Tuesday 28 November 2017

பகவத்கீதையின் மிகச்சிறந்த வசனங்கள்

பகவத்கீதையின் மிகச்சிறந்த வசனங்கள் .....  ....             

1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.

அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது.

அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான்.

சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி.

இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை.

தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல.

அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.

11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு.

ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

12. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்,
துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது.

ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.

ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.

முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட,

என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.

19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை;

நாளைய பொழுதும் நிச்சயமில்லை;

இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி.

ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

23. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம்.

ஆனால் உங்க‌ளுக்குத் த‌குதியான‌து உங்க‌ளுக்குக் க‌ண்டிப்பாக‌க் கிடைத்தே தீரும்.

24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.

அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

Sunday 26 November 2017

வளமுடன் வாழ 108 சூத்திரங்கள்

வளமுடன் வாழ 108 சூத்திரங்கள்

1.    கடமையை செய்.
2.    காலம் போற்று.
3.    கீர்த்தனை பாடு.
4.    குறைகள் களை.
5.    கெட்டவை அகற்று.
6.    கேள்வி வேண்டும்.
7.    கை கொடு.
8.    கோவிலுக்குச் செல்.
9.    கொலை செய்யாதே.(ஆடு மாடு கோழி மீன்)
10.  கூச்சம் வேண்டாம்.
11.  தர்மம் செய்.
12.  தாயை வணங்கு.
13.  திமிர் வேண்டாம்.
14.  தீயவை பழகாதே.
15.  துன்பம் துரத்து.
16.  தூய்மையாய் இரு.
17.  தெளிவாக சிந்தி.
18.  தைரியம் வேண்டும்.
19.  தொண்டு செய்.
20.  தோழனை கண்டுபிடி.
21.  சத்துணவு சாப்பிடு.
22.  சஞ்சலம் போக்கு.
23.  சாதனை செய்.
24.  சிக்கனம் தேவை.
25.  சீருடன் வாழ்.
26.  சுத்தம் பேண்.
27.  சூழ்ச்சி செய்யாதே.
28.  செலவை குறை.
29.  நல்லவருடன் பழகு.
30.  சைவம் சிறந்தது.
31.  சொர்க்கம் தேடு.
32.  சோகம் வேண்டாம்.
33.  சோம்பல் அகற்று.
34.  செளந்தர்யம் சேர்.
35.  நம்பிக்கை கொள்.
36.  நிம்மதி பெரிது.
37.  நெஞ்சத்தில் நில்.
38.  நேர்மை கடைபிடி.
39.  உனமையாக பழகு.
40.  நொறுங்கத் தின்னு.
41.  நோயை விரட்டு.
42.  பண்புடன் பழகு.
43.  பாவம் செய்யாதே.
44.  பிதற்றல் குறை.
45.  பீடிகை போடாதே.
46.  புண்ணியம் சேர்.
47.  பூசல் நீக்கு.
48.  பெரியோரை மதி.
49.  பேதம் வேண்டாம்.
50.  பைந்தமிழ் பேசு.
51.  பொய் பேசாதே.
52.  முகத்தை சுழிக்காதே.
53.  மூத்தோற்கு உதவு.
54.  மெல்லப் பேசு.
55.  மேலானவை நினை.
56.  மோசம் செய்யாதே.
57.  மௌனம் நல்லது.
58.  வறுமை ஒழி.
59.  வளம் சேர்.
60.  விளையாட்டல்ல வாழ்க்கை.
61.  வீம்பு விலக்கு.
62.  ஒவ்வொன்றாக செய்.
63.  வருவோரெல்லாம் நண்பர்களல்லர்.
64.  வேற்றுமை ஒழி.
65.  வையகம் போற்று.
66.  கலைஞனாய் இரு.
67.  ஞானம் வேண்டு.
68.  குணம் வளர்.
69.  பண்ணிப் பார்.
70.  எண்ணுக உயர்வு.
71.  பயம் தவிர்.
72.  மெய்யூட்டி வளர்.
73.  மெய்யென பேசு.
74.  தன் கையே உதவி.
75.  தீயோடு விளையாடாதே.
76.  மலையோடு மோதாதே.
77.  தடத்தில் நட.
78.  விபரீதம் வேண்டாம்.
79.  கண்டு களி.
80.  அட்டூழியம் செய்யாதே.
81.  கேட்டேதும் பெறா.
82.  நாட்டை நேசி.
83.  வீட்டோடு வாழ்.
84.  வரம் கேள்.
85.  திருடி பிழைக்காதே.
86.  மேதாவித்தனம் வேண்டாம்.
87.  சொல்லுக பயனுள.
88.  பழங்கள் சாப்பிடு.
89.  சினம் தவிர்.
90.  அனுபவம் பலம்.
91.  கண்ணெனப் போற்று.
92.  திருடனே திருந்து.
93.  இறைவனைப் புகழ்.
94.  அமைதி கொள்.
95.  துக்கம் மற.
96.  பங்கம் பண்ணாதே.
97.  அன்பே அச்சாணி.
98.  கொஞ்சி மகிழ்.
99.  மட்டம் தட்டாதே.
100. சொந்தம் சூழ்ந்திரு.
101. தவறைத் திருத்து.
102. அம்மாவே தெய்வம்.
103. வர்மம் வைக்காதே.
104. சொல் தவறாதே.
105. தோள் கொடு.
106. பேராசைப் படாதே.
107. புன்னகை அணி.
108. நீடுழி வாழ்க

Thursday 16 November 2017

விழிப்புணர்வு

ஆயிரக்கணக்கான கேள்விகள் இருக்கலாம்,

ஆனால் அதற்கு ஒரே ஒரு பதில்தான்

உனது விழிப்புணர்வு

வாழ்க்கை என்பது இறுக்கம் அல்ல

மனித மனங்களை தவிர

வாழ்க்கை எப்படியோ அப்படியே ஏற்றுக்கொள்

வேறு ஏதாவதாக மாற்ற முயற்சிக்காதே

நீ நீதான்.

