Friday 22 July 2016

மலர் மருத்துவம்

மலர் மருத்துவம் எப்படி தோன்றியது?
பிரபல ஆங்கில மருத்துவரான டாக்டர் எட்வர்ட் பாட்ச் என்பவர் லண்டனில் பிறந்து வளர்ந்தவர் . அவர் அலோபதி மருத்துவராக தொழில் புரிந்து வந்தார். ஆனால் அவர், தான் கொடுக்கும் அலோபதி மருந்துகள் நன்மையை விட தீமைகளே அதிகம் விளைவிக்கின்றன என்று அனுபவ ரீதியாக ஆய்ந்து உணர்ந்தார். அத னால் ஹோமியோபதி மருத்துவ முறையால் கவரப்பட்டு ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் சேர்ந்து முறையாக பயின்று ஹோமியோ மருந்துகளை கையாண்டு வெற்றி கண்டார். நோயாளியை முழுமையாகக் குணமாக்குகிறோமென்ற மனமகிழ்ச்சி கொண்டார். இருப்பினும் ஹோமியோபதி முறையை இன்னும் சுலபமாக்க வேண்டுமென்று ஆராய்ச்சியில் ஈடுபட்டார் .எந்த ஒரு வியாதிக்கும் மூல காரணமே மனம்தான். மனதிலிருந்தே வியாதிகள் உருவாகின்றன என்று ஆய்வின் முடிவில் அறிந்து கொண்டார்.அதனால் மனதைச் சரிப்படுத்தினால் உடல் நோயும் குணமாகிவிடும் என்ற உறுதிபாட்டினால் மனதில் வேலை செய்யக் கூடிய மருந்துகளை ஆராய்ந்தார்.-மலைகள்,காடுகள அலைந்து, அங்குள்ள மலர்களையும்,மூலிகைகளையும் தாமே தின்று பரிசோதித்து உணர்ந்தார்.அதன் பின் அவர் உண்டு பரிசோதித்தவைகளை மற்றவர்களுக்கும் கொடுத்து பரிசோதித்தார்.அந்தவகையில் மனதை ஒழுங்குபடுத்தக் கூடிய 38 வகையான மலர் மருந்துகளை தயாரித்தார்.இம்மலர் மருந்துகளை தனியாகவோ,அல்லது ஹோமியோபதி மருந்துகளுடனோ கொடுத்ததில் சிறப்பாக குணமளித்ததை உணர்ந்தார்.
மலர் மருந்தின் மகத்துவம்
ஹோமியோ மருந்தும் இந்த புதிய மலர் மருந்தும் சேர்த்து பயோ மருந்துகளோடு,இணைத்து மனித சமுதாயத்திற்கு பெரும் தொண்டாற்றுகின்றன. எந்தவித பின்விளைவு இல்லை ,உணவு கட்டுப்பாடும் இல்லை இந்த மருந்துகள் எதுவும் நேரடியாக உடலின நோய்களுக்கு கொடுக்கப்படுவதி
ல்லை. நோயாளியின் மனப்போக்கை அல்லது மன இயல்பை அறிந்தே கொடுக்கப்படுகிறது. உதாரணமாக மனத்தளர்ச்சி, பயம், வருத்தம், கோபம், விருப்பு, வெறுப்பு-போன்ற மனரீதியான பலவீனங்களின் அடிப்படையிலேயே தேர்வு செய்து கொடுக்கப்படுகிறது. இதனால் நோயாளியின் வேண்டத்தகாத , விரும்பத்தகாத குணங்குறிகளை நீக்குவதுடன், அந்நோயாளியின் வியாதிகளும் முமையாக நீங்குகின்றன. அவர் மனதிற்கும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. வாழ்க்கையிலும் நல்லமுறையில் முன்னேறுகிறார்கள்.
