Friday 12 August 2016

வயிற்றில் ஏன் புழு வருகிறது

அல்பெண்டசோல்!
இது தற்போது குழந்தைகளுக்கு இலவசமாக கொடுக்கப்படும் மாத்திரை ஆகும்!
ஏன்?
குழந்தைகளுக்கு வயிற்றில் புழு இருக்குமாம். அதனால் அந்த புழுவை அழிக்க இந்த மாத்திரையாம். என்றால் இதற்கும், ஆன்டிபயாட்டிற்கும் என்ன வித்தியாசம்?
சரி முதலில் வயிற்றில் ஏன் புழு வருகிறது என்று பார்ப்போமா?
சாக்கடையில் புழுக்கள் நெளிவதை பார்த்திருப்போம். அதாவது தேங்கிய கழிவு நீரில் புழுக்கள் இருக்கும்.
இறந்து போன நாய், பூனை, எலி போன்றவைகளின் உடலில் புழுக்கள் இருக்கும்.
இறந்து போய் கழிவான பொருட்களில் புழுக்கள் வரும் என்றால், புழுக்களின் உணவு அந்த கழிவுகள் தானே!
அதே போல் வயிற்றில் புழுக்கள் வருகிறது என்றால், வயிற்றில் கழிவுகள் உள்ளது என்றுதானே பொருள்!
அந்த கழிவு உடலில் இருப்பது ஆபத்து என்பதால், இயற்கையே மாற்று ஏற்பாடாக உடலில் புழுக்களை தோற்றுவித்து அந்த கழிவுகளை உண்ண செய்து, உடலை சுத்தம் செய்கிறது. அவ்வாறு கழிவுகள் சுத்தமான பிறகு, அந்த புழுக்களும் மடிந்துவிடும்.
இதேதான் கிருமிகளுக்கும்.
இப்போது சொல்லுங்கள், புழுக்கள் நன்மை செய்கின்றனவா,தீமை செய்கின்றனவா?
உடலில் தேங்கும் கழிவுகள்தான் நோய் என்பதை அறியாத ஆங்கில மருத்துவம், அதை சரி செய்யும் உடலின் முயற்சியை நோயின் அறிகுறி என்று நினைத்து, அறிகுறிகளை தடுத்து நோயை உள்ளே வளர்த்து வருவது சற்று சிந்திப்பவர்களுக்கு புரியும்.
அந்த வகையில் உடலில் தேங்கிய கழிவுகளை விரட்ட இயற்கையாக உடல் செய்யும் முயற்சியில்தான் இந்த புழுக்களும் ஒன்று.
இன்று நாம் உணவு என்ற பெயரில் பல குப்பையான பொருட்களை திணிப்பது வழக்கமாகிவருகிறது. குழந்தைகள் கேட்கிறார்கள் என்பதற்காக, விஷம் என்று எழுதப்படாமல் விற்கும் விஷமான பொருட்களை( பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் பெரும்பாலான உணவு பொருட்கள்) நம் குழந்தைகளுக்கு ,நம் அன்பை வெளிப்படுத்த வாங்கி கொடுக்கிறோம். மேலும் துரித உணவகங்களில் இருந்தும் நாம் வாங்கி கொடுக்கும் உணவுகளும் இந்த வகையில் அடங்கும். இவைகள் உடலின் செரிமாணத்தை பாதிக்கிறது. இவ்வாறு செரிமாணம் பாதித்த உடலில், மேலும் திணிக்கப்படும் உணவு கழிவாக மாறுகிறது. இந்த கழிவை அழிக்கவே காய்ச்சல், வாந்தி, பேதி போன்றவையும் உறுவாகிறது. இது போன்ற கழிவை வெளியேற்றும் உடலின் இந்த செயலை மருந்துகள்; கொண்டு தடுப்பதே உடலின் பெரிய நோய்க்கு காரணம் ஆகிறது.
இப்படி உடலில், முக்கியமாக உணவு கையாளப்படும் இடமான, இரைப்பை, சிறுகுடல்,பெருங்குடல், மற்றும் மலக்குடல் ஆகிய இடங்களில் இருக்கும் கழிவுகளை நீக்கவே புழு உற்பத்தியாகிறது. அந்த கழுவுகளை உண்கிறது.
இப்படி நன்னை செய்யும் இந்த புழுக்கள், வயிற்றில் உள்ள கழிவுகள் காலியான பின் தானே அழியும்.
ஆனால் நோயாளிகளை உருவாக்கும் இந்த கார்ப்ரெட் மருந்து கம்பெனிகள், மிக தெளிவாக கழிவுகளை வெளியேற்றி நோயை குணப்படுத்துவதற்கு பதில், தன்னை சரிசெய்து கொள்ளும் உடலின் முயற்சியை மட்டுமே தடுத்து நோயை மேலும் வளர்த்து காசு பார்க்கிறது. அதற்காகத்தான் இந்த புழுவை அழிக்க என்று மேலே சொன்ன மாத்திரை!
வயிற்றில் புழு வராமல் இருக்க வயிற்றில் கண்ட குப்பையை போடாமல் இருங்கள். உங்கள் குழந்தையின் வயிற்றில் புழு இருக்கிறது என்றால், கண்ட உணவை, கண்ட மேனிக்கு தின்பதும் பசி உணராமல் இருப்பதுமே. அதை சரி செய்யுங்கள்.
இந்த மாத்திரை தமிழகத்தின் அனைத்து பள்ளி,கல்லூரிகளிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. பல லட்சம் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க சில கோடிகள் செலவிடப்படும் என்றால், அதன் பின் எத்தனை கோடி சம்பாதிக்க திட்டம்?
இந்த மாத்திரை சாப்பிட்டால், வாந்தி, மயக்கம், பேதி போன்ற பக்க விளைவுகள் வரலாம் என்றும் கூட குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்கள் குழந்தைகளுக்கு தேவையா என்று நீங்கள் முடிவு செய்யுங்கள்.
உங்கூட்டு பையன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.