உன்னுடன் ஒப்பிடக்கூடியவர் யாருமில்லை

வாழ்வை இந்த ஒரு கணத்தில் முழுமையாக வாழ்வது எப்படி என்று உனக்கு தெரிந்துவிட்டால்

இந்த வாழ்வின் முழு இரகசியமும் உனக்கு தெரிந்துவிடும்

வாழ்க்கை அர்த்தமுள்ளதுமல்ல, அர்த்தமற்றதுமல்ல

வாழ்க்கை ஒரு வாய்ப்புதான்,

ஒரு வாசல்தான்

கொடுப்பவனாக இரு

உன்னால் கொடுக்கமுடிந்ததை பகிர்ந்துகொள்

அன்பு பயத்திற்கு நேர் எதிர் துருவமாகும்

வாழ்வு அன்பின் அடிப்படையில் இருக்கவேண்டும்,

பயத்தின் அடிப்படையில் இருக்கக்கூடாது

இந்த கணமே நீ அனைத்து பிரச்சனைகளையும் விட்டு விடமுடியும்

ஏனெனில் அவை நீ உருவாக்கியவைதான்

தேடுதல் அழிவற்றதை நோக்கியதாக இருக்கவேண்டும்

மேலும் ஒவ்வொருவருக்கும் அழிவற்றதை அனுபவப்படகூடிய ஆற்றல் இருக்கிறது

ஒவ்வொரு எண்ணமும் விடப்படவேண்டும்

அது நல்லதோ கெட்டதோ அது முக்கியமல்ல

எல்லா பயங்களுடனும் அறியாத்தின் சவாலை ஏற்றுக் கொள்வதே தைரியம்

பயம் அங்கிருக்கும்,

ஆனால் திரும்ப திரும்ப அந்த சவாலை ஏற்றுக்கொண்டால்

மெதுமெதுவாக அந்த பயங்கள் மறைந்துவிடும்

உனது பிரச்சனைகளை மற்றொரு முறை நன்றாக பார்

நீ ஆழமாக பார்க்க, பார்க்க அவை சிறிதாக தெரியும்

நீ ஒரு ரோஜாவா, தாமரையா, அல்லியா என்பது ஒரு விஷயமே அல்ல

நீ மலர்கிறாயா என்பதுதான் பிரச்சனை

இறந்த காலமும் கிடையாது,

எதிர்காலமும் கிடையாது

இந்த கணம் மட்டுமே உள்ளது

நீ எப்படி எதனோடு எதனை ஒப்பிடுவாய்

ஆசை உள்ளே நுழையும்போது படைப்பு மறைந்துவிடுகிறது

உனது உடலுடன் ஏதாவது செய்யும்போது உனது உடல் சொல்வதை கவனி

Thursday 2 November 2017

ஓஷோ ஞானக் கதைகள்


ஒரு ஜென் சாதுவிடம், ஒருவன்,

"உங்கள் சாதனை எத்தகையது..???" என்று கேட்டான்.

அவர்,

"பசியெடுக்கும்போது நான் உணவளிக்கிறேன்,

உறக்கம் வரும்போது படுக்கையை விரித்துக் கொடுக்கிறேன்." என்றார்.

அந்த மனிதன், "யாருக்கு..???" என்று கேட்டான்.

ஜென் சாது, " யாருக்கு உறக்கும் வருகிறதோ, அவனுக்கு,

யாருக்குப் பசிக்கிறதோ, அவனுக்கு
என்று பதிலளித்தார்.

அந்த மனிதன்,"நீங்கள், இந்தக் குடிசை வீட்டில் தனியாக இருப்பதாக தெரிகிறது, வேறு யாரும் இல்லை.

நீங்கள் கூறுவது புரியவில்லையே" என்றான்.

சாது, "நான் அஞ்ஞானியாக இருந்தபோது,

எனக்கும், இந்தக் குடிசையில் ஒன்று தான் தெரிந்தது

இப்பொழுது எனக்கு இரண்டு  காட்சியளிக்கிறது.

ஒன்று நான், அறிந்து கொள்பவன்.

மற்றொன்று அது. செயல் புரிவது

எதற்குப் பசிக்கிறதோ அது நான் அல்ல.

யாருக்கு உறக்கம் வருகிறதோ, அது நான்அல்ல.

களைத்துப் போவது, அது நான் அல்ல.

பார்ப்பவன், கேட்பவன், அது நனல்ல.

இப்பொழுது இந்த அறையில், களைத்துப் போகும் ஒருவன் இருக்கிறான்,

ஒருபொழுதும் களைப்படையாத ஒருவனும் இருக்கிறான்

துக்கமும், சுகமும் அடைவதும் ஒருவனும் இருக்கிறான்.

சுகமும் துக்கமும் ஒரு பொழுதும் அடையாத ஒருவனும் இருக்கிறான்" 🍁

🍂 *_ஓஷோ_*
*_ஞானக் கதைகள்_* 🍂