Tuesday, 18 June 2019

வேல் மாறல்

வேல்மாறல் மகா மந்திரம்:-

இந்த மகா மந்திரத்தால் முடியாதது என்று எதுவுமே இல்லை.  இந்த பதிவை பத்திரபடித்தி வைத்து கொள்ளவும். தினமும் இருமுறை காலை  மாலை பகத்தியுடன் பாராயணம் செய்யவும்.

வேலும் மயிலும் சேவலும் துணை

1. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல் 
சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்.

2. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தம் என(து) 
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே.

3. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை 
அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காணும். - திருத்தணியில்...

4.  தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி 
படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். - திருத்தணியில்...

5. பனைக்கைமுக படக்கரட மதத்தவன கசக்கடவுள் 
பதத்(து) இடு(ம்) நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். - திருத்தணியில்...

6. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள் 
சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். - திருத்தணியில்...

7. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர் 
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும். - திருத்தணியில்...

8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என 
மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும். - திருத்தணியில்...

9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன் 
இசைக்(கு)உருகி வரக்குகையை இடித்துவழி காணும். - திருத்தணியில்...

10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்துசிறை முளைத்த(து)என 
முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும். - திருத்தணியில்...

11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை 
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். - திருத்தணியில்...

12. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு 
புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். - திருத்தணியில்

13.  பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர் 
உரத்(து) உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும். - திருத்தணியில்...

14. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும் 
உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். - திருத்தணியில்...

15. சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி 
தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். - திருத்தணியில்...

16. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர் 
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். - திருத்தணியில்...

17. சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி 
தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். - திருத்தணியில்...

18. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர் 
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். - திருத்தணியில்...

19. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர் 
உரத்(து) உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும் - திருத்தணியில்...

20.  திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும் 
உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். - திருத்தணியில்...

21. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை 
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். - திருத்தணியில்...

22. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு 
புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். - திருத்தணியில்

23. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன் 
இசைக்(கு)உருகி வரக்குகையை இடித்துவழி காணும் - திருத்தணியில்...

24. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்துசிறை முளைத்த(து)என 
முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் - திருத்தணியில்...

25. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர் 
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும் - திருத்தணியில்...

26.  தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என 
மலர்க்கமலத கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும் - திருத்தணியில்...

27. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள் 
பதத்(து) இடு(ம்) நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். திருத்தணியில்...

28. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள் 
சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். - திருத்தணியில்...

29. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை 
அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காணும். - திருத்தணியில்...

30. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி 
படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். - திருத்தணியில்...

31. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல் 
சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும். - திருத்தணியில்...

32. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து) 
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே. - திருத்தணியில்...

33. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி 
படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். - திருத்தணியில்...

34. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை 
அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காண்டும். - திருத்தணியில்...

35. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து) 
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே. - திருத்தணியில்...

36. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல் 
சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும். - திருத்தணியில்...

37. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என 
மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும். - திருத்தணியில்...

38. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர் 
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும். - திருத்தணியில்...

39. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள் 
சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். - திருத்தணியில்...

40. சினைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள் 
பதத்(து)இடு(ம்)நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். - திருத்தணியில்..

41.  தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு 
புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். - திருத்தணியில்

42.  சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை 
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். - திருத்தணியில்..

43. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என 
முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும். - திருத்தணியில்..

44. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன் 
இசைக்(கு)உருகி வரைக்குஹையை இடித்துவழி காணும். - திருத்தணியில்..

45.  சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர் 
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். - திருத்தணியில்...

46. சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி 
தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். - திருத்தணியில்..

47. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும் 
உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். - திருத்தணியில்..

48. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர் 
உரத்(து) உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும். - திருத்தணியில்..

49.  திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும் 
உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும். - திருத்தணியில்..

50. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல் ஒழித்(து)அவுணர் 
உரத்(து) உதிர நிணத்தசைகள் புசிக்க அருள்நேரும். - திருத்தணியில்..

51. சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர் பெருத்தகுடர் 
சிவத்த தொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும். - திருத்தணியில்...

52. சூரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்) மக பதிக்கும் விதி தனக்கும் அரி 
தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும். - திருத்தணியில்..

53. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்த(து)என 
முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும். - திருத்தணியில்..

54. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன் 
இசைக்(கு)உருகி வரைக்குஹையை இடித்துவழி காணும். - திருத்தணியில்..

55. தனித்துவழி நடக்கும் என(து) இடத்தும் ஒரு வலத்தும் இரு 
புறத்தும் அரு(கு)அடுத்(து)இரவு பகற்றுணைய(து)ஆகும். - திருத்தணியில்

56. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி ஒளிப்பஅலை 
அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும். - திருத்தணியில்...

57. சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு குறைத்தலைகள் 
சிரித்(து)எயிறு கடித்துவிழி விழித்(து) அலற மோதும். - திருத்தணியில்..

58. பனைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள் 
பதத்(து) இடு(ம்) நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். - திருத்தணியில்...

59. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்ப(து) என 
மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளை(வு) ஆகும். - திருத்தணியில்..

60. துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர் 
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும். - திருத்தணியில்..

61. திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தன் என(து) 
உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே. - திருத்தணியில்...

62. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல் 
சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும். - திருத்தணியில்...

63. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி 
படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். - திருத்தணியில்..

64. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை 
அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்) மறத்தைநிலை காணும். - திருத்தணியில்....

Sunday, 2 June 2019

நிம்மதி

நிம்மதியே இல்லை! முல்லா கதை

ஒரு நாள் முல்லா வெளியூருக்குச் சென்று கொண்டிருந்தார்.

செல்லும் வழியில் ஒரு மரத்தடியில் ஒரு மனிதன் அமர்ந்திருந்தான். பார்வைக்கு ஒரு செல்வந்தனைப் போல் காட்சியளித்த அவன் மிகுந்த கவலையோடு காணப்பட்டான்.

முல்லா அந்த மனிதனின் அருகில் சென்று அமர்ந்தார். அந்த மனிதனை நோக்கி, ”ஐயா! தங்களைப் பார்த்தால் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. தாங்கள் கவலையோ, சங்கடமோ அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என்று தோன்றவில்லை. ஆனால், தங்களைப் பார்த்தால் மிகுந்த கவலையும் வேதனையும் அடைந்தவர் போல் தோன்றுகிறது.

தங்கள் கவலைக்குக் காரணம் என்ன என்று நான் அறிந்து கொள்ளலாமா?” என்று வினவினார். அந்த மனிதன் முல்லாவை நோக்கி, ”நண்பரே! நீர் நினைப்பது போல, நான் வசதிகள் நிறைந்த ஒரு செல்வக்குடிமகன்தான். எனக்கு ஏராளமான செல்வம் இருக்கிறது. வீடு, நிலம் போன்ற சொத்துக்களும் நிறைய உண்டு. இவ்வளவு சுகபோக வசதிகள் இருந்தும் என்னால் ஒரு நிமிடம் கூட மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.

”எனக்கு இருக்கும் செல்வங்களை யாராவது வஞ்சனை செய்து பறித்துக் கொள்வரோ என்று எனக்கு எப்போதும் பெருங்கவலையாக இருக்கிறது.

இப்போது கூட இதோ என் கையிலிருக்கும் பைக்குள் ஆயிரம் பொற்காசுகள் இருக்கின்றன. நான் வீடு போய் சேர்வதற்குள் இந்த பணப்பைக்கு யாரால் என்ன ஆபத்து ஏற்படுமோ என்று கவலையாக இருக்கிறது,” என்று கூறினார்.

முல்லா அந்த செல்வந்தனின் கையில் இருந்த பணப்பையைத் திடீரெனப் பிடுங்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தார்.அதைக்கண்டு பதறிப்போன செல்வந்தன், ‘

‘ஐயோ என் பணம் போய்விட்டதே… என் பணம் போய்விட்டதே!” என்று அலறியவாறு முல்லாவை துரத்திக் கொண்டு ஓடினான்.

