👌👌👌🙏🙏🙏🙏👌👌👌👌
1. *நந்தி* என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள்.
2. *நந்தியின்* வேலை தடுப்பது ஆகும்.
அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது.
நந்தி அனுமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும்.
எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், "என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்'' என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.
3. பிரதோஷ காலங்களில் *நந்தியை* தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் வரம் தரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருமந்திரம் எனும் நூலை எழுதிய திருமூலருக்கு குருவாக *நந்தி* திகழ்ந்தார். திருமூலருக்கு *நந்தி* பெருமான்தான் 9 வேத ஆகமங்களை விளக்கி அருளியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
4. சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய 8 பேரும் *நந்தி பெருமானின்* மாணவர்களாவர்.
5. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில்,
*நந்தி துர்கா மலையே பரவலாக நந்தி மலை என்று அழைக்கப்படுகிறது*.
*நந்தி* மலையே பென்னாறு, பாலாறு பொன்னையாறு ஆகிய ஆறுகளில் பிறப்பிடமாக கருதப்படுகிறது.
கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரத்தில் இருக்கின்றது.
ஆயிரம் வருடத்து பழமை வாய்ந்த நந்தி கோவிலால் *நந்தி மலை* என்ற பெயர் ஏற்பட்டது.
6. *நந்திகேசுரரின்* வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது.
பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே *நந்திகேசுவரராக* பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது புராண மரபு.
7. இந்திய வரலாற்றை ஆராய்ந்தால் தத்துவம், யோகம், நாட்டியம், இசை, ஆயுர்வேதம், அஸ்வவேதம், காமவேதம் முதலிய பல்வேறு சாத்திரங்களைத் தோற்றிவைத்தவராக *நந்திகேசுரர்* என்ற முனிவர் வாழ்ந்திருக்கிறார் என அறியலாம்.
8. *சிவபெருமான்* நாட்டியக் கலையைப் பிரும்மாவுக்கு கற்றுக் கொடுக்க அம்முறையை அறிந்த *நந்தி* பரத முனிவருக்குப் போதித்தார் என்று அபிநய தர்ப்பணம் கூறுகிறது.
9. தமிழ்நாட்டில் ஆடவல்ல பெருமான் தண்டுவுக்கு நாட்டியம் கற்று
கொடுப்பதாக ஒரு சிற்பம் மாமல்லபுரத்தில் தர்மராஜ ரதத்தில் உள்ளது.
இங்கு சிவன் நாட்டியாசாரியராகவும் தண்டு முனிவர் மனித உருவிலும் உள்ளனர்.
10. காஞ்சிபுரத்தில் இராஜ சிம்மன் கட்டிய கைலாய நாதராலயத்தில் பின்புறச் சுவரில் ஒரு சிற்பம் உள்ளது.
அதில் சிவபிரான் ஊர்த்துவதாண்டவம் புரிகிறார்.
அவர் அருகில் *நந்திகேசுவரர்* ஆனந்தமாக நாட்டியம் கற்றுக் கொண்டு ஆடுகிறார்.
11. தமிழ்நாட்டில் *நந்திகேசுவரரின்* மதம் கி.பி. 700லேயே சிறப்பிடம் பெற்றிருந்தது.
12. தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பிற இடங்களிலும் உள்ள சிற்பங்களில் சிவன் ஆடும்போது *நந்திகேசுவரர்* பஞ்சமுக வாத்யம் என்னும் குடமுழா வாத்தியத்தை வாசிப்பதாக உள்ளதைக் காணலாம்.
திருவாரூர், திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது.
13. பஞ்சமுக வாத்தியலடீசணம் என்னும் சுவடியில் குடமுழா வாத்தியம் *நந்திகேசுவரரால்* இசைக்கப்பட்டது என்றும், ஆதலின் இதை இசைக்கும் முன்னர் *நந்திகேசுவரருக்கு* சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது.
14. காம சாஸ்திரத்தை தோற்றுவித்தவரும் *நந்திகேசுவரரே* என்று பல நூல்கள் கூறுகின்றன.
