மனிதர்களுக்கு மட்டுமே ஏன் இப்படி ????
.
எப்படிச்சாப்பிடுவது, எப்படிப் பேசுவது, எப்படி உடை உடுத்துவது, எப்படிக் கைகுலுக்குவது, எப்படி அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் நடந்துகொள்வது, எப்படிப் பணியாளர்களை நடத்துவது, எப்படி நெருக்கடிகளைச் சமாளிப்பது, எப்படிப் பெண்களைக் கவர்வது, எப்படிக் குழந்தை வளர்ப்பது என்றெல்லாம் ஏராளமான அறிவுரைகளும் பயிற்சி வகுப்புகளும் கிடைக்கும் காலம் இது.
கல்லூரிகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் இதுபோன்ற ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சியாளர்கள் நம்மைக் குழந்தைகளைப் போலவும், முட்டாள்களைப் போலவும் நடத்துவதை நாம் எல்லாரும் ஏதாவது ஒரு தருணத்தில் அனுபவித்தே இருப்போம்.
நாம் குறையுடவர்கள், மேம்பட வேண்டியவர்கள் என்று நம்மைப் பற்றி நாம் வைத்திருக்கும் கருத்தும் குற்றவுணர்வுமே இந்தப் பயிற்சியாளர்களை நாம் ஆதிக்கம் செலுத்த அனுமதிப்பதற்குக் காரணம்.
ஒரு சந்தர்ப்பம் அல்லது ஒரு சூழ்நிலையைச் சொல்லி எல்லாரிடமும் அந்தப் பயிற்சியாளர்கள் கேள்வி கேட்பார்கள். எல்லாரும் சிறு குழந்தைகளைப் போல ஆர்வத்துடன் பதில்சொல்வோம். ஆனால் அத்தனை பேரும் சொன்னதற்கு மாறான ஒரு கருத்தைப் பயிற்சியாளர் சொல்வார். அப்போது நம்மிடம் ஏற்படும் தாழ்வுணர்ச்சிதான் இவர்களது முதலீடு.
நம்மைப் பற்றி நமக்கு இருக்கும் தன்னம்பிக்கையின்மை, நமக்கு நம்மைப் பற்றி இருக்கும் சுய நிச்சயமின்மைதான் ஆகியவைதாம் இதுபோன்ற ஆளுமைத் திறன் வகுப்புகள் பெருகுவதற்கான காரணம்.
இந்த உலகில் ஒவ்வொரு மனிதனுமே ஒவ்வொரு வகையில் தனித்துவமானவர்கள். அவர்கள் நன்மையும் தீமையுமாக நாள்தோறும் சுய அனுபவம் மூலம் மேம்படுபவர்கள். பெரும் தவறுகளைச் செய்யவும், மாபெரும் நன்மைகளைச் செய்யவும் இந்தத் தனித்துவமே அவர்களுக்கு உதவியாக உள்ளது. அதனால் எந்த மனிதருமே- வெற்றிகரமான மனிதர்கள் உட்பட- நன்மை தீமைகளோடு உள்ளவர்கள்தாம்.
நேர்த்தியாகவும் சரியாகவும் நாகரிகமாகவும் மட்டுமே திகழ்கிற ஒரு மனிதனைக் கற்பனை செய்துபாருங்கள். அவன் சுற்றியுள்ளவர்களுக்கு அலுப்பை மட்டுமே தருவான். எல்லாச் சரி, தவறுகளுடனும் அன்றாட அனுபவங்கள் வாயிலாகவும், குடும்பம், நண்பர்கள், சமூக உறவுகள் மூலம் அவன் மாறிக்கொண்டே இருப்பவன்.
வேலைச் சூழலில் அதிகாரியிடமிருந்து வரும் எந்த உத்தரவையும் எதிர்கேள்வி கேட்காமல் அதை அப்படியே பின்பற்றுவது, சுயசிந்தனைக்குச் செவிகொடுக்காமல் வேலைசெய்வது போன்ற ராணுவ வீரர்களின் செயல்பாடுகளை ஒத்த போக்கே இந்த ஆளுமைத்திறன் பயிற்சிகளின் நோக்கமாக உள்ளது. உள்ளூரத் தாழ்வுமனப்பான்மையைக் காப்பாற்றுகிற பணியாட்களே பெரும்பான்மையான நிறுவனங்களின் தேவையாகவும் உள்ளது. இதுவே சுயமேம்பாடு மற்றும் ஊக்கநூல்களின் உள்ளடக்கமாக மாறியது.
