Thursday 22 September 2016

நவகிரக பரிகாரங்கள்

நவகிரக பரிகாரங்கள்

  நம் வாழ்க்கை நன்கு அமையவும், நம்மை நல்ல முறையில் வழிநடத்திச் செல்லவும் நவகிரகங்கள் உதவுகின்றனர். ஒவ்வொரு கிரகத்துக்கும் தொடர்புடையவராக ஒவ்வொரு கடவுள் உள்ளனர். நவகிரக தோஷம் போக்க பொதுவான வழிமுறைகள் உள்ளன.

🌟 நீலம் மற்றும் பச்சை ஆடைகளை தவிர்த்தால் சனி, புதன் பாதிப்பிலிருந்து விலகலாம்.

🌟 தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிவதால் குரு அருள் கிடைக்கும்.

🌟 கைப்பிடி அரிசியை நதி அல்லது ஏரியில் போடுவதால் சந்திரனின் பலத்தை கூட்டலாம்.

🌟 சு+ரிய பலத்தை அதிகரிக்க வீட்டில் சு+ரியனுக்குரிய யாகங்கள் செய்யலாம். தினமும் சு+ரியனுக்கு நீர் படைக்கலாம்.

🌟 வியாழக்கிழமைகளில் கோவில்களில் லட்டு வழங்கினால் குரு பலன் அதிகரிக்கும்.

🌟 அனுமனை அனுதினமும் வணங்கினால் சனியினால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும்.

🌟 சர்க்கரை, கடலைப் பருப்பு, நெய், அரிசி ஆகியவற்றை மாதப்பிறப்பன்று தானமளித்தால், வீட்டில் அன்னபு+ரணியின் அருள் கிட்டும்.

🌟 இரவில் ஒரு கைப்பிடியளவு பச்சைப் பயிறை நீரிலிட்டு, மறுநாள் அதனை புறாக்களுக்கு உணவாக அளித்தால் புதனால் ஏற்படும் தோஷம் நீங்கும்.

🌟 வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு புல் அளித்தால் சுக்கிரனின் அனுக்கிரகம் கிடைக்கும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.