Tuesday 3 November 2015

வாழ்வில் முன்னேற

இனிய இல்லற வாழ்விற்கு அகத்தியர் கூறும் வழி முறைகள்:-

* காலையில் எழுந்ததும் சிவ சக்ரத்தை மனதில் நினையுங்கள்.

*பல் தேய்க்கும் போது ஆள் காட்டி விரல் உபயோகிக்காதீர்கள்.

*ஓம் ஸ்ரீ கோமதி சங்கர நாராயணா என்று மூன்று முறை கூறுங்கள்.

*குளித்தபின் உணவு உண்ணுங்கள்.

பைரவர், காகம், பசு இவைகளுக்கு முடிந்த அளவுக்கு உணவு இடுங்கள்.

*பணத்தை எப்போதும் இடது மார்பின் பையில் வையுங்கள்.

*வாரம் இரண்டு முறை எண்ணை ஸ்நானம் செய்யுங்கள்.

ஆண்கள் - புதன், சனி; பெண்கள் - செவ்வாய், வெள்ளி.

*ஞாயிறு, செவ்வாய், வெள்ளி தினங்களில் சவரம் செய்வது, நகம் வெட்டுவது கூடாது.

*மாசி, ஆனி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் - தலை முடி வெட்டுவது கூடாது.

*பூசை மற்றும் அன்றாட தேவைக்கு மணமுள்ள மலர்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

கனகாம்பரம் போன்ற பூக்களை தவிர்க்கவேண்டும்.

*கோயில் கோமுகத்தை - சுத்தம் செய்து, சந்தானம், குங்குமம் இட்டு தீபாராதனை செய்யுங்கள்.

*மகம் நட்சத்திரம் அன்று எருமை மாடுகளுக்கு அகத்திக் கீரை கொடுத்து வந்தால் மரண பயம் விலகும்.

*பூசை விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் - ஞாயிறு,திங்கள் வியாழன், சனி.

*வருடம் ஒருமுறையேனும் கண்டிப்பாக குலதெய்வ பூசை/வழிபாடு செய்யவேண்டும்.

*லுங்கி,கைலி அணியாதீர்கள். வறுமை வாட்டும்.

வேஷ்டியே நல்லது.

நள மகாராஜா தமயந்தியின் பாதி சேலையை அணிந்த நிகழ்ச்சியே கைலியாக மாறியது.

*வெளியே போகும்போது டாட்டா காட்டாதீர்கள்.

இறைநாமம் சொல்லி செல்லுங்கள்.

*புது ஆடைகளை குங்குமமிட்டு, வெண் தாமரை வைத்து பூசை செய்தபின் அணியுங்கள்.

*அருந்த சுரைக்குடுவை, மூங்கில் அல்லது வெள்ளி டம்பளர் உபயோகிக்கவும்.

*மருதாணியை முடிந்த மட்டும் அதிகமாக உபயோகிக்கவும்.

குழந்தைகளை அடிக்காதீர்கள் - வியாதி, கடன், சுமை அதிகரிக்கும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.