Thursday 14 September 2017

வாழ்க்கை

மனிதனுடைய வாழ்க்கை
எப்போதும் ...

வெளி வட்டத்தின் மேல் மட்டுமே
உள்ளது ...

அவனால் ஒருபோதும் உள்ளே
வாழ முடிவதில்லை ...

அவனால் அவனது உள் மையத்தைக்
கண்டு கொள்ள முடிவதில்லை ...

நீ தனியாக இருக்கும் போது கூட
உன்னுடை மனதில் ...

ஒரு பெரிய கூட்டத்தோடு தான்
இருக்கிறாய் ...

நீ எப்பொழுதும் மற்றவர்களைப்
பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறாய் ...

நீ உறங்கும்போது கூட மற்றவர்களைப்
பற்றியே கனவு கொண்டிருக்கிறாய் ...

நீ உன்னுடைய உள் உணர்வோடு
ஒருபோதும் இருந்ததில்லை ...

உன்னுடைய மனம் இடைவிடாமல்
வெளியே ஓடிக் கொண்டிருக்கிறது ...

வாழ்க்கையை ஒருபோதும் வெளி வட்டத்தில்
இருந்து அறிந்து கொள்ள முடியாது ...

வாழ்க்கையை உன்னுடைய மையத்தில்
மட்டுமே அறிந்து கொள்ள முடியும் ....

உண்மையாக வாழ்ந்து முடிக்காத
ஒருவனால் ...

உண்மையாக இறக்கவும்
முடியாது ...

நீ வெறும் நம்பிக்கையில் என்றாவது
ஒருநாள் எங்கேயாவது ....

ஏதாவது அற்புதம் நடக்குமா என்று
காத்துக் கிடக்கிறாய் ...

ஒவ்வொரு கணத்தையும் வீணாக்கிக்
கொண்டிருக்கிறாய் ....

எது நடந்தாலும் அது இந்தக் கணத்தில்
மட்டுமே நடக்க முடியும் ....

நீ உன்னுடைய கண நேரத்தைக் கண்டு
கொள்ள வேண்டும் ...

அதற்கு நீ நிகழ் காலத்தில் வாழ
வேண்டும் ...

ஓசோ ...
தந்த்ரா ரகசியங்கள் 1 ....

Saturday 2 September 2017

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள்

தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்று போட்டிருக்கிறார்களே, அப்படியென்றால் என்ன தெரியுமா?
நண்பர்களே எனக்கு தெரிந்ததை பதிவு செய்கிறேன்.

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் இரண்டோடு, சமநோக்கு நாள் என்பதும் நடைமுறையில் உள்ளது. இவை மூன்றும் அன்றைய நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைகின்றன. ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பதும்
( ஊர்த்துவமுக ) நட்சத்திரங்கள் எனப்படுகின்றன.

அதாவது, இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்களை மேல்நோக்கு நாட்கள். இவை மேல்நோக்கி வளர்கின்ற பயிர்களுக்காக விதைக்கவும், மரங்களை நடுவதற்கும், மேல்நோக்கி எழும் கட்டிடங்கள் , உயரமான மதில் I போன்றவற்றைக் கட்ட ஆரம்பிக்க உரிய நாட்கள் ஆகும்.

பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள்,
( அதோமுக ) நட்சத்திரங்கள், அதாவது, கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும்.

இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்கள், கீழ்நோக்கு நாட்கள். இந்த நாட்களில் கிணறு வெட்டுதல், புதையல் தேடுதல், சுரங்கப் பணிகளை மேற்கொள்ளுதல், கிழங்கு வகைச் செடி களைப் பயிரிடுதல் முதலான பணிகளைச் செய்வது நல்லது.

அஸ்வினி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பதும்
( த்ரியக்முக ) நட்சத்திரங்கள், அதாவது, சமநோக்கு நட்சத்திரங்கள் ஆகும்.

