Thursday 14 April 2016

உறங்கும் மனிதன்

உறங்கும் மனிதன்
நான் மிகவும் அழகான யூத கதையைப் பற்றி கேள்விபட்டிருக்
கிறேன்
அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது – அது
ஒவ்வொரு மனிதனைப் பற்றிய கதை.
அவன் எப்போதும் தூக்க கலக்கத்தில் இருந்தான். எல்லா இடங்களிலும் எப்போதும் தூங்குவதற்கு தயாராக இருந்தான். பெரிய பொது கூட்டங்களிலும், எல்லா இசை நிகழ்ச்சிகளிலும், எல்லா முக்கிய ஆலோசனை கூட்டங்களிலும், அவன் அமர்ந்து தூங்கிகொண்டிருப்பதை பார்க்கமுடியும்.
உனக்கு கண்டிப்பாக அந்த மனிதனை தெரிந்திருக்கும் ஏனெனில் நீதான் அது.
நீ அந்த மனிதனை பலமுறை கடந்திருப்பாய், ஏனெனில் அவனை நீ எப்படி ஓதுக்க முடியும்? -- அது நீ.
நினைத்து பார்க்ககூடிய நினைத்து பார்க்க முடியாத அனைத்து நிலைகளிலும் அவன் தூங்கினான்.
அவன் தனது முழங்கையை காற்றில் மடித்து தனது கைகளை தனது தலைக்கு பின்னால் வைத்துக்கொண்டு தூங்கினான்.
அவன் நின்றுகொண்டு, விழாமல் இருப்பதற்காக சாய்ந்துகொண்டு தூங்கினான்.
அவன் திரை அரங்கத்திலும், தெருக்களிலும், மசூதிகளிலும் தூங்கினான்.
அவன் எங்கே சென்றாலும் அவனுடைய கண்கள் தூக்க மயக்கத்திலேயே இருக்கும்.
நீ தாலி கட்டியதை நினைத்துப் பார். உன்னுடைய தேன் நிலவை நினைத்துப் பார். உன்னுடைய கல்யாணத்தை நினைத்துப் பார். எப்போதாவது விழித்துகொண்டு
ள்ளாயா?
நீ எப்போதாவது தூங்ககூடிய வாய்ப்பை தவறவிட்டுள்ளாயா?
நீ எப்போதும் தூங்கிகொண்டேயி
ருக்கிறாய்!
இது மனித மனத்தின் கதை.
நீ உன்னைச் சுற்றி கற்பனை உலகத்தை உருவாக்கியுள்ளாய்.
நீ சாகும்போது உன்னுடன் வரமுடியாத பொருட்கள் மீது பற்று வைத்துக்கொண்டே செல்கிறாய்.
உன்னிடம் இருந்து எடுத்துகொள்ளபட
க்கூடிய பொருட்களோடு உன்னை நீ அடையாளபடுத்திக் கொள்கிறாய்.
--- ஓஷோ ---

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.