12 ராசி (லக்கின) அதிர்ஷ்ட கலர் வீட்டை பராமரிக்கும் முறை
1) மேச (லக்கின) ராசிக்காரர்கள் :
பம்பரமாக சுழன்று வீட்டை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்து இருப்பவர்கள். இவர்கள் வீடு எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். தான் இருக்கும் வீடு குடிசை ஆனாலும் சரி மாளிகை ஆனாலும் சரி அதை பராமரிப்பதில் இவர்களை மிஞ்ச முடியாது. எந்த இடத்தையும் தனக்கு தகுந்தாற்போல் மாற்றிக்கொள்ளும் திறமை உள்ளவர்கள். அப்பார்ட்மெண்ட் அல்லது காம்பவுண்ட் தொடர் குடியிருப்புகளில் குடியிருக்க விரும்புவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், சந்தணம்.
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு, ரோஸ்
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, மில்க் ஒயிட்.
2) ரிசப (லக்கின) ராசிக்காரர்கள் :
பேச்சில் இருக்கும் சுத்தம் வீட்டை பராமரிப்பதில் இருக்காது. வீடு எப்போதும் வெப்பமாக இருக்கும். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கமல் அடிக்கடி தேடிக்கொண்டிருப்பார்கள். ராயல் வாழ்கை வாழ்பவர்கள். அடிக்கடி வீட்டை மாற்றும் தன்மை உள்ளவர்கள். உயரமான வீடு, அரண்மை போன்ற வீடு, காம்பவுண்போட்ட கேட் போட்ட தனி வீட்டில் வசிக்க விரும்புவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு, ரோஸ்
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், சந்தணம்.
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச், ரோஸ்,
3) மிதுனம் (லக்கின) ராசிக்காரர்கள் :
தான் வீட்டை பராமரிக்க விட்டாலும் வேலை ஆட்களை வைத்து அழகாக பராமரிப்பவர்கள். எப்போதும் வீட்டு ஜன்னல்கள் முடப்பட்டு இருக்கும்.
வாசனை புகைகளுடன் வீடு இருக்கும். சொந்தவீடு வாங்கிய பின் செல்வ செழிப்புடன் இருப்பார்கள். தனித்த வீட்டில் இருக்கவே பெரிதும் ஆசைபடுவார்கள். அண்டை வீட்டாருடன் நட்புடன் இருக்க விரும்புவார்கள். நல்ல தண்ணீர் வசதியுள்ள பாதுகாப்பான வீட்டிலேயே குடியிருக்க விரும்புவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : வெண்மை, மின்னும் நிறம்,
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : நீலம், அடர்ந்த வர்ணம்
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : பச்சை, சயான், பிஸ்தா
4) கடகம் (லக்கின) ராசிக்காரர்கள் :
சுத்தம் சுகாதரம், சுத்தம் சோறு போடும் என்பதுபோல் வீட்டை அழக்காக பராமரிப்பார்கள். வீட்டு ஜன்னல்கள் திறக்கப்பட்டு எப்போதும் காற்றோட்டமாக இருக்கும். வாசனை புகைகளுடன் வீடு கம கம என இருக்கும். வீடு கௌரவத்தையும் அந்தஸ்தையும் தருவதாக அமையும். அண்டை வீட்டார் இவரை கண்டு பொறாமை கொள்ளும் அளவிற்கு வீட்டை வைத்தி இருப்பார்கள். கீழ் வீட்டிலேயே குடியிருக்க விரும்புவார்கள். ஜன நடமாட்டம் உள்ள இடத்தில் குடியிருக்க விரும்புவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : பச்சை, சயான், பிஸ்தா
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : நீலம், அடர்ந்த வர்ணம்
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : வெண்மை, மின்னும் நிறம்,
5) சிம்ம (லக்கின) ராசிக்காரர்கள் :
தனது வீட்டை எப்போதும் கிரிமினாசினி கொண்டு தூய்மையாகவும் சுகாதாரமானவும் வைத்திருப்பார்கள். வீட்டை அலங்காரம் செய்ய அதிக செலவு செய்வார்கள். வீடு எப்போதும் குளிர்ச்சியுடன் இருக்கும். வீட்டின் கழிவறைகள் மிக சுத்தமாக இருக்கும். அண்டை வீட்டாருடன் அளவுடன் பழகுவார்கள். வீட்டில் அதிகமாக தண்ணீர் செலவு செய்வார்கள். இவர்கள் எப்போதும் தொடர் வீடு மற்றும் அப்பார்ட்மெண்ட் வீடுகளிலேயே குடியிருக்க விரும்புவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, மில்க் ஒயிட்.
