Wednesday 27 July 2016

கிருஷ்ணரின் அருள் வார்த்தைகள்

கிருஷ்ணரின் அருள் வார்த்தைகள்

காரணம் சொல்லாதே !

|| ராதேக்ருஷ்ணா ||

பக்தி செய்யாமலிருக்க காரணம் சொல்லாதே !

உலகில் காரணம் சொன்னவர்கள் ஜெயித்ததில்லை !

நீ சொல்கின்ற காரணங்களில் பல பக்தர்கள்
வாழ்விலும் இருந்தது !

அவர்கள் அதையும் தாண்டித்தான் பக்தி செய்தார்கள் !

நீயும் அவர்களைப் போல் முயற்சித்துப் பார் !

தகப்பன் கொடுமைக்காரனா ?
ப்ரஹ்லாதனைப் போல் பக்தி செய் !

தாயால் கெட்ட பெயரா ?
பரதனைப் போல் பக்தி செய் !

அண்ணனே உன்னை அவமதிக்கிறானா ?
தியாகராஜரைப் போல் பக்தி செய் !

குடும்பத்தில் தரித்ரம் தலைவிரித்தாடுகிறதா ?
குசேலரைப் போல் பக்தி செய் !

மனைவி அடங்காப் பிடாரியா ?
சந்த் துகாராமைப் போல் பக்தி செய் !

கணவன் கொலைகாரப் பாவியா ?
மீராவைப் போல் பக்தி செய் !

புகுந்த வீட்டில் கொடுமையா ?
சக்குபாயைப் போல் பக்தி செய் !

பெற்ற பிள்ளையை இழந்துவிட்டாயா ?
பூந்தானத்தைப் போல் பக்தி செய் !

பெற்ற தாயை சிறுவயதில் இழந்துவிட்டாயா ?
நாரதரைப் போல் பக்தி செய் !

நீ வேலைக்காரி பெற்ற பிள்ளையா ?
விதுரரைப் போல் பக்தி செய் !

நீ தப்பான குடும்பத்தில் பிறந்தவளா ?
கானோ பாத்ராவைப் போல் பக்தி செய் !

உடலில் வியாதியால் வேதனையா ?
நாராயண பட்டத்ரியைப் போல் பக்தி செய் !

யாராவது கை கால்களை வெட்டிவிட்டார்களா ?
ஜயதேவரைப் போல் பக்தி செய் !

இளம் விதவையாய் குழந்தைகளுக்காக வாழ்கிறாயா ?
குந்திதேவியைப் போல் பக்தி செய் !

மனைவியை இழந்து குழந்தைகளோடு வாழ்கிறாயா ?
மாதவேந்திரபுரியைப் போல் பக்தி செய் !

சொந்தக்காரர்களே உன் குடும்பத்தை ஏமாற்றிவிட்டார்களா ?
பாண்டவர்களைப் போல் பக்தி செய் !

உடன் பிறந்த தம்பியே உனக்கு விரோதியா ?
ஜயமல்லரைப் போல் பக்தி செய் !

பெற்ற குழந்தையே உன்னை கேவலமாக நடத்துகிறதா ?
கைகேயியைப் போல் பக்தி செய் !

உன் குழந்தைக்கு மூளை வளர்ச்சி இல்லையா ?
நம்மாழ்வாரின் தாயார் உடையநங்கையப் போல் பக்தி செய் !
 
குடும்பத்தினர் யாரும் ஆதரிக்கவில்லையா ?
வால்மீகியைப் போல் பக்தி செய் !

கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்கின்றாயா ?
பீஷ்மரைப் போல் பக்தி செய் !

உன் கணவன் கஞ்சனா ?
புரந்தரரின் மனைவி லக்ஷ்மியைப் போல் பக்தி செய் !

வியாபாரத்தில் நஷ்டமா ?
சாருகாதாஸரைப் போல் பக்தி செய் !

உன் கணவன் நாஸ்திகனா ?
மண்டோதரியைப் போல் பக்தி செய் !

உன் கணவன் சன்னியாசியாகிவிட்டாரா ?
விஷ்ணுப்ரியாதேவியைப் போல் பக்தி செய் !

கணவன் உன்னை கண்டு கொள்வதில்லையா ?
சுநீதியைப் போல் பக்தி செய் !

குடும்பத்தினர் உன்னை ஒதுக்கிவிட்டார்களா ?
ஜடபரதரைப் போல் பக்தி செய் !

நீ வேலை பார்க்கும் இடத்தில் தொந்தரவா ?
அக்ரூரரைப் போல் பக்தி செய் !

ஊரே உன்னை ஒதுக்கிவிட்டதா ?
சோகாமேளரைப் போல் பக்தி செய் !

சுகமாக வாழ்ந்து இப்பொழுது கஷ்டமா ?
ரந்திதேவரைப் போல் பக்தி செய் !

உனக்கு குழந்தை பாக்கியம் இல்லையா ?
யசோதையைப் போல் பக்தி செய் !

பிறந்த குழந்தைகள் எதுவும் தங்கவில்லையா ?
தேவகியைப் போல் பக்தி செய் !

அறிவு ஒன்றும் இல்லாத முட்டாளா ?
கோபர்கள், கோபிகைகள் போல் பக்தி செய் !

பிறவிக் குருடனா ?
சூர்தாஸரைப் போல் பக்தி செய் !

உடல் ஊனமுற்றவரா ?
கூர்மதாஸரைப் போல் பக்தி செய் !

நீ ப்ருஹந்நிலை போல் அரவாணியா ?
சுஹக்ஷாவைப் போல் பக்தி செய் !

நீ பிச்சை எடுத்து வாழ்கின்றாயா ?
பந்து மஹாந்தியைப் போல் பக்தி செய் !

உலகிற்கு நல்லது செய்தும் அவமரியாதையா ?
பத்ராசல ராமதாசரைப் போல் பக்தி செய் !

வாழ்க்கையே பிரச்சனையா ?
மஹாராஜா ஸ்வாதித்திருநாளைப்
போல் பக்தி செய் !

இன்னும் பலகோடி பக்தர்கள் உண்டு !
பக்தி ஒன்று தான் உன் வாழ்க்கைக்கு
என்றும் ஒரே ஆதாரம் !

அதை செய்யாமல் நீ எதைச் செய்தாலும்
உனக்கு சமாதானம் இல்லை !

இதுவரை காரணம் சொல்லி உன் ஆனந்தத்தை
நீ தொலைத்தது போதாதோ ?

இனிமேல் காரணம் சொல்லாதே !

கிருஷ்ணனிடம் பக்தி செய்ய தொடங்கிவிடு !!

ஹரே ராமா !! ஹரே கிருஷ்ணா !!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.