மலர் மருந்து தயாரிக்கும் முறை
மருந்து தயாரிப்பிற்கான மலரை டிஸ்டில்ட் வாட்டரில் போட்டு ஒரு பகல் முழுவதும் வெய்யிலில் வைத்திருந்தால் இதில் சூரிய சக்தி ஊடுருவி நோயைக் குணப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கிறது. அதன் பின் அந்நீரை வடிகட்டி-அதில் சமபாகம் சுத்த மது சாரத்தை விட்டு கலக்கி வைத்துக் கொண்டால் இதுவே தாய்த்திரவம் ஆகும். அல்லது இதில் ஒரு பங்கும், 99 பங்கு சுத்த மது சாரத்தை விட்டுக்குலுக்கினால் அது வீரியப்படுத்தப்பட்ட மருந்தாகிறது. இதுவே மனதில் நன்றாக வேலை செய்து உடல் வியாதிகளையும் போக்குகிறது.
எந்த ஒரு மனிதனுக்கும் ஒரு இணக்கமான, ஒத்தான மனசு இல்லாவிட்டால் அதுவே மன எழுச்சிகளாகவும்,வெறுக்கத்தக்க குணங்களாகவும் மாறி பல்வேறு குணங்குறிகளை கொண்ட உடல் நோய்கள் உண்டாகிறது.தொடர்ந்து நீண்டகாலமாக இருக்கும் மனக்கவலை, மன வருத்தம், மனப்பயம், கோழைத்தனம், காதல் தோல்வி, வியாபார நஷ்டம், தேர்வில் தோல்வி – முதலியவைகள் சம்மந்தப்பட்டவரின் உயிர்சக்தியை கொஞ்ச கொஞ்சமாக உறிஞ்சி அவரை நோயாளியாக்குகிறது. தொடர்ந்து இவ்வாறு விரும்பத்தகாத குணங்களும், உணர்ச்சிகளும் உடல் இயக்கத்தை கெடுத்து, உடல் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் இரத்தத்தைக் கெடுத்துவிடுகிற
து.அதன் விளைவாக அவரது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடுகிற
து. இதனால் அவ்வப்போது ஜலதோஷம்,மூட்டு வலி,மலச்சிக்கல், ஜீரணக்கோளாறு, உயர் ரத்த அழுத்தம் என இனம் காணமுடியாத நோய்க்குறிகள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கிறது. இவ்வியாதிகள் திரும்ப திரும்ப வந்து கொண்டேயிருக்கிறது. உதாரணமாக ஒருவருக்கு ஜலதோசம் பிடித்ததற்கு மருந்து கொடுத்தால் அது அப்போது சரியாகி மீண்டும் திரும்ப ஜலதோஷம் பிடிக்கிறது. இந்த ஜலதோஷத்திற்கு என்ன மூலக்காரணம் என்றால் – அதுதான் அவருடைய உளவியல் சார்ந்த பிரச்சனையாகும். இம்மன வியாதிக்கு மருந்து கொடுக்காத பட்சத்தில் அவர் நிரந்தர நோயாளியாகிவிடுகிறார்.
பேசத்தெரியாத குழந்தைகளுக்கு மருந்து தேர்ந்தெடுப்பது எப்படி?