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், சந்தணம்.
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு, ரோஸ்,
6) கன்னி (லக்கின) ராசிக்காரர்கள் :
தனது வீட்டை எப்போதும் கோவில் போல பூசி மெழுகி அழகுடனும் பக்தியுடனும் பராமரிப்பார்க்ள். ஆன்மீக பொருட்களைக் கொண்டு அழகுடன் பராமரிப்பதில் வல்லவர்கள். வீட்டின் ஜன்னல்கள் அடிக்கடி மூடியே இருக்கும் அதனால் வீடு வெப்பமாக விருக்கும். வீட்டில் எடுத்த பொட்களை இடம் மாற்றி வைப்பது இவர்களுக்கு பிடிக்காது. தனித்த வீட்டில் இருக்கவே பெரிதும் விரும்புவார்கள். மாடி வீட்டில் மாடியில் குடியிருக்க விரும்புவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச், ரோஸ்,
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு, ரோஸ்
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், சந்தணம்.
7) துலாம் (லக்கின) ராசிக்காரர்கள் :
செய்யும் தொழிலே தெய்வம் வீட்டை பராமரிப்பதே எனது தலையாய கடமை என்பது போல் எண்ணம் கொண்டவர்கள் ஆனால் செயல் தான் கொஞ்சம் கம்மி. வாசனை புகைகளுடன் வீடு இருக்கும். சொந்தவீடு வாங்கிய பின் செல்வ செழிப்புடன் இருப்பார்கள். தனித்த வீட்டில் இருக்கவே பெரிதும் ஆசைபடுவார்கள். அண்டை வீட்டாருடன் நட்புடன் இருக்க விரும்புவார்கள். நல்ல தண்ணீர் வசதியுள்ள பாதுகாப்பான வீட்டிலேயே குடியிருக்க விரும்புவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : பச்சை, சயான், பிஸ்தா
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : வெண்மை, மின்னும் நிறம்,
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : நீலம், அடர்ந்த வர்ணம்
8) விருச்சக (லக்கின) ராசிக்காரர்கள் :
தன்னைபோல யாரும் வீட்டை பராமரிக்க முடியாது என்பது போல வீட்டை பராமரிப்பார்கள். வீட்டு ஜன்னல்கள் திறக்கப்பட்டு எப்போதும் காற்றோட்டமாக இருக்கும். வாசனை புகைகளுடன் வீடு கம கம என இருக்கும். இந்த வீடு வாங்கிய பின்தான் எல்லாம் வந்தது என வீட்டும் மீது செண்டிமெண்ட் வைத்து இருப்பார்கள்
ஜன நடமாட்டம் குறைவான இயற்கையான சூழ் நிலைஉள்ள தனித்த வீட்டில் இருக்கவே பெரிதும் விரும்புவார்கள். மாடி வீட்டில் மாடியில் குடியிருக்க விரும்புவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : வெண்மை, மின்னும் நிறம்,
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : பச்சை, சயான், பிஸ்தா
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : நீலம், அடர்ந்த வர்ணம்
9) தனுசு (லக்கின) ராசிக்காரர்கள் :
சுத்தத்தை உயிரை விட உயர்வாக மதிப்பவர்கள். வீட்டில் யார் எப்படி இருந்தாலும் இவர்கள் வீட்டை சரியாக பராமரித்துக்கொண்டு இருப்பார்கள். வீடு எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். மற்றவர் எடுத்த பொருளை சரியான இடத்தில் வைக்காவிட்டாலும் இவர்கள் சரியான இடத்தில் வைப்பவர்கள், எதிலும் ஒழுக்கத்துடன் இருப்பார்கள். தனது உறவினர்கள் அதிகம் இருக்கும் இடத்தில் தனி வீட்டில் வசிக்கவே ஆசைபடுவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு, ரோஸ்
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, மில்க் ஒயிட்.
