Friday 13 October 2017

மனமற்ற நிலை வர

இன்றைய நவீன உளவியலார்
கூறுகின்றனர் !
நோய்களில் எழுபது சதவீதம் மனம்
சம்பந்தப் பட்டவைதான் ...
ஆனால் அவற்றை உடல் மூலமாகத்தான்
வெளிப்படுத்த முடியும் ...
ஆனால் நோயின் துவக்கம் மனத்தில் தான்
ஆரம்பம் ஆகிறது ...
அது உனது மனதில் துவங்கி உன்
உடலுக்குள் நுழைகிறது ...
உடலில் துவங்கும் எதுவும் மனதிற்குள்
நுழைய முடியும் ...
உங்களுக்கு நோய் தீர்ந்து விட்டது
என்ற எண்ணத்தை மனதிற்குள் ...
செலுத்தி விட்டால் நோய் மறைந்து
விடுகிறது ...
மனதிற்கு உடல் மீது அபாரமான
பலம் உண்டு ...
உங்கள் உடலில் எல்லாவற்றையும்
மனம்தான் நடத்திச் செல்கிறது ...
உங்கள் மனதை மாற்றுவதன்
மூலமாக ...
உடலிலுள்ள எழுபது சதவீத
நோய்களை குணப்படுத்த முடியும் ..
உங்கள் மனம்தான் உங்கள்
ஆரோக்கியம் ...
உங்கள் மனம்தான் உங்கள்
நோய் ..
நீங்கள் உங்கள் மனதோடு வாழ்வதால்
யதார்த்தம் என்பது தெரியாமல் போகிறது ...
நீங்கள் மனதைக் கடந்து செல்லும் போதுதான்
யதார்த்தம் தெரிய வரும் ...
அப்போது உங்கள் சொந்த மனம் மறைந்து
அது பிரபஞ்ச மனம் ஆகிறது ...
அப்போது உங்கள் உள்ளுணர்வே
பிரபஞ்சம் ஆகிறது ...
அப்போது அங்கே நோய் ஏது ?
நோய் நீக்கம் ஏது ?
ஓஷோ
மருத்துவத்திலிருந்து
மனமற்ற நிலை வரை

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.