பேசத்தெரிந்தவர்களிடம் அவர்களின் மனக்கோளாறுகளை, உடல் கோளாறுகளை கேட்டறிந்து விடுகிறோம். ஆனால் பேசத்தெரியாத குழந்தைகளுக்கு எப்படி மருந்து கொடுப்பது? குழந்தைகள் பொய் சொல்லத் தெரியாதவர்கள் அவர்களின் நடவடிக்கைகளே , உடல் அசைவுகளே, அவர்களுடைய உண்மையான இயல்புகளை காட்டிவிடும். உதாரணமாக ஒரு குழந்தையை தூக்கிவைத்துக்கொண்டால், அதனிடம் விளையாடினால் பேசாமலிருக்கும். இது சிக்கரி என்னும் மருந்து கொடுக்கப்பட வேண்டிய குழந்தையாகும். மற்றொன்று குழந்தை,எதை கண்டாலும் பயந்து வீச்சென்று கத்தும்,தன் வீட்டிலுள்ள பூனை, நாய், கன்றுபசு என எதைக் கண்டாலும் பயந்து நடுங்கும். யாரேனும் புதிய உறவினர்கள் வந்தாலும் அவர்களைக் கண்டதும் கதறி அழும் .இதற்கு “மிமுலஸ்”இதற்கு எனும் மருந்து கொடுக்கப்பட வேண்டும். மற்றொரு குழந்தை எந்த தொந்தரவும் யாருக்கும் கொடுக்காது. போட்டது போட்டவாக்கில் எந்த நேரமும் தூங்கிக்கொண்டேயிருக்கும்.பசி எடுக்கும் ஆனால் பால் குடிக்க ஆர்வம் இருக்காது.இப்படிப்பட்ட குழதைக்கு “க்ளமாடிஸ்”என்னும் மருந்து கொடுத்தால்-நல்ல குணமாகும். எனவே இது போன்றே இம்மருந்துகள் ஒவ்வொருவருடைய மனநிலைக்கு ஏற்றவாறு கொடுக்கப்படுகிறது. மனநிலைக்கு மருந்து கொடுப்பதினால் உடல் நலமும் ஏற்படுகிறது.
மனிதரின் மனக்குறிகளுக்கேற்ற மலர் மருந்து
அநியாயத்தால் ஏற்பட்ட துக்கத்தை மனதிற்குள் அடக்கிக் கொள்வோர் அநேகம் பேர் இவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “அக்ரிமனி”.
எல்லாவற்றையும் இழந்து,அநாதையாகி விட்டோம் எறு உணர்ந்துள்ள மனிதர்களும் உள்ளனர்.அவர்களுக்கும் உடல் உபாதைகள்.அப்படிப்பட்ட மனநிலை உள்ளோருக்கு கொடுக்கப்பட வேண்டி மலர் மருந்து “ஆஸ்பென்”
அநேகம் பேர் அநாவசியமாக உடல் பலத்தை செலவழித்து அதனால் உடல் உபாதைகளுக்கு ஆளாவார்கள் .அப்படிப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “ஆலிவ்”
அறிவிருக்கும்,அவர்களிடம் திறமையும் இருக்கும். ஆனால் பொறுமையிருக்காது.அதனால் மனநலம்,உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பர்-அவருக்குரிய – மருந்து “இம்பேசன்”
வீட்டிலும் சரி,அலுவலகத்திலும் சரி தனக்கு ஏற்கனவே ஒதுக்கிய வேலையை மட்டும் செய்வார்.சமயம் சந்தர்ப்பத்துக்கு கூடுதலான சமயம் என பொறுப்பை கொடுத்தால் அதை ஏற்கமாட்டார்.அதனால் அவருடைய உடல் நலம் மனநலம் பாதிக்கப்படும் அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “எல்ம்
ஒருவேலையும் ஒழுங்காக செய்யமாட்டார்.இதில் கொஞ்சம் மற்றொன்றில் கொஞ்சம் என மனம் மாறி கொண்டேயிருக்கும்.எதிலேயும் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி ஒரே வேலையில் கவனம் செலுத்த முடியாதவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “ஒயிட் செஸ்ட்நட்”
இவருக்கு தன் தொழிலை மாற்றுவதுதான் தொழில் ஒவ்வொரு மணி,நாள்,வாரம்-என தன் தொழிலை மாற்றிக்கொண்டு –அதனால் மனநலம் உடல் நலம் பாதிக்கப்பட்டவருக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “ஒயில்டு ஓட்”
ஊதாரி என்றால் ஊர்சுற்றும் ஊதாரிதான் .எதற்கும் லாயக்கல்ல.எதிலும் கொஞ்சம்கூட அக்கறையில்லாதவராய் இருப்பார் அவரின் மனநிலையை மாற்றி-பொறுப்பானவராக மாற்ற கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து “ஒயில்ரோஸ்”.