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், சந்தணம்.
10) மகர (லக்கின) ராசிக்காரர்கள் :
வீட்டை பராமரிப்பதெல்லாம் ஒரு வேலையா என்பது போல் எனோதானோ என பராமரிப்பார்கள். எப்போதும் வீட்டு ஜன்னல்கள் முடப்பட்டு இருக்கும். டு எப்போதும் வெப்பமாக இருக்கும். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கமல் அடிக்கடி தேடிக்கொண்டிருப்பார்கள். ராயல் வாழ்கை வாழ்பவர்கள். எதிர் வீட்டாரை ஒப்பிட்டு வீட்டின் ஒவ்வொரு வேலையையும் செய்வார்கள். கீழ்வீட்டில் அதுவும் தொடர் வீட்டுகளில் வசிக்கும் வாய்ப்பை அதிகம் பெறுவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், சந்தணம்.
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச், ரோஸ்,
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு, ரோஸ்
11) கும்ப (லக்கின) ராசிக்காரர்கள் :
வீட்டை அழகாகவும் வசிகரமாகவும் சுத்தமாகவும் பராமரிப்பவர்கள். தனது வாடகை வீட்டைகூட சொந்தவீடு போல பராமரிப்பவர்கள். மற்றவர்கள் தன் வீட்டை உதாரணம் சொல்வது போல தன்வீட்டை பராமரிப்பார்கள், கடன் வாங்கி வீடு வாங்கி தனது ஆடம்பர வாழ்வை நடத்துவார்கள். தனி வீட்டில் காம்பவுண்ட் உடன் உள்ள வீட்டில் வாழ ஆசை கொண்டவர்கள். அக்கம் பக்கம் வீட்டாருடன் நட்புடன் இருக்க மாட்டார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : நீலம், அடர்ந்த வர்ணம்
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : பச்சை, சயான், பிஸ்தா
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : வெண்மை, மின்னும் நிறம்,
12) மீன (லக்கின) ராசிக்காரர்கள் :
ஆரோக்கியம், சுத்தம் சுகாதரம், சுத்தம் சோறு போடும் என்பதுபோல் வீட்டை அழக்காக பராமரிப்பார்கள். வீட்டு ஜன்னல்கள் திறக்கப்பட்டு எப்போதும் காற்றோட்டமாக இருக்கும். வாசனை புகைகளுடன் வீடு கம கம என இருக்கும். வீடு குளிர்சியாகவும் காற்றோட்டமாகவும் இருக்கும். வீட்டிற்குள் இருக்கும்போது மகிழ்சியாகவும் ஆரோக்கியமாகவும் கருதுவார்கள். ஒன்றுபோல் இருக்கும் வீடுகளில் அதிகமாக வசிப்பார்கள். அண்டை வீட்டாருடன் நட்புடன் பழகுவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : நீலம், அடர்ந்த வர்ணம்
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : வெண்மை, மின்னும் நிறம்,
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : பச்சை, சயான், பிஸ்தா
குடிசை வீடோ அல்லது மாடி வீடோ
தூய்மையான வீடு ஆரோக்கியமான வீடு
நம் வீடும் அதை சுற்றிய இடமும் சுத்தமானால்
நாடு சுத்தமாகும் சுகாதாரமாகும்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
மீன்கள் அழுக்கை திண்று அந்த இடத்தை சுத்தமாகும்
மீன ராசி மருத்துவமனையை குறிக்கும்
அழகான சுத்தமான வீடு வசியமான வீடாக இருக்கும்
அதுவே நாம் நினைத்ததை நிறைவேற்றும் அதிர்ஷ்ட வீடு
Friday, 2 June 2017
அதிர்ஷ்ட கலர்
புத்தராக இரு
<3 உனக்குள் மரணத்தைத் தாண்டிய ஏதோ ஒன்று
புத்தராக இரு
புத்தராக இருப்பது என்பது விழித்திருப்பது.
