Tuesday 12 July 2016

பிரச்னைகளுக்கு நிவாரணி

👌�👌�👌�🙏�🙏�🙏�🙏�👌�👌�👌�

       *பிரச்னைகளுக்கு நிவாரணி*

           🙏� *ஓம் சிவசிவ ஓம்* 🙏�

எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் *“சிவசிவ”* என்று போட்டிருப்பார்கள்.

இதில் அனேக உட்பிரிவுகள் உண்டு.

அவைகள் சிவ தீட்சை பெற்றவர்களுக்குத்தான் தெரியும்.

மந்திரங்களில் ஜெபிக்க எளிதானது சிவமந்திரம்தான்.

நமசிவாய,
சிவாயநம,
சிவாயசிவ,
சிவசசிவ ,

இவைகளை ஒரு பக்குவம் அடைந்தவர்கள் தான்,

தகுதி பெற்றவர்கள் தான் ஜெபிக்க வேண்டும்.

இல்லாவிட்டால், . . .

எதிர்மறை விளைவுகள் உண்டாகும்.

மந்திர சக்தியும் வேண்டும்,

குடும்பத்திலும் இருக்க வேண்டும்,

அனுஷ்டானங்களும் செய்யமுடியாத நிலை இக்கால வேகமான வாழ்க்கை நிலை என்பது அனைவரும் அறிந்ததே!!!

இது சம்பந்தமாக,
பல சிவனடியார்களை அணுகி, அடிபணிந்து வேண்டிக் கொண்டதில் ஒரு எளிமையான மந்திரம் கிடைத்தது.

*அம்மந்திரம் தான் . . . ,*

🙏 *�“ஓம் சிவசிவ ஓம்”* 🙏�

*இதை ஜாதி மத இனப் பாகுபாடின்றி யார் வேண்டுமானாலும் ஜபிக்கலாம்.*

ஒரே தகுதி சைவ உணவு பழக்கமும்,

எந்த உயிரையும் துன்புறுத்தாத ஜீவகாருண்ய உணர்வும் மட்டுமே இருந்தால் போதும்.

இதற்கு தீட்சை பெற வேண்டியதில்லை;

*ஓம் என்னும் அட்சரத்தில் ஆரம்பித்து ஓம் என்னும் அட்சரத்தில் முடிவதால்,*

*குடும்பஸ்தர்களுக்கு ஏற்றது.*

அவர்களுக்கு அருளும் பொருளும் ஒருங்கே கிடைக்கும்.

எல்லா மந்திரங்களும் இதில் அடக்கம் என்பதால்,
வேறு எந்த மந்திரம் ஜெபிக்க வேண்டியதில்லை.

முதலில் *குலதெய்வத்தை* வணங்கிக் கொள்ள வேண்டும்.

அது தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்தை வழிபடவேண்டும்.

பிறகு *விநாயகரை* வழிபட வேண்டும்.

பிறகு *தினமும் காலை 108 முறையும்,*

*மாலை 108 முறையும்*,

*ஓம் சிவசிவ ஓம்* என்ற மந்திரத்தை ஜபித்து
கொண்டே வரவேண்டும்.

ஒரு சில நாட்களிலேயே நமது நீண்ட காலப் பிரச்னைகள்,
நோய்கள் தீர ஆரம்பிக்கும்.

உடனே விட்டுவிடக்கூடாது.

அமைதியான மனநிலையில் தான் இந்த மந்திரம் ஜெபிக்க வேண்டும்.

நம்பிக்கைதான் முதலீடு.

*ஒரு அமாவாசையன்று இந்த ஓம் சிவசிவ ஓம் மந்திரத்தை ஜபிக்க ஆரம்பிக்கலாம்.*

21 வயதிற்கு மேற்பட்ட எவரும் இந்த மந்திரத்தை தினமும் ஜபித்துவரலாம்.

பவுர்ணமி,
அமாவாசை,
சிவராத்திரி,
தமிழ் மாதப்பிறப்பு,

தமிழ் வருடப்பிறப்பு நாட்களில் இந்த மந்திரத்தை ஜபிக்க பலகோடி மடங்கு பலன்கள் கிடைக்கும்.

எந்த மலையில் இருந்தாலும்,

எந்த கடலில் இருந்தாலும்,

எந்த வனத்தில் இருந்தாலும் இந்த மந்திரம் உங்களைக் காப்பாற்றும்.

சூட்சுமமாக இயங்கும் சிவ கணங்கள் வந்து உங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும்.