கடினமாய் உழைப்பார் ஆனால் அதற்கான ஊதியம் கிடைக்காது விடாமல் படிப்பார்,ஆனால் பரீட்சையில் பாஸ் பண்ணமாட்டார்.உழைப்புக்கு உதாரணமாய் இருப்பார்.அவர் வாழ்க்கையில் எந்த வெற்றியும் காணமாட்டார்.அதனால் ஏற்பட்ட மனநிலை கோளாறுகளுக்கும்
,உடல்நிலை கோளாறுகளுக்கும் கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து-“ஓக்” .
எதிலும் இவருக்கு அவநம்பிக்கைதான் -யாரையும் ம்பமாட்டார்.அவநம்பிக்கை தான் அவரின் முதலீடு .அதனால் அன்றாடம் அநேக பிரச்சனை சந்திப்பார்.அதிலிருந்து அவரை மாற்ற கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து-“கார்ஸ்”
இவர் எந்த நேரமும் சந்தோசமாக இருப்பார்-அதற்கு காரணம் அவரது எண்ணங்களில் ஏற்படும் கற்பனை தான்.அதை அப்படி செய்யலாம். இதை இப்படி செய்யலாம் என்று கற்பனையில் மிதந்தே தன் காலத்தை ஓட்டுபவர்.இவரை உழைப்பில் ஈடுபடுத்த கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து-“கிளமாட்டிஸ்”.
எங்கும் எதிலும் சுத்தம் பார்ப்பவர்,இவர் எதை பார்த்தாலும் அருவருப்படைபவர். சுத்தமான பொருளையும் சுத்தம் செய்துதான் சாப்பிடுவார்.இதனால் சமூகத்தில் இவர் சந்திக்கும் பிரச்சைனைகள் ஏராளம்.அவரின் மனநிலை மாற்ற கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து –“கிராப் ஆப்பிள்”.
எதிலாவது ஏதாவது கிடைக்குமா?என ஏங்குபவர்,அவரின் சுயநலமே அவரைச் சுற்றிசுற்றி வரும்.அப்படிப்ப
ட்டவரின் மனநிலையை மாற்ற கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து-“சிக்கரி”.
மற்றவர்களுக்கு சேவை செய்தே ஏமாறும் ஏமாளி-தன் முன்னேற்றத்தைப் பற்றி கொஞ்சம் கூட நினைத்து பார்க்க மாட்டார்.கவலைப்
பட மாட்டார்.இந்த ஏமாளிக்கு ஏற்ற மலர் மருந்து-“சென்டாரி”.
தன்னிடம் நிறை திறமை இருக்கும் ஆனால் அத்திறமையைப் பற்றி அறியமாட்டார்-எதற்கெடுத்தாலும் பிறரின் ஆலோசனைப்படிதான் நடந்து கொள்வார்.அதனால் பல துன்பங்களை அனுபவிப்பார்.தன் திறமையை உணர –சாப்பிடவேண்டிய மலர் மருந்து-“செரட்டோ”.
இவரின் மனநலத்தை ,உடல்நலத்தை ,இவரால் கட்டுப்படுத்த முடியாது.நரம்பு மண்டல கோளாறுகளுக்கு ஆளாவர்.இவருக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து –“செர்ரிப்பளம்”
.
போதுமான வயது இருக்கும்,ஆனால் அதற்கேற்ற அறிவு வளர்ச்சி இருக்காது.நிறைய படித்திருப்பார் ஆனால் பண்பாடு இருக்காது.அப்பட
ிப்பட்டவருக்கு கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து “செஸ்ட் நட் பட்”.