தன்னைத் தவிர்த்த இன்னொன்றைத் தெரிந்து கொள்வதுதான் அறிவு
ஞானம் என்பது தன்னைப் பற்றிய அறிவு
தெரிந்து கொள்கிறவனைப் பற்றி தெரிந்து கொள்வதுதான் ஞானம்
விவேகம், தெரிந்து கொள்பவனும் தெரிந்து கொள்ளப் படுவதும் இல்லாமல் போவதுதான் புத்த நிலை
தியானம் ஒரு ரச வாதம் கவனித்துப் பார்க்கும் போது இரும்பைத் தங்கமாக்கி விடும்
சாதாரணத்தில் அசாதாரணத்தைக் காண்பதுதான் புத்தருடைய பாதை
இந்தக் கணத்தில் இங்கிருப்பதில் முழுமையைக் காண்பது
இதைத்தான் புத்தர்
" தத்ஹதா " என்கிறார்
மனம் எதற்கெடுத்தாலும் வடிவம் கற்பித்துக் கொண்டே இருக்கும்
கடவுள் வடிவத்தோடு கூடியதொரு பொருளல்ல
" தேவைகள் ஏதும் இல்லாதவனாக இரு
எங்கே ஆசைகள் இருக்கிறதோ அங்கே மௌனித்து விடு "
மனம் ஆசைப்பட்டுக் கொண்டே இருக்கிறது
மனம் உன்னை திருப்தியாக இருப்பதற்கு விடவே விடாது
புத்தர் கூறுகிறார்
"தேவைகள் ஏதும் இல்லாதவனாக இரு"
இப்போது என்ன இருக்கிறதோ அது உன் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது
இப்போது இருப்பவை எல்லாம் அழகாகவும் அருமையாகவும் இருக்கிறது
அந்த அழகை அனுபவி
இயற்கை இப்போது இருக்கிறது என்பதில் வெகு அழகு இருக்கிறது
ஆசையை கவனமாக வேடிக்கை பார்க்கும்போது ஆசை மெதுவாக விலகி விடுகிறது
" மகிழ்ச்சியோ துயரமோ எது நடந்தாலும் பாதிப்பில்லாதவனாக
பற்றில்லாதவனாக போய்க் கொண்டிரு"
மகிழ்ச்சியையும் துயரத்தையும் உன்னோடு அடையாளப்படுத்திக் கொள்ளாதே
அதை மிகவும் ஆழமாக வேடிக்கை பார்
இதைத்தான் புத்தர்
" விபாசனா" என்கிறார்
ஆழ்ந்து பார்ப்பது அகக் கண் கொண்டு பார்ப்பது
புத்தர் அவரது உடலை வேடிக்கைப் பார்க்கிறார்
அவருக்கு உடல் வலியில்லை
தான் தனது உடல் அல்ல என்பது அவருக்கு தெரிந்து இருக்கிறது
உடல் இறக்கும் போது கூட புத்தர் அதை வேடிக்கை பார்க்கிறார்
அந்த அளவுக்கு வேடிக்கை பார்க்க முடியும் என்றால்.....
