Monday 1 August 2016

துரியதவம்

🌹துரிய தவம் 🌹

ஆக்கிணை - சாந்தி இந்த இரு தவம் பயின்ற பின்னர் அதில் கொஞ்சம் உணர்ந்த பின்னர்  செய்ய கூடிய தவம் தான் துரியதவம்

சாதாரணமாக அமர்ந்து கொண்டு கண்களை மூடி
தலை உச்சியில் நினைவை செலுத்தி செய்ய கூடிய தவம்

முறையாக கற்றுக்கொண்டு தனக்குள் ஆழ்ந்த அனுபவம் பெற்ற ஆசிரியர் மூலம் தீட்சை பெற்று செய்ய வேண்டிய தவம்

இதை மேல் நோக்கு தவம் என்று ஞானிகள் சொல்கின்றனர் - காரணம் மூலாதாரம் என்பது கீழ் மையத்தில் உள்ளது அந்த மையத்தில் இருந்து ஆன்மீக உணர்வை மேல் நோக்கி தலை உச்சிக்கு கொண்டும் செல்வதால் இதை மேல் நோக்கிய தவம் என்கின்றனர்

நமது மூளை  பகுதியில் 1000 regional valves இதை சராஸ்காரம் என்று அழைக்கிறார்கள் -  மற்றும் அங்ககே கோடிக் கணக்கான சிற்றரைகள் உள்ளன

நமது ஒவ்வொரு எண்ணமும் மூலத்தில் இருந்து ஓரு அலை இயக்கம் போல இயங்கி இந்த தலை  உச்சியில் உள்ள மூளை செல்கள் மூலம் எண்ணங்களை காண்பித்து கொண்டிருக்கிறது- உணர்ந்து கொண்டிருக்கிறது

ஏற்கனவே காலம் காலமாக பிறவி வழி தொடராக வந்த பொருத்தம் இல்லா எண்ணம் சொல் செயல்கள் மூலம் சுருங்கி இருக்க கூடிய மூளை சிற்றரைகள் இந்த தவத்தில் அது சின்ன சின்ன அறைக்கு உள்ளே சென்று விரிவு படுத்துகிறது

மூளை செல்கள் புத்துணர்வு பெறுகின்றது - சொர்க்க வாசல் திறக்கின்றது என்று வெளியே கோயில்களில் கேட்டுக் கொண்டிருக்கிறோம்
ஆனால் உண்மையான சொர்க்க வாசல் திறப்பு என்பது இங்கே தான் திறக்க செய்கிறது

ஆன்மீக பாதையில் தனது ஆன்மாவை இந்த பிரபஞ்சத்துடன் விரித்து இணைத்துக் கொள்ள கூடிய நூலைவாயில்

1000 தாமரை மலர்கின்றது என்று சொல்வது -1000 regional valves  விரிவு பெறுவதையே மறைமுகமாக சொல்லி உள்ளனர்

நாம் பெருமாள் கோவில் சென்றால் இறுதியில் தலை கவசம் ஒன்றை வைத்து எடுப்பார்கள் ஐயர் மார்கள் அதன் பொருள் இது தான் மூளை தலை உச்சியில் உள்ள சொர்க்க வாசல் திறக்கவே செய்கின்றனர் - ஆனால் அது வெறும் கருவி மூலம் திறக்காது - உண்மையான ஆன்மீக உணர்வில் உள்ள ஆன்மாக்கள் தனது சக்தியை கொண்டு இணைத்து அதை திறக்க செய்வது மூலம் தான் அது நடக்கிறது
நமக்கு உள்ளே இருக்க கூடிய ஆறு வேண்டாத குணங்கள் ஆகிய

பேராசை
சீனம்
கடும்பற்று
வஞ்சம்
முறை தவரிய பால் கவர்ச்சி
உயர்வு தாழ்வு மனப்பான்மை

என்ற அடிப்படையில் இயங்கும் தன்முனைப்பு

தான் - தனது-

நான் நான் என்று சொல்ல கூடிய ஆணவத்தன்மை இதில் தான் பிறக்கின்றன என்று மகரிஷி அவர்கள் கூறுகிறது - அனுபவத்தில் அது உண்மையும் கூட என உணர்ந்தேன்

இந்த  குணங்களை ஆய்வு செய்து நற்குணங்களாக தனக்கு உள்ளே உணர்ந்து  மாற்றி அமைக்கும் தன்மையை தவம் கொடுக்கின்றது

நிறைமனம்
ஈகை
மன்னிப்பு
சமநோக்கு தன்மை
கற்புநெறி
பொறுமை

என்ற நட்பண்புகள் உணர்ந்து வாழ கூடிய தளத்தை கொடுக்கின்றது

இந்த தவம் முடித்து உயிர்ப்புள்ள  வாழ்த்து சொல்லும் பொழுது தன்னை சார்ந்த negative விஷயங்கள் மாறி நல்ல நட்புறவு தன்மை நமக்கு உள்ளேயும் வெளியேயும் நடக்கிறது

மனம் விரிந்து பிரபஞ்ச கலத்துடன் விரிவதை உணர முடியும்

Peneal gland pitutory gland நன்கு சுரக்கும் - எண்ணங்களை சற்று நுனிகி பார்த்து எண்ணங்கள் தெளிவு பெறுவதையும்

ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் ஆழமாக செல்லும் பொழுது எண்ணங்கள் கரைந்த நிலையில் தன்னை இன்னும் ஆழமாக உணர முடியும்

நமது செயல்களில் தெளிவு துல்லியமான முடிவு எடுக்கும் திறன் - எந்த ஒன்றிலும் உண்மையை நோக்கி உணரும் தன்மை வளரும்

தனக்கு உள்ளே ஓரு இனிப்புதன்மை - உடலில் காந்த திணிவு இந்த தவத்தின் மூலம் பெறலாம்

மேலே குறிப்பிட்ட விஷயங்கள் மகரிஷி அவர்கள் உணர்ந்த ஒன்றோடு என்னுடைய அனுபவம் உள்ளது

இது முறையாக கற்றுக்கொண்ட பின் நீங்கள் உங்களுக்கு உள்ளே உணரும் பொழுதே அது உண்மை ஆகும்

ஆன்மீக பாதையில் தனக்கு உள்ளே i இருந்து விரிந்து செல்ல கூடிய பாதை துரியதவம் என்று சொல்ல கூடிய  தலை உச்சி ஆகும்

முறையாக கற்று பயன் பெறலாம்

🌹துரியதவம் செய்முறை 🌹

சாதாரனமாக அமர்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டு-

அதன் பின்

இந்த தவத்தை ஆக்கிணை என்று சொல்ல கூடிய இரு  புருவத்தின் நடுவில் பகுதி நேரமும் தொடங்கி அதன் பின்  - மீதி பகுதி நேரம் தலை உச்சியில் உள்ள துரியத்தில் செய்ய வேண்டும்

நேரம் காலம் பார்த்து எந்த தவத்தையும்  செய்ய வேண்டியது இல்லை- அப்படி நேரம் காலம் பார்த்து செய்வதுக்கு பெயர் சடங்கு

விரும்பி நல்ல உட்சாகத்துடன் செய்ய கூடியவை தான் நல்ல மாற்றத்தை கொடுக்கும்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.