தன் ஒழுக்கம், தன் கட்டுபாட்டை கடைபிடிப்பவர்.மற்றவர்களுக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் என விரும்புவர்.அப்படியே மற்றவர்களும் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்ப்பார்ப்பவர்.எதிர்பார்ப்ப
ு ஏமாற்றமானால் என்னவாகும்-மனநி
லை பாதிக்கும்.அத்தகையோருக்கு கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து “பீச்”.
தன்னம்பிக்கை இல்லாதவர்களும் இவ்வுலகில் உண்டு.அவர்களுக்கேற்ற மலர் மருந்து-“லார்ச்”.
தன்னையும்,தன் ஆத்ம சக்தியை அறியாதவர்கள் அநேகம் பேர்-அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து –“மஸ்டார்டு”.
பயப்படும் சூழ்நிலையில் வாழ்வோருக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “மிமுலஸ்”.
இயற்கை சீற்றங்களுக்கும்,மற்றவர்களின் மிரட்டல்களுக்கும் பீதியடைபவர்.சின்ன சின்ன விவசாயங்களுக்கெல்லாம் பீதியடைவார்.அவரை தேற்ற கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து-“ராக்ரோஸ்”.
தன்னளவில் கடுமையான ஆச்சாரங்களை கடைபிடிப்பவர்.கல் மனம் என்பார்களே ,அவர் மனமும் அப்படிதான்.அவருக்குரிய மலர் மருந்து-“ராக் வாட்டர்”.
தன் துயரம் கண்டுகொள்ளமாட்ட
ார்.ஆனால் தம் உற்றார் உறவிர்களின் துன்பம் கண்டு கலங்குபவர்.என்ன
ாகுமோ என பயப்படுபவர்.இவர
ுக்குரிய மலர் மருந்து “ரெட் செஸ்ட் நட்”.
நோய் எதிப்பு ஆற்றல் அறவே அற்றவருக்கு கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து-“வால் நட்”.
தன்னைவிட யார் உயர்ந்தவர்-தனக்குள் அடக்கம் தான் யாவரும் என்ற எண்ணமுடையவருக்க
ு கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து-“வாட்டர் வயலட்”.
பிறரை அடக்கியாள நினைக்கும் கர்வமுடைய சர்வாதிகாரி.இவர
ுக்கேற்ற மலர் மருது “வைன்”.
கொஞ்சம் கூட சளைக்கமாட்டார்.ஓய்வே தேவைப்படாது.அதுவும் அதிக ஆர்வத்துடன் கடுமையாக உழைத்துக் கொண்டேயிருப்பார்.இவருக்கு கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து ”வெர்கூஷவன்”.
பிறரை குற்றம் சொல்வதே வேலை.ஆனால் தான் கற்றுக் கொள்ளாதவர்.தன் தவறுகளை திருத்திக்கொள்ள மறுப்பவர்.அவரை நியாயப்படுத்தி பேசுபவர் கொஞ்சம் கூட மாறமாட்டார்.”வில்லே” என்ற மலர் மருந்து கொடுத்தால் இவரை மாற்றி விடும்.
தனக்கு ஏற்படும் சாதாரண தோல்விகளையும், தடைகளையும் கண்டு கலங்கி துவண்டு போய்விடுவார். ” ஜென்சியன்”என்ற மலர் மருந்தை இவருக்கு கொடுத்தால் தேறிவிடுவார்.
கடந்தகால சம்பவங்களை நினைத்து வருந்தி கொண்டிருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டிய மலர் மருந்து ”ஹனிசக்கிள்’.
”ஹார்ன்பீம்” என்ற மலர் மருது மிக அதிக அளவில் சக்தியை இழநதவர்களையும்,மனச்சோர்வு உடையவர்களையும் தேற்றிவிடும்.
எதிலும் முன்னெச்சரிக்கை உடையவர்.கொஞ்சம் கசப்பு,வெறுப்பு
டன் பழகுபவர்.இவருக்குரிய மலர் மருந்து”ஹால்லி”.
