Tuesday 12 April 2016

ஒரு கவிதை எழுது

தியான யுக்தி
ஒரு கவிதை எழுது
எப்போதெல்லாம் நீ சோர்வாக உணர்கிறாயோ, எப்போதெல்லாம் இந்த உலகத்தினால்
விரக்தியடைகிறாயோ – இந்த உலகத்தினால் விரக்தியடைவது எல்லோருக்கும் பல முறை
நடக்கக்கூடியதே, அது இயற்கையானது – இந்த உலகம் மிகவும் பளு தருவது,சலிப்பைத்
தருவது, திரும்ப திரும்ப முக்கியமில்லாததை செய்வதால் வரும் மனசோர்வைத் தருவது.
அதனால் எப்போதெல்லாம் நீ இப்படி உணர்கிறாயோ அப்போதெல்லாம் செய்யக் கூடிய மிக
சிறப்பான செயல் என்னவென்றால் எதையாவது படைப்பதுதான். அதில் மூழ்கி விடு. நீ
அதிலிருந்து வெளியே வரும் போது புத்துணர்வு பெற்றவனாய், திரும்பவும் சக்தி
பெற்றவனாய், ஆக்கபூர்வமுள்ளவனாய் வெளி வருவாய்.
கவிதை எழுதுவது தூங்குவதை விட அதிக சக்தி தரும்….. 5 நிமிடங்கள் கவிதை
எழுதுவதில் கவனத்தை செலுத்தினால் அது 8 மணி நேரம் தூங்கி எழும்போது இருப்பதை விட
அதிக ஊக்கம் தரும்.
---ஓஷோ

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.