இந்த நட்சத்திரங்கள் இடம் பெறும் நாட்கள், சமநோக்கு நாட்கள். இந்த நாட்களில் வாகனங்கள் வாங்குதல், செல்லப் பிராணிகள், பசு, காளை வாங்குதல், சாலை அமைத்தல், வாசக்கால் வைத்தல், வயல் உழுதல் ஆகிய பணிகளைச் செய்வது உத்தமம். நீங்களே இந்த நாட்களை தினசரி காலண்டர்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கிழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் என்று வார்த்தையில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். அல்லது குறியீடு முறையில் இருக்கும்.

Friday 1 September 2017

மன இறுக்கமும் ஓய்வும்.

மன இறுக்கமும் ஓய்வும்.
-------------------------------------------

🔥 இப்போது ஒரே ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மனோவசியம் செய்பவர்கள், ஒரு அடிப்படை விதியைக் கண்டு பிடித்துள்ளார்கள். அவர்கள் அந்த விதியை, எதிரிடை விதி என்று அழைக்கிறார்கள்.
ஒன்றின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாமல் நீங்கள் ஏதாவது செய்வதற்கு, நீங்கள் கடின முயற்சி மேற்கொண்டால்,
வெறுமனே அதற்கு எதிரான முடிவுதான் ஏற்படும்.

🔥 இது, நீங்கள் ஒரு சைக்கிளை முதன்முதலாக ஓட்டுவதற்கு கற்றுக் கொள்வதைப் போன்றது.

அப்படிக் கற்றுக் கொடுக்கும்போது நீங்கள் ஒரு அமைதியான, போக்குவரத்து இல்லாத சாலையில், அதிகாலையில் ஓட்டக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.

🔥 அப்போது நீங்கள் சாலையின் ஓரத்தில் சிவப்பு நிறத்தில் நிறுத்தப் பட்டுள்ள மைல்கல்லைப் பார்க்கிறீர்கள். சாலையோ அறுபது அடி அகலம் இருக்கும்.
ஆனால், அந்த மைல்கல் மிகவும் சிறியதாக சாலை ஓரத்தில் நிற்கும்.
ஆனால், நீங்கள் அதைப் பார்த்து பயப்படுவீர்கள். நீங்கள் சைக்கிளில் அந்த மைல்கல்லில் மோதிவிடுவோமோ என்று பயப்படுவீர்கள்.
இப்போது நீங்கள் அந்த அறுபது அடி சாலையை மறந்துவிடுவீர்கள். உண்மையில் கண்ணைக் கட்டிக் கொண்டு சென்றாலும்கூட அந்த மைல்கல்லில் மோதுவதற்கு அதிக சந்தர்ப்பம் கிடையாது. ஆனால் இப்போதோ, கண்களை திறந்து கொண்டு இருக்கும்போதே அந்த அறுபது அடி சாலை மறக்கப் பட்டு உங்களது மனம் அந்த மைல்கல்லில்மீது குவிக்கப்பட்டு விட்டது.

🔥 முதலில் அதன் சிவப்பு நிறம் மனதில் குவிகிறது. எனவே நீங்கள் அதைப் பார்த்து பயப்படுகிறீர்கள். எனவே அதன்மீது மோதுவதைத் தவிர்ப்பதற்கு நீங்கள் விரும்புகிறீர்கள். நீங்கள் ஒரு சைக்கிளின் மீது இருப்பதையும் மறந்துவிடுவீர்கள். நீங்கள் எல்லாவற்றையும் மறந்துவிடுவீர்கள்.
இப்போது உங்களுக்கு உள்ள ஒரே பிரச்சனை அந்த மைல்கல்லில் மோதாமல் இருப்பது எப்படி என்பதுதான். இல்லையெனில் அதன்மீது மோதி உங்களது கை காலை உடைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

🔥 இப்போது நீங்கள் அந்த மைல்கல்லின் மீது மோதுவது தவிர்க்கமுடியாமல் போய்விடும்.
நீங்கள் நிச்சயம் அந்த கல்லின்மீது மோதிவிடுவீர்கள். அதன்பிறகு நீங்களே,
நான் இந்தக் கல்லின் மீது இடிக்காமல் இருப்பதற்கு கவனமாக முயற்சி செய்தேன். என்றாலும் தோற்று விட்டேன்... என்று நினைத்து ஆச்சரியப்படுவீர்கள்.

