* உண்மைகள்*
==================
மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது
வழுக்கி விழுவீர்கள்.
*தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது*
பிராணசக்தி discharge ஆகும்.
*துணி இல்லாமல் குளிக்கக் கூடாது*
தீயசக்திகள் ஊடுருவ வாய்ப்புண்டு.
*நெருப்பை வாயினால் ஊதக்கூடாது*
ஆக்ஸிஜன் அதிகம் சேருவதால் நெருப்பு வேகமாக பரவி முகத்தை பொசுக்கிவிடும்.
*செவ்வாய், வெள்ளிக் கிழமைகள், சதுர்த்தி, சதுர்த்தசி, சஷ்டி, பௌர்ணமி, நவமி ஆகிய திதிகளில் முடிவெட்டுதல் கூடாது ஆனால் அந்தத் திதி அமையும் நாள் ஞாயிறு அல்லது வியாழனாயிருந்தால் மேற்படிதிதி தோஷம் இல்லை*
இந்த நாட்களில் பிரபஞ்ச சக்தியை முடி அதிகமாக ஈர்ப்பதால் வெட்டி வீணாக்கி விடக்கூடாது. முனிவர்களும் சித்தர்களும் முடியே வெட்ட மாட்டார்கள்.
*அசுத்தமான பொருள்களை நெருப்பில் போடக்கூடாது. அத்துடன் துடிதுடிக்கப் புழுபூச்சிகளை நெருப்பில் போடுவது பிரம்மகத்திதோஷத்தை உண்டாக்கும்*
அதிலிருந்து வெளிப்படும் புகை உடலுக்கு கேடானது.
*தண்ணீரிலும், எண்ணெய்யிலும் நம் நிழலை நாம் பார்க்கக்கூடாது*
ஆன்மாவை குழப்பமடைய செய்யும்.
*இருட்டிலோ, நிழல் விழும் இடங்களிலோ அமா்ந்து உண்ணக்கூடாது*
உணவில் எது கிடந்தாலும் தெரியாது.
*உண்ணும்போது முதலில் இனிப்பையும், முடிவில் கசப்பையும் உண்ணவேண்டும்*
இனிப்பு இரைப்பையையும், கசப்பு கணையத்தையும் தூண்டக்கூடியது.
*ஈர ஆடையுடனும், தலைமுடியை அவிழ்த்துவிட்டும் உண்ணக்கூடாது*
உணவு சீரணமாக சூடு தேவை. தலைமுடி உணவில் விழ வாய்ப்புண்டு.
*நெல்லிக்காய், இஞ்சி, தயிர், வறுத்தமா இவற்றை இரவில் உண்ணக் கூடாது*
எளிதில் செரிமாணம் ஆகாது.
*உறவினர்களை ஊருக்கு அனுப்பிவிட்டு உடனே எண்ணெய் தேய்த்து நீராடக் கூடாது*
உறவுகளையும் தலைமுழுவதற்கு சமம்.
*கன்றுக்குட்டி, மாடு ஆகியவை கட்டியிருக்கும் கயிற்றை தாண்டக்கூடாது*
அவைகள் பயந்து ஓடி நீங்கள் கால் இடறி விழ வாய்ப்புண்டு.
*பெண்கள் கண்ணீர்விடும் வீட்டில் செல்வம் தங்காது. அவர்கள் தலையை விாித்துப்போட்டிருப்பதும், இரு கைகளாலும் தலையை சொறிவதும் வறுமையை உண்டாக்கும்*
மூதேவியான தீயசக்தி குடிகொள்ளும்.
*தன்தாய், தந்தை பிணத்தை தவிர பிறபிணங்களை பிரம்மச்சாாி சுமந்து செல்லக்கூடாது*
வாழ்கை வெறுத்து திருமணம் செய்துகொள்ள மனம் ஒப்பாது.
*தன்மனைவி கருவுற்றிருக்கும் காலத்தில் கணவன் அந்நியர்பிணத்தை சுமந்து செல்லக்கூடாது*
தாயின் மனம் பாதித்து குழந்தையையும் பாதிக்கும்
*தீட்டு உள்ளவர்கள் கட்டிலில் படுக்க கூடாது. தரையில் தான் படுக்க வேண்டும்*
தரையின் சூடு உடலுக்கு தேவை.
*மாலைவெயில், ஓமப்புகை, தூயநீர்பருகுதல், இரவில் பாற்சோறு சாப்பிடுதல் என்பன ஆயுளைவிருத்தி செய்யும்*°°°°°°!!!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.