ஒருவர் இறப்பைத் தாண்டியவராகிப் போகிறார்
இறப்பிலிருந்து உன்னை காப்பாற்றுவதல்ல புத்தருடைய நோக்கம்
இறப்பைத் தாண்டி உன்னைக் கொண்டு போவதுதான் அவருடைய நோக்கம்
மனிதனுடைய முழு முயற்சியும் மரணத்தால் அழிக்க முடியாதது
எது என்பதைத் தெரிந்து கொள்வதுதான்
மரணமில்லாதது
எதுவோ அதைத் தன் மையமாக கொண்டிருப்பதுதான்
பிறப்பு ஏற்கனவே நடந்து விட்டது
அதைப் பற்றி இப்போது எதுவும் செய்ய முடியாது
ஆனால் மரணம் நடக்க வேண்டி இருக்கிறது
அதைப்பற்றி ஏதாவது செய்யமுடியும்
உணர்வோடு இறக்க முடியும் என்றால்.....மீண்டும் உணர்வோடு பிறக்கலாம்
கணத்துக்கு கணம்
விழித்திருப்பதுதான் புத்தரின் நெறி
அப்போது உனக்குள் மரணத்தைத் தாண்டிய ஏதோ ஒன்று இருப்பதைக் காண்பாய்
அதை அழித்து விட முடியாது <3
<3 ஓஷோ <3
Thursday, 25 May 2017
மனித உறவுகள் சீராக இருக்க
மனித உறவுகள் சீராக இருக்க..... A to Z !!!
A - Appreciation
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.
B - Behaviour
புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
C - Compromise
அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதிர்கள்; நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
D - Depression
மற்றவர்கள் புரிந்துகொள்ளவி
ல்லையே என்று சோர்வடையாதீர்கள்.
E - Ego
மற்றவர்களை விட உங்களையே உயர்த்தி கர்வப்படாதீர்கள்.
F - Forgive
கண்டிக்கக்கூடிய அதிகாரமும், நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த்தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.
G - Genuineness
எந்தக் கட்டத்திலும் சந்தேகம் வேண்டாம். எந்த விடயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.
H - Honesty
தவறு செய்தால் உடனே மன்னிப்புக் கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.
I - Inferiority Complex
எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் சிறியவன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.
J - Jealousy
பொறாமை வேண்டவே வேண்டாம் அது கொண்டவனையே அழிக்கும்.
K - Kindness
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.
L - Loose Talk
சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலு
ம் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.
M - Misunderstanding
மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.
N - Neutral
எப்போதும் எந்த விடயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். முக்கியமாக நடுநிலை தவறவேண்டாம்.
O - Over Expectation
அளவுக்கு அதிகமாகவும் தேவைக்கு அதிகமாகவும் ஆசைப்படாதீர்கள்.
P - Patience
சில சங்கடங்களை சகித்துத் தான் ஆகவேண்டும் என உணருங்கள்.
Q - Quietness
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்சனைகளுக்குக் காரணம் தெரியாததைப் பேசுவது தான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.
R - Roughness
பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.
S - Stubbornness
சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.
T - Twisting
இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.
U - Underestimate
மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.
V - Voluntary
அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திரமால் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்சனை வரும்போது எதிர்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள். பின்பு, அதற்கு பதில் கொடுங்கள்.
W - Wound
எந்தப் பேச்சும், செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.
X - Xero
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோ
மோ அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.
Y - Yield
முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. கெட்டுப்போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.
Z - Zero
இவை அனைத்தையும் கடை பிடித்தால் பிரச்சனை என்பது பூஜ்ஜியம் ஆகும்.
Many Of Our Problemz Will Be Solved IF WE TALK TO EACH OTHER....
rather than TALKING ABOUT EACH OTHER.
Saturday, 13 May 2017
பெண்கள் பாதுகாப்பாக எப்படி வெளியூருக்கு பயணம் செய்யலாம்.*
*பெண்கள் பாதுகாப்பாக எப்படி வெளியூருக்கு பயணம் செய்யலாம்.*
தற்போது தனியாக பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.
ஆனால் ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்கள் குறைந்த அளவிலேயே பயணம் செய்கிறார்கள். இதற்கு சமூகத்தில் பெண்களின் நிலை, அவர்களின் பாதுகாப்பு என்று பல்வேறு காரணங்கள் தடைகளாக உள்ளன.