சாவு இடத்திலே கூட தன்னைப்பற்றியே பேசுவார். ”ஹீதர்”என்ற மலர் மருந்து அவரை அற்புதமாக மாற்றி விடும்.
இரண்டு மனதிற்கு சொந்தக்காரர்.கு
ழப்பத்திலே மிதப்பவர்.”ஸ்கிளராந்தஸ்” என்னும் மலர் மருந்து அவரை மாற்றிவிடும்.
அதிர்ச்சிக்குள்ளானவரை “ஸ்டார் ஆப் பெத்லஹேம்” என்ற மலர் மருந்து அற்புதமாக மாற்றிவிடும்.
உதவி செய்யத் தெரியாமல்,உதவப்
போய் தலைகுனிவை ஏற்படுத்திக் கொள்பவர்களை- “பைன்” என்ற மலர் மருந்து தேற்றிவிடும்.
எந்த துயரம் வந்தாலும் யாரையும் அழைக்கமாட்டார்.ஏன் இறைவனையும் அழைக்கமாட்டார். “ஸ்வீட் செஸ்ட்நட்”என்னும் மலர் மருந்து அவருக்கு ஆறுதல் சொல்லும்
மலர் மருந்து உட்கொள்ளும் அளவு விகிதம், நேரம்
மலர் மருந்தில் ஒரு துளியை அரை அவுன்ஸ் தண்ணீரில் கலக்கி ஒரு வேளை மருந்தாக சாப்பிடலாம்,இப்படி ஒரு நாளைக்கு பல முறை சாப்பிடுவதில் சிரமம் இருப்பின், மாத்திரையாகவும் உபயோகிக்கிலாம்.
பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட பால்சர்க்கரை உருண்டை (மாத்திரை) கடுகு அளவுகளிலிருந்து குண்டுமணி அளவு மாத்திரைகளும் கிடைக்கின்றன. குண்டுமணி அளவு மாத்திரை ஒரு வேளைக்கு இரண்டும்,நடுத்தர மாத்திரைகள் நான்கும்,கடுகளவுள்ள மாத்திரைகள் எட்டும் சாப்பிடுவது சரியானதாகும்.சிறுவர்களுக்கு இதில் பாதி கொடுத்தாலே போதும்.சகல மலர் மருந்துகளுக்கும் ஒரே அளவு தான். ஹோமியோ,பயோ மருந்துகளைப் போல் இம்மருந்துகளிலும் நச்சுத்தன்மையில்லை.எனவே அளவு அவ்வளவு முக்கியமல்ல. பிறந்த குழந்தை முதல் யாவரும் அவரவர் குணம் குறிகளுக்கு ஏற்ப மருந்து தேர்வு செய்து கொடுக்கப்படுகிற
து. நீடித்த வியாதிகளில் தினம் 4 முறையும்,தீவிர வியாதிகளில் 3 மணிக்கொரு முறையும்,ஆபத்தான சமயங்களில் 5-நிமிடங்களுக்கொரு முறையும் கொடுக்கப்படுகிறது. இதுபோன்று இம்மலர் மருந்துகளை தனியாகவும் கொடுக்கலாம் அல்லது ஹோமியோபதி மருந்துகள் கொடுக்கும்போதே இதையும் சேர்த்துக் கொடுக்கலாம்.இம்
மருந்துகள் தாழ்ந்த வீரியம் என்பதால் இவற்றை முழு குணம் கிடைக்கும் வரை கொடுக்கலாம்.ஆனால் அவசர நிலைமைகளில் ஒரு சில வேளைகளே போதும்.மலர் மருந்து தேர்வு உட் கொள்ளும் அளவு,விகிதம்,நேரம் இரண்டையும் ஒன்றாக்கவும்.
கட்டுரை: மேக்னம், தமிழ்நாட

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.