அந்த அடிப்படையில் இந்த நூல்கள் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடன் 'போரிடுவதற்கே' தயார்ப்படுத்துக
ின்றன. சகமனிதனுடன் உறவுகொள்ளச் சொல்லித் தருவதை விட்டு அவனை மேலாண்மை செய்வது எப்படி என்று சொல்லித்தருகின்றன.
பத்து நாட்களில் பணக்காரர் ஆவது எப்படி? போன்ற பல நூல்கள் புத்தகக் கடைகளில் கிடைக்கின்றன. ஆனால் அந்தப் புத்தகத்தைப் படித்து யாராவது பணக்காரர் ஆகியிருக்கிறார்களா? எனக்குத் தெரிந்து இதுபோன்று நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய ஆசிரியர்கூடப் பணக்காரர் ஆகவில்லை. எப்படி வாழ்வது? என்பதை ஒரு புத்தகத்தைப் படித்துத் தெரிந்துகொள்ள முடியுமா?
இந்த உலகத்தில் வாழும் உயிர்களிலேயே மற்றவர்களுக்கு எப்படி வாழ்வது என்பதைச் சொல்லிக்கொடுப்பவர்கள் மனிதர்களாகவே இருக்க முடியும். பெரும்பாலான தன்னம்பிக்கை மற்றும் சுயமேம்பாட்டு நூல்கள் மற்ற மனிதர்களைச் சந்தேகப்பட்டு அவர்களைக் கையாண்டு, பலன் பெறுவதை மட்டுமே கற்றுக்கொடுக்கின்றன. இந்த நூல்களைப் படிக்கும் வாசகரை, அது ஒரு பாதுகாப்பின்மை உணர்வுக்குள் தள்ளுகிறது. சுற்றி இருக்கும் மனிதர்கள் அனைவரும் ஏமாற்ற முயல்வதாக ஒரு கற்பிதத்தை ஏற்படுத்துகிறது. தனது நலன், தனது குறிக்கோள் என்ற ஒற்றைக் குறிக்கோளில் கவனம் செலுத்த மறைமுகமாக இந்நூல்கள் தூண்டுகின்றன.
ஒரு மனிதர் மேல் இன்னொரு மனிதர் நம்பிக்கை வைத்து அனுசரித்து வாழ்ந்த காலம் போய், அனைத்து மனிதர்களையும் சந்தேகப்பட்டு ஒரு மூடிய சமூகமாக நாம் வேகவேகமாக ஆகிவருகிறோம். அந்தச் செயல்முறையைத் தன்னம்பிக்கை நூல்களும், ஆளுமைத்திறன் பயிற்சிகளும் துரிதப்படுத்துகின்றன.
இன்று நடத்தப்படும் யோகா மற்றும் ஆளுமைத் திறன் வகுப்புகளில் முகங்களைக் கூர்ந்து கவனியுங்கள். அமைதியாகப் பதற்றமின்றி நேர்மறையாகப் பேச வேண்டும் என்று தொடர்ந்து பயிற்சியாளர்கள் கூறுவார்கள். அவர்கள் வாழ்க்கையில் கோபத்திற்கே இடமில்லை என்பது போல தோற்றம் அளிப்பார்கள். மேலாண்மைத் திறனையும், நிர்வாக ஆளுமைத்திறனையும் கடவுள் தன்மையாக அணுகுகின்றனர். ஒரு வாரப் பயிற்சியில் நீங்கள் யோகநிலையை அடைந்துவிடலாம். 15 நாள் பயிற்சியில் சிறந்த நிர்வாகி ஆகிவிடலாம்.
வாழ்க்கையை பாசிட்டிவ்வாக அணுகுவதற்கும், ஆளுமை மேம்பாட்டுக்குமான பயிற்சிகள் தேவையே இல்லையா என்று இதைப் படிப்பவர்களுக்கு கேள்வி வரலாம். நிச்சயம் தேவை. இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் போன்ற உப்புசப்பில்லாத ஆலோசனைகள் கொண்ட புத்தகங்களை விட்டு, சுயசரிதங்களைப் படியுங்கள். வாழ்க்கை வரலாறுகளைப் படியுங்கள். நாடுகளின் வரலாற்றைப் படியுங்கள். என்னென்ன நெருக்கடிகள், எத்தனையோ வகையான இழப்புகளைச் சந்தித்தும் மனிதர்கள் மாமனிதர்களாக ஆவதைப் புரிந்துகொள்ளுங்கள்.