இன்றைக்கு இருக்கும் நிலையில் காய்கறி வாங்க வெளியே போகும் பெண்களே அதிக கவனத்துடன் இருக்க வேண்டியுள்ளது. அப்படி இருக்கையில் 500, 600 கிலோமீட்டர் பயணம் செய்யும் பெண்கள் சில ஆண்களிடம், புதியவர்களிடமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.
பெண்கள் எல்லா இடங்களுக்கும் எப்படி தனியாக பயணம் செய்வது என்பதற்கு சில டிப்ஸ்...
பெண்களை வெளியூர்களுக்கு சென்று தங்க நினைக்கும் போது குறைந்த விலை ஹோட்டல்கள் என்பதை விட பாதுகாப்பான ஹோட்டலா என்றுதான் முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்.
இதை மட்டும் உறுதிபடுத்தி கொண்டால் மற்ற விஷயங்கள் எல்லாம் ஆண்களை போல பெண்களும் எளிமையான முறையில் கையாள முடியும்.
பெண்கள் பயணத்தின் போது பேருந்து, ரயில், விமானம் என்று மக்கள் கூட்டம் உள்ள போக்குவரத்தையே பயன்படுத்துவது நல்லது.
உதாரணமாக நீங்கள் பயணம் செய்யும் ரயிலிலோ, பேருந்திலோ உங்களருகில் இருக்கும் பெண்களுடனோ, குடும்பத்துடனோ பேசி நட்பு வைத்துக்கொள்வது ஒரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும்.
தேவை இல்லாமால் எந்த புதிய மனிதரிடமும் எதுவும் பேச வேண்டாம். அப்படியே பேச வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டாலும் இடமும், நேரமும் பாதுகாப்பாக இருக்கிறதா என்ற கவனம் தேவை.
அதோடு யாரிடம் எது கேட்பதாக இருந்தாலும் தயக்கமின்றி தைரியமாக கேளுங்கள். யாரும் உங்களை எளிதில் அணுக முடியாதபடி கொஞ்சம் முரட்டுத்தனமாகவே இருங்கள் தப்பில்லை.
நீங்கள் பயணம் செய்யும்போது உங்களின் சகபயணிகளோடு நட்போடு இருப்பதில் தவறில்லை. ஆனால் யாரையும் முழுமையாக நம்பிவிடாமல், எல்லோர் மேலும் எப்போதும் ஒரு கண் இருக்கட்டும்.
அதுமட்டுமல்லாமல் மிளகு தெளிப்பான் (பெப்பர் ஸ்ப்ரே), விசில், பிளாஸ்டிக் கத்தி போன்ற பாதுகாப்பு உபகரணங்களை உடன் எடுத்துச்செல்வது நல்லது.
இவைதவிர எங்கு செல்கிறீர்களோ அந்த இடத்தின் வரைபடத்தை (மேப்) வைத்துக்கொள்வது இடம் தெரியாமல் திண்டாடுவது உள்ளிட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
Tuesday, 9 May 2017
பன்றிக்காய்ச்சல் flu ( H1N1 ) குணமாகியவரின் சிறப்பு பேட்டி !
Thursday, 4 May 2017
சாமி, மந்திரம், ஜோதிடம்
சாமி, மந்திரம், ஜோதிடம் உண்மையா? பொய்யா?
தெரிஞ்சிக்கிறது ரொம்ப சிம்பிள்! இறைவன் உள்ளானா, மந்திரங்களில் பலன் உள்ளதா, ஜோதிட சாஸ்திரங்கள் உண்மைதானா என்ற சந்தேகங்கள் மனிதர்கள் பலருக்கும் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக கஷ்டப்படும் காலங்களில் இந்த சந்தேகம் நீக்கமற நிறைத்திருக்கும்.
