Thursday 29 October 2015

தர்மம்

உலகின் நான்கு திசைகளிலும் பிரயாணம்
செய்தாலும், உண்மையான தர்மத்தை ஓரிடத்திலும்
காண முடியாது. தர்மம்
என்பது அவரவர் மனதைப் பொறுத்த விஷயம்.
* எல்லா மனிதர்களிடமும் இறைவன் இருக்கிறான்.
ஆனால், இறைவனிடத்தில் எல்லா மனிதர்களும்
இல்லை. இதனால் தான் மனிதர்கள் துன்பப்படுகின்ற
னர்.
* பிறர் மீது குற்றம் கண்டுபிடித்துப் பொழுதைக்
கழிப்பவன் தன் வாழ்நாளை விரயம் செய்தவன்
ஆகிறான்.
* இறைவனை வெளியில் தேடுவது அறியாமை.
தனக்குள்ளே இறைவன் இருப்பதை உணர்வதே
அறிவுடைமை.
* கனிகள் நிறைந்த மரம் கனத்தினால் தாழ்ந்து
வளையும். அதுபோல செல்வச்செழிப்பு மிக்க
பணக்காரனும் அடக்கத்துடன் நடந்து கொள்ள
வேண்டும்.
* பணம் எவனுக்கு அடிமையோ, அவன் தான்
உண்மையான மனிதன். பணத்தை எப்படி
உபயோகிப்பது என்பதை அறியாதவர்கள் மனிதனாக
வாழத் தகுதியற்றவர்கள்.
- ராமகிருஷ்ணர

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.