முல்லா எங்கெங்கோ ஓடி ஆட்டம் காண்பித்த பின்னர், செல்வந்த முதலில் சந்தித்த மரத்தடிக்கே வந்து சேர்ந்தார்.

பணப்பையை மரத்தடியில் வைத்துவிட்டு அருகிலிருந்த புதருக்குப் பின்னால் சென்று ஒளிந்து கொண்டார் முல்லா.மூச்சிரைக்க ஓடிவந்த செல்வந்தன்

தம்முடைய பணப்பை மரத்தடியில் கிடப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.’பணம் போய்விட்டதே என்று அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தேன்.

கடவுள் அருளால் என் பணம் திரும்பக் கிடைத்துவிட்டது. இப்போது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா?’ என்று தனக்குத்தானே கூறிக் கொண்டான் செல்வந்தன்.புதருக்குப் பின்னால் இருந்து வெளிவந்த முல்லா செல்வனை நோக்கி, ”செல்வக் குடிமகனாரே! வாழ்க்கையில் ஒரு நிமிடம் கூட மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்று கூறிக் கொண்டிருந்தீர்கள் அல்லவா?”கொஞ்ச நேரமாவது நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டும் என்றுதான் பணப்பையை நான் தூக்கிக் கொண்டு ஓடினேன்.

பறிபோய்விட்டதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருந்த பணப்பை திரும்பக் கிடைத்ததும் கொஞ்ச நேரம் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது அல்லவா? அது உங்களுக்கு ஒரு லாபம் தானே!” என்று கூறினார்.

அதைக்கேட்ட செல்வன், ”நீ கூறியது உண்மைதான். நீர்

சொன்னதுபோல் பறிபோன பணம் கிடைத்தவுடன் நான் மகிழ்ச்சியாக இருக்க முடிந்தது,” என்று கூறினான்.

பிறகு செல்வந்தன் முல்லாவை நோக்கி, ”ஐயா! நீர் என்னைப் போல் ஒரு செல்வர் இல்லை போல் தோன்றுகிறது. சாமானிய நிலையில் உள்ள ஒரு மனிதராகத்தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இவ்வாறு பொருளாதார வளத்தில் தாழ்ந்த நிலையில் உள்ள நீங்கள் முகமலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் காணப்படுகிறீர்களே, இது எவ்வாறு சாத்தியப்படுகிறது?” என்று கேட்டார்.”அது ஒரு ரகசியம்!,” என்றார் முல்லா.

‘அந்த ரகிசயத்தை எனக்குச் சொல்லுங்களேன். நானும் அதைத் தெரிந்து கொண்டால் உங்களைப் போல நிரந்தரமான மகிழ்ச்சியோடு இருக்க முடியுமல்லவா?” என்று செல்வன் கேட்டுக் கொண்டான்.

”அது மிகவும் சாதாரண விஷயம்தான்.

மனிதன் செல்வத்தின் மீது பேராசை கொண்டு அலையும் வரை மனிதனுக்கு மன நிம்மதியோ, மகிழ்ச்சியோசற்றும் இருக்காது. தமது அவசியத் தேவைகளுக்கு மட்டுமே பணத்தைச் சம்பாதிக்கும் மனிதனிடம் பேராசை இருக்காது. ஆகவே, அவனால் நிரந்தரமான மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.

இதுதான் நான் மகிழ்ச்சியாக இருப்பதற்கான காரணம்!”முல்லா கூறியது ஒரு மகத்தான உண்மை என்ற உணர்வு செல்வந்தனுக்கு ஏற்பட அதை பற்றி அவன் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினான்.

Saturday, 1 June 2019

முதிர்ச்சி

*மன முதிர்ச்சி என்றால் என்ன?*

*What is Maturity of Mind ? *

1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு
    நம்மை திருத்திக்கொள்வது.
1. Correcting ourselves without trying to correct others.

