ஆண்டவனா பார்த்து ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் முன்னால நண்பர் ஒருவர் எனக்கு ஒரு மெசேஜு டேக் பண்ணி இருக்கார் எஃப்பில.
இதோ உங்கள் பார்வைக்கு :
'மனிதன் மூன்று திறங்களை உடையவன்!
அதாவது உடல் மனம் ஆத்மா என்பதாகும்! '
அன்பு தன்னை உடல் மூலமாக வெளிப்படுத்திக் கொள்வது காமம் ஆகிறது!
அன்பு தன்னை மனம் வழியாக வெளிப் படுத்திக் கொள்ளும் நுண்மையானது நேசம் ஆகிறது!
அன்பு தன்னை ஆன்மா வழியாக வெளிப் படுத்தும் போது பிரார்த்தனை ஆகிறது!
நான்காவது துரியம் எனப்படுவது!
இதில் அன்பே சமாதியாகிறது! ஞானமாகிறது!
முதல் தளமான காமத்தில் உடல்கள் மறைந்து போக மனம் திறந்து கொள்கிறது!
இரண்டாவது தளமான காதலில் மனம் மறைந்து போக ஆன்மா மட்டுமே இருக்கிறது! '
மூன்றாவது தளமான பிரார்த்தனையில் ஆன்மாவும்
மறைந்து போகிறது! கடவுள் மட்டுமை இருக்கிறார்!
நான்காம் தளமான துரியத்தில் கடவுளும் மறைந்து போகிறார்!
சூன்யம் மட்டுமே மிஞ்சி இருக்கிறது!
அந்த பரிபூரண சூன்யத்தில் எல்லா இருமையும் மறைந்து போகிறது!
அன்பே எல்லாப் பொக்கிஷங்களுக்கும் ஒரே சாவி!
ஓஷோ
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.