உங்களைச் சுற்றி நடப்பதில் ஈடுபடுங்கள். உங்கள் வாழ்க்கை அந்தஸ்துக்குக் கீழ்நிலையில் வாழும் மனிதர்களின் சுக,துக்கங்களை பரிவுணர்வோடு பாருங்கள். நீங்கள் காரில் செல்பவராக இருந்தால், சைக்கிளில் செல்பவரின் பார்வையிலிருந்து வாழ்க்கையைப் பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்களின் வாழ்க்கையை எந்த முன்தீர்மானமும் இன்றிக் கற்பனையில் வாழ்ந்து பாருங்கள்.
வாழ்க்கையைக் கற்றுக்கொள்வதற்கு வாழ்க்கைக்குள் நீங்கள்தான் மூழ்க வேண்டும். நீச்சல் குளத்தில் குதிக்காமல் நூறு புத்தகங்கள் படித்தாலும் நீச்சல் கற்றுக்கொள்ளவே முடியாது.
நமது மனமும், நம்மைச் சுற்றியுள்ள வண்ணமயமான வாழ்க்கையும் எந்த நூலையும் விட, எந்த குளிர்சாதன அறை ஆளுமைத் திறன் பயிற்சி வகுப்பையும் விட சக்திவாய்ந்தது.
நாம் செயல்படத் தொடங்கும்போதே மேம்படுகிறோம். நாம் ஒருவரையொருவர் பரஸ்பரம் நம்பத் தொடங்கும்போதே நல்ல வாழ்க்கைக்கு உத்தரவாதம் செய்துகொள்கிறோம்.
கூட்டமாகச் செல்லும் பறவைகள்தாம் விரைவில் தனது இலக்கைச் சென்றடைகின்றன. தனிப்பறவைகள் அல்ல
.
தி ஹிந்துவில் படித்தது
Wednesday, 5 July 2017
மனிதர்களுக்கு மட்டுமே ஏன் இப்படி ????
Monday, 19 June 2017
கடிகாரத்தை வீட்டின் எந்த திசையை நோக்கி வைத்தால் வளம் அதிகரிக்கும்
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள பொருட்களை வைக்கும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றலின் அளவை ஈர்க்கும். இங்கு அதுக் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது
எந்த திசை சிறந்தது? * வீட்டின் சுவற்றில் தொங்கவிடும் கண்ணாடி சதுரம் அல்து செவ்வக வடிவில் இருக்க வேண்டும். * அதேப் போல் கண்ணாடியை வடக்கு-கிழக்கு திசையில் வைப்பதே நல்லது. * குறிப்பாக தரையில் இருந்து 4-5 அடிக்கு மேலே கண்ணாடி இருக்க வேண்டும்
Monday, 5 June 2017
வளமுடன் வாழ
வளமுடன் வாழ (108) சூத்திரங்கள்
××××××××××××××××××
1. கடமையை செய்.
2. காலம் போற்று.
3. கீர்த்தனை பாடு.
4. குறைகள் களை.
5. கெட்டவை அகற்று.
6. கேள்வி வேண்டும்.
7. கை கொடு.
8. கோவிலுக்குச் செல்.
9. கொலை செய்யாதே.
10. கூச்சம் வேண்டாம்.
11. தர்மம் செய்.
12. தாயை வணங்கு.
13. திமிர் வேண்டாம்.
14. தீயவை பழகாதே.
15. துன்பம் துரத்து.
16. தூய்மையாய் இரு.
17. தெளிவாக சிந்தி.
18. தைரியம் வேண்டும்.
19. தொண்டு செய்.
20. தோழனை கண்டுபிடி.
21. சத்துணவு சாப்பிடு.
22. சஞ்சலம் போக்கு.
23. சாதனை செய்.
24. சிக்கனம் தேவை.
25. சீருடன் வாழ்.
26. சுத்தம் பேண்.
27. சூழ்ச்சி செய்யாதே.