2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்)
    ஏற்றுக்கொள்வது.
2. Accepting others with their short comings.

3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள்
கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.
3. Understanding the opinions of others from their perspectives.

4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.
4. Learning to leave what are to be avoided.

5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.
5. Leaving the expectations from others.

6. செய்வதை மன அமைதியுடன் செய்வது.
6. Doing whatever we do with peace of mind.

7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம்
    நிரூபிப்பதை விடுவது.
7. Avoiding to prove our intelligence on others.

8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும்
என்ற நிலையை விடுதல்.
8. Avoiding the status that others should accept our actions.

9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.
9. Avoiding the comparisons of ourselves with others.

10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்..
10. Trying to keep our peace in our mind
      without worrying for anything.

11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய
    விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.
11. Understanding the difference between the basic needs
      and what we want.

12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல
     என்ற நிலையை அடைதல்.
12. Reaching the status that happiness is not connected
      with material things.

*இந்த 12 ல் குறைந்தது ஒரு ஏழெட்டையாவது கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்*

*Our life will be simple if only we practice 7 or 8 of the above 12*

*Live your Life & Love your Life.*

மனம்

ஆழ்மன உத்திகள். ...

மற்றவர்களைப்  பற்றி  எப்பொழுதும்  நல்லவிதமாக  எண்ணுவீர்கள்  என்றால்  ?  .
உண்மையிலேயே  உங்களைப்  பற்றி  நல்ல  விதமாக  எண்ணுவீர்கள். .

மற்றவர்களைப் பற்றி  எப்பொழுதும்
குறை சொல்லியே வாழ்ந்தீர்கள் என்றால்
உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்காது.

நமது மனம்  ஒரு படைப்புத் தளம்   .. எனவே  அடுத்தவர்களைப்  பற்றி  எப்படி குறையுடன் நமது மனது நினைக்கிறதோ .... அல்லது  உணர்கிறதோ....

அதுபோலவே நமது மனது நம்மில் உள்ள குறைகளை மட்டுமே கண்டுபிடித்து  நம்மை தாழ்வாக எண்ணி நமது வாழ்க்கையை சோகத்தில் ஆழ்த்துகிறது.

நாம் பிறரது நல்ல குணங்களை மட்டும் பாராட்டும் உயர்வான மனதை கொண்டு இருந்தால் நமது மனது அதைப்போலவே நம்மிடம் உள்ள உயர்ந்த குணங்களை பாராட்டி நம்மை உயர்வாக எண்ணி நமது வாழ்க்கையை எல்லையற்ற மகிழ்ச்சியுடன் எப்பொழுதும் வைத்து இருக்கும்.

எனவே  ?  

அடுத்தவர்கள்   உங்களைப் பற்றி  எப்படி  எண்ணுகிறார்கள் என்பது முக்கியமே அல்ல.

உங்கள் மனது உங்களை எப்படி உயர்வாக நினைக்கிறது என்பதுதான் மிகமிக முக்கியம்.

யாரைப் பற்றியும் தாழ்ந்து எண்ணாமலும், தாழ்ந்து பேசாமலும், தரம் குறைந்த வார்த்தைகளை எப்பொழுதும் உபயோகிக்காமலும் வாழ்ந்து பாருங்கள்.

நீங்கள் சந்திக்கும் அனைவரையும் தினமும் பாராட்டி மகிழுங்கள்.
பாசிட்டிவ் வார்த்தைகளையும்
உற்சாகமும் தெம்பை ஊட்டும் வார்த்தைகளை மட்டுமே பேசி பழகுங்கள்.

மகிழ்ச்சியின் எல்லையில் வாழ்வீர்கள்.
செல்வங்கள் அனைத்தும் சேரும்.
கடவுளின் அருளை உணர்வீர்கள்.

வாழ்க வளமுடன்!🙏🏻🙏🏻🙏🏻

Sunday, 9 September 2018

உடல் மருந்து பாடல்

இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது. கொஞ்சம் பொறுமையா படித்து பாருங்கள்.

