Tuesday 29 March 2016

ஞானவிழிப்பு பெற வாய்ப்பு உண்டா ?

கேள்வி : ஓஷோ , தினசரி ஒரு மணிநேரம் தியானம் செய்பவர் இந்தப் பிறவியிலேயே ஞானவிழிப்பு பெற வாய்ப்பு உண்டா ?
‪#‎பதில்‬ : " உலகத்தில் வாழ்ந்த உண்மையான தியானிகள் ஒரு உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் . அதாவது ஒருவன் ஞான விழிப்பு பெறுவதற்கு 48 நிமிடம் தொடர்ந்த தியானமே போதுமானது என்பதாகும் ! ஆனால் இது அவ்வளவு சுலபமில்லை !
ஒரே ஒருநிமிடம் ( 60 விநாடிகள் ) உண்மையான மனக்குறுக்கீடு எதுவும் இல்லாமல் தியானம் செய்வது என்பது கடினமான காரியமாகும் ! ஆனால் முடியாதது அல்ல ! இதை நீங்கள் பரிசோதனை பண்ணிப்பாருங்கள் .
கடிகாரத்தில் உள்ள விநாடி முள்ளை 1 - லிருந்து 60 வினாடிக்கு நகருவதைக் கூர்ந்து கவனியுங்கள் . அதை வெறுமனே சாட்சியாக கவனியுங்கள் . அதிகபட்சமாக அந்த வினாடி முள் 10 - ஐத் தாண்டுவதற்குள் உங்கள் கவனம் வேறு எங்கேயோ சென்றுவிடும் ! இதைக் கவனித்து மீண்டும் உங்கள் கவனத்தை அந்த முள்ளின்மேல் வைப்பதற்குள் மேலும் சில வினாடிகள் கழிந்துவிடும் . இப்படி நாள்தோறும் பயிற்சி செய்தால் , ஒரு சில நாட்களுக்குள் ஒரு நிமிட தியானத்தை நீங்கள் அமைதியாக இடைவெளியில்லாமல் , கவனச் சிதைவு இல்லாமல் வெறுமனே செய்ய முடியும் .
ஆசார வழிமுறையும் இதுவேதான் . நீங்கள் உங்கள் சுவாசத்தை வெறுமனே கவனித்துக் கொண்டிருக்கவேண்டும் . இதைத்தான் புத்தர் கடைப்பிடித்தார் . இது விஞ்ஞானப் பூர்வமானது . நீங்கள் வெறும் கவனிப்பவராக இருங்கள் போதும் . இப்படி நீங்கள் 48 நிமிடம் தொடர்ந்து செய்துவிட்டால் , நீங்கள் அன்றே ஞானவிழிப்பு அடைந்து விடலாம் !
ஆனால் நடைமுறையில் இந்த 48 நிமிட தியானத்தை அடைய பல வருடங்கள் ஆகலாம் ! நீங்கள் எந்த அளவுக்குத் தீவிரமாக , வைராக்கியமாக இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு சீக்கிரம் உங்களுக்கு ஞானவிழிப்பு கிட்டும் ! நீங்கள் அந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளும் தன்மையில் மிகுந்த ஓய்வுத் தன்மையில் , விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் . அவ்வளவுதான் !"

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.