Thursday 29 October 2015

கடவுள் கிட்ட பேச

கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே
பேசறது ?
ஒரு ஆசிரமம் .அங்கே ஒரு குருநாதர் இருந்தார்
, அவரை தேடிகிட்டு போனான் ஒருத்தன்
.குருநாதர் அவனை நிமிர்ந்து பார்த்தார்
உனக்கு என்ன வேணும் ? ன்னு கேட்டார்
ஐயா நான் கவுளை பார்க்கணும் சொன்னான்
அதுக்கு ஏன் என்னை தேடிகிட்டு வந்தே ?
ன்னு கேட்டார்
விவரம் தெரிஞ்சுகிட்டு போகலாம் ன்னு
வந்தேன் , கடவுளை எப்படி பார்க்கிறது ..
எப்படி அவரோட பேசறது ? எந்த மொழியில
பேசணும் ? இதெல்லாம் தெரிஞ்சுகிட்டு
போகலாம் ன்னு வந்தேன் .. ன்னு சொன்னான்
சரி புறப்படு ! ன்னார்
எங்கே ? ன்னான்
இங்கே இருக்கிற சீடர்கள் சில பேரை
பார்த்துட்டு வரலாம் .. வா -- அப்படின்னு
சொல்லி அவனை அழைச்சிட்டு புறப்பட்டார் .
இவன் அவர் பின்னாடியே போனான் .அங்கே
ஒரு மரத்தடியில் இரண்டு சீடர்கள் உக்கார்ந்து
பேசிகிட்டு இருந்தாங்க
அவங்களை சுட்டி காட்டி ," அதோ பார் அவங்க
என்ன செஞ்சுகிட்டுருக்காங்க ?-
அப்படி ன்னு கேட்டார்
ஒருத்தன் இன்னொருவன் கிட்ட பேசிகிட்டு
இருக்கான் ! ன்னான்.
அடுத்தபடியா இன்னொரு மரத்தடியில் ஒரு
சீடன் , தனியா உக்கார்ந்து இருக்கான்
அவனை சுட்டி காட்டி ," அதோ பார் அவன்
என்ன செஞ்சிகிட்டு இருக்கான் ? ன்னு கேட்டார்
அவன் என்ன சும்மாதான் இருக்கான் -
அப்படின்னான்
குருநாதர் சிரிச்சி கிட்டே விளக்கம் கொடுத்தார்
முதல் மரத்தடியிலே பாத்தியே .. அங்கே ஒரு
மனிதன் இன்னொரு மனிதனோடு பேசி
கொண்டிருந்தான்
"இரண்டாவது ஒரு மரத்தடியிலே பாத்தியே
அங்கே ஒரு மனிதன் கடவுளோடு பேசி
கொண்டிருக்கிறான் " - அப்படின்னார்
இதை கேட்டதும் இவன் இன்னும் குழம்பி
போயிட்டான்
என்ன சொல்றிங்க ? ன்னான்
அவர் சொன்னார் :
" இதோ பாருப்பா .. ஒரு மனிதன் இன்னொரு
மனிதனோடு பேசணும் னா
அதுக்கு மொழிதான் தொடர்ப்பு சாதனம் .
ஒரு மனிதன் கடவுளோடு தொடர்பு கொள்ள
அதுக்கு " மௌனம் " தான்
தொடர்பு சாதனம் .
அதனாலே நீ கடவுளோட தொடர்பு கொள்ள
விரும்பினால் மௌனமாக இரு ..
மனிதனோட தொடர்பு கொள்ள விரும்பினால்
நீ
பேசு ! அப்படின்னார் .
வந்தவன் யோசிக்க ஆரம்பிச்சான் கடவுளோடு
எந்த மொழியிலே பேசணும்ங்கறதையும்
புரிஞ்சுகிட்டான் . அந்த கடவுள் தனக்குள்ளே
இருக்கிற ஓர் உண்மை - அப்படிங்கிறதையும்
புரிஞ்சுகிட்டான் .

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.