28. செலவை குறை.
29. சேர்க்கப் பழகு.
30. சைவம் சிறந்தது.
31. சொர்க்கம் தேடு.
32. சோகம் வேண்டாம்.
33. சோம்பல் அகற்று.
34. செளந்தர்யம் சேர்.
35. நம்பிக்கை கொள்.
36. நிம்மதி பெரிது.
37. நெஞ்சத்தில் நில்.
38. நேர்மை கடைபிடி.
39. நைந்து பழகு.
40. நொறுங்கத் தின்னு.
41. நோயை விரட்டு.
42. பண்புடன் பழகு.
43. பாவம் செய்யாதே.
44. பிதற்றல் குறை.
45. பீடிகை போடாதே.
46. புண்ணியம் சேர்.
47. பூசல் நீக்கு.
48. பெரியோரை மதி.
49. பேதம் வேண்டாம்.
50. பைந்தமிழ் பேசு.
51. பொய் பேசாதே.
52. முகத்தை சுழிக்காதே.
53. மூத்தோற்கு உதவு.
54. மெல்லப் பேசு.
55. மேலானவை நினை.
56. மோசம் செய்யாதே.
57. மௌனம் நல்லது.
58. வறுமை ஒழி.
59. வளம் சேர்.
60. விளையாட்டல்ல வாழ்க்கை.
61. வீம்பு விலக்கு.
62. ஒவ்வொன்றாக செய்.
63. வருவோரெல்லாம் நண்பர்களல்லர்.
64. வேற்றுமை ஒழி.
65. வையகம் போற்று.
66. கலைஞனாய் இரு.
67. ஞானம் வேண்டு.
68. குணம் வளர்.
69. பண்ணிப் பார்.
70. எண்ணுக உயர்வு.
71. பயம் தவிர்.
72. மெய்யூட்டி வளர்.
73. மெய்யென பேசு.
74. தன் கையே உதவி.
75. தீயோடு விளையாடாதே.
76. மலையோடு மோதாதே.
77. தடத்தில் நட.
78. விபரீதம் வேண்டாம்.
79. கண்டு களி.
80. அட்டூழியம் செய்யாதே.
81. கேட்டேதும் பெறா.
82. நாட்டை நேசி.
83. வீட்டோடு வாழ்.
84. வரம் கேள்.
85. திருடி பிழைக்காதே.
86. மேதாவித்தனம் வேண்டாம்.
87. சொல்லுக பயனுள.
88. பழங்கள் சாப்பிடு.
89. சினம் தவிர்.
90. அனுபவம் பலம்.
91. கண்ணெனப் போற்று.
92. திருடனே திருந்து.
93. இறைவனைப் புகழ்.
94. அமைதி கொள்.
95. துக்கம் மற.
96. பங்கம் பண்ணாதே.
97. அன்பே அச்சாணி.
98. கொஞ்சி மகிழ்.
99. மட்டம் தட்டாதே.
100. சொந்தம் சூழ்ந்திரு.
101. தவறைத் திருத்து.
102. அம்மாவே தெய்வம்.
103. வன்மம் வைக்காதே.
104. சொல் தவறாதே.
105. தோள் கொடு.
106. பேராசைப் படாதே.
107. புன்னகை அணி.
108. நீடுழி வாழ்.
*இந்த நாள் இனிய நாளாக அமைய என் வாழ்த்துக்கள்*!!
ஓஷொவின் தியான முறைகள்
*🐾ஓஷோவின் உன்னத தியான முறை🐾*
*சுவாசத்தை கவனித்தல் எளிதானதாகவும்,* *எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் எளிமையானதாகவும் இருக்கும்*
*ஒரு முறையை நான் தேர்ந்தெடுத்துள்ளேன்.*
*🐬இது உலகம் முழுவதும் பரவட்டும்🐬*
*இதை சுவாசத்தை கவனித்தல் என நான் அழைக்கிறேன்,*
*இது மிகவும் எளிய முறை.*
*எப்போது – நீ அமைதியாக அமர்ந்திருக்கக் கூடிய*
எல்லா நேரங்களிலும், ரயிலிலோ, பஸ்ஸிலோ,
விமானத்திலோ பயணம் செல்லும் சமயத்தில் இந்த தியானத்தை செய் .
