Wednesday 5 October 2016

கொங்குநாடு

கொங்குநாடு

வந்தாரையும் வாழ்வில் நொந்தாரையும் வாழவைக்கும் திருப்பூர்...

வாங்..போங்.என மரியாதையோடு நாகரிகத்தையும் கூடவே நாசூக்கான விஷயங்களையும் கற்றுத் தரும் கோவை..

குளிர்ச்சிக்கு கோவை குற்றாலம்.

தேங்காய்க்கு பொள்ளாச்சி,.

கறிவேப்பிலைக்கு மேட்டுப்பாளையம்,

தடதட தறிநெசவுக்கு சோமனூர்

பாத்திரத்திற்கு அனுப்பர்பாளையம்..

கரும்பு,வெல்லத்துக்கு உடுமலைப்பேட்டை

சிற்பங்களுக்கு திருமுருகன்பூண்டி,

முருகனுக்கு மருதமலை,

சிவனுக்கு திருமூர்த்திமலை,

அரங்கனுக்கு காரமடை,

பெருமாளுக்கு திருப்பூர் திருப்பதி,

விநாயகனுக்கு ஈச்சனாரி

பாசனத்துக்கு அமராவதி,

தாகத்துக்கு சிறுவாணி,

குளிக்க கொடிவேரி,

ஆடிப்பாட திருமூர்த்தி அருவி,

குரங்கு சேட்டைக்கு குரங்கு அருவி,

மலைகளின் ராணி ஊட்டியாம்,மலைகளின் இளவரசி வால்பாறையாம்..

வடக்கே பத்ரகாளி,

தெற்கே மாசாணி,

மேற்கே மீன்குளத்தி,

கிழக்கே செல்லாண்டி

சிமெண்டுக்கு மதுக்கரை..

சீலைத்துணிக்கு நெகமம்

மஞ்சத்தாலிக்கு உடுமலை முருங்கப்பட்டி,

போர்வைக்கு சென்னிமலை,

வெண்ணெய்க்கு ஊத்துக்குளி,

ஆத்துக்கு அம்பராம்பாளையம்,

பாலத்துக்குப் பெரியபட்டி,

காலேசுக்குக் கிணத்துக்கடவு,

தேருக்குச்.செஞ்சேரிமலை

கள்ளுக்கு கொழிஞ்சாம்பாறை

வைத்தியத்துக்கு தெலுங்குபாளையம்,

பஸ்ஸூக்குக் காந்திபுரம்

மஞ்சளுக்கு ஈரோடு

சந்தனத்துக்கு சத்தியமங்கலம்

நெல்லுக்குத் தாராபுரம்

காளைகளுக்குக் காங்கயம்..

கோவிலுக்குக் கொடுமுடி 

ஏழைகளுக்கு ஊட்டி உடுமலைப்பேட்டை

முதலைக்கு அமராவதி

யானைக்குச்சின்னாறு

ரயிலுக்கு போத்தனூரு

சர்க்கரைக்கு மடத்துக்குளம்.👳🏼

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.