Saturday 27 February 2016

சுவாமி விவேகானந்தர்

🎁 சுவாமி விவேகானந்தர் 🎁
🌿கடலில்  இருக்கும்  அத்தனை  நீரும்  ஒன்று  சேர்ந்தால்  கூட  ஒரு  கப்பலை  மூழ்கடிக்க முடியாது.

கப்பலுக்குள்  புகுந்தால்  மட்டுமே  அது  சாத்தியம்.

" வாழ்வின்  எந்த  பிரச்சனையும்  உங்களை  பாதிக்கவே  முடியாது  நீங்கள்  அனுமதித்தால்  தவிர "

🌿 நமக்கு  நாமே  செய்து கொள்கின்ற  துன்பத்தை  தவிர  வேறு  எந்தத்  துன்பமும்  நம்மை  அணுகாது.

🌿நாம்  செய்யும் செயல்  எதுவாயினும்  நமது  முழு மனத்தையும்  அதில்  செலுத்த  வேண்டும்.

🌿 இந்த  உலகம்  மிகப்பெரிய  ஓர்  உடற்பயிற்சிக்  கூடம். இங்கு  நாம்  நம்மை  வலிமையுடையவர்களாக்கி கொள்வதற்காக  வந்திருக்கிறோம்.

🌿உனது  எதிர்காலத்தை  நீயே  உருவாக்கு. ஏற்கனவே  நடந்து  முடிந்ததைக்  குறித்து  வருந்தாதே. எல்லையற்ற  எதிர்காலம்  உன்  முன்னால்  விரிந்து  பரந்திருக்கிறது. உன்னுடைய  ஒவ்வொரு  சொல்லும்  சிந்தனையும்  செயலும், அதற்கு  ஏற்ற  பலனைத் தரும்.

🌿நீங்கள்  எந்த  பிரச்சினையையும் சந்திக்காமல்  அமைதியாக  சென்று  கொண்டிருந்தால், உங்கள்  வாழ்க்கையில்  நீங்கள்  தவறான  பாதையில்  சென்று  கொண்டிருக்கிறீர்கள்  என்று  அர்த்தம்.

🌿 சரியான  உற்சாகத்தோடு  வேலை  செய்ய  ஆரம்பித்தால்  வெற்றி  நிச்சயம்.

🌿 இதயம்  சொல்வதையை  செய். வெற்றியோ, தோல்வியை  அதை தாங்கும்  வலிமை  அதற்கு  மட்டுமே  உண்டு.

🌿இந்த  உலகில்  நீங்கள்  வந்துள்ளதால்  உங்கள்  முத்திரை  ஒன்றை  விட்டுச்  செல்லுங்கள்....🌹🌹🌹

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.