அதுவும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும்போது இந்த *ஓம்சிவசிவஓம்* மந்திரத்தை ஜபித்து கொண்டு சென்றால்,

*அடுத்த சில நாட்களில் கர்மப்பிரச்னைகள் திடீரெனத் தீரும் என்பதை அனுபவத்தில் உணரலாம்.*

பொதுவாக நடக்கும்போது எந்த மந்திரத்தையும் ஜபிக்கக்கூடாது என்பது விதி.

மீறி மந்திர ஜபம் செய்தால், விபத்து ஏற்படும்,

வாகனங்கள் ஓட்டும்போதும் இதேபோல் மந்திரஜபம் ஜபிப்பது கூடாது.

ஆனால், திருவண்ணாமலை கிரிவலத்தின் போது நமது வழிபாடே கிரிவலமாக இருப்பதால்,

அப்போது மட்டும் இந்த *ஓம்சிவசிவஓம் மந்திரம்* ஜபிக்கலாம்.

பதவி உயர்வு, பதவி வேண்டுவோர் *ஞாயிறு* இதை நோன்புடன் ஜெபிக்க வேண்டும்.

                   🙏�

நல்ல வாழ்க்கைத்துணை வேண்டுவோர் *திங்கள் கிழமை* நோன்புடன் இதை ஜபிக்க வேண்டு.

                   🙏�

தீராத நோய்கள் தீர *செவ்வாய்க்கிழமை*
யன்று நோன்பு இருந்து ஜபிக்கவேண்டும்.

                   🙏�

கல்வி, வித்தைகளில் நல்ல தேர்ச்சியடைய *புதன் கிழமைகளில்* நோன்புடன் ஜபித்துவரவேண்டும்.

                   🙏�                 

ஆத்மஞானம் பெற வேண்டின் *வியாழக்கிழமைகளில்* நோன்பு நோற்று ஜபிக்க வேண்டும்.

                   🙏�

பண நெருக்கடி நீங்கவும்,
செல்வ வளம் பெருகவும் *வெள்ளிக்கிழமைகளில்* நோன்பிருந்து இந்த *ஓம் சிவசிவ ஓம்* மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
கண்திருஷ்டி ,

                  🙏�

செய்வினைக் கோளாறு,
மனக்கோளாறு நீங்கிட *சனிக்கிழமைகளில்* நோன்பிருந்து இந்த *ஓம்சிவசிவஓம்*மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

விபூதி,ருத்திராட்சம் போன்ற அருட்சாதனங்களை அணிந்து எந்த மந்திரம் ஜபித்தாலும் உடலில் மின் அருட்சக்தி கூடிவிடும்.

*சிவபெருமானின்*
*திருவாதிரை* நட்சத்திரம் நிற்கும் நாளில் அல்லது *மாத சிவராத்திரியன்று* அல்லது *மாதப் பிரதோஷம்* அல்லது *சனிப்பிரதோஷம்*அன்று திருவண்ணாமலைக்கு வந்து,

உடலெங்கும் விபூதி பூசி,
கழுத்தில் ருத்திராட்சம் அணிந்து, வேட்டி மட்டும் கட்டிக்கொண்டு, விரதமிருந்து (சாப்பிடாமல்) கிரிவலம் செல்ல வேண்டும்.

அப்படி கிரிவலம் செல்லும் ,
14 கி.மீ.தூரம் முழுக்க ,
(சுமார் 6 மணி நேரம்) *ஓம் சிவசிவஓம்* என ஜபித்து ஒரு முறை இப்படிச் செய்தாலே,

*நமது ஊழ்வினை தீர்ந்துவிடும்*

நாத்திகர்கள் கூட இதை ஆராய்ச்சிக்காக செய்து பார்க்கட்டும்,

மேல்நாட்டு இண்டாலஜிஸ்டுகளும் இதை பரீட்சித்துப் பார்க்கலாம்;

*ஆன்மீக அன்பர்களும் இதை சக்திவாய்ந்த வழிபாடாக,*
*ஒரு தவமாக செய்து மனநிம்மதியும் செல்வச் செழிப்பும் நிறைந்த வாழ்க்கையைப் பெறமுடியும்.*

     *ஓம் ஈஸ்வரா சரணம்*

🙏ஹர ஹர மஹா தேவா 🙏

.   🙏திருச்சிற்றம்பலம்🙏

.     🙏ஓம் நமசிவாய🙏

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.