🔥 உண்மையில் நீங்கள் கடினமாக முயற்சி செய்ததால்தான் நீங்கள் அந்த கல்லின்மீது மோதினீர்கள். நீங்கள் அதை நெருங்கி வர வர, அதன்மீது மோதாமல் இருப்பதற்கு நீங்கள் கடினமாக முயற்சி செய்தீர்கள்.
ஆனால், நீங்கள் எந்த அளவுக்கு அந்த கல்லை தவிர்த்துவிட முயற்சி செய்தீர்களோ அந்த அளவுக்கு உங்களது மனம் அதன்மீது குவிந்துவிட்டது.
அது ஒரு மனோவசிய சக்தியாக ஆகிவிட்டது.
அது உங்களை மனோவசியம் செய்துவிட்டது.
அது ஒரு காந்தம் போல் ஆகிவிட்டது.

🔥 இது வாழ்க்கையின் ஒரு அடிப்படை விதி.
அநேக மக்கள், அநேக விஷயங்களை தவிர்ப்பதற்கு விரும்புகின்றனர்.
ஆனால், அவர்கள் அதே விஷயங்களில் விழுந்து விடுகிறார்கள்.
அதிக முயற்சி செய்து, ஏதாவது ஒன்றை தவிர்த்துவிடப் பாருங்கள். நிச்சயமாக நீங்கள் அதே குழியில் விழுந்துவிடுவீர்கள். அதை நீங்கள் தவிர்க்கமுடியாது.
அதை தவிர்ப்பதற்கான வழி அது அல்ல.

🔥 ஓய்வாக இருங்கள்.
கடின முயற்சி செய்யாதீர்கள். ஏனெனில் ஓய்வாக இருப்பதன் மூலமே நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க முடியும்.
கடினமாக முயற்சி செய்வதால் இருக்க முடியாது.
எனவே, அமைதியாக, ஓய்வாக, அடக்கமாக இருங்கள்.

♡ ஓஷோ 🌺🌿

வலம்புரிச் சங்கு

வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடலாமா?*
********************************

நம் வீட்டில் உள்ள பூஜை அறையில் தெய்வ படங்களை வைத்து வழிபடுவது மட்டுமல்லாமல் வீட்டினுள் நுழைய இருக்கும் தீய அதிர்வுகளை கட்டுப்படுத்த சில தெய்வீகமான பொருட்களையும் வைத்து வணங்குகின்றனர். அதேபோல் வீட்டில் வலம்புரி சங்கை வைத்து வழிபடலாமா என்று பார்ப்போம்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது பதினாறுவகை தெய்வீகப் பொருட்கள் வெளிவந்தன. அவற்றுள் வலம்புரிச் சங்கும் ஒன்றாகும். வலம்புரிச்சங்கு இருக்குமிடம் மஹாலட்சுமியின் இருப்பிடமாக கருதப்படுகின்றது. நம் வீட்டில் இதனை வைத்து வழிபட்டால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். குடும்பத்தில் மன அமைதி, மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

வலம்புரிச் சங்கினை வியாபார ஸ்தலங்களில் வைத்து வழிபட்டால் தொழிலில் வெற்றியும், மேன்மையும் உண்டாகும். இச்சங்கினை வீட்டில் வைத்து வழிபட்டால் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும்.

தெய்வத்திற்கு வலம்புரிச்சங்கினால் அபிஷேகம் செய்தால் பத்து மடங்கு பலன் கிடைக்கும். வலம்புரிச் சங்கை முறைப்படி இல்லத்தில் வைத்து பூஜித்து வந்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.

நம் வீட்டில் வலம்புரி சங்கில் தண்ணீர் நிரப்பி அதில் துளசி இலை இட்டு அந்த தீர்த்தத்தை வெள்ளிக்கிழமைகளில் இல்லத்தில் தெளித்தால் வாஸ்து தோஷம் நீங்கும். வலம்புரிச் சங்கு பூஜிக்கப்பட்டு வரும் இல்லங்களில், பிரம்மஹத்தி முதலான அனைத்துவகை தோஷங்களும் அகன்றுவிடும்.

