Monday 3 April 2017

எட்டு திசைகளின் சிறப்புகள

எட்டு திசைகளின் சிறப்புகள்..!

வடக்கு :

➢ வடக்கு திசை தாய்மை பகுதி ஆகும். பொருள் வரவுக்கு உரியது. இத்திசை முறையாக அமைந்தால், பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பர். பொருளாதாரம், அதிகாரம் சிறக்கும். இத்திசையில் ஏதேனும் குறையிருந்தால் பெண்களின் வாழ்வு பாதிப்படையும். பொருளாதார வீழ்ச்சி ஏற்படும்.

கிழக்கு :

➢ கிழக்கு திசை தந்தைக்கு உரிய திசையாகும். அறிவு ஆற்றல் போக போக்கியங்களுக்கு உரியது. இது முறைப்படி அமைந்தால் ஆண்கள் மகிழ்ச்சியாக இருப்பர். இத்திசையில் குறையிருந்தால் எதிர் விளைவுகள் உண்டாகும்.

வடகிழக்கு :

➢ செல்வ வளம், பொருள் வரவு, சந்ததி வளர்ச்சிக்கு உரியது. குறிப்பாக ஆண் குழந்தைகள் வளர்ச்சிக்கு உரியதாகும். இத்திசை முறையாக அமைந்தால், பொருள் வரவு மிகுந்து, செல்வ வளம் பெருகும். குழந்தைகள் தொழில் துறையில், பதவிகளில் உயர்வு அடைவர். இத்திசையில் குறையிருந்தால் வரவு குறைந்து வறுமை உண்டாகும்.

மேற்கு :

➢ மேற்கு திசை ஆண்மைப் பகுதியாகும். இத்திசை முறையாக அமைந்தால் புகழ் அடைவர். செல்வாக்கு உயரும். வாழ்க்கை மேம்படும். இத்திசையில் குறையிருந்தால் எதிர் விளைவுகள் உண்டாகும்.

வடமேற்கு :

➢ இத்திசை சபலம், சலனங்களுக்கு உரிய திசையாகும். இத்திசை முறையாக அமைந்தால் பலரோடு நட்பையும், தொழில் வியாபார மேம்பாட்டையும், அரசியல் செல்வாக்கையும், பொருள் வரவையும் உண்டாக்கும். இத்திசையில் குறையிருந்தால் பகை, மனஸ்தாபம், நோய் போன்ற விளைவுகள் உண்டாகும்.

தெற்கு :

➢ தெற்கு திசை தாய்மைப் பகுதிக்குரிய திசையாகும். சுகம், அமைதி, செல்வம், நீதி நேர்மைக்கு உரிய திசையாகும். இத்திசை முறையாக அமைந்தால் பெண்கள் நலம் பெறுவர். செல்வம் அதிகமாகும். நோயற்ற இன்பமான வாழ்வு அமையும். இத்திசையில் குறையிருந்தால் எதிர் விளைவுகள் உண்டாகும்.

தென்மேற்கு :

➢ இத்திசை ஒழுக்கம், உடல்நலம், செல்வச் செழிப்புக்கு உரிய திசையாகும். இத்திசையில் குறையிருந்தால் நோய்கள், வறுமை, மனகஷ்டம் உண்டாகும்.

தென்கிழக்கு :

➢ இத்திசை முறையாக அமைந்தால் பெண்கள் நலம் பெறுவர். பணவரவு மேம்படும். இத்திசையில் குறையிருந்தால் தொல்லைகள், செலவு, வீண்பிரச்சனை, வறுமை உண்டாகும்.

எட்டு திசைகளின் சிறப்பறிந்து எல்லா செல்வங்களையும் பெறுவோம்!...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.