Wednesday 30 March 2016

முழுமையாக அனுபவி !!!!

முழுமையாக அனுபவி !!!!

உனக்கு வசிக்க ஒரு மாளிகை கிடைத்ததா?

அனுபவி.

கிடைக்கவில்லையா?

ஒரு குடிசையாக இருந்தாலும் ஆனந்தமாயிரு.

அந்த குடிசையே மாட மாளிகையாகி விடும்.

வேறுபாடு என்பது அதை அனுபவிப்பதில்தான் இருக்கிறது.

ஒரு மரத்தடியில் இருக்க நேர்ந்தாலும் அங்கேயும் ஆனந்தமாய் இரு.

சூரிய ஒளி, காற்று, தென்றல் , வண்ணமலர்கள், அந்த மரம்,

வானம் ,

அனைத்தையும் அனுபவிக்க தவறிவிடாதே.

மாட மாளிகையில் இருந்தால் அந்த மாளிகையில் இருக்கும்

பொருள்களை ரசி. சரவிளக்கையும், சலவைக்கல் தரையையும் கண்டுகளிக்க தவறாதே.

நீ எங்கே இருந்தாலும் அங்கங்கே அதை  நீ அனுபவி.

எதையும் உடமையாக்கி கொள்ளாதே.

எதுவும் நமக்கு சொந்தமில்லை.

வெறும் கையேடு இவ்வுலகத்திற்கு வந்தோம்.

வெறும்கையோடு இந்த உலகை விட்டு போகப்போகிறோம்.

இந்த உலகம் உனக்கு அளிக்கப்பட நன்கொடை.

அது இருக்கும் பொழுதே அனுபவித்து விடு.

இந்த பிரபஞ்சம் உனக்கு தேவையானவற்றை எப்போதும் கொடுத்துக் கொண்டே இருக்கிறது என்பதை நினைவில் வை.

தன்னைப் பற்றிய புரிதலும்,

விழிப்புணர்வும் உள்ளவர்களுக்கு

ஒழுக்கம் சார்ந்த போதனைகள் எப்போதுமே தேவையில்லை.

காரணம் விழிப்புணர்வு பெற்ற மனிதன் தன்னைத் தானே பார்த்துக் கொள்கிறான்.

---ஓஷோ ---

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.