*நந்தி* இயற்றிய பல செய்யுட்களை *''ரதி ரகசியம்''* என்று தம் நூலில் கொக்கோகர் மேற்கோளாகக் காட்டுகிறார்.
15. ஆகம சாஸ்திரங்களையும், சைவசித்தாந்த தத்துவங்களையும்,
*சிவபெருமானிடம் அறிந்து உலகுக்குப் போதித்தவர் *நந்திகேசுவரரே.*
*சைவ மரபில் தலையாயது ''சிவஞான போதம்'' என்னும் நூல்.*
இதை *நந்திகேசுவரரே* முதலில் போதித்தார்
16. சிவாலயங்களில் துவாரபாலர் இருவரில் தலையில் சூலம் தரித்து நிற்பவர் *நந்திகேசுவரர்* ஆவார்.
17. சிதம்பரம் நடராஜப் பெருமானின் கோயிலில் நான்கு கோபுரங்களிலும் *அதிகார நந்தியின்* உருவத்தைக் காணலாம்.
18. *நந்திகேசுவரரின் மறு அவதாரமாக அனுமான் கருதப்படுகிறார்.*
19. சில சிவாலயங்களில் *நந்திக்கு* பதிலாகக் குரங்கு தூவாரபாலனாகத் திகழ்வதைக் காணலாம்.
எவ்வாறு சிவதத்துவத்தை *நந்தி* வாயிலாகப் பரமன் போதித்தாரோ ,
*அதே போல ராமதத்துவம் அனுமன் வாயிலாகப் போதிக்கப்பட்டது.*
20. தானும் *நந்தியும்* வேறல்ல, ஒருவரே என்று *சிவபெருமான் நந்தி புராணத்தில் கூறுகிறார்.*
*நந்தியை தொழுவது சிவபெருமானைத் தொழுவதே ஆகும்.*
21. முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் *நந்திதேவரே ஆதி குரு.*
22. *நந்தி* என்ற வார்த்தையுடன் `ஆ' சேரும்போது *ஆநந்தி* என்ற பொருள் தருகிறது.
நீயும் ஆனந்தமாக இரு, பிறரையும் ஆனந்தமாக வைத்திரு!' என்று சிவபெருமான் *நந்திக்கு* அளித்த வரம் அது.
23. *நந்தியை* தொழாமல் சிவபெருமானைத் தொழ முடியாது.
ஆலயத்தில் *நந்தியை* மட்டுமே தொழுதுவிட்டு திரும்பி விட்டால் கூட சிவபெருமானை வணங்கியதன் முழுபலனும் கிட்டும்.
24. ஆலயங்களைக் காவல் காக்கும் அதிகாரமும் *நந்திக்கே* உரியது என்பது தெளிவாகிறது.
இதன் அடையாளமாகத் தான் திருக்கோவில்களின் மதில் சுவர்களில் *நந்தியின்* திருவுருவை அமைத்துள்ளனர்.
25. *நந்தி தேவருக்கு சிவ பெருமானைப் போலவே,*
*நெற்றிக்கண்ணும் நான்கு புஜங்களும், கையில் பிரம்பும், உடைவாளும், இருபுஜங்களில் மான் மழுவும் உண்டு.*
*மானும் மழுவும் வேதத்தைக் குறிக்கிறது.*
*மழு வீரத்தை அல்லது ஆண்மையைக் குறிக்கிறது எனவும் கூறுவர்.*
26. *நந்திக்கு* இவ்வுலகத்தின் எதையும் கண்டிக்கவும் தண்டிக்கவும் அதிகாரம் வழங்கியுள்ளான் பரமேஸ்வரன்.
27. *நந்தியின்* அருள் இருந்தால் தான் மனிதர்களுக்கு மட்டுமின்றி தேவர்களுக்கும் முக்தி கிடைக்கும்.
அதனாலேயே தேவர்களும் *நந்திதேவரை* போற்றித் துதிக்கின்றனர்.
28. எல்லா உயிர்களையும் ஒரு காலத்தில் ஓய்வு படுத்துதல் மகாசங்காரம் எனப்படும்.
இந்த அதிகாரத்தை சிவபெருமான் *நந்தி*
தேவருக்கு வழங்கியிருக்கிறார்.