செவ்வாய்தோஷத்தால் அவதிப்படும் பெண்கள் செவ்வாய் கிழமைகளில் இந்த சங்கில் பால் நிரப்பி செவ்வாய் கிரக பூஜை செய்தால் தோஷம் நீங்கி திருமணம் நடக்கும்.

கடன் பிரச்சனையில் இருப்பவர்கள் சங்குக்கு குங்கும அர்ச்சனை செய்தால் கடன் விலகும்.

*வீட்டில் வலம்புரி சங்கை எப்படி வைப்பது ?*

சங்கை எப்பொழுதும் வெறும் தரையில் வைக்கக் கூடாது. தட்டு அல்லது வாழை இலையில் வைக்க வேண்டும். அதன் மீது பச்சை அரிசி அல்லது நெல் பரப்ப வேண்டும்.

சங்கு வடக்கு அல்லது தெற்கு முகமாக இருக்க வேண்டும்.

சங்கில் தண்ணிர் வைத்து துளசி அல்லது பூக்கள் வைக்கலாம். பணம், நாணயங்கள், தங்கம் அல்லது நவரத்தினங்கள் வைக்கலாம்...

சோகம்

🌷 சோகத்தை ஏற்றுக்கொண்டால்

சோகம், சோகமானதாக இருக்கக் காரணம்

நீ அதை விரும்பவில்லை.

நீ அதை தவிர்க்கின்றாய்...

சோகம்கூட அழகானதாகவும், அமைதியாகவும் மலரும்

நீ அதை ஏற்றுக்கொண்டால்

மகிழ்ச்சியால் தரமுடியாத ஆழமான அமைதியை சோகம் தரும்

மகிழ்ச்சி மேலோட்டமானது

சோகம் மிக ஆழமானது

மகிழ்ச்சி ஆரவாரமானது

சோகம் அமைதியானது

மகிழ்ச்சி ஆர்ப்பரிக்கும் அலை

சோகம் ஆழ்கடல் அமைதி

மகிழ்ச்சி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது

ஆனால்....

சோகம் உனக்கு மட்டுமே

மகிழ்ச்சியுடன் மட்டுமே ஐக்கியமாகிவிடாதே

சோக அனுபவமில்லாதவன் ஏழை

சோகத்தில் ஆழத்தை அனுபவிக்காதவன்
வாழ்க்கையைத் தவறவிட்டவன்

மகிழ்ச்சியும் சோகமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்

சோகத்தில் மகிழ்ச்சியும்

மகிழ்ச்சியில் சோகத்தையும்

காண்பவனின் வாழ்க்கை முழுமையடைகிறது 🌷

🌸 *_ஓஷோ_* 🌸

சிரிப்பு

🌺 சிரிப்பு என்பது ஒரு சிறந்த சிகிச்சை

ஆரம்ப காலம் முதல் உங்களை கட்டுப்படுத்தாமல் வயிறு குலுங்கக சிரிக்க அனுமத்தித்திருந்தால்...

உங்கள் புத்தாவை கண்டு கொள்வது என்பது எளிதான காரியமாகி இருந்திருக்கும்

ஏனெனில்.....

நீங்கள் எல்லா இறுக்க நிலையில் இருந்தும்,

மற்றும் மறுத்தல்,

அடக்குதல்,

கோவம் போன்ற வேண்டபடாத நிலையில் இருந்தும் விடுதலையாகி இருப்பீர்கள்

இந்த சுதந்திரமான நிலையில் மட்டும்தான்

ஒருவன் புத்தாவை காண முடியும்

நான் இந்த உலகத்திற்கு அளித்தது என்னவென்றால்,

ஆன்மீக வளர்ச்சிக்கு நகைச்சுவை உணர்வு ஒரு வழிகாட்டுதலாக இருக்கும் என்பதுதான்

சிரிக்க முடியாத மனிதன்,

ஒரு வியாதியஸ்தன் தான்

இறப்பை எதிர்நோக்கும் வியாதியஸ்தன் 🌺


💐 *_ஓஷோ_* 💐