Wednesday 20 April 2016

அன்பு

அன்பை பகிர பயந்த மக்களே பணத்தை தனதாக்கிக் கொள்கின்றனர்........!!!
அன்பை பகிரும் மக்கள் எதையும் தனதாக்கிக் கொள்வதில்லை.......!!!
அவர்களுக்கு பணம் ஒரு பொருட்டல்ல.
ஏனெனில், அன்பை உணர்தவர்களுக்கு தெரியும் பணத்தை விட மிகப் பெரிய ராஜ்ஜியம் அன்பு ஒன்று தான் என்று........!!!
இதயத்தில் அன்பு மட்டும் இருந்தால் போதும், பிச்சைகாரனாக இருந்தால் கூட தெருவில் சந்தோஷமாக பாடிக்கொண்டு போக முடியும்.......!!!
மனிதர்களோடு மட்டுமல்லாமல், எவ்வுயிர்களோடும் அன்பு பாராட்ட முடியும்........!!!
அன்பை பகிர்தல் அந்த அளவுக்கு ஆழ்ந்த மனநிறைவைத் தரும்......!!!
அந்த மன நிறைவே நமக்கு அன்பின் மகுடமாக முடிசூட்டும்......!!!
அன்பிற்கு பதிலாக பணம் மட்டும் இருந்தால் பைத்தியகாரனாக மட்டும் தான் ஆக முடியும்..........!!!
நமக்கு தேவை அன்பென்னும் ஆனந்தமா.......???
இல்லை,
பணம் என்னும் பகட்டா.......???
தேர்வு நம்மிடமே.......!!!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.