Tuesday 12 April 2016

குற்ற உணர்வு

குற்ற உணர்வு என்பது ஆத்மாவில் உண்டாகிய புற்றுநோய்.உங்களை எப்போதும் அடிமை நிலையில் வைத்திருக்க,உங்களுடைய தனித்தன்மையை அழிக்க,இந்தக் குற்ற உணர்வை மதங்களெல்லாம் ஒரு ஆயுதமாக வைத்திருக்கின்றன.
ஆகவே எதைக் குறித்தும் குற்ற உணர்வு கொள்ள வேண்டாம்.அப்படி ஏதாவது உங்களை அறியாமல் தவறு செய்து விட்டால்,அதற்காக வருந்த வேண்டாம்.மீண்டும் அதைச் செய்யாமல் விழிப்புணர்வுடன் இருந்தால் போதும்.வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
தவறு செய்தல் வாழ்வில் மிக சகஜம்.நீங்கள் குற்ற உணர்வு பெற்றால்,உங்களிடம் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படும்.இதனால் பல செயல்களில் நீங்கள் தோல்வியைத் தழுவ நேரிடும்.இதனால் தாழ்வு மனப்பான்மை இன்னும் அதிகமாகும்.
தவுறு செய்வது மனித இயல்பு.அதே போல் மன்னிப்பதும் மனித இயல்பு தான்.நீங்கள் உங்களையே முதலில் மன்னித்துக் கொள்ள வேண்டும்.அப்படி உங்களையே உங்களுக்கு மன்னிக்கத் தெரியாவிட்டால்,பிறரை உங்களால் எப்படி மன்னிக்க முடியும்?
உமர்கயாம் என்ற சுபி புலவர்,தன்னுடைய 'ரூபையாத்'என்ற உலகப் புகழ் பெற்ற புத்தகத்தில்,''நான் குடிக்க விரும்புகிறேன்,ஆட விரும்புகிறேன்,பாட விரும்புகிறேன்.நீங்கள் கருதும் சகல பாவங்களையும் செய்ய விரும்புகிறேன்.
ஏனெனில் கடவுள் கருணை உள்ளவர்.அவர் என்னை நிச்சயம் மன்னிப்பார்.என்னுடைய பாவச் செயல்களை அவருடைய கருணையுடன் ஒப்பிட்டால் ஒன்றுமே இல்லை.''என்கிறார்.
உமர்கயாம் ஞானம் அடைந்தவர்.மிகவும் தெளிவான ஆழ்ந்த சிந்தனை உள்ளவர்.அவர் சொன்னதில் உள்ள முக்கிய கருத்து,''நீங்கள் குற்ற உணர்வு கொள்ளாதீர்கள்''என்பதே.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.