மூளைக்கு வல்லாரை
  முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
  காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
  மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு  மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை
  உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு  தாமரைப்பூ
  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

கக்குவானுக்கு வசம்புத்தூள்
  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                          
விக்கலுக்கு மயிலிறகு
   வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ 
   வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
  சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
   நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்
  கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
   விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
  கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
   உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
  அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
  அறிந்தவரை உரைத்தேனே!!

Thursday, 6 September 2018

உடல்

♥படுகையில் இருந்து எழும் பொழுது (ஆண்கள் )வலது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்

♥பெண்கள் இடது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்

♥விருப்பம் இருந்தால் பூமா தேவியை வணங்கலாம்

♥காலையில் எழுந்தவுடன் நம்முடைய இரு கைகளையும் உரசி கண்களில்
ஒற்றி கொள்ளவேண்டும் .

♥கண்களை பற்றி நீங்கள் அறிய படவேண்டிய ரகசியம் .

♥கண்கள் மனதின் வாசல் ,நம்முடைய எண்ணம் கண்கள் வழியாக வெளிப்படும் ,கண்கள் நெருப்பை தரும் சக்தியுடையவை
இதை தான் எரிச்சல் என்பார்கள் .
கண் திருஷ்டி என்பதும் இதுவே ,திருஷ்டி என்றால் தமிழில் பார்வை என்று பொருள் .

♥நாம் உறங்கும் பொழுது மனம் ,எண்ணம் அமைதியடையும் இது தான் இயற்கை அப்படி இருக்கும் பொழுது நம்முடைய நெருப்பு சக்தி கண்கள் வழியாக வெளிய செல்லாது .

♥உறங்கி எழுந்தவுடன் கைகளை உரசும் பொழுது சுடு உண்டாகி கண்களை தொடும்பொழுது அவை கண்களின் நெருப்பை கிரகித்து நமக்குளே வைக்கும்
இந்த கண் நெருப்பு நமக்கு மிகவும் முக்கியம் .

♥இந்த நெருப்பு செரிமான சக்தியை நமக்கு தரும் .
உணவுகளை பார்த்து கொண்டே சாப்பிடும் பொழுது கண்கள் செரிமானத்தை ஏற்பாடு செய்யும்

♥அதனால் புத்தகம் படித்து கொண்டு ,மற்ற காட்சிகள் பார்த்து கொண்டு உண்பதால் முறையான செரிமானம் வயிற்றில் நடக்காது .

♥மேலும் கண் நெருப்பை பற்றி மகாபாரத்தில் ஒரு நிகழ்ச்சி ..

♥துரியோதனன் போருக்கு போகும் முன் தன தாயிடம் ஆசி பெற செல்கிறான்
எப்பொழுதும் கண்களை கட்டி இருக்கும் அவள் துரியோதனிடம் ,நீ காலையில் குளித்தவுடன் நிர்வாணமாக என்னை பார்க்க வா என்று சொல்கிறாள் .

♥அதன் படி அவன் வந்தவுடன் தாய் தன் கண் கட்டுகளை களைந்து அவனை பார்க்கிறாள் .

♥பிறகு போருக்கு செல்கிறான் துரியோதனன் ,பீமனிடம் சண்டை செய்யும் பொழுது பீமன் அடி துரியோதனின் மேல் விழும் பொழுது (டங்) ஒரு
பித்தளை குடத்தை அடித்தது போல் ஒரு சத்தம் வருகிறது .

♥குழப்பம் அடைந்த பீமன் கிருஷ்ணரிடம் எப்படி இவன் உடம்பில் இருந்து
இப்படி சத்தம் வருகிறது என்று கேள்வி கேட்கிறான் .

♥கிருஷ்ணர் சொல்கிறார் பல வருடம் கண்களை கட்டிஇருந்த அவனுடைய தாய் கண்களை களைந்து அவனை பார்த்தது இருக்கிறாள் .

♥அவளுடைய கண்களில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு கவசமாக அவனை காவல் காக்கிறது என்றார் .

♥இதை சித்தர்கள் மாற்றாக நமக்கு சொல்லியது
உணவை உண்ணும் முன் கண்களில் ஒற்றி உண்ணவேண்டும் அல்லது
பார்த்து உண்ணவேண்டும் .

