரிக்,யசூர், சாமம், அதர்வணம்) வேதங்களாகையால் வேதப் பொருளாக உள்ளவர் தாம் என்பதை உணர்த்துவதற்காக மானை ஏந்தினார்.

*"புன்முறுவல்"*

சஞ்சிதம் முதலான மூவகைத் (ஆகாமியம், சஞ்சிதம், பிரார்த்தம்) துயரத்தையும் போக்கி அருளுவதற்காக இளமையான புன்சிரிப்பைக் கொண்டுள்ளார்.

*"உபவீதம் (பூணூல்)"*

சிவஞானப் பொருளாக இருப்பவரும் அதைத் தருபவரும் தாமே என்பதை உணர்த்துவது.

*"சிகை (தலைக்குடுமி)"*

ஞான வடிவமாக உள்ளவர் தாமே என்பதையும் அறிவிக்கவே ஞான அடையாளமாகிய சிகையைக் கொண்டுள்ளார்.

*"சிலம்பு மற்றும் மெட்டி"*

பக்குவ ஆன்மாக்களைப் பேரின்பத்தின் அழுத்துதற்குச் சாதனமாக அருட்சிலம்பு மற்றும் மெட்டி விளங்குகிறது.

*"வீரக்கழல்"*

ஆன்மாக்களை வசப்படுத்தும் முன் வினையை வென்று, பிறவித் துன்பத்தைப் போக்கும் காரணர் தாம் என்பதை உணர்த்துவது.

*"கங்கை"*

உலகை அழிக்குமாறு வந்த கங்கையை அதன் வேகத்தைக் குறைத்து அடக்கி உலகை காத்து இன்பத்தைத் தந்ததால், ஆன்மாக்களை ஆனந்தக்கடலில் திளைக்கச் செய்ததற்கு அடையாளமாகக் கங்கையை தலைமுடியில் தரித்துள்ளார்.

*"காதில் குழை (தோடு)"*

அசுரர்களை அழித்து (ஆணவத்தை) வளையமாக காதில் அணிந்துள்ள ஆபரணம் தோடு ஆகும்.

🙏ஹர ஹர மஹா தேவா 🙏

.   🙏திருச்சிற்றம்பலம்🙏

.     🙏ஓம் நமசிவாய🙏

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.