இதையும் சோதித்து பார்த்து உறுதி செய்ய வழியுள்ளதாமே.. எப்படி தெரியுமா?
திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கத்தில் இருந்துவரும் ஒரு பழமொழி இதற்கு சான்றளிக்கிறது.
மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாரு..
மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு..
சாஸ்திரம் பொய்யானால், கிரகணம் பாரு..
சாமிதான் பொய்யானால் சாணம் பாரு..
இதுதான், நமது சந்தேகங்களை தெளிவிக்கும் சூத்திரம்..
விளக்கம் சிம்பிள்தாங்க.. மணி மந்திரம் என்ற ஒரு மந்திரத்தை சொன்னால் படம் எடுத்து நிற்கும் பாம்பும் ஸ்தம்பித்துவிடுமாம். மந்திரங்களில் சக்தியில்லை என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால் படம் எடுத்தாடும் பாம்பு முன்பாக மணி மந்திரத்தை உச்சரித்து பார்த்து சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.
இப்போ, உங்க மைண்ட்வாய்ஸ் என்ன நினைக்கும் அப்படீங்கிறது நல்லாவே கேட்குதுங்க.. பயப்பட வேண்டாம், மந்திரம் சொல்ல தெரிந்தவரை சொல்லவிட்டு நீங்கள் வேண்டுமானால் ஏதாவது ஏணியின் மீது ஏறி நின்று கொண்டு பாருங்களேன்.
மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு: வாணவேடிக்கை பட்டாசுகளுக்குள் இருக்கும் கரிமருந்துதான், அந்த வெடியை வானத்துக்கு தூக்கிச் சென்று வண்ண கோலங்கள் காண்பிக்கிறது. மருந்தின் சக்தியை தெரிந்து கொள்ள வாணவேடிக்கையை பாருங்கள் என்பதுதான் இதன் பொருள்.
சாஸ்திரம்தான் பொய்யானால் கிரகணம் பாரு: ஜோதிட சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, பஞ்சாகத்தில் முன்கூட்டியே பவுர்ணமி, அமாவாசை, கிரகண காலகட்டங்கள், நட்சத்திர சுழற்சி போன்றவை இடம் பெற்றிருப்பதைப் பார்த்து வியப்படைந்திருப்பர். எனவே ஜோதிடம் பொய் கிடையாது. அது அறிவியல் என்பதை கிரகணம் குறித்து பஞ்சாங்கம் சொல்லியுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்பது அதன் பொருள்.
சாமிதான் பொய்யானால் சாணம் பாரு: இது ரொம்ப சுவாரசியமான விஷயம். நெல்லை மாவட்டத்து கிராமங்களில் முன்பெல்லாம் செம்மண் கலந்து வீட்டு சமையலறையில் அவ்வப்போது அடுப்பு செய்வார்கள். அதன்மீது சாணத்தை பூசுவார்கள். ஒரு அடுப்பு பிய்ந்தவுடன் புதிதாக அடுப்பு உருவாக்கும்போது, பசு சாணத்தை எடுத்து அதை விநாயகர் என்று உருவம் பிடித்து வணங்குவார்கள். அதன்பிறகே அடுப்பு செய்வார்கள்.
இப்படி விநாயகர் உருவம் பிடித்த சாணத்தை பிறகு தூக்கிப்போட்டுவிடுவார்கள். அதில்தான் ஆச்சரியம். விநாயகர் என்று கும்பிட்ட அந்த சாணத்தில் மட்டும் கரையான் அரிக்காது. மற்றபடி தெருவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் கிடக்கும் சாணத்தில் கரையான் குடியேறி, அதை சாப்பிடும். விநாயகர் என்று நாம் உருவேற்றிவிட்ட அந்த சாணத்தில் கரையான் சேட்டை செய்யாது. இதில் இருந்து கடவுள் இருப்பதை பாமரனும் சாணத்தை பார்த்து அறிந்துகொள்ளலாம் என்பதுதான் இந்த பழமொழியின் கருத்து.