*காலம் – 2* நிமிடங்கள் முதல் எவ்வளவு நேரம் நீ செய்ய விரும்புகிறாயோ அது வரை.
*💥முதல் படி – உனது கண்களை மூடி உனது சுவாசத்தை கவனி.*
*சுவாசம் உள்ளே செல்லும்போது நீயும் அதனுடன் உள்ளே செல்,*
*வெளியே வரும்போது நீயும் அதனுடன் வெளியே வா.*
*நீ சுவாசத்துடன்* *உள்ளே சென்று பின்*
*அதனுடன் வெளியே வருவது என்பது போன்று* செய்யும்
சமயத்தில் நீ இரண்டு விஷயங்களைப் பற்றி உணர்வடைவாய்.
🌳நீ சுவாசத்துடன் உள்ளே செல்லும்போது
அது வெளியே வருவதற்காக திரும்பும் முன் ஒரு கணம் சுவாசத்தில் இடைவெளி வரும்.
இதேபோல சுவாசத்தை வெளியே விடும்போதும் நிகழும்.
*திரும்பவும் உள்ளே இழுக்கும் முன் ஒரு கணம் இடைவெளி வரும்.*
☘நீ அதை கவனிக்க கவனிக்க இந்த இரண்டு நிலைகளும் மேலும் மேலும் தெளிவாக, பெரியதாக மாறும். ஒரு சுவாசம் உள்ளே போய் ஒரு கணம் நிற்கும்,
பின் வெளி வரும்.
வெளியே வந்தது ஒரு கணம் நின்று பின் உள்ளே போகும். இந்த இடைவெளி பெரிதாகிக் கொண்டே போகும்.
பின் ஒரு சமயம் வரும் அந்த அற்புத அனுபவம் நடக்கும் .
தியானம் தரக்கூடிய எல்லாவற்றையும் நீ பெற்று விடுவாய்.
சுவாசத்தை கவனித்தல்
தியான பயிற்சியை
குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்று கிடையாது.
🌿 நீ இதை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம்.
ஒரு நாளில் எவ்வளவு முறை முடிகிறதோ அவ்வளவு தடவை செய்யலாம். சில சமயங்களில் வெறும் இரண்டு நிமிடங்கள் கூட செய்யலாம்.
சில நேரங்களில் படுக்கையில் படுத்திருப்பாய்.
ஆனால் தூக்கம் வராது. தூக்கத்தைப்பற்றி கவலைப்படாதே. அதைச் செய். இது இரண்டு வேலைகளையும் செய்யும்.
🍂🍂
இது ஆழ்ந்த அமைதியான தியானத்தைத் தரும், இதைச் செய்வதன் மூலம் தூக்கமும் வந்து விடும்.
ஆனால் நீ எழுந்திருக்கும் போதுதான் தூங்கி விட்டிருப்பதே உனக்குத் தெரியும்.
ஆனால் மிகவும் வேறுபட்ட விஷயம் என்னவென்றால் நீ தியானம் செய்தவாறே தூங்கி விட்டிருந்தால் நீ காலையில் எழும்போதும் தியான தன்மையோடு எழுவாய்.
அப்படி என்றால் ஆழ் மனதில் எங்கோ ஆழத்தில் நீ அறியாவண்ணம் இந்த முறை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது என்றுதானே அர்த்தம்
*உனது இரவு முழுவதும் தியானமாக மாறி விட்டிருக்கிறது.*
*இது உனக்கு கிடைக்கக் கூடிய மிக அதிக அளவு நேரமாகும்.*
*உனது தூக்கம் மிகவும் அமைதியானதாகவும்,*
*ஓய்வானதாகவும் புத்துணர்வு* *தரக்கூடியதாகவும் மிகவும் வேறுபட்ட குணத்தில் இருக்கும்.*
*ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை இந்த கவனித்தல் தொடர்கிறது.*
*காலையில் நீ விழித்தெழுந்த* *உடன் உனது சுவாசத்தை*
*கவனிப்பதை நீ தொடர்ந்து செய்ய ஆரம்பிப்பாய்.*
*அது உனக்கு வியப்பளிக்கும்.*
*📕📕📕📕ஓஷொவின் தியான முறைகள்*
Sunday, 4 June 2017
இறந்து போதல் என்றால் என்ன...???