♥கோவில்களில் தரப்படும் பிரசாதம் நாம் கண்களில் ஒற்றிக்கொள்ள சொல்லபட்டது இதற்க்கு தான் .
வீட்டில் சாதத்தை பார்த்து சாப்பிடவேண்டும் என்பதும் இதற்க்கு தான் .

♥அடுத்து
மல ஜலம் கழித்து முடித்தவுடன் உடனே குளித்து விடவேண்டும் .

♥நான் காலையில் சிறிது தூரம் நடை பயிற்சி செய்யும் பொழுது நிறைய நபர்களை சந்திக்கிறேன் .

♥அவர்கள் சொல்கிறார்கள் மருத்துவர் சொல்படி நடை பயிற்சி செய்கிறேன் ..

♥என்னை பொறுத்தவரையில்
அசைவ உணவுகளை உண்பதும் ,மேலும் சரியான உணவு முறை
பழக்கம் இல்லாத காரணமும் தான் ...

♥காலை எழுந்தவுடன் குளிப்பதினால் உடலில் உள்ள சூடு சமப்படுகிறது .வயிற்றில் உள்ள வெப்பம் செரிமானத்தை தயார் செய்து விடுகிறது பசி எடுக்க வைக்கிறது .

♥பசிக்காமல் உண்பது ,நேரம் தவறி உண்பது ,அடிக்கடி இறைச்சி உணவு உண்பது ,துரித உணவுகளை உண்பது இவைகள் நமக்கு நோய்களை உண்டாகிறது

♥சித்தர்கள் சொல்வது எழுந்தவுடன் கடமைகளை செய்தவுடன் குளியல் .

♥குளிக்கும் பொழுது நாமங்கள் சொல்லுங்கள் பலிக்கும் .

♥ஆற்றில் நின்று மந்திரம் சொல்லும்பொழுது (தொப்புள் கொடி முழ்கும் படி நின்று ) பலிதம் ஆகும் என்று ரிஷிகளும் ,சித்தர்களும் சொல்லுவார்கள் ,
இன்று ஆறுகளை தேடி நாம் செல்ல நேரம் இல்லை .

♥சித்தர்கள் எழுதிய வைத்திய நூல்களில் உணவு முறைகளையும்
மனிதன் உணவுகளை உண்ணும் முறைகளையும் வகுத்து பிரித்து அழகாக நெரிபடுத்தி இதன் படி நோய்களை மற்றும் மனதின் என்ன அலைகளை சரி செய்ய முடியும் என்று ஆராய்ந்து நமக்கு தந்து உள்ளார்கள் .

♥அதன் படி உணவு முறைகளான இவைகள் ..
நக்கி சாப்பிடுவது ,
சப்பி சாப்பிடுவது
கடித்து சாப்பிடுவது
உறிந்து சாப்பிடுவது
என்று 4 வகையாக பிரிக்கலாம் .

♥எந்த உணவை எப்படி சாபிடலாம் என்று முறை இருக்கிறது .

♥சித்தர்கள் சொல்வது
உணவுகளை எடுத்து கொள்ளும் முன் கை கால்கள் குளிர்ந்த நீரில் கழுவி முகத்தில் நாமம் இட்டு பிறகு கால்களை மடக்கி தரையில்
அமர வேண்டும் .பிறகு வலது கையில் நீர் ஊற்றி உறிந்து குடிக்க வேண்டும் இதை 3 முறை செய்ய வேண்டும் இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு பிடித்த இறைவன் பெயர் சொல்லுங்கள் .

♥கால்களை மடக்கி அமர்ந்தால் கல்லீரல்,மற்றும் செரிமான சுரப்பிகள் வேலை செய்யும்
சக்கரை நோய் வராது,

♥உள்ளங்கையில் நீர் உற்றி உறிந்தால் பல அற்புதம்கள் நம் உடம்பின் உள்ளே நடப்பதை உணரமுடியும்.

♥கைகளை பற்றி சில விவரம்கள் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் .

