*ஆக்கம்*
மனிதன் மண்ணால் படைக்கப்பட்டவன் என்று குர்ஆனும் பைபிளும் கூறுகின்றன.
ஒலி எழுப்பும் களிமண்ணிலிருந்து நாம் மனிதனைப் படைத்தோம். (குர்ஆன். 15. 26 )
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே.
என்று கவிஞன் பாடுகிறான் என்றால் பெண் ஏதோ ஒரு பூவிலிருந்து பிறந்து வந்தால் என்று பொருள் இல்லை ,
பெண் பூவைப் போன்றவள் பூவின் தன்மைகள் கொண்டவள் என்று பொருள்.
பூ இங்கே குறியீடு ,
அப்படியே மனிதன் மண்ணால் படைக்கப்பட்டான் என்பதில் மண் (ணும் ஒரு குறியீடு)
அதாவது மனிதன் மண்ணைப் போன்றவன் மண்ணின் தன்மைகள் கொண்டவன் என்று, பொருள்.
ஐம்பூதங்களில் இறுதியாக தோன்றியது மண் ,
ஆகாயத்தில் முதலில் காற்று தோன்றியது , பின்னர் அதிலிருந்து நெருப்பத் தோன்றியது , அதனால் நெருப்பில் காற்றின் சாரமும் இருந்தது ,
நெருப்பிலிருந்து நீர் தோன்றியது அதனால் காற்று. நெருப்பின் சாரம் நீரில் இருந்தது ,
நீரிலிருந்து மண் தோன்றியது. அதனால் ஆகாயம் காற்று. நெருப்பு. நீரின் சாரம் மண்ணில் இருந்தது !
மனிதன் மண்ணிலிருந்து தோன்றினான். எனவே அவன் ஐந்து பூதங்களின் சாரமாய் இருக்கிறான் !
மனிதனைக் களிமண்ணின் மூலச் சத்திலிருந்து படைத்தோம்.
(குர்ஆன் 23. 12)
என்கிறான் இறைவன்
காற்றுப் பரிணமித்து மண்ணாயிற்று மண் பரிணமித்து மனிதன் ஆனது
எனவே மண் பரிணாமத்தில் வந்தது போலவே மனிதனும் பரிணாமத்தில் வந்தவன் என்று பொருள் !
பரிணாமத்தில் மண் ஐம்பூதங்களின் உச்சி !
மனிதன் உயிர்களின் உச்சி !
நெருப்பிலேயே இயற்கைச் சக்திகள் தோன்றி விட்டன.
இந்த சக்திகளை இந்தியத் தொன்மம் தேவர். அசுரர். என்று கூறுகிறது. இஸ்லாமியத் தொன்மம் மலக். ஜின் என்று கூறுகிறது !
இறைவன் நெருப்பின் ஒளியிலிருந்து மலக்குகளையும். வெப்பத்திலிருந்து ஜின்களையும் படைத்தான். என்று இறைதூதர் ,
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் !
உயிர்கள் நீரில் பிறந்தன என்பதை மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் ஒருமித்துக் கூறுகின்றன .
நீரில் பிறந்த உயிர்கள் பரிணமித்து நிலத்தில் ஊர்வன திரிவனவாகவும். வானத்தில் பறப்பனவாகவும் மாரின ,
இந்தப் பரிணாம மரத்தின் உச்சிக் கனியாய் மனிதன் தோன்றினான் !
எனவே அவனிடம் சகல உயிர்களின் சாரமும் இருக்கிறது. அதனால்தான் அவன் மற்ற உயிரினங்களை அடக்கி ஆளும் ஆற்றல் பெற்றான்.
மனிதர்களே வானங்களில் உள்ளவற்றயும் பூமியில். உள்ளவற்றையும் இறைவன் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கிறான் ( 31. 20. ) என்று குர்ஆன் கூறுகிறது ...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.