<3 வாழ்க்கை என்ன குதிரை பந்தயமா ? <3
பிறர் ஒவ்வொருவரும், இதைச் செய்கிறார்கள்,
அதைச் செய்கிறார்கள்,இதை சாதிக்கிறார்கள்',
நீ மட்டும் எப்படி நின்று விடுவது?
போய்க்கொண்டேதான் இருக்க வேண்டியிருக்கிறது.
இன்னும் அதிக தூரம்,அதிக வேகத்தில்,இன்னும் அதிக கம்பீரத்தோடு,இன்னும் அதிக எழுச்சியோடு
என்று போய்க்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.
ஆனால் எங்கே போய்க் கொண்டிருக்கிறாய் என்பது மட்டும் தெரியவில்லை
.எது சேரும் இடம் என்பது மட்டும் தெரிவதில்லை
.எதை சாதிக்க வேண்டும்?பணமா,கௌரவமா?
அப்படித்தான் அவை நிறைய வந்தாலும்
அவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்றிருக்கிறாய்?
பெரிய வீட்டை வாங்கி வாழலாம்.
நீதானே வாழப்போவது?
வீடல்லவே!
சிறிய வீட்டில் நிம்மதி இல்லை என்றால்
பெரிய வீட்டில் அதிகமாக நிம்மதியை இழக்கப் போகிறாய்.
உன்னைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது என்றால்
பணம்,புகழை வைத்து என்ன செய்யப் போகிறாய்?
உலகம் முழுக்கத் தெரிந்தவன் ஆகலாம்
.அதனால் ஆகப் போவதென்ன?
உன்னுடைய உள்ளிருட்டு அப்படியேதான் இருக்கப் போகிறது.
--- ஓஷோ ---
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.