♥தாயின் வயிற்றில் உள்ள சிசு பிறந்தவுடன் முதன் முதலாக சப்பிசாபிடும் பால் வயிற்றில் பட்டவுடன் வயிறு தன்னுடைய செயலை தொடங்கிறது என்பதனை நாம் அறிவோம் .

♥பிறந்த குழந்தை கைகளை மூடிய படி இருக்கும் .இப்படி கைகளை வைத்து இருக்கும் பொழுது தான் ரேகைகள் உண்டாகிறது என்று கைரேகை சாஸ்திரம் சொல்கிறது .மேலும் வயிற்றின் உள் அமைப்பு தான் உள்ளங்கை
என்று சொல்கிறது .

♥இதை அகஸ்தியர் நாடியில் உரைக்கும் பொழுது
எந்த மருந்து எடுத்தாலும் உள்ளங்கையில் நீர் உற்றி சிவ சிவ என்று சொல்லி குடித்து விட்டு கிழக்கு முகம் நின்று மருந்து சாப்பிடவும்
என்று சொல்கிறார் .

♥மேலும் வயிறு நோய்களை தீர்க்கும் போகர் ,கோரக்கர் உள்ளங்கைகளில்
தான் தேன் உற்றி அதில் மருந்துகளை குழைத்து உன்ன சொல்லி உள்ளார்கள்
நம்முடைய உள் வயிற்றின் அமைப்பு தான் உள்ளங்கைகள் .கைகளை வைத்து
நோய்களை அறியலாம் .

♥நகம் ,விரலில் உள்ள மச்சம் ,அதில் உள்ள இடைவெளி போன்ற அடையளாம்கள் வைத்து நோய்களை அறியலாம் ..

♥மேலும் நம் உடம்பில் உள்ள காந்த அலைகளை வைத்து கைகளின் முலம்
அடுத்தவர் உடம்பில் உள்ள நோய்களை ,கர்ம வினைகளை அகற்றலாம் இதுவே தீக்ஷை ,
இதை மகான்கள் ,சித்தர்கள் ,தூதுவர்கள் செய்தார்கள் ....

♥கைகளில் நீர் உற்றி உறிஞ்சுவதால் ஏற்படும் பலன் ....

♥நம் உடலில் தொண்டை தான் சகல நோய்களின் தடுப்பு சுவர் என்று சொல்லலாம் .

♥இதை மீறி எந்த கிருமியும் செல்ல முடியாது .நம்முடைய
உடல் சூடுகளில் தொண்டையில் உள்ள சுடு மிக மிக முக்கியமானது என்று சித்த வைத்திய நூல் சொல்கிறது
இந்த சுடு( ஜடாரக்னி ) தான் நமக்கு சம விகிதமாக செயல்படும் .இதற்க்கு ஈரம் தேவை .

♥(குளிர்ச்சி தேவை )
இதை சித்தர்கள் தலை கீழாக தொங்கும் லிங்கம் உடைய இடம் என்று சொல்வார்கள்
ஆம் லிங்கம் தலைகீழாக இருக்கும் (உள்நாக்கு ) நீலகண்டன் என்பது இவைகளை குறிப்பது இது தான் செயல்களில் தவறினால் சுடு அதிகமாகும் (காய்ச்சல் ) நாம் உணவு உண்ணும் பொழுது இடை இடைய நீர் அருந்தகூடாது.

♥தாகத்தை ஏற்படுத்தும் லிங்கம் ஈரமாக வைக்க உள்ளங்கையில் நீர் வைத்து உறிந்து குடிக்கும் பொழுது தொண்டை நணையும் பிறகு உண்பதால் நீர் வறட்சி வராது.

♥சாப்பிட்டு முடியும் வரை தாகம் இருக்காது .

♥உணவு அருந்திய அரைமணி நேரம் பிறகு தான் நீர் அருந்த வேண்டும் அகவே கால்களை மடக்கி கைகளில் நீர் உற்றி எதாவுது இறைவன் நாமம்
சொல்லி உறிந்து குடித்து விட்டு உணவு சாப்பிட வேண்டும்.