29. *நந்திதேவருக்கு* ருத்திரன் என்ற பெயரும் உண்டு.
*ருத் என்பது துக்கம்.*
*ரன் என்பது ஓட்டுகிறவன்.*
*துக்கத்தை ஓட்டுகிறவன் என்பதே ருத்திரன்.*
*தூயவன், சைலாதி எனவும் நந்தியை அழைப்பர்.*
30. மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், ருத்திரன், கந்துரு, காலாங்கி, கஞ்சமாலையன் போன்ற தேவர்களெல்லாம் *நந்தியை* குருவாகக் கொண்டு வேதம் கற்றவர்கள் ஆவர்.
31. பிரவிர்த்தி என்ற சேர்க்கையை விட்டு நிவிருத்தி என்ற விலகலைத் தேர்ந்தெடுப்பது ஞானத்தின் மார்க்கம்.
இதைக் கற்றுக் கொடுத்தவர் *நந்திதேவரே* இவர் வழி வந்தவர்களே மெய் கண்ட சந்தானத்தின் குருபரம்பரை என்றழைக்கப்படுகிறார்கள்.
32. சிவபெருமானின் முக்கண்ணின் பார்வைக்கு எதிரில் நிற்க *நந்திதேவரை* தவிர வேறுயாராலும் இயலாது.
*இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும்.*
33. *சிவ பெருமான் திரு நடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது.*
34. பிரதோஷ காலம் மட்டுமின்றி எக்காலத்தும் நாம் சிவபெருமானிடம் வைக்கும் வேண்டுதல் களை *நந்திதேவரிடம்* வைத்தால் போதும்.
அவர் அதைப் பரமேஸ்வரனிடம் கொண்டு சேர்த்துவிடுவார் என்பது ஐதீகம்.
35. *நந்தியை* வழிபடும்போது, `சிவனடியில் சரணம் புகுந்து சிவத்தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகா புண்ணியம் பெற்ற *நந்திகேசுவரரே!*
சன்னிதிக்குச் சென்று உமையோடு கூடிய ஈஸ்வரனைத் தரிசிக்க எனக்கு உத்தரவு தருக' என்று பிரார்த்திக்க வேண்டும்.
36. *நந்திதேவருக்கு* அருகம் புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும்.
37. பிரபஞ்சத்தில் உள்ள தீர்த்தங்கள் எல்லாம் பிரதோஷ காலத்தில் பீஜத்தை வந்தடைகின்றன.
அதனால் *நந்தியின்* பீஜத்தைத் தொட்டு வணங்கிய பிறகே சிவதரிசனம் காணவேண்டும்.
பிறகு வாலைத் தொட்டு வணங்க வேண்டும்.
38. நாட்டியம் பயில்வோரும் இசை பயில்வோரும் *நந்தியை* வழிபட்டால் அவர்களின் கலைகள் தடையின்றி சிறந்து வளரும்.
*நந்தி வழிபாட்டுக்கான கிழமைப்பலன்*
*ஞாயிறு* - சுப மங்களத்தைத் தரும்.
*திங்கள்* - சோம சூத்ர பிரதட்சிணநாள்.
நல்ல சிந்தனைகள் தரும்.
பல அசுவமேத யாகங்கள் செய்த பலன்கிட்டும்.
*செவ்வாய்* - வறுமை விலகும்.
*புதன்* - புத்திரப் பேறு கிட்டும். கல்வி, கேள்விகளில் திறமை வலுப்பெறும்.
*வியாழன்* - குருவருளோடு, இறை அருள் கிடைக்க பித்ருக்கள் உதவுவார்.
அனைத்து ஆபத்தும் விலகிப் போகும்.
*வெள்ளி* - எதிர்ப்புகள் நீங்கும். எதிரிகள் வலுயிழப்பார்கள்.
*சனி* - *மகா பிரதோஷ நாள். பதவி உயர்வு வரும்.*
*அஷ்ட லக்ஷ்மிகளின் பரிபூரண ஆசி கிடைக்கு*
🙏ஹர ஹர மஹா தேவா 🙏
. 🙏திருச்சிற்றம்பலம்🙏
. 🙏ஓம் நமசிவாய🙏
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.