🌺 *ஆத்ம விசாரணை* 🌺
🌷 இறந்து போதல் என்றால் என்ன...???
அப்போது ரமணர் சிறு வயது....
அவரது அப்பா இறந்துபோனதும் , அதே நினைவாக இருந்து கொண்டிருந்தார்..
அப்பாவை எப்படி தகனம் செய்திருப்பார்கள்....!!!???!!!
நெருப்பு மூட்டி எரித்தால் வலிக்காதா..???
ஏன் வலிக்காமல் போயிற்று...???
எது இருந்தால் வலி....???
எது இழந்தால் மரணம்....???
எது இருந்தால் என்று தன்னைத்தானே உற்றுப் பார்த்தான்.
எது இருக்கிறது உள்ளே என்று மெல்ல தேடினான்.
இறந்து போதல் என்றால் எது வெளியே போகவேண்டும் என்று மறுபடியும் ஆராய்ந்தான்.
இப்படி உட்கார்ந்து பார்த்தால் தெரியுமா, இறந்து போனால் தானே தெரியும்.' எனத் தோன்றியது.
இறந்து போனது என்றால் நீட்டி படுக்க வேண்டும்.
அவன் சட்டென்று கால் நீட்டி படுத்துக் கொண்டான்.
உடம்பை விறைப்பாக்கினான்.
இப்ப உடம்பு செத்துவிட்டது.
இந்த உடம்புக்கு மரணம் வந்துவிட்டது.
நான் இறந்து விட்டேன்.
இப்பொழுது கொண்டு போய் தகனம் செய்துவிடுவார்கள்.
அண்ணா தான் மறுபடியும் நெருப்பு சட்டி தூக்கிக் கொண்டு போகவேண்டும்.
ஆடி ஆடி தூக்கிக் கொண்டு போய்,
சுடுகாட்டில் வைத்து விறகு அடுக்கி, கொளுத்தி விடுவார்கள்.
இந்த உடம்பு மெல்ல மெல்ல நெருப்புபட்டு சாம்பலாகிவிடும்..
ஒன்றுமே இருக்காது.
உடம்பு காணாமல் போய்விடும்.
எது இருப்பதால் நான் இருக்கிறேன்,
எது இருப்பதால் நான் படுத்து இருக்கிறேன்.
எது இல்லாது போனால் நான் இறந்து விடுவேன்....???
வேங்கடராமன் உற்று ஆழ்ந்து எது இருக்கிறது என்று பார்த்தான்.
வேங்கடராமனின் மூச்சில் மாறுதல் ஏற்பட்டது.
மனம் அடங்க, முச்சும் அடங்கும், மூக்கில் இருந்து ஓரடி தூரம் வெளிவருகின்ற காற்று மெல்ல சுருங்கிற்று.
மனதில் உள்ளுக்குள் ஆழ்ந்து எது இருக்கிறதோ என்று பார்க்க,
மூச்சு விடுவது மூக்கின் எல்லைவரை இருந்தது.
இன்னும் ஆழ்ந்து எது இருக்கிறது,
எது இழந்தால் மரணம் என்று உற்று பார்க்க மூச்சானது மேல்மூக்கு வரை நின்றது.
அட இதோ, இந்த இடத்தில்தான், இந்த இடத்தில்தான் ஏதோ இருக்கிறது..
அதனுடைய இருப்பால்தான் உடம்பினுடைய எல்லா விஷயங்களும் ஆடுகின்றன
இன்னும் உற்று பார்க்க,
மூச்சானது வெளியே போகாமல், தொண்டைக் குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று.
நுரையீரலிலிருந்து தொண்டைக்குழிக்கு வந்தது.
தொண்டைக்குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று .
இன்னும் உற்றுப் ஆழ்ந்து பார்க்க
வேங்கடராமன் உடம்பு வேகமாக விறைத்தது.
உடம்பினுள்ள மற்ற புலன்களுடைய ஆதிக்கங்கள் தானாய் இழந்தன.
மூச்சுஓட்டம் வேறு மாதிரியான கதிக்கு போயிற்று.
இறந்த போது உடம்பு விறைக்குமே, அந்த விறைப்புத்தன்மை உடம்பில் சட்டென்று ஏற்பட்டது.
அவன் அந்நியமாய் நின்று வேடிக்கை பார்த்தான்.
மூச்சானது இப்பொழுது மெல்ல நுரையீரலில் இருந்து சிறிது தூரம் வெளிப்பட்டு மறுபடியும் நுரையீரலுக்கு போயிற்று.
மூக்கு அருகே, தொண்டை அருகே வராது,
மூச்சு குழாய் அருகே கொஞ்சம் தூரம் போய்விட்டு மறுபடியும் பின் திரும்பியது.
மூச்சு இருந்தது.
ஆனால் முழுவதுமாக இல்லாது,
ஒரு காளை கொம்பு போல அதே அளவோடு சிறிது வளைவோடு மூச்சு எகிறி வெளியே போய் மறுபடியும் நுரையீரலுக்கு வந்தது.
மனம் அடங்க, மூச்சும் அடங்கும்.
மூச்சு அடங்க, மனமும் அடங்கும்.
இரண்டு காளை கொம்புகளாய் மூச்சு அசைந்து கொண்டிருந்த பொழுது,
சட்டென்று உள்ளுக்குள்ளே ஒரு பேரொளி தோன்றியது.
தாங்க முடியாத அதிர்ச்சி வந்தது.
இரண்டு மூச்சுக்கு நடுவேயும்,
இரண்டு காளைக் கொம்புகளுக்கு நடுவேயும்,
ஏதோ ஒன்று பிரகாசமாக ஆடியும், ஆடாமலும்,
அசைந்தும், அசையாமலும்
மிக பொலிவோடு நின்று கொண்டு இருந்தது.
எண்ண ஓட்டங்கள் சில்லென்று நின்றன.
அது, அந்த பேரொளி, எண்ணத்தை விழுங்கியது.
எண்ணம் விழுங்கப்பட, 'நான்' என்ற அகந்தையும் உள்ளே விழுங்கப்பட்டது.
' உடலே நான்' என்கிற எண்ணம் காணாமற் போக
பேரொளியே தானாகி வேங்கடராமன் கிடந்தான்.
சகல உயிர்களையும் இவ்வாறு நிற்பது என்பது தெரிந்தது.
இதுவே நிரந்தரம்.
இதுவே முழுமை.
இதுவே இங்கு இருப்பு.
இதுவே இங்கு எல்லாமும்.
இதுவே முதன்மை,
இதுவே சுதந்திரம்,
இதுவே பரமானந்தம்,
இதுவே பூமி,
இதுவே பிரபஞ்சம்,
இதுவே அன்பு,
இதுவே கருணை,
இதுவே அறிவு.
இதுவே ஆரோக்கியம்.
அனைத்து இடங்களிலும் நீக்கமற நிற்கின்ற அற்புதம்.
இதுவே எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது.
மூடிய கண்களில் பெரிய வெளிச்சம்,
மூடாத காதுகளில் ரீங்காரம்,
உடம்பு முழுவதும் புல்லரிக்க வைக்கும் தகதகப்பு,
புத்தியில் ஒரு திகைப்பு,
உள்ளங்காலில் ஒரு சுகவேதனை,
ஆசனவாய் இழுத்து சுருங்கி கொண்டு கழுத்து வரை ஒரு சக்தியை தள்ளி அனுப்புகிறது.
முதுகு தண்டில் ஒரு குடையல்,
நெஞ்சு துடிப்பு நிதானம்,
இருதயத்தில் அழுத்திய கனம்,
தொண்டையில் ஒரு சுழல்,
நெற்றியில் ஒரு குறு குறுப்பு,
உச்சி மண்டையில் ஒரு அக்னி,
ஆஹா ஆஹா எல்லா இடமும் நீக்கமற நிறைந்திருக்கிறதே.
அதுவே அதுவே, வேங்கடராமனின் மனம் மெல்ல விழித்து கொண்டு அலறியது.
திரும்பி எழுந்திருக்க அரைமணி நேரம் ஆயிற்று.
வேங்கடராமன் எழுந்து சம்மணமிட்டு
அமர்ந்து கொண்டார்.
எதிரே இருந்த சுவர் பார்த்து வெறுமே அழுதான்.
பிறகு காரணமின்றி சிரித்தான்.
மீண்டும் அழுதான்.
எழுந்து நின்று சுவர் மூலையில் சாய்ந்து கொண்டான்.
தள்ளாடி வாசல் நோக்கி நகர்ந்தான்.
வேகமாக தாவி ஏறும் மாடிப்படி அன்று பார்க்க பயமாக இருந்தது.
உருண்டு விழுந்து விடுவோமோ என்று தோன்றியது.
'என்ன நடந்தது எனக்கு, என்ன நடந்தது எனக்கு'
ஒவ்வொரு படியாய் மெல்ல இறங்கி வந்தான்.
'உள்ளே இருப்பது நான்.
அதுதான் நான்' ஒருபடி இறங்கினான்.
'இந்த உடம்பு நான் அல்ல,
இந்த புத்தி நானல்ல,
என் சக்தி நானல்ல, என் மனம் நானல்ல'
ஒவ்வொரு படி இறங்கும் போதும் அவனுக்குள் தெள்ளத்தெளிவாய் விஷயம் புரிந்தது.
'உள்ளே பேரொளியாய்,
சுடராய் இருந்து இருக்கிற அதுவே நான்.
அதுவே எல்லாருள்ளும்.
எனக்குள் இருப்பதே எல்லா இடத்திலும் இருக்கிறது.
நான் தான் அது
நான் தான் சித்தி,
நான் தான் சித்தப்பா,
நான் தான் அண்ணா,
நான் தான் தெரு நாய்,
நான் தான் வண்டு,
நான் தான் பசுமாடு,
நான் தான் மாடப்புறா,
நான் தான் எல்லாமும்.
ஒருமை எப்படி பன்மையாகும்.
இது மிகப் பெரிய தவறு.
'நான்' என்பது எல்லாவிதமாகவும் விளங்கியிருக்கிறபோது,
எல்லாமுமாய் பிறந்து இருக்கிற போது,
என்னிலும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்....!!!
என்ன வேறுபாடு....!!!
ஒருமை எப்படி பன்மையாகும்....!!!
பத்தாவது படியில் இறங்கி நின்றான்.
மாடிப்படி திரும்பினான்.
சிரித்தான்.
'இதை யாரிடம் போய் சொல்வது,
இப்படி நடந்தால் என்ன அர்த்தம் என்று விளக்கம் கேட்பது,
நான் சரியாக புரிந்து கொண்டு இருக்கிறேனா,
எனக்கு ஏதோ நடந்தது,
அது சரியாக நிகழ்ந்ததா....???
தூக்கமா...???
பிரமையா....???
அல்லது உள்ளுக்குள் இருப்பது தான் வெளிப்பட்டதா...???
அவன் இறங்கி நடந்து கோயிலுக்குள் போனான்.
மதுரை சுந்தரரேஸ்வரரை பார்த்து கைகூப்பினான்.
அந்த கைகூப்பலில் நன்றி இருந்தது, நெகிழ்வு இருந்தது,
சந்தோஷம் இருந்தது,
அமைதி இருந்தது,
அன்பு இருந்தது,
ஒரு ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடிற்று.
எல்லாம் கரைந்து மனம் முழுவதும் ஒன்றாகி
அவன் மறுபடியும் சுவாமியை நமஸ்கரித்தான்.
மறுபடியும் போய் அவ்விதமே ஆழ்ந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும்
அல்லது படுத்து அந்த அனுபவத்தை மறுபடியும் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றியது.
மீண்டும் நீங்க வரணும் என்று மதுரை சுந்தரரேஸ்வரரை கைகூப்பி இறைஞ்சினான்.
ஊர் முழுவதும் சுற்றி விட்டு வீடு திரும்பும் போது
ஒரு காலியான பாத்திரம் போல வேங்கடராமன் நடந்தான்.
அந்த பாத்திரத்தை நிரப்ப இறையருள் காத்திருந்தது.
தன்னை சுத்தம் செய்து கொள்வது என்பது எல்லோருக்கும் நடப்பது இல்லை,
வெகு சிலருக்கே நடக்கிறது.
அப்படி நடந்தவர்களுக்குத்தான் ஞானியர் என்றும், மகான் என்றும் பெயர்.
வேங்கடராமன் என்கிற அந்த பதினாறு வயது இளைஞன்
பிற்பாடு ஸ்ரீ ரமண மகரிஷி என்று அழைக்கப்பட்டார்.
பகவான் என்று பலர் அவரை வணங்கினார்கள் 